Thursday, August 1, 2013

அவனையறியாமலேயே...

நீண்ட வீதியது 

பார்வையின் எல்லை 
முடியும் தூரத்தில் 
மங்கலாய்த் தெரிகிறது 
ஒரு உருவம்

இருபுறமும் வானுயர்ந்த 
கட்டிடங்கள் 

காற்றில் அசைந்தாடும் 
விளம்பரப் பதாகைகள் 
ஒய்யாரமாய்ப் புன்னகைக்கும் 
விளம்பர நடிகர் நடிகைகள் 

மெல்ல நெருங்குகிறது 
அந்த உருவம் 

சாமி சிலையை 
தலையில் சுமந்தபடி...

எதிர்த் திசையில் 
மெல்ல நெருங்குகிறது 
அந்த உருவம் 

மேல்சட்டை அணியவில்லை 
இடுப்புக்குக் கீழே 
தொடைவரை கட்டிய வேட்டி
நல்ல பூ வேலைப்பாடுகள் 
அமைந்த ஜரிகை

மெல்ல சத்தமின்றி 
கைநீட்டி யாசிக்கின்றான்

களைப்படையவே இல்லை 
அவன்

அமைதி தழுவ 
நடக்கின்றான்

வியந்து பார்க்கின்றேன் 
திரும்பி நின்று...

அவனையறியாமலேயே நானும் 
என்னையறியாமலேயே அவனும் 
எதிரெதிர் நடைபாதையில் 
மெல்லக் கடக்கின்றோம் 
அந்த வீதியை...

No comments: