Sunday, September 15, 2013

வீதிவழியே ஒரு பயணம்

வந்து போனதற்கான
தடயங்கள் ஏதுமின்றி
அமைதியாய்க் கிடக்கின்றது
அந்த வீதி

மணம்வீசி
அடையாளப்படுத்திக் கொண்டிருக்கின்றன
அந்த மலர்கள்

துள்ளித் திரிந்த
மழலைகளும்
நின்று கவனிக்கின்றன
விபரமேதும் அறியாமல்...

கண்கள் கலங்கும்
வானம்

வீதிவழி மௌனமாய்
ஒரு பயணம்

நெஞ்சமெங்கும்
பிரிவின் வலி

நெருப்பை அணைக்க முயன்று
தோற்றுத்தான் போகின்றன
அந்தக் கண்ணீர்த் துளிகள்

No comments: