Sunday, August 18, 2013

இந்தியர்களின் சுயரூபம்

இந்தியாவை நேசிக்கக் கூடிய தமிழர்கள் இந்தியாவிலும் அதற்குப் பக்கத்து நாடான தமிழ்நாட்டிலும்இலங்கைக்குப் பக்கத்து நாடான தமிழீழத்திலும் ஏனைய பிற நாடுகளிலும் வாழ்கிறார்கள்.

ஆனால், இந்தியாவுக்கும் இந்தியர்களுக்கும் அந்த நாட்டை ஆளுகின்ற காங்கிரஸ்காரர்களுக்கும் தமிழர்கள் இந்தியாவின் மீது (தம் இன அழிப்பிற்குத் துணைபோன பிறகும்) வைத்திருக்கும் மதிப்பையும் மரியாதையையும் காப்பாற்றிக் கொள்ளத் தெரியாமல் ஈனத் தனமான செயல்பாடுகளில் ஈடுபடுவதாகவே தெரிகிறது. அதற்கு உதாரணமாக ஒரு புதிய திரைப்படம் தமிழர்களை தவறாக சித்தரித்து தவறான செய்திகளைப் பரப்ப தயாராக உள்ளதாக கேள்விப் படுகிறேன். 

கடந்த ஆறு ஆண்டுகளுக்கு முன்பு ௨௦௦௭ 2007 ல் (இந்தியாவின் சுயரூபம் எனக்குத் தெரிவதற்கு முன்னால்) நான் எழுதிய ஓர் கவிதையின் சில வரிகள் 

என் இந்தியத்தாய்
நாகரீகத்தை இழந்து...
பண்பாட்டை இழந்து...
பழம்பெருமையை இழந்து...
நவநாகரிகம் என்ற பெயரில்
அம்மணமாய் நிற்கிறாள் பார்!!


தமிழர்கள் சிந்திக்கத் துவங்கி விட்டார்கள், அவர்களின் ஒற்றுமையைக் குலைக்க வேண்டும் என்ற நோக்கில் இப்படிப்பட்ட ஒரு சில சதித் திட்டங்களை இந்திய அரசும் காங்கிரஸ் அரசும் தீட்டியுள்ளன. 

தமிழனக் கென்று தாய்நா டிரண்டு 
தரணியில் வேண்டும் தோழா வாடா 

 "தமிழா... (இந்தியாவைவிட்டுவிடுதலைகாண் (http://munaivendrinaasureshkumarkavithaikal.blogspot.in/2012/08/blog-post_2673.html)"

மேலே உள்ள இந்தக் கவிதையை நான் எழுதிய ஒன்றரை ஆண்டுகளுக்கு முன்பிருந்து இதுவரை பலமுறை மீள்பதிவு செய்து விட்டேன். ஏனெனில் இந்தக் கவிதை யைப்  பகிர்ந்து கொள்ளக் கூடிய தேவை இன்னமும் இருந்துகொண்டே இருக்கிறது. 

மனிதநேயமில்லாத, குடிமக்களின் மேல் அக்கறை இல்லாத இந்திய அரசாங்கத்தை இன்னமும் தமிழன் தாய்நாடாக நினைத்துக் கொண்டிருந்தால் அது அவனுடைய அறியாமை.

விருப்பமுள்ளவர்கள் ஒருமுறை இந்தப் பதிவை படித்துப் பாருங்கள். 


No comments: