Friday, November 9, 2012

அழகு ராட்சசி கவிதைநூலுக்கு கவிஞர் வாலிதாசன் எழுதிய நூல் விமர்சனம்.

கவிதை நூலின் பெயர்: அழகு ராட்சசி.

ஆசிரியர்: முனைவென்றி நா. சுரேஷ்குமார்

விமர்சனம் எழுதியவர்: முகவை வாலிதாசன்

னக்கு 4.11.12 அன்று நடைபெற்ற ஹைக்கூத்திருவிழாவில் முனைவென்றி நா.சுரேஷ்குமார் என்ற தோழர் அழகுராட்சசி என்கிற காதல் கவிதை நூலை என்கையில் திணித்தார் மறுபதிலிக்கு நானும் என் நூலைத்திணித்தேன். இன்று (08-11-2012) காலையில் சுமார் 3மணிநேரத்தில் படித்து முடித்தேன், கவிதைகள் அனைத்தும் காதல் மாளிகையை வார்த்தை கற்களால் கட்டி எழுப்பி இருக்கிறார் கவிஞர். பேச்சு வழக்குச் சொல்லை பயன்படுத்திருப்பது எனக்கு நெருக்கமாக்கியது. நூல்
பற்றி அவர் எழுதியிருக்கிற உவமம் அசைக்கிறது இதயத்தை.

"அவள் எங்களை அணிந்து கொள்ள மறுக்கிறாள் என உன் மேல் புகார் செய்தன உன் சிறுவயதாடைகள், அவள் பெரிய குழந்தை ஆகிவிட்டாள் அவளால் உங்களை அணிந்து கொள்ள முடியாது என்றேன் அவ்வளவுதான் கன்னத்தில் கைவைத்தபடி கதறி அழ ஆரம்பித்துவிட்டன உன் சிறு வயது ஆடைகள் அனைத்தும்." என்று கவிஞரின் கவித்துவம் பார்வை அழகியலாய் பேசிக்கொண்டு நீள்கிறது கவிதை நூல் எங்கும், "தங்களின் உடல் அங்கங்களை உடைநாகரீகம் என்கிற பெயரில் கடைவிரித்துக்காட்டும் பெண்கள் வாழும் நாட்டில் உன் அழகையெல்லாம் மறைப்பதற்காகவே சேலை சுடிதார் அணிந்து வருகிறாய் நீ" கவிதையில் சமூக அக்கறை மெலிதாய் தெரிகிறது. இப்படிச்செய்த கவிஞர் "அனைத்து வண்ணங்களாலும் குழைத்து செய்யப்பட்ட வர்ணஜாலம் நீ "என்கிறார். வண்ணங்கள் கூட்டுக்கலவை கருப்பல்லவா? அறியாமல் செய்கிறாரோ என்னவோ. படைப்புகளில் பாசத்த கொட்டிருக்கார், வரும்காலங்களில் நூல்களின் சாரம் சமூகச்சிந்தனைகுறித்திருக்க அடியேனின் வாழ்த்துகள்

No comments: