Sunday, November 17, 2013

குளம்படி சப்தங்கள்

ஆளரவம் எதுவுமில்லை
நள்ளிரவு நிசப்தம்

கேட்டுக்கொண்டே இருக்கின்றன
குளம்படி சப்தங்கள்
காதுகளில்...

எந்தத் திசைநோக்கியும்
செல்லலாம்
அந்தக் குதிரை

கடிவாளமும் அணிந்திருக்கலாம்
காற்றாய் பறக்கும்
அந்தக் குதிரை

கனமழை பொழிவதற்காய்
கூடிய மேகங்களை
கலைத்துவிட்டும் போகலாம்
அந்தக் குதிரை

தூக்கத்திலிருந்து பலரை
தட்டியெழுப்பியிருக்கலாம்
அதன் கணைப்பொலி

நிச்சயமாய் ஒருவன்
அமர்ந்திருப்பான்
அதன்மேல்...

என்ன அவரசம்
அந்தக் குதிரைக்கு?

கேட்டுக்கொண்டே இருக்கின்றன
குளம்படி சப்தங்கள்
காதுகளில்...

No comments: