Sunday, April 27, 2014

தமிழ்நாட்டில் ஒன்றரை கோடி 'வாக்களிக்க விருப்பமில்லை' (NOTA - None Of The Above) வாக்குகள் பதிவு



நடந்து முடிந்த நாடாளுமன்றத் தேர்தலில் தமிழ்நாட்டில் ஒன்றரை கோடி 'வாக்களிக்க விருப்பமில்லை' வாக்குகள் பதிவானதாக ஒரு செய்தி படித்தேன். மகிழ்ச்சியடைந்தேன்.

தமிழ்நாட்டில் உள்ள ஏறத்தாழ ஏழு கோடிப் பேர்களில் வாக்களிக்கத் தகுதியுள்ளவர்கள் ஏறத்தாழ நான்கரை முதல் ஐந்து கோடிப் பேர்கள் இருப்பார்கள்.

ஒன்றரை கோடி 'வாக்களிக்க விருப்பமில்லை' வாக்குகள் பதிவானதற்கு பதிலாக எழுபத்தைந்து விழுக்காடு அதாவது மூன்றுகோடி பதிவாகியிருந்தால் இன்னும் மகிழ்ச்சியாக இருந்திருக்கும்.

கடந்த வாரம் பரமக்குடி சென்றிருந்தபோது என் அம்மாவிடம் "வாக்களிக்க விருப்பமில்லை' (NOTA) என்ற சின்னத்தில் வாக்களி" என்று சொன்னேன். "எனக்கும் வரவர வாக்களிக்க விருப்பமில்லாமல்தான் இருக்கிறது. நான் அப்படி செய்தால் என்னுடைய வாக்கு செல்லாத வாக்காகி விடாதா?" என்று கேட்டாள். "அம்மா, நீ வேண்டுமானால் பார். நிறைய பேர் NOTA வில் தான் வாக்களிப்பார்கள். நம்முடைய இந்த வாக்குகள் நிச்சயம் பெருகும். நாட்டின் தலையெழுத்தையே மாற்றும். அப்போது அதிசயிக்கத்தக்க மாற்றங்கள் நிகழும்." என்று சொன்னேன்.

"யாருக்கு வாக்களித்தாய் அம்மா?" நேற்று என் அம்மாவிடம் கேட்டேன். "நீ சொன்னதுபோலவே NOTA வில் தான் வாக்களித்தேன்." என்றாள்.

தி.மு.க மாற்றும் காங்கிரசுடன் பேரம் பேசி பேரம் படியாததால் பா.ஜ.க. விடம் பெட்டி பெட்டியாய் பணம் வாங்கிக் கொண்டு பா.ஜ.க விற்கு ஆதரவாக தே.மு.தி.க தேர்தல் பரப்புரை செய்ததாக செய்திகள் வெளியாயின.

"விஜயகாந்த் கட்சி ஆரம்பிக்கவில்லை. கார்பரேட் கம்பெனிதான் ஆரம்பித்துள்ளார்." என்று கடந்த சட்டமன்றத் தேர்தலில் தே.மு.தி.க வை எதிர்த்து தேர்தல் பரப்புரை செய்த வைகைப்புயல் வடிவேலு சொன்னது மிகச்சரியான வார்த்தை என்று இப்போது தெரிகிறது.


நஷ்டம் என்கிறார்கள். இலாபம் என்கிறார்கள். இலாபம் வரும்போது மட்டும் ஆளாளுக்கு தின்று ஏப்பம் விட்டுறானுங்க. நஷ்டம் என்று கணக்கு கட்டி எங்களோட தலைல கட்டப்பார்க்கறீங்க? ஏண்டா மொள்ளமாரி நொன்னைகளா?

இந்தியாவின் போதைக்கு தமிழ்நாடும் தமிழ்நாட்டு மக்களாகிய நாங்களும் ஈழத்தமிழர்களும் ஊறுகாய். உங்களோட போதைக்கு நாங்க ஊறுகாயாடா வெண்ணைகளா?

சீமான் அண்ணாச்சி,

அ.தி.மு.க விற்கு தாங்கள் நன்றி நவில்வது வேறு. வாக்களிக்க ஆதரவு தருமாறு பரப்புரை செய்வது வேறு. நம்முடைய தமிழ்நாட்டில் இலாபம் தரும் துறைகள் பல இருந்தும் அவற்றையெல்லாம் பதுக்கி வைத்துவிட்டு நஷ்டம் நஷ்டம் என்று பஞ்சப்பாட்டு பாடும் இந்த ஜெயலலிதாவால் மத்தியில் என்ன கிழித்துவிட முடியுமென்று நீங்கள் ஆதரவு திரட்டினீர்கள் என்று தெரியவில்லை. ஒருவேளை விஜயகாந்த் பா.ஜ.வி டம் பெட்டி பெட்டியாய் பணம் வாங்கியதுபோலவே தாங்களும் அ.தி.மு.வி டம் வாங்கியிருக்கிறீர்களோ என்ற சந்தேகம் எழுகிறது.

கட்சி ஆரம்பித்த புதிதில் "நாம் தமிழர் கட்சி மற்றுமொரு அரசியல் கட்சியல்ல. மாற்று அரசியல் புரட்சி." என்றெல்லாம் சொன்னீர்களே... இன்று நீங்களும் அந்த திராவிடமெனும் குழிக்குள்ளேயே விழுந்து விட்டீர்களே? இது நியாயமா அண்ணாச்சி?

எப்படியாயினும் நம்முடைய தமிழ்நாட்டின் தலையெழுத்தை தீர்மானிக்கும் மாபெரும் சக்தி நாம்தான். பொறுத்திருந்து பார்ப்போம்.

போராட்டத்தில் குதிக்கும் மக்களுக்கு எனது வாழ்த்துகள்.




தேர்தல் முடிந்தது.. ஆரம்பித்தது 'பவர் கட்'.. ஆங்காங்கு போராட்டத்தில் குதிக்கும் மக்கள்

Read more at: http://tamil.oneindia.in/news/tamilnadu/power-cut-looms-large-again-tn-lse-199333.html

​இந்த லட்சணத்தில் இன்னும் ஒன்றரை மாதங்களுக்குள் மின்கட்டண உயர்வு அமலுக்கு வருகிறதாம்.

தமிழ்நாடு மின்சார வாரியம் நஷ்டத்தில் இயங்குகிறதாம். அதனால் இந்த முடிவாம்.

ஏற்கனவே பஞ்சப்பாட்டு பாடித்தான் பால், பேருந்து கட்டணம் மற்றும் மின்சார கட்டணம் ஆகியவற்றின் விலையை ஜெயலலிதா ஏற்றினாள். இப்போது மீண்டும் அதே மக்கள் விரோத ஆட்சி தொடர்கிறது தமிழகத்தில்.

இந்த இலட்சணத்தில் நாம் தமிழர் அண்ணாச்சி சீமான் அதிமுக விற்கு வாக்களிக்க கேட்டு பரப்புரை செய்தார்.

இங்கு எல்லோரும் சுயநல அரசியலை முன்னெடுக்கத் துவங்கிவிட்டனர். சீமான் உட்பட எல்லோருமே ஈழத்தை வைத்தும் தமிழக மக்களின் ஏழ்மையை சொல்லிச்சொல்லியும் அரசியலில் சொத்து சேர்க்கத் துவங்கிவிட்டனர். ஆதாயம் தேடத் துவங்கிவிட்டனர்.

இளிச்சவாயத் தமிழன் அடுத்தவன் வாயைப் பார்த்துக் கொண்டே எல்லாவற்றையும் கோட்டைவிடுகிறான். இவனாவது நம் கஷ்டங்களை புரிந்துகொள்வானா என்று ஏங்கிஏங்கி சாகிறான்.

ஏண்டா நான் தெரியாமத்தான் கேட்கிறேன். எல்லாமே நஷ்டம் நஷ்டம் என்றால், வருகிற லாபமெல்லாம் எங்கதாண்டா போகுது?

போராட்டத்தில் குதிக்கும் மக்களுக்கு எனது வாழ்த்துகள்.

Saturday, April 26, 2014

my anna



​நேற்று மதியம் என் தங்கச்சி பாமினியிடம் முகநூல் IM (Instant Message) ல் பேசினேன். 'உன்னிடம் பேசி இரண்டு மாதங்களாகி விட்டன. உடல்நிலை எப்படி உள்ளது ப்பா?' என்று கேட்டேன். 'உங்களிடம் பேச இயலாமைக்கு sorry my anna.' என்று அனுப்பினாள்.

'அண்ணாகிட்ட மன்னிப்பெல்லாம் கேட்கக்கூடாது டா' என்றேன்.

ஆத்தா,

நீயும் நானும் வித்யாசாகர் அண்ணாவின் செல்லப்பிள்ளைகள்.

உன்னுடைய my annaவை நீ பத்திரமாக வைத்துக்கொள். யாரிடமும் உன்னுடைய my annaவை கொடுத்துவிடாதே. சரியா?


அண்ணனென்று எப்போதும் அழைக்கின்ற மங்கை
எண்ணமதில் நினைவாக இருக்கின்ற தங்கை
..........
..........

செல்லச்செல்லப் பிள்ளையென சொல்லியுளம் துள்ளும்
கள்ளமில்லா உள்ளமதில் காணுமன்பு வெள்ளம்
..........
..........
..........
..........
..........
..........
கவிக்குயிலின் பாடல்களை கேட்பவன்தான் நானும்
செவியோரம் கேட்டுவிட்டால் சொட்டும்மலைத் தேனும்
..........
..........
..........
..........
வாசமுள்ள நமதுதமிழ் வார்த்தைகளால் பாட்டு

நேசமிக்க நெஞ்சமதில் நிறையுமூச்சுக் காற்று
..........
..........


ஆற்றுங்கவிச் செல்லம் - http://munaivendrinaasureshkumarkavithaikal.blogspot.com/2014/04/blog-post_4447.html

---------- Forwarded message ----------
From: முனைவென்றி நா சுரேஷ்குமார் நாகராஜன்
Date: 2014-03-16 12:21 GMT+05:30
Subject: என் தங்கைக்கு இன்று பிறந்தநாள்.
To:


என் தங்கைக்கு இன்று பிறந்தநாள். அவள் மருத்துவமனையில் சிகிச்சை பெறுகிறாள்.

என்னுடைய அன்பும் வேண்டுதல்களும் அவளை நல்லபடியாக நீண்ட ஆயுளோடு தொடர்ந்து உயரத்தில் அவளை கொண்டுபோய் சேர்க்கும்.

அவ இன்னும் நிறைய சாதிப்பா.

Thursday, April 24, 2014

பிறந்தநாள் வாழ்த்து



௨௬-௦௪-௨௦௧௪ அன்று என் மருமகன் விஷ்ணு பாப்பாவின் மூன்றாவது பிறந்தநாள். அவனின் பிறந்தநாளுக்காக நான் எழுதிய வாழ்த்துக்கவிதை.

வாழ்த்துகிறேன் பிறந்தநாளில் வந்துதித்த எங்களய்யா
தாழ்த்திதலை வணங்குகிறேன் தங்கச்சி மகனாரே
ஆழ்ந்துரைக்க முடியுமெனில் அழகான குழவியடா
வாழ்க்கையிங்கு உன்னோடு வரம்நூறு தாயேன்டா

வழமையாக நானிங்கு விளையாட உன்னோடு
குழவியாகிச் சிரித்தடவே குதித்தாடு எம்மிறையே
விளையாடும் அழகைத்தான் விழியசந்து பார்ப்போமே
பழம்பெருமைத் தமிழ்பேசி பண்புடனே வளர்வாயே

அம்பாரி யானையாகி உனையாட்டிடவே நானுண்டு
கொம்புடைய மான்போலே குதித்தோடும் பொன்வண்டு
நம்முடைய தமிழ்போலே நானிலத்தில் நீநின்று
தெம்புடனே நடைபோடு தமிழெங்கள் மூச்சென்று

அம்மையென அப்பனென அழகாக வகுத்தளித்த
செம்மையான சிறப்புடனே சீர்மிகுந்த தமிழைத்தான்
பொம்மையுடன் விளையாடும் புதுமையான பொம்மையே
இம்மைக்கும் மறுமைக்கும் எப்போதும் கற்பாயே

மாமனென்று அழைத்திட்ட மருமகனே மலைத்தேனே
உம்மைவிட அன்பான உறவில்லை இங்கெனக்கு
ஆமென்றும் இல்லையென்றும் ஆராயும் மனிதர்காள்
நமக்குள்ளே இறையுண்டு நீங்காத அன்பினிலே

மழலையிலே தமிழ்பேச மலைத்தேனும் செவிமுட்டும்
அலைகடலும் ஆர்ப்பரிக்கும் அழகேயுன் நடைபார்த்து
சிலைகெஞ்சும் சிரிப்பழகே சொத்தான நல்முத்தே
மலைமுட்டும் வான்போலே மனங்கொண்டே வாழ்வாயே 

இந்திய தேசிய திரைப்பட விருதுகள் - ஒரு பார்வை

தொகுப்பும் ஆக்கமும்: முனைவென்றி நா. சுரேஷ்குமார்

தேசிய திரைப்பட விருதுகள் (National Film Awards) இந்தியாவின் தொன்மையானதும் முதன்மையானதுமான விருதுகள் ஆகும். 1954ஆம் ஆண்டு நிறுவப்பட்ட இவ்விருதினை இந்திய அரசின் திரைப்பட விழாக்கள் இயக்கம் 1973ஆம் ஆண்டு முதல் நிர்வகித்து வருகிறது.

இந்தியத் திரைப்படத் துறையில் அழகிய கலை உணர்வை வெளிப்படுத்துவதாகவும், தொழில்நுட்பம் மிக்கதாகவும், அறிவை போதிக்கக் கூடியதாகவும், இந்தியப் பண்பாட்டின் புகழை உயர்த்தக் கூடியதாகவும் உள்ள திரைப்படங்களுக்கு தேசிய திரைப்பட விருது வழங்கப்படுகிறது.

சிறந்த ஒளிப்பதிவு, ஒலிப்பதிவு, சிறந்த இசையமைப்பாளர் என திரைப்படத் துறையின் வெவ்வேறு துறைகளுக்கும் விருது வழங்கப்படுகிறது. ஒவ்வொரு பிரிவிலும் தங்கத் தாமரை, வெள்ளித்தாமரை, வெண்கலத் தாமரை விருதுகள் வழங்கப்படுகிறது.

ஒவ்வோர் ஆண்டும் அரசால் நியமிக்கப்படும் தேசிய தேர்வுக்குழு விருதுக்குரியவர்களை/படைப்புகளை தெரிந்தெடுக்கிறது. விருதுகள் குடியரசுத் தலைவரால் தலைநகர் புது தில்லியில் வழங்கப்படுகிறது. இவ்விழாவினைத் தொடர்ந்து துவங்கும் தேசிய திரைப்பட விழாவில் விருது பெற்ற திரைப்படங்கள் பொதுமக்களுக்காக திரையிடப்படுகின்றன. நாட்டின் பலபகுதிகளில் கடந்த ஆண்டில் வெளியான திரைப்படங்களில் இருந்து சிறந்த திரைப்படங்களும் திரைக்கலைஞர்களும் அடையாளம் காணப்படுகின்றனர். தவிர, ஒவ்வொரு பிராந்திய மற்றும் மொழி படங்களுக்கு தனியாக விருதுகள் வழங்கப்படுகின்றன.இது இந்தியாவின் ஆசுகார் விருதாகக் கருதப்படுகிறது.

61-வது தேசிய திரைப்பட விருதுகள்:

மத்திய அரசு ஆண்டுதோறும் சிறந்த படங்கள் மற்றும் திரைப்படத்துறையை சேர்ந்த சிறந்த கலைஞர்களை தேர்ந்தெடுத்து விருது வழங்கி கௌரவித்து வருகிறது. இந்நிலையில், 61-வது தேசிய திரைப்பட விருதுகள் அறிவிக்கப்பட்டுள்ளன.

இந்த ஆண்டு அதிக தேசிய விருதுகளை அள்ளியவை, தென் இந்திய மொழிப் படங்கள்தான். குறிப்பாக தமிழ். இந்த ஆண்டு மூன்று தமிழ்ப் படங்கள், ஐந்து விருதுகளைக் குவித்துள்ளன. இந்தப் படங்கள் தமிழ் உணர்வாளர்களால் உருவாக்கப்பட்டவை என்பது ஒரு கூடுதல் பெருமை.

சிறந்த தமிழ் திரைப்படமாக ராம் இயக்கத்தில் சென்ற ஆண்டு வெளிவந்த ‘தங்கமீன்கள்’ படம் தேர்வாகியுள்ளது. இப்படம் ஏற்கெனவே பல்வேறு விருதுகளை வாங்கிக் குவித்துள்ளது.

மேலும், சிறந்த குழந்தை நட்சத்திரத்திற்கான விருதுக்கு இப்படத்தில் நடித்த சாதனா தேர்வாகியுள்ளார். சிறந்த பாடலாசிரியராக இப்படத்தில் ‘ஆனந்த யாழை மீட்டுகிறாய்...’ என்ற பாடலை எழுதியதற்காக நா.முத்துக்குமார் தேர்வாகியுள்ளார்.

சிறந்த கதையமைப்பிற்காக ‘தலைமுறைகள்’ படம் தேர்வாகியுள்ளது. சிறந்த எடிட்டிங்கிற்காக வல்லினம் படத்திற்கு வி.ஜே.சபு ஜோசப் தேர்வாகியுள்ளார்.

விருதுப் பட்டியல்:

* சிறந்த திரைப்படம்: ஷிப் ஆஃப் தீசிஸ் (Ship of Theseus) (ஆங்கிலம் - இந்தி)

* சிறந்த புதுமுக இயக்குநருக்கான இந்திரா காந்தி விருது: ஃபாண்ட்ரி (Fandry) (மராத்தி)

* சிறந்த பொழுதுபோக்கு திரைப்படம் - பாக் மில்கா பாக்

* தேசிய ஒறுமைப்பாட்டிற்கான நர்கிஸ் தத் விருது - தலைமுறைகள்

* சமூகப் பிரச்சினைகளைக் காட்டிய சிறந்த படம்: தூஹியா தர்மா கோச்சா (Tuhya Dharma Koncha) (மராத்தி)

* சிறந்த சுற்றுச்சூழல் திரைப்படம் : பெரறியாதவர் (Perariyathavar) (மலையாளம்)

* சிறந்த குழந்தைகள் படம் - காபல் (Kaphal) (இந்தி)

* சிறந்த இயக்குநர் - ஹன்ஷல் மேத்தா (படம்: ஷாஹித்) (இந்தி)

* சிறந்த நடிகர் - ராஜ்குமார் (ஷாஹித் - இந்தி) மற்றும் சூரஜ் வெஞ்சராமூடு (பேரறியாதவர் - மலையாளம்)

* சிறந்த நடிகை - கீதாஞ்சலி தாபா (படம்: லயர்ஸ் டைஸ் - Liar's Dice - இந்தி)

* சிறந்த உறுதுணை நடிகர்: செளரப் சுக்லா (ஜாலி எல்.எல்.பி - இந்தி)

* சிறந்த உறுதுணை நடிகை: அமிருதா சுபாஷ் (அஸ்து - மராத்தி) மற்றும் ஆயிடா எல்-காஷெஃப் (ஷிப் ஆஃப் தீசஸ்- ஆங்கிலம், இந்தி)

* சிறந்த குழந்தை நட்சத்திரம்: சோம்நாத் அவ்காடே (ஃபாண்ட்ரி - மராத்தி) மற்றும் சாதனா (தங்கமீன்கள் - தமிழ்)

* சிறந்த பின்னணி பாடகர்: ரூபன்கர் (படம் - ஜாதிஸ்வர் - பெங்காலி)

* சிறந்த பின்னணி பாடகி: பெலா ஷிண்டே (படம்: துஹ்யா தர்மா கோச்சா - மராத்தி)சிறந்த ஒளிப்பதிவு - ராஜீவ் ரவி (Liar's Dice - இந்தி)

* சிறந்த திரைக்கதை (அசல்) - ஷேசாத்திரி (டிசம்பர் 1 - கன்னடம்)

* சிறந்த திரைக்கதை (தழுவல்) - பஞ்சாக்‌ஷரி (பராக்ருதி - கன்னடம்)

* சிறந்த திரைக்கதை (வசனம்) - சுமித்ரா பாவே (அஸ்து - மராத்தி)

* சிறந்த ஆடியோகிரபி (Location Sound Recordist): நிகர் ரஞ்சன் சமல் (மெட்ராஸ் கபே - இந்தி)

* சிறந்த ஆடியோகிரபி (Sound Design) - பிஸ்வாதீப் சட்டர்ஜி (மெட்ராஸ் கபே - இந்தி)

* சிறந்த ஆடியோகிரபி (Re-recordist of the final mixed track) - யுவராஜ் - ஸ்வப்னம் (மலையாளம்)

* சிறந்த எடிட்டிங் - சாபு ஜோசப் (வல்லினம்)

* சிறந்த தயாரிப்பு வடிவமைப்பு - ஆஷிம் அலுவாலியா, தப்ஷீர் ஸுத்சி, பரிசித் பரால்கர் (மிஸ் லவ்லி - இந்தி)

* சிறந்த ஆடை வடிவமைப்பு - சபர்னி தாஸ் (ஜாதிஷ்வர் (Jaatishwar) - பெங்காலி)

* சிறந்த ஒப்பனை கலைஞர் - விக்ரம் கெய்க்வாட் (ஜாதீஷ்வர் - பெங்காலி)

* சிறந்த இசை (பாடல்கள்) - கபிர் சுமன் (ஜாதீஷ்வர் - பெங்காலி)

* சிறந்த இசை (பின்னணி இசை) - சாந்தனு மோஹித்ரா (நா பங்காரு தாலி - தெலுங்கு)

* சிறந்த பாடலாசியர்: நா.முத்துகுமார் (ஆனந்த யாழை - தங்கமீன்கள்)

* சிறப்பு நடுவர் விருது: எல்லோ (மராத்தி) மற்றும் மிஸ் லவ்லி (இந்தி)

* சிறந்த கிராபிக்ஸ்: இன்டர்மெஸ்ஸோ ஸ்டூடியோ, ஏலியன் சென்ஸ் ஃபிலிம் லிட் (ஜல் - இந்தி)

* சிறந்த நடனம்: கணேஷ் ஆச்சார்யா (பாக் மில்கா பாக் - இந்தி)

* சிறந்த அசாமி மொழி படம்: அஜேயோ (Ajeyo)

* சிறந்த வங்கமொழி திரைப்படம் - பாகிதா பியாக்திகடோ (Bakita Byaktigato)

* சிறந்த இந்தி திரைப்படம்: ஜாலி எல்.எல்.பி

* சிறந்த கன்னடத் திரைப்படம்: டிசம்பர் 1

* சிறந்த கொங்கானி திரைப்படம்: பாகா பீச்

* சிறந்த மலையாள திரைப்படம்: நார்த் 24 காதம்

* சிறந்த மராத்தி திரைப்படம் - அஞ்சா திவாஜ் மாஜ்ஹா (Aajcha Diwas Majha)

* சிறந்த தமிழ் திரைப்படம் - தங்க மீன்கள்

* சிறந்த தெலுங்கு திரைப்படம் - நா பங்காரு தாலி (Na Bangaaru Talli)

* சிறந்த ஆங்கில திரைப்படம் - தி காஃபின் மேக்கர் (The coffin Maker)

தங்க மீன்கள் குறித்து:

அப்பாவிடம் விளம்பரத்தில் வருவது போன்ற நாய் வாங்கித் தாப்பா என்று கேட்கும் மகள் .அந்த நாயின் விலை 22500 என்று மகள் கேட்டதால் எப்படியாவது வாங்கித் தர உழைக்கிறான். “விளம்பரத்தைப் பார்த்து கேட்பதையெல்லாம் வாங்கித் தரலாமா?” என்று கேலி பேசுகிறாள் சகோதரி .

குழந்தையின் உணர்வுகளுக்கு மதிப்பு அளியுங்கள் என்று பெற்றோர்களுக்கு உணர்த்தும் படம் .பெற்றோர்களும் திருமணம் ஆன மகனின் உணர்வுகளுக்கு மதிப்பு அளியுங்கள் என்று உணர்த்தும் படம் .

தனியார் பள்ளியில் படிக்கும் தன் குழந்தைக்கு ஃபீஸ் கட்ட முடியாத ஒரு தந்தைக்கும் மற்ற குழந்தைகள் போலல்லாமல் சற்று கற்றல் குறைபாடுடைய மகளுக்கும் இடையிலான அன்பையும், கூடவே சீர்கெட்டுப்போயிருக்கும் கல்வி சூழலையும் பற்றி பேசுகிறது தங்க மீன்கள்.

சிறந்த மாநில மொழிப் படம் என்ற பரிசுபெற்றுள்ள இந்தப் படத்துக்கு ரூ 1 லட்சம் ரொக்கப் பரிசு வழங்கப்படும். உடன் பதக்கமும் சான்றிதழும் தரப்படும்.

நா. முத்துக்குமார்:

பாடலாசிரியர், கவிஞர், எழுத்தாளர், நாவலாசிரியர் என பன்முகத்திறமை கொண்டவர். காஞ்சிபுரம் மாவட்டத்தில் உள்ள கன்னிகாபுரத்தை சேர்ந்தவர் இவர். நான்கு வயதில் தாயை இழந்தவர். சிறு வயதில் இருந்தே புத்தகங்களை உலகமாக கொண்டார். தொடக்கத்தில் இயக்குனராகப் பணியாற்ற விரும்பி இயக்குனர் பாலுமகேந்திராவிடம் நான்கு ஆண்டுகள் பணி செய்தார்.

தேசியவிருது பெற்றுள்ள நா. முத்துக்குமார் கீழ்க்கண்டவாறு தன்னுடைய அறிக்கையை வெளியிட்டுள்ளார்.

“அன்புள்ள பத்திரிக்கை, தொலைக்காட்சி, வானொலி, இணையதள நண்பர்களுக்கு வணக்கம். உங்களில் ஒருவனாக என் வளர்ச்சியை நீங்கள் உணர்கிறீர்கள் என்பதை நானறிவேன். உங்கள் அன்பும், ஆதரவும் என் பயணத்தில் கிடைத்த பூங்கொத்துக்கள். "தங்கமீன்கள்" திரைப்படத்தில் நான் எழுதிய "ஆனந்த யாழை"பாடலுக்காக சென்ற ஆண்டின் சிறந்த திரைப்பட பாடலாசிரியருக்கான தேசிய விருது எனக்கு கிடைத்துள்ளது என்பதை உங்களுடன் மகிழ்ச்சியுடன் பகிர்ந்து கொள்கிறேன்.

இன்னும் தரமான பாடல்களை தமிழ் மக்களுக்கு தர வேண்டும் என்னும் கூடுதல் பொறுப்புணர்வை இவ்விருது என் தோள்களின் மீது ஏற்றி வைத்திருக்கிறது. தாய், மகன் பாசம் பற்றி நிறைய பாடல்கள் நம்மிடம் உண்டு. தந்தை, மகள் பாசம் குறித்த பாடல்களை விரல் விட்டு எண்ணி விடலாம். இந்த பாடலுக்கு தேசிய விருது கிடைத்திருப்பது குறித்து நான் அளவில்லா மகிழ்ச்சி அடைகிறேன். இத்தருணத்தில் தங்கமீன்கள் இயக்குனர் ராம், இசையமைப்பாளர் யுவன் ஷங்கர் ராஜா, பாடகர் ஸ்ரீராம் பார்த்தசாரதி ஆகியோருக்கு என் நன்றியை தெரிவித்து கொள்கிறேன். இவ்விருதை என் தந்தை நாகராஜனுக்கும், ஞானத்தந்தை பாலுமகேந்திராவுக்கும், இயக்குனர் ராமின் மகள் ஸ்ரீ சங்கர கோமதிக்கும், என் மகன் ஆதவன் நாகராஜனுக்கும், இந்த பாடலுக்காக என் கைகளைப் பிடித்து ஆனந்த கண்ணீர் விட்ட பெற்றோர்களுக்கும் சமர்பிக்கிறேன். மீண்டும் உங்கள் ஆதரவிற்கும், அன்பிற்கும் நன்றி.”

தலைமுறைகள்:

அமரர் பாலு மகேந்திராவின் கடைசிப் படம். தமிழையும் இந்தத் தாத்தாவையும் மறந்துடாதப்பா... என்று தழுதழுத்தபடி பேரனிடம் சொல்லும் பாலு மகேந்திரா குரல் இன்னும் காதுகளை விட்டு நீங்கவில்லை. சின்ன பட்ஜெட்டில், ஆனால் பெரிய விஷயத்தை எளிமையாய்ச் சொன்ன படம்தமிழ் தெரியாத தன் பேரனுக்கு தாத்தா எளிமையாக தமிழ் கற்றுத் தந்ததும், பதிலுக்கு தாத்தாவுக்கு பேரன் ஆங்கிலம் கற்றுத் தருவதுமான காட்சிகள் இந்தத் தலைமுறை அவசியம் பார்க்க வேண்டியவை. அடுத்த தலைமுறையில் எந்த தமிழ்க் குழந்தையும் தமிழ் தெரியாது என்று சொல்லும் அவலமே இருக்கக் கூடாது என்ற பாலு மகேந்திராவின் ஆதங்கத்துக்கு வெள்ளி ரஜத் கமல் வழங்கி கவுரவித்திருக்கிறது மத்திய அரசு!



வல்லினம்:

கூடைப் பந்தாட்டத்தை மையப்படுத்தி உருவாக்கப்பட்ட படம் வல்லினம். நகுல் - மிருதுளா நடித்த இந்தப் படத்தில் முதல் பாதியைவிட, பின் பாதியில் எடிட்டருக்கு சவால் இருந்தது. அதற்காகவே சிறந்த எடிட்டருக்கான விருது சாபு ஜோசப்புக்கு வழங்கப்பட்டுள்ளது.

தேசிய திரைப்பட விருதுகளை வாங்கிய நம்முடைய தமிழ் திரைப்படக் கலைஞர்களை நாமும் மனதார வாழ்த்துவோம்.

Tuesday, April 22, 2014

என் தங்கச்சிப்பிள்ள பாமினி (திரைப்படப் பாடலாசிரியை) க்கு நான் எழுதிய வாழ்த்துக்கவிதை




தங்கச்சி சாமியார் 'எஸ்விஆர் பாமினி' - http://munaivendrinaasureshkumarkavithaikal.blogspot.com/2013/12/blog-post_29.html என்ற என்னுடைய முந்தைய பதிவில் சொன்னபடி கடந்த ௨௦௧௩ ஜூன் மாதம் என் தங்கச்சிப்பிள்ள பாமினி கவிதைநூல் வெளியிடுவது தொடர்பாக என்னிடம் கேட்டாள்.

அதன்பிறகு கடந்த ௨௦௧௪ பிப்ரவரி மாத இறுதியில் என்னிடம் பேசும்போது 'அடுத்த கவிதைநூலை எப்போது அண்ணா வெளியிடப் போகிறீர்கள்?' என்றாள். 'இப்போது இல்லப்பா' என்றேன். 'என்னுடைய முதல்கவிதைநூலை வரும் ஏப்ரல் ௨௭ அன்று வெளியிட வேண்டும். அனைத்தும் ஈழம் சார்ந்த கவிதைகள். அதற்கு தங்களின் வாழ்த்துச்செய்தியொன்று வேண்டும் அண்ணா' என்றாள். 'மகிழ்ச்சிப்பா. விரைவில் அனுப்பி வைப்பா' என்றேன். 



வரும் ஞாயிறு (ஏப்ரல் ௨௭, வ௦௧௪) அன்று நடைபெறும் 'கலைகளுக்குள் ஓர் சங்கமம்' விழாவில் தன்னுடைய 'உன்னிடம் திருடிய பொய்கள்' பாடல் தொகுப்பு வெளியிடுவதோடு தன்னுடைய முதல் கவிதைநூலையும் வெளியிட்டு விடலாம் என்ற எண்ணத்தில் தங்கச்சி இருந்தாளென்று இப்போது புரிகிறது. 

அவள் என்னிடம் கடந்த பிப்ரவரி மாத இறுதியில் பேசியபிறகு சில நாட்களில் மருத்துவமனை, சிகிச்சை என கடந்த ஒன்றரை மாதங்கள் ஓடிப்போயின. 

தங்கச்சி,

இந்த அண்ணா எழுதிய "‘ஆற்றுங்கவிச் செல்லம்’ பாமினி - http://munaivendrinaasureshkumarkavithaikal.blogspot.in/2014/04/blog-post_6858.html" என்ற என்னுடைய இந்த கவிதையை என்னுடைய கையெழுத்துபிரதியோடு பத்திரமா வச்சுக்கடா. சரியா? 

நான் முதுநிலை கணினிப்பயன்பாட்டியல் (M.C.A.,) படிக்கும்போது ௨௦௦௬ ல் அழகப்பா பல்கலைக்கழக தமிழ் நண்பர்களோடு சேர்ந்து 'புதிய சிற்பி' என்ற மாத இதழை நடத்தினோம். அந்த இதழின் பொறுப்பாசிரியர்களுள் ஒருவராக என்னை நியமித்த அந்த இதழின் ஆசிரியர் முதல்மாத இதழின் தலையங்கத்தில் ஒவ்வொருவரையும் அறிமுகப்படுத்தி வந்தவர் என்னுடைய கவிதையேடுகளை படித்துவிட்டு என்னை இப்படித்தான் அறிமுகப்படுத்தினார். 

ஒரு சங்கீதக் கலாநிதியைப் போல், தொடையில் தட்டிப் பாடச்சொல்லும் கவிதைகளைத் தருபவர் முனைவென்றி நா. சுரேஷ்குமார்.

சந்தமும் தொடைநயமும் துள்ளலோசையும் சேர்ந்துவருவதே நான் எழுதும் கவிதைகளுக்கான இயல்பான கவிதைநடை. இந்த எனக்கான இயல்பான கவிதைநடையிலேயே உனக்கான வாழ்த்துக்கவிதையும் என்னால் எழுதப்பட்டுள்ளது. வாழ்த்துச்செய்தி கேட்டாய். வாழ்த்துக்கவிதை அனுப்பியிருக்கிறேன். 

முதல் கவிதைநூலை வெளியிட முடியவில்லை என நீ வருத்தப்படாதே. விரைவில் நல்லபடியாக வெளியிடுவோம். 

ஒரு மாதத்திற்கு முன்பு நீ மருத்துவமனையில் சிகிச்சை பெற்றபோது skype IM ல் நலம் விசாரித்தேன். மறுமுனையிலிருந்து 'பாமினியில்லை' என்று பதில் வந்தது. 'தங்கச்சியை நான் மிகவும் கேட்டேன் என்று சொல்லுங்கள்" என்றேன். 'சரி' என்று பதில் வந்தது. சில நாட்கள் கழித்தபிறகு skype IM ல் 'தங்கச்சி எப்டி இருக்கா? அவளுக்கு என்மேல ரொம்ப பாசம்' என்று அனுப்பினேன். மறுமுனையிலிருந்து 'நீங்கள் நலம் விசாரித்ததை ஏற்கனவே சொல்லிவிட்டேன். பாமினி சிரிச்சுக்கிட்டே சொன்னவ, அண்ணாவுக்கு என்மேல ரொம்ப பாசம் என்று.'

பிறகொருநாள் நான் skype IM ல் பேச முயற்சித்தேன். காணொளி அழைப்பு வந்தது. மருத்துவமனையில் நீ நன்றாக உறங்கி ஓய்வெடுத்துக் கொண்டிருந்தாய். நான் ஞாபகமில்லாமல் 'தங்கச்சி ஏன் தூங்குது?' என்று கேட்டபிறகே எனக்கு புரிந்தது நீ இன்னும் மருத்துவமனையில்தான் இருக்கிறாய் என்று. அதற்குள் யாரோ பக்கத்தில் உன்னை எழுப்ப முயற்சித்தனர். 'தங்கச்சி நல்லா ஓய்வெடுக்கட்டும். அவள தொந்தரவு செய்யவேண்டாம்' என்று சொன்னேன். 

நீ சென்னைக்கு வரும்போது மறக்காம என்னுடைய அலைபேசிக்கு அழைத்து நீ வந்த தகவலை சொல்லிவிடு. உன்னை நேரில் சந்திக்க நான் எங்கிருந்தாலும் ஓடோடி வந்துவிடுகிறேன். சரியா? உனக்கு பொம்மைகள் வேணும் னா நான் வாங்கித்தர்றேன். நீ ஏற்கனவே ஒரு புலிபொம்மை வச்சிருக்கிற தானே. உனக்கு கரடி பொம்மை பிடிக்குமா? நான் ஏற்கனவே சொன்னமாதிரி ஒரு பெரிய்ய்ய கரடி பொம்மை வாங்கித்தர்றேன்.

ஆத்தா, நம்முடைய பாசமும் மழலைகள் போன்ற அன்பும் நம்முடைய மரணத்தைத்தாண்டியும் இப்படியே தொடரணும். இதுதான் இந்த அண்ணாவோட விருப்பம்.

‘ஆற்றுங்கவிச் செல்லம்’ பாமினி - http://munaivendrinaasureshkumarkavithaikal.blogspot.in/2014/04/blog-post_6858.html

------------



---------- Forwarded message ----------
From: முனைவென்றி நா சுரேஷ்குமார் நாகராஜன்
Date: 2014-03-16 12:21 GMT+05:30
Subject: என் தங்கைக்கு இன்று பிறந்தநாள்.
To: 


என் தங்கைக்கு இன்று பிறந்தநாள். அவள் மருத்துவமனையில் சிகிச்சை பெறுகிறாள். 

என்னுடைய அன்பும் வேண்டுதல்களும் அவளை நல்லபடியாக நீண்ட ஆயுளோடு தொடர்ந்து உயரத்தில் அவளை கொண்டுபோய் சேர்க்கும்.

அவ இன்னும் நிறைய சாதிப்பா.


‘ஆற்றுங்கவிச் செல்லம்’ பாமினி








என் தங்கச்சிப்பிள்ள பாமினி (திரைப்படப் பாடலாசிரியை) க்கு நான் எழுதிய கவிதையிது.


அண்ணனென்று எப்போதும் அழைக்கின்ற மங்கை
எண்ணமதில் நினைவாக இருக்கின்ற தங்கை
வண்ணவண்ணக் கவியிசைக்க வார்த்தைவழி கங்கை
அன்னையிங்கு தூரநிற்க அரவணைக்கும் செங்கை

செல்லச்செல்லப் பிள்ளையென சொல்லியுளம் துள்ளும்
கள்ளமில்லா உள்ளமதில் காணுமன்பு வெள்ளம்
சொல்லச்சொல்லக் கரைந்துவிழும் கள்ளமிலா உள்ளம்
அள்ளஅள்ளக் குறையாமல் ஆற்றுங்கவிச் செல்லம்

கங்கைநதி வைகைநதி காவிரியும் காயும்
தங்கையிவள் தமிழ்கேட்க திரையுலகே சாயும்
மங்கையிவள் மொழிகேட்டே மாண்டபுலி பாயும்
சிங்களவன் சிங்கத்தின் செருக்கெல்லாம் மாயும்

கற்பனையின் உச்சம்நின்று கவிக்குயிலும் பாடும்
சொற்குவியல் வற்றாமல் சிந்தைவழிந் தோடும்
கற்றதமிழ் பாடல்களில் களிநடன மாடும்
உற்றதுணைச் சுற்றமெலாம் இவளெங்கே தேடும்

கவிக்குயிலின் பாடல்களை கேட்பவன்தான் நானும்
செவியோரம் கேட்டுவிட்டால் சொட்டும்மலைத் தேனும்
தெவிட்டாத வார்த்தைகளில் துள்ளுமிசை நாணும்
புவியிலிங்கு கூவுகின்ற புதுக்குயிலின் கானம்

அழுதழுது எழுதிவைத்தேன் அன்பிலிந்த மெட்டு
விழுந்தெழுந்து தொழுததமிழ் விளையாடும் தொட்டு
பழகுந்தமிழ் அழகுறவே பாடி;கைகள் தட்டு
இளங்குயிலே உமதுபுகழ் இமயமதில் நட்டு

வாசமுள்ள நமதுதமிழ் வார்த்தைகளால் பாட்டு
நேசமிக்க நெஞ்சமதில் நிறையுமூச்சுக் காற்று
பேசுந்தமிழ் குழவியிந்த பாமினியும் கேட்டு
அசைந்திசைந்து ஆடிடுவாள் அண்ணனிவன் கூற்று

ஆனந்த யாழை மீட்டியவன் கைகளில் தேசியவிருது

தொகுப்பும் ஆக்கமும்: முனைவென்றி நா. சுரேஷ்குமார்




எனக்கு நன்றாக நினைவிலிருக்கிறது. மூன்றரை அல்லது நான்கரை ஆண்டுகளுக்கு முன்பு என் வீட்டில் தொலைக்காட்சிப்பெட்டியில் நிகழ்ச்சிகளை பார்க்க ஆரம்பித்து ஒவ்வொரு நிலையமாக மாற்றிக் கொண்டிருந்தேன். ஒரு ஈழதேசத்து தொலைக்காட்சி நிலைய நிகழ்ச்சியொன்றில் நிகழ்ச்சி தொகுப்பாளர் ஒருவர் ஒரு பாடலாசிரியருடன் உரையாடிக் கொண்டிருந்தார். தன்னுடைய பாடல்கள் தொடர்பான விழாவின்போது தன்னுடைய தந்தை ஆனந்தத்தில் கண்ணீர் விட்டதாக நெகிழ்ச்சியோடு அந்த பாடலாசிரியர் பகிர்ந்துகொண்டார். (நிகழ்ச்சியை பாதியிலிருந்தே கவனிக்க முடிந்ததால் இதுகுறித்து இன்னும் விளக்கமாக தெரிந்துகொள்ள இயலவில்லை. ஆனால், இந்த நிகழ்வு நிச்சயமாக கிரீடம் திரைப்படத்தில் இவர் எழுதிய “கனவெல்லாம் பலிக்குதே” என்ற பாடலை தொடர்புபடுத்தியே இருக்கும்.) அதுமட்டுமின்றி “வளர்ந்துவரும் திரைப்படப் பாடலாசிரியர்களுக்கு படத்தின் எல்லா பாடல்களையும் எழுத வாய்ப்பு தரவேண்டும். அதுவே அவர்களுக்கு உறுதுணையாக இருக்கும்” எனவும் பதிவுசெய்தார்.

அந்த பாடலாசிரியரும் கவிஞருமான திரு. நா. முத்துக்குமார், ஆனந்த யாழை மீட்டி ௨௦௧௪ (2014) ம் ஆண்டின் சிறந்த தமிழ் திரைப்படப் பாடலாசிரியருக்கான இந்திய தேசிய விருதை (‘தங்க மீன்கள்’ திரைப்படத்தில் ‘ஆனந்த யாழை மீட்டுகிறாய்’ என்ற பாடலை இயற்றியதன்மூலம்) வாங்க தேர்வாகியிருக்கிறார். அனைத்து தமிழர்களும் அவரை உச்சிமுகர வேண்டிய தருணமிது.

பாடலாசிரியர், கவிஞர், எழுத்தாளர், நாவலாசிரியர் என பன்முகத்திறமை கொண்டவர். காஞ்சிபுரம் மாவட்டதில் உள்ள கன்னிகாபுரத்தை சேர்ந்தவர் இவர். நான்கு வயதில் தாயை இழந்தவர். சிறு வயதில் இருந்தே புத்தகங்களை உலகமாக கொண்டார். தொடக்கத்தில் இயக்குனராகப் பணியாற்ற விரும்பி இயக்குனர் பாலுமகேந்திராவிடம் நான்கு ஆண்டுகள் பணி செய்தார்.

தேசியவிருது பெற்றுள்ள நா. முத்துக்குமார் கீழ்க்கண்டவாறு தன்னுடைய அறிக்கையை வெளியிட்டுள்ளார்.

“அன்புள்ள பத்திரிக்கை, தொலைக்காட்சி, வானொலி, இணையதள நண்பர்களுக்கு வணக்கம். உங்களில் ஒருவனாக என் வளர்ச்சியை நீங்கள் உணர்கிறீர்கள் என்பதை நானறிவேன். உங்கள் அன்பும், ஆதரவும் என் பயணத்தில் கிடைத்த பூங்கொத்துக்கள். "தங்கமீன்கள்" திரைப்படத்தில் நான் எழுதிய "ஆனந்த யாழை"பாடலுக்காக சென்ற ஆண்டின் சிறந்த திரைப்பட பாடலாசிரியருக்கான தேசிய விருது எனக்கு கிடைத்துள்ளது என்பதை உங்களுடன் மகிழ்ச்சியுடன் பகிர்ந்து கொள்கிறேன்.

இன்னும் தரமான பாடல்களை தமிழ் மக்களுக்கு தர வேண்டும் என்னும் கூடுதல் பொறுப்புணர்வை இவ்விருது என் தோள்களின் மீது ஏற்றி வைத்திருக்கிறது. தாய், மகன் பாசம் பற்றி நிறைய பாடல்கள் நம்மிடம் உண்டு. தந்தை, மகள் பாசம் குறித்த பாடல்களை விரல் விட்டு எண்ணி விடலாம். இந்த பாடலுக்கு தேசிய விருது கிடைத்திருப்பது குறித்து நான் அளவில்லா மகிழ்ச்சி அடைகிறேன். இத்தருணத்தில் தங்கமீன்கள் இயக்குனர் ராம், இசையமைப்பாளர் யுவன் ஷங்கர் ராஜா, பாடகர் ஸ்ரீராம் பார்த்தசாரதி ஆகியோருக்கு என் நன்றியை தெரிவித்து கொள்கிறேன். இவ்விருதை என் தந்தை நாகராஜனுக்கும், ஞானத்தந்தை பாலுமகேந்திராவுக்கும், இயக்குனர் ராமின் மகள் ஸ்ரீ சங்கர கோமதிக்கும், என் மகன் ஆதவன் நாகராஜனுக்கும், இந்த பாடலுக்காக என் கைகளைப் பிடித்து ஆனந்த கண்ணீர் விட்ட பெற்றோர்களுக்கும் சமர்பிக்கிறேன். மீண்டும் உங்கள் ஆதரவிற்கும், அன்பிற்கும் நன்றி.”

ஒரு பிரபலமான வாரஇதழுக்கு அவர் தன்னைப்பற்றி கூறியவை

“1975-ம் ஆண்டு ஜூலை மாதம் 12-ம் தேதி என் தாயின் பிறந்தகமான சென்னையில், எழும்பூர் அரசு மருத்துவ மனையில் நான் பிறந்தபோது, ஒட்டுமொத்த மருத்துவமனையே மாடிக்கு ஓடி வந்தது. என்னைப் பார்க்கத்தான் வருகிறார்கள் என்று நான் என் பால்யத்தின் முதல் புன்னகையைப் பூமிக்குப் பரிசளித்தபோது, அந்தக் கூட்டம் என்னைக் கடந்து, மொட்டை மாடிக்குச் சென்றது. ஒரு சில உயரமான கட்ட டங்களே சென்னையாக இருந்த அந்த மொட்டை மாடியில் பதற்றத்துடன் அவர்கள் பார்த்த காட்சி எல்.ஐ.சி. கட்டடம் தீப்பிடித்து எரிந்துகொண்டு இருப்பதை. இப்படித்தான் நண்பர்களே நான் பிறந்தபோதே என்னைச் சுற்றித் தீப்பிடித்தது. அந்தத் தீயை அபசகுனமாகக் கருதாமல், என் தகப்பன் தன் நாட்குறிப்பில் இப்படி எழுதினான்... 'இன்று உலகின் இரண்டாவது அறிவாளி பிறந்தான்!' நான் முதல் முறையாக நா.முத்துக்குமார் ஆனேன்!

எங்கள் வீடு முழுக்கப் புத்தகங்களே வியாபித்திருந்தன. தமிழாசிரியரான தந்தை தேடித் தேடி புத்தகம் வாங்கினார். வால்கா முதல் கங்கை வரை என்னை புத்தக உலகில் பயணிக்கவைத்தார். மூன்றாம் வகுப்பு படிக்கையில் சந்தை என்ற தலைப்பில் சிறுகதை எழுதி அப்பாவிடம் வாசிக்கக் கொடுத்தேன். காய்கறிச் சந்தையில் கடை வைத்திருப்பவரைப்பற்றிய கதை. வாசித்துவிட்டு ஒன்றுமே சொல்லாமல் திருப்பிக் கொடுத்தார். அடுத்த நாள் அதிகாலை ஐந்து மணிக்கு என்னை எழுப்பி சைக்கிளில் அமரவைத்து, காஞ்சிபுரம் ராஜாஜி காய்கறிச் சந்தைக் குக் கூட்டிச் சென்றார். ஒருபுறம் லாரியில் இருந்து கூடை கூடையாகத் தக்காளிகள் இறங்கிக்கொண்டு இருக்க...

உள்ளூர் விவசாயிகள் கீரைக் கட்டுகளை அடுக்கிக்கொண்டு இருந்தனர். எங்கிருந்தோ வந்த ஒரு பசு மாடு, வாழை இலை ஒன்றை இழுத்து கடிக்கத் துவங்க, யாரோ ஒருவர் அதை விரட்டிக்கொண்டு இருந்தார். 'இந்த டீக்கடையில் நான் காத்திருக்கிறேன். நீ மார்க்கெட் முழுக்கச் சுற்றிப் பார்த்துவிட்டு வா' என்றார் அப்பா. அரை மணி நேரம் கழித்துத் திரும்பி வந்த என்னிடம் 'உன் கதை நன்றாக இருந்தது. ஆனால், அதில் உண்மையான காய்கறிச் சந்தை இல்லை. எந்த இடத்திலும் காய்கறியின் வாசம் இல்லை. எதையும் உணர்ந்து அனுபவித்து எழுது, உன் எழுத்து வலிமையாக இருக்கும்' என்றார். வீட்டுக்குச் சென்றதும் அந்தக் கதையைக் கிழித்துப் போட்டேன். அன்று இரண்டாம் முறையாக நான் நா.முத்துக்குமார் ஆனேன்!

பள்ளியில் படிக்கும்போதே என் கவிதைகளும் கதைகளும் பத்திரிகைகளில் வர ஆரம்பித்தன. எங்கள் பள்ளியில் ஒரு சில ஆசிரியர்கள் தங்களிடம் டியூஷன் படிக்கும் மாணவர்களுக்கு மட்டுமே பாஸ் மார்க் போட்டார்கள். வகுப்பிலும் சொல்லித் தருவதில்லை. இதைக் கண்டித்து தூசிகள் என்று கவிதைத் தொகுதி வெளியிட்டேன். பிரேயரில் என் கவிதை விவாதிக்கப்பட்டு, என்னை ஒரு வாரம் சஸ்பெண்ட் செய்தார்கள். வார்த்தைகள் என்னைக் கைவிட்ட நிலையில், குற்றஉணர்வுடன் அப்பா முன் நின்றேன். அவர் அமைதியாகச் சொன்னார், 'இப்போதுதான் உன் எழுத்து வலிமையாகிக்கொண்டு இருக்கிறது. இன்னும் நிறைய எழுது!' மூன்றாம் முறையாக நான் நா.முத்துக்குமார் ஆனேன்.

காஞ்சி பச்சையப்பனில் இளங்கலை இயற்பியல் சேர்ந்தேன். எங்கள் வீடும் கல்லூரியும் அருகருகே இருந்ததால், பத்திரிகைகளில் இருந்து என் கவிதைக்கு வரும் சன்மானத் தொகையை என் வகுப்புக்கே வந்து தருவார் தபால்காரர். வேதியியல் பேராசிரியர் ஒருவர் ஒருநாள் இதைக் கவனித்து, 'இப்படியே கதை, கவிதைன்னு சுத்துனா, சத்தியமா நீ பாஸாக மாட்டே' என்று திட்டினார். எப்போதும் அதிக மதிப்பெண்கள் வாங்கும் மாணவன் ஒருவன் என்னைப் பார்த்து ஏளனமாகச் சிரித்தான். அன்று ஒரு வைராக்கியம் தோன்றியது. அவனைவிட ஒரு மார்க்காவது அதிகம் வாங்க வேண்டும். 85 சதவிகிதம் பெற்று தேர்ச்சியடைந்தேன்.

அவனுக்குக் கிடைக்காத பி.டெக். வாய்ப்பு எனக்குக் கிடைத்தது. என் சபதத்தை முடித்துக்கொண்டு, சென்னை பச்சையப்பன் கல்லூரியில் எம்.ஏ. தமிழ் இலக்கியம் சேர்ந்தேன். இவ்வளவு மார்க் எடுத்துட்டு ஏன் தமிழ் படிக்கிறாய் என்று அறிவுரை சொன்னார்கள். மௌனமாகத் தலையாட்டிவிட்டு, மண்ணில் விழுந்த மழைத் துளிபோல் தமிழின் வேர் வரை பயணிக்கத் தொடங்கினேன்.

கல்லூரியிலேயே முதல் மாணவனாகத் தேர்ச்சி அடைந்ததும், அமெரிக்காவில் இருந்து ஒரு பல்கலைக்கழகத்தில் தமிழ்ப் பேராசிரியர் பணிக்கு வரச் சொல்லிக் கடிதம் வந்தது. மாதம் மூன்று லட்சம் சம்பளம். மீண்டும் அப்பா முன் நின்றேன். நான் திரைப்படத் துறையில் உதவி இயக்குநராகப் போகிறேன். இந்த வேலை வேண்டாம் என்றேன். என்னை உற்றுப் பார்த்துவிட்டுச் சொன்னார், 'உன் முடிவை நீயே எடு. பின் நாட்களில் அதற்காகச் சந்தோஷப்படவும் வருத்தப்படவும் உனக்கே உரிமை உண்டு!' அன்று நான் சலனப்பட்டு அமெரிக்கா சென்றுஇருந்தால், முனைவர் நா.முத்துக்குமாராக மட்டுமே இருந்திருப்பேன். சினிமாவுக்கு வந்ததால் நான்காம் முறையாக நா.முத்துக்குமார் ஆனேன்.

இயக்குநர் அருண்மொழி, பட்டுக்கோட்டை பிரபாகர், அறிவுமதி என்று பலரிடம் உதவியாளராக இருந்துவிட்டு, என் ஆசான் பாலுமகேந்திராவிடம் சேர்ந்தேன். பெப்சிக்கும் படைப்பாளிகளுக்கும் பிரச்னை நடந்த காலகட்டம் அது. ஒரு வருடமாக வேலை நிறுத்தம். தன் காரை விற்று எங்களுக்குச் சம்பளம் கொடுத்தார் பாலுமகேந்திரா சார். என் தூர் கவிதையை ஒரு விழாவில் எழுத்தாளர் சுஜாதா வாசிக்க, என் மேல் மஞ்சள் வெளிச்சம் விழுந்தது. நண்பர்கள் பாடல் எழுத அழைத்தார்கள். விளையாட்டாக எழுதத் தொடங்கி, கடந்த ஆறு வருடங்களாக அதிக பாடல்கள் எழுதும் பாடலாசிரியர் என்கிற நிலை வரை ஓடிக்கொண்டு இருக்கிறேன்.

'சினிமா உலகம் போட்டியும் பொறாமையும் நிறைந்தது. இங்கு தூங்கும்போதுகூட காலை ஆட்டிக்கொண்டேதான் தூங்க வேண்டும்; இல்லையென்றால், இறந்துவிட்டான் என்று எரித்து விடுவார்கள்' என்றார் என்.எஸ்.கிருஷ்ணன். சென்ற வருடம் என் திருமண நாளன்று, நான் விபத்தில் இறந்துவிட்டதாகவும், தற்கொலை செய்துகொண்டதாகவும் என்னைப்பற்றி வதந்தி கிளம்பியது. இறந்துபோனதை அறிந்த பிறகுதான், 'இறக்க வேண்டும் நான்' என்று எப்போதோ நான் எழுதிய கவிதை ஞாபகம் வந்தது. முகம் தெரியாத அந்த நண்பருக்காகவாவது இன்னும் கவனமாகவும், கூடுதலாகவும் உழைக்க வேண்டும் என்று தோன்றியபோது, நான் ஐந்தாம் முறையாக நா.முத்துக்குமார் ஆனேன்!”

நா.முத்துக்குமார், தமிழகத்தைச் சேர்ந்த திரைப்படப் பாடலாசிரியரும், கவிஞரும் எழுத்தாளரும் ஆவார். 1975-ம் ஆண்டு ஜூலை மாதம் 12-ம் திகதி அவரது தாயின் பிறந்தகமான சென்னையில், எழும்பூர் அரசு மருத்துவ மனையில் பிறந்தார். மனைவி ஜீவலட்சுமி. மகன் ஆதவன் நாகராஜு.


ஆதவன் நெல்லுபடத்தில் எஸ்.எஸ்.குமரன் இசையில் ஒரு பாடலும் பாடியுள்ளார். தன் பெயரையே முதல் வார்த்தையாகக் கொண்ட பாடல்மூலம் தன் வாசல் திறந்து கொண்டவர் நா. முத்துக்குமார்.  திரைப்படப் பாடல்களைக் கொண்டே முனைவர் பட்டமும் பெற்றிருப்பதும் இவருக்குரிய சிறப்பாகும்.

முதலில் ஒரு இயக்குனராக வரவேண்டும் என்கிற ஆசையில் இயக்குநர் அருண்மொழி, பட்டுக்கோட்டை பிரபாகர், அறிவுமதி என்று பலரிடம் உதவியாளராக இருந்து பின்னர் இயக்குனர் பாலு மகேந்திராவிடம் நான்கு வருடங்களுக்கு மேலாக பணிபுரிந்து கொண்டிருந்தபின் பாடல்களின் பக்கம் அவர் திரும்பி இருக்கிறார் என்பதை விட திருப்பப்பட்டார் என்பது பொருந்தும். 

அவரின் எழுத்துக்களை வாசித்த நண்பர்களின் மூலமாகவே அவருடைய திறமை வெளி கொணரப்பட்டிருக்கிறது. அவரது நண்பரான இயக்குனர் சீமானின் "வீர நடை" என்கிற திரைப்படத்தில் முதன் முதலில் பாடல் வரிகளை எழுதத்தொடங்கினார். தொடர்ந்து திரையிசையில் தன் முத்திரையைப் பதித்து வருகிற இவர் 2000 க்கு மேல் பாடல் எழுதியுள்ளார். ஒரு வருடத்தில் அதிக பாடல்களை எழுதும் வாய்ப்பும் பெருமையும் முத்துக்குமார் பெற்றுள்ளார். 2007 இல் அஜித் நடித்த கிரீடம் படத்தில் வசனமும் எழுதியுள்ளார்.

இவரது தந்தை ஒரு தமிழாசிரியர் தந்தையின் லட்சக்கணக்கான சேமிப்பான புத்தகங்களுக்கு இடையே பயணமான சிறுவயது, அவரை ஆறுவயதில் இருக்கையிலேயே கவிதை எழுதத் தூண்டி இருக்கிறது. அதனைத் தொடர்ந்து நாவல் மற்றும் பல கவிதை தொகுப்புக்களையும் எழுதி வெளியிட்டிருக்கிறார். தற்போதும் இயக்குனராக கதை தயார்படுத்தலில் தீவிரமாகவே உள்ளார்.

வீரநடையில் "முத்து முத்தா பூத்திருக்கும் முல்லைப் பூவை புடிச்சிருக்கு.." என்ற அந்தத் திரைப்படப் பாடல், இதுவரை வந்த அவரது மற்ற பாடல்களை விட அதிக உவமைகளை கொண்டிருப்பதாக இலக்கியவாதிகள் கூறுகிறார்கள்.  கண்ணை மூடிக்கொண்டு யோசிக்காமல், வரிகளுக்காக தவமிருக்காமல், வேகமாக  வார்த்தைகளை இறக்குமதி செய்து பத்தே நிமிடங்களில் பாடலை எழுதி முடிக்கும் திறமைகொண்டவர் என முத்துக்குமார் தனது பேட்டி ஒன்றில் குறிப்பிட்டுள்ளார்.  ஏ.ஆர் ரகுமானிலிருந்து இளைஞர் ஜி.வி ப்ரகாஷ் வரை அனைவர் இசையிலும் எழுதி இருக்கும் இவர் பல இசை அமைப்பாளரின் பாராட்டுக்களை பெற்றவர்.

அவரின் காதல் கவிதைகளும், பாடல்களும் இன்றைய இளைஞர்களின் காதலுக்கு உதவியாக இருப்பது ஆச்சரியத்துக்குரியதல்ல. காரணம் அவர் கையாளும், அவரின் எளிய வரிகளில் காதலை எல்லோராலும் உணரக்கூடியதாக இருக்கிறது. பாடல்களில் கவிதை இருக்கும், கவிதைகளில் எளிமையான வார்த்தைகள், வரிகளில் கதை, பளிச்சென முகம் காட்டும் கருத்துகள். இவரின் பாடல் வெற்றிக்கு காரணமாகும்.

Sunday, April 20, 2014

காங்கிரசை கருவறுப்போம்



தமிழக வாக்காளர்களே, வாக்களிக்கும் நாள் நெருங்கும் வேளையில் சிந்தித்து செயல்படுவது நம் கடமையாகும்.

பரமக்குடியில் நேற்றுமாலை நானொரு வாசகம் கண்டேன் ‘வாக்களிக்க பணம் வாங்கினால் சட்டப்படி குற்றம்’ என்று.

உண்மையில் சொல்லப்போனால் வாக்களிக்க பணம் கொடுத்தால் வாங்கிக் கொள்ளுங்கள். கொடுப்பது, ழல் செய்வது குற்றமில்லை. வாங்குவது குற்றமா என்ற கேள்வி என்னுள்ளே எழுகிறது. அவையெல்லாம் நம்மிடமிருந்து வரிகள் என்ற பெயரில் கொள்ளையடிக்கப்பட்டு பதுக்கிவைக்கப்பட்ட பணந்தான். தாராளமாக வாங்கிக் கொள்ளுங்கள். ‘வாக்களிக்க விருப்பமில்லை’ என்ற சின்னத்திலேயே வாக்களியுங்கள். மனசாட்சிப்படி இதுவே சரியானதாகும்.

வாக்களிக்கும்போது நாம் சிந்திப்பதில்லை. நம்முடைய இந்த முட்டாள்தனத்தை மிகச்சரியாக பயன்படுத்தி வாய்ப்பு கிடைக்கும்போதெல்லாம் ‘அடி கொள்ளை’ என ஊழல் நடத்தப்படுகிறது.

கன்னியாகுமரியில் சோனியாகாந்தி பேசியிருக்கிறாள் ‘காங்கிரசு ஈழத்தமிழர்களை ஆதரித்த கட்சியென்று’. இந்தியாவின் போதைக்கு தமிழர்கள்தான் ஊறுகாய்.

காங்கிரசை கருவறுத்து விடுங்கள்.

‘வாக்களிக்க விருப்பமில்லை’ என்ற சின்னத்திலேயே வாக்களியுங்கள். மனசாட்சிப்படி இதுவே சரியானதாகும்.


காங்கிரசை கருவறுக்க களமாற்றும் வீரர்காள்
கவனமுடன் செய்வீரே கணக்கைத்தான் முடிப்பீரே
ஆங்காங்கே கூடிநின்ற ஆதித்தமிழ் தோழர்காள்
அறுத்திடுவோம் அவள்நாக்கை அனுமதியோம் அவள்வரவை

ஈழத்தில் தமிழர்களை ஆதரித்த கட்சியென்று
இனிப்பாக பேசிநின்ற இத்தாலி சிறுக்கிதனை
கால்வேறு கைவேறாய் கொடுவாளால் அறுத்திடுவோம்
கொலைமுடிந்த பின்னாலே காங்கிரசு இல்லையிங்கு

ஈழத்தில் அவர்வாழ்வு ஏற்றமிங்கு பெற்றிடவே
இருவிழிகள் எதிர்பார்த்து இதயமுந்தான் கனக்குதடா
இழந்தநிலம் அதிகந்தான் இந்தியாவின் துரோகத்தை
எப்போதும் மறவாமல் இருப்போமே தமிழர்களாய்

புலிகளுடன் போரிட்டு புறமுதுகைக் காட்டித்தான்
புண்ணான புண்ணாக்கு பழம்பெருமை(??) பாரதமே
அலிகளையே ஆசனத்தில் அமர்த்திவிட்டுப் புகழ்பாடும்
அசிங்கத்தைப் பாடிடவே எழுதுகிறேன் இக்கவிதை

நெருநெருப்பாய் எழுதோழா நெஞ்சமெலாம் கொதிக்குதடா
நினைவினிலே தமிழீழம் நிச்சயமாய் நீதிவெல்லும்
செருசெருப்பாய் இந்தியாவில் செந்தமிழும் மெதுமெதுவாய்
சாவதற்கு முன்னாலே சிந்திப்போம் செயல்படுவோம்

Tuesday, April 15, 2014

சீமான் அண்ணாவின் நினைவுகளும் அவரிடம் சில கேள்விகளும்

சீமான் அண்ணா,

கடந்த சனிக்கிழமை தங்களின் உரையை தமிழன் தொலைக்காட்சி நிலைய நிகழ்ச்சியில் கேட்க, பார்க்க நேர்ந்தது. இங்கு என்னுடைய அறையில் என்னைத்தவிர மற்ற அனைவரும் தெலுங்கு பேசும் அன்பர்கள். நீங்கள் பேசிக்கொண்டிருந்தீர்கள். அவர்களின் ஒருவன் கேட்டான் (ஆங்கிலத்தில்) 'ஏன் அந்த நபர் கத்துகிறார்? அவர் யார்?' என்று.

நான் சொன்னேன். (ஆங்கிலத்தில்) 'அவர் ஒரு தமிழ் திரைப்பட இயக்குநர். தற்போது தமிழர்களுக்காக இயக்கம் மற்றும் அரசியல் கட்சி நடத்தி வருகிறார். அவர் கத்தவில்லை. அவர் பேசுகிறார்.' என்று. அவர்கள் என்னுடைய அறையில் பெரும்பான்மையாக இருந்தும் அவர்களை வேறு தொலைக்காட்சி நிகழ்ச்சிக்கு மாற்ற விடவில்லை.

அன்று நீங்கள் சொல்லியது 'தம்பிகள் என்ன நினைப்பார்கள் என்று தெரியவில்லை.' என்று

உங்களுடைய நிலைப்பாட்டில் எனக்கு நிறைய கருத்துவேறுபாடுகள் உள்ளன அண்ணா.



அ. தி. மு. க விற்கு இன்று நீங்கள் ஆதரவு அளித்திருக்கலாம். நாளை அ. தி. மு. க செய்யும் அரசியல் சித்து விளையாட்டுகளுக்கு நீங்கள் பலிகடா ஆகப் போகிறீர்களா? அல்லது நீங்களும் அவர்களைப் போன்று மக்களை ஏமாற்றி அரசியல் சித்து விளையாட்டுகளை நிகழ்த்தப் போகிறீர்களா? தி. மு. க நமக்கு துரோகி என்றால் அதே அளவுக்கு துரோகி அ. தி. மு. க.

நீங்கள் யாரையும் எதிர்க்காமலோ ஆதரிக்காமலோ இருந்திருந்தால்கூட யாரும் எதுவும் நினைத்திருக்க மாட்டார்கள்.

நீங்கள் அன்று 'பிரபாகரா, பிராபகரா' என்று தொண்டை கட்டிய பிறகும் சோக இராகத்தில் பாடியதெல்லாம் இன்னும் என் நினைவில் இருக்கிறது. அதெல்லாம் பொய் யென்று மனம் ஏற்றுக்கொள்ள மறுக்கிறது அண்ணா.

நான் தங்களின் இயக்கத்திலோ கட்சியிலோ இல்லை. ஆனால், என் மானசீக கட்சியாக 'நாம் தமிழர்' ஐத் தான் கடந்த சனிக்கிழமை வரை நினைத்திருந்தேன்.

நீங்களே பாடலாசிரியராக மாறி, நீங்களே பாடகராகவும் மாறி எழுதி, பாடிய 'பேசாம பேசாமத்தான் இருந்து' என்ற பாடலை என்னுடைய smart phone ல் வைத்திருக்கிறேன்.

நீங்கள் எழுதி, பாடிய 'பேசாம பேசாமத்தான் இருந்து', தங்கச்சி பாமினி எழுதிய 'சூழுகின்ற பகையை வென்று' மற்றும் உணர்ச்சிக்கவிஞர் காசி அனந்தன் எழுதிய 'இருப்பாய் தமிழா நெருப்பாய் நீ' என்ற மூன்று பாடல்களும் சமீப காலங்களில் அலைபேசி இயந்திரம் மற்றும் மடிக்கணினி ஊடாக நான் அதிகம் கேட்கும் பாடல்கள்.

நீங்கள் இயக்கிய 'பாஞ்சாலங்குறிச்சி' படம் ஏறத்தாழ ஏழெட்டு வருடங்களுக்கு முன்பு பார்த்தது. அந்த படத்தில் ஒரு வசனம் வரும் (நடிகர் இளவரசு என்று தான் நினைக்கிறேன்) 'பரமக்குடியில் போய் புரோட்டா சாப்டுட்டு இரவி தியேட்டர்ல படம் பாத்துட்டு வா.'. இந்த வசனம் தென் மாவட்டங்களில் குறிப்பாக சிவகங்கை மற்றும் இராமநாதபுரம் மாவட்டங்களில் மிகப்பிரபலம்.

நீங்கள் இயக்கிய 'வாழ்த்துகள்' திரைப்படத்தில் ஆங்கிலம் கலக்காத தமிழில் வசனம் அமைக்கப்பட்டிருந்தது. என்போன்ற தமிழை நேசிக்கக்கூடிய பலர் விரும்பி பார்த்த திரைப்படமிது.

இதுவரை நீங்கள் நடித்த திரைப்படங்கள் அனைத்தையும் விரும்பி பார்ப்பவர்களில் நானும் ஒருவன்.

என் வீட்டிற்கு போகும்போதெல்லாம் உங்களைப் பற்றி வீட்டில் பேசும்போது அம்மா, அப்பா இருவருக்கும் உங்கள்மீது என்னைப்போலவே அதீத அன்பு உண்டு என்பதை ஒவ்வொரு முறையும் உணர்வேன். ஆனால், இனி அந்த அன்பும் மரியாதையும் அவர்கள் மனதில் இருக்குமா என்பது கேள்விக்குறிதான்.

உங்கள் மீது கோபம் நிறைய உள்ளது. ஆனால், உங்கள் மீதுள்ள அன்பின் காரணமாகவே தமிழ்நாட்டு நேரப்படி அதிகாலை நான்கு முப்பது மணிக்கு தூக்கம் வராமல் இதனை எழுதிக்கொண்டிருக்கிறேன். நான் இப்படித்தான். கோபப்படுவேன். பிறகு அன்பு கோபத்தை வென்றுவிடும். ஆனால், உங்கள் நிலைப்பாட்டில் எனக்கு உடன்பாடில்லை.

தமிழனின் வீழ்ச்சிக்கு காரணமே இந்திய தேசியமும் திராவிடமும் தான். இதனை உரக்க நீங்களே சொல்லிவிட்டு அதே திராவிடக் குழிக்குள் விழுகிறீர்களே இது நியாயமா அண்ணா?

உங்கள் நிலைப்பாட்டில் எனக்கு நிறைய கருத்துவேறுபாடுகள் உள்ளன அண்ணா. எனக்கு மட்டுமல்ல. பலருக்கும் உண்டு.

ஆனால், ஒன்று மட்டும் புரிந்துகொள்ளுங்கள் அண்ணா, உங்கள் மீது பலபேர் வைத்திருந்த நம்பிக்கை கொஞ்சம் கொஞ்சமாய் சிதையத் துவங்கிவிட்டது அண்ணா.

அதேபோல் உங்கள்மீது என் மனதிலிருந்த அன்பும் மதிப்பும்கூட கொஞ்சம் கொஞ்சமாய் குறையத்துவங்கிவிட்டது அண்ணா.




Sunday, April 13, 2014

நேற்று அதிகாலை நான் எழுதிய பதிவிற்கான சில வரவேற்புகளில் ஒன்று.




அருமையான தகவலையே சொல்லியிருக்கிறார் ஒரு அன்பர். நாம் இழந்தவற்றை மறந்துவிட்டோம். நினைத்துப்பார்க்க, சிந்தித்துப்பார்க்க மறந்துவிட்டோம். மாணவர்களிடம் சிலவற்றை பகிர்ந்துகொண்டேன் என்ற செய்தி மனதிற்கு மிகவும் மகிழ்ச்சியாக உள்ளது.

 http://munaivendrinaasureshkumarkavithaikal.blogspot.com/2013/11/70000.html

அன்று உரிமைகளுக்காக குரல் கொடுத்திருக்கவேண்டிய தமிழ்நாட்டு மக்களும் தமிழ்நாட்டில் வாழ்ந்த அரசியல்வாதிகளும் இந்திய தேசியம் என்றும் திராவிடம் என்றும் பேசிக்கொண்டதன் விளைவு இன்று தண்ணீர், தொழில் மற்றும் கனிம வளங்கள் ஏறத்தாழ அழிக்கப்பட்டு விட்டன.


http://munaivendrinaasureshkumarkavithaikal.blogspot.com/2014/04/blog-post_12.html

Saturday, April 12, 2014

நிலப்பரப்புகளை இழந்து தமிழ்நாட்டில் வாழும் தமிழர்களும் ஈழப்போராட்டத்தில் விடுதலை புலிகளும்

நிலப்பரப்புகளை இழந்து தமிழ்நாட்டில் வாழும் தமிழர்கள்

என்னுடைய சிறுவயதில் நடந்த நிகழ்வொன்று இன்னும் ஆழமாக என் நினைவினில் நிற்கிறது. நான் பிறந்த ஊரான முனைவென்றியில் ஒரு அண்ணன் ஒருமுறை ஏதோ ஒரு சூழலில் என்னிடம் சொன்னார் 'மாநிலங்களுக்கான எல்லைகள் பிரிக்கப்படும்போது ஆந்திராவுக்காக சென்னையை கேட்டார்கள். ஆனால் நாம் திருப்பதியை கேட்டோம். அதனால் சென்னையை நமக்கு கொடுத்து விட்டார்கள்.' என்று திருப்பதியும் நமக்குத்தான் (தமிழர்களுக்குத்தான்) கிடைத்திருக்க வேண்டியது என்ற உண்மை அந்த அண்ணனுக்கு புரியவில்லை. வரலாற்றை தவறாக எனக்கு சொல்லிவிட்டார் என்ற உண்மை சமீப காலங்களில் என்னால் உணரப்படுகிறது.

கடந்த ஓராண்டிற்கு முன்பு நான் பெங்களூரு வந்தபோது ஒரு அண்ணன் என்னிடம் அலைபேசி ஊடாக பேசியபோது சொன்னார் 'பெங்களூரு தமிழ்நாட்டிற்கு வரவேண்டியது. ஓசூர் அவர்களுக்கு போகவேண்டியது. ஆனால், பெங்களூருவை அவர்கள் வாங்கிக் கொண்டார்கள்.' என்று.

தமிழர்களின் வரலாற்றைப் பற்றி சரியான உண்மையை புரிந்துகொள்ளாமல் அதாவது திருப்பதியும் சரி, பெங்களூருவும் சரி நமக்கு வரவேண்டிய நிலப்பரப்புகள் என்ற உண்மையை புரிந்துகொள்ளாமல் 'அவர்களுக்கு (தெலுங்கர்களுக்கு) உண்மையிலேயே திருப்பதி சேரவேண்டியது. அதனை நாம் கேட்டதால்தான் அவர்கள் சென்னையை கேட்டார்கள்' என தவறாக என்னுடைய சிறுவயதில் ஒரு அண்ணன் சொன்னார். கடந்த ஓராண்டிற்கு முன்பு பெங்களூருவும் சரி அவர் சொன்ன ஓசூரூம் சரி தமிழ்நாட்டிற்கே வரவேண்டியவை என்ற உண்மையை புரிந்துகொள்ளாமல் 'கன்னடர்களுக்கு உண்மையிலேயே பெங்களூரு சேரவேண்டியது. அதனை நாம் கேட்டதால் அவர்கள் ஓசூரை கேட்டார்கள்' என தவறாக இன்னொரு அண்ணன் சொன்னார். அவர்களுக்கு எப்படி உண்மை புரியும்? ஏனெனில் இந்த உண்மைகளெல்லாம் ஏற்கனவே மூடி மறைக்கப்பட்டு தவறான செய்திகளை பரப்பி விட்டவர்கள் பலர். அதனையும் உண்மையென நம்பி நாம் உண்மையிலேயே பல நிலப்பரப்புகளை இந்தியாவின் துரோகத்தினால் அண்டை மாநிலங்களிடம் இழந்திருக்கிறோம். அப்படி கோலார், முல்லைப்பெரியாறு, குடகு மலை என நமக்கு கிடைக்கவேண்டிய அனைத்து வளங்களும் இந்தியாவின் உதவியோடு மற்றபிற மாநிலங்களுக்கு கொடுத்துவிட்டு 'வேற்றுமையில் ஒற்றுமை காணும் நாடு இந்தியா' என்று நம் தலையில் மிளகாய் அரைக்கும் வேலையை மிகக்கச்சிதமாக பாடப்புத்தகம் தொடங்கி தமிழர்கள் மூளை மழுங்கியவர்களாக வளர்த்தெடுக்கப்படுகிறார்கள். தமிழர்களின் வரலாறு திட்டமிட்டே இருட்டடிப்பு செய்யப்படுகிறது என்ற உண்மைக்கு பல சான்றுகள் உள்ளன.

அன்றே விழித்துக்கொண்ட மலையாளிகளும் தெலுங்கர்களும் கன்னடர்களும் தமிழர்களின் முட்டாள்தனத்தை மிகச்சரியாகவும் சாதூர்யமாகவும் பயன்படுத்தி நம்முடைய வளங்களையெல்லாம் அபகரித்துக்கொண்டனர். அன்று உரிமைகளுக்காக குரல் கொடுத்திருக்கவேண்டிய தமிழ்நாட்டு மக்களும் தமிழ்நாட்டில் வாழ்ந்த அரசியல்வாதிகளும் இந்திய தேசியம் என்றும் திராவிடம் என்றும் பேசிக்கொண்டதன் விளைவு இன்று நீர், தொழில் மற்றும் கனிம வளங்கள் ஏறத்தாழ அழிக்கப்பட்டு விட்டன. இதனாலேயே தென்தமிழ்நாட்டைச்சேர்ந்த பலரும் வேலைவாய்ப்பின்றி தாய்நிலமான தமிழ்நாட்டைவிட்டு வெளிநாடுகளுக்கு ஓடும் நிலைக்கு தள்ளப்படுகின்றனர்.

அந்த இரு அண்ணன்களின் மேல் எந்தவொரு தவறும் இல்லை. ஏனெனில், அவர்களுக்கு உண்மையென்ன என்று தெரிந்துகொள்ளும் வாய்ப்பை யாரும் தரவில்லை. தமிழர்கள் தொடர்பான பெரும்பாலான உண்மைகள் இருட்டடிப்பு செய்யப்படும் நிலையில் உண்மைகளை அறியும் வாய்ப்புகள் அவர்களுக்கெப்படி கிடைக்கும்? தமிழர்களின் வரலாறு தொடர்பாக தொடர்ந்து தேடிக்கொண்டிருக்கும், இந்தியாவிலிருந்து பிரிந்து தனித்தமிழ்நாடு வேண்டும் என்று ஆத்மார்த்தமாய் விரும்புகிற என்னைப்போன்ற தமிழர்களுக்கு புரியும் இந்த உண்மைகள்.

உண்மையில் தமிழ்நாடு அண்மையில் அண்டைமாநிலங்களான ஆந்திரா, கேரளா, கர்நாடகா விடம் இழந்த நிலப்பரப்புகள் கீழ்க்கண்டவாறு,

http://munaivendrinaasureshkumarkavithaikal.blogspot.in/2013/11/70000.html


தற்போதைய கேரள மாநிலத்திலிருந்து தமிழ்நாட்டிற்கு வந்து சேர்ந்திருக்க வேண்டிய நிலப்பரப்புகள்:

அகஸ்தீஸ்வரம், தோவாளை, நெய்யாற்றுப் பகுதி, நெடுமங்காடு, இடுக்கி மாவட்டத்தின் பெரும்பகுதி, வண்டிப் பெரியாறு, தேவிகுளம், பீரிமேடு, குமுளி, கொச்சின், சித்தூர், பாலக்காடு

தற்போதைய ஆந்திராவிலிருந்து தமிழ்நாட்டிற்கு வந்து சேர்ந்திருக்கவேண்டிய நிலப்பரப்புகள்:

சித்தூர் மாவட்டம், நெல்லூர் மாவட்டம், இவற்றில் தங்கிய திருப்பதி, காளகஸ்தி, புத்தூர், நகரி, ஆரணியாறு, வடபெண்ணை ஆறு, பொன்வாணி ஆறு

தற்போதைய கர்நாடகாவிலிருந்து தமிழ்நாட்டிற்கு வந்து சேர்ந்திருக்கவேண்டிய நிலப்பரப்புகள்:

பெங்களூரு, மைசூரு மாவட்டத்தின் ஒரு பகுதி (குடகு உட்பட), கோலார் தங்கவயல்.

பத்தோடு பதினொன்றாக 'நாம் தமிழர்' கட்சி:

தமக்கான மேற்சொன்ன இவ்வளவு நிலப்பரப்புகளையும் இழந்துவிட்டு எதுவுமே இழக்காததுபோலவே ஈழத்தமிழர்களுக்காக உச்சுக்கொட்டும் தமிழ்நாட்டில் வாழும் பலர் ஈழத்தை வைத்து அரசியலாக்கி ஆதாயம் தேடிக்கொண்டிருக்கின்றனர். இவர்கள் உச்சுக்கொட்டியதால் எந்தவொரு மாற்றமும் அங்கு நிகழவில்லை. 

தம்மினத்தின்மீது உண்மையான அக்கறைகொண்ட தமிழன் எப்போதும் ஈழத்தைப்பற்றியே பேசிக்கொண்டிருக்க மாட்டான். தனித்தமிழ்நாட்டைப் பற்றி சிந்திக்கத் தொடங்கியிருந்திருப்பான். ஏனெனில் தனித்தமிழ்நாட்டிற்கான தேவை இங்கு பலகாலமாய் இருக்கிறது. அதனை உணர யாரும் முன்வரவில்லை. 

நினைவு முற்றத்தை இடித்து அராஜகம் செய்த ஜெயலலிதாவை, மூவர் தூக்குதண்டனையை நீக்கக்கோரி தீக்குளித்த தோழர் செங்கொடிக்கு கிடைக்கவேண்டிய மதிப்பை அரசியல் காய்நகர்த்தி தனக்கு கிடைக்கச் செய்த ஜெயலலிதாவை, தி.மு.க விற்கு எந்தவகையிலும் குறையாமல் கொள்ளையடித்த ஜெயலலிதாவை,  ஈழத்தமிழர்களின் நலனுக்காக இலயோலா கல்லூரி மாணவர்கள் போராடியபோது அவற்றை திசைதிருப்பி விட்ட இன்ன பிற கட்சிகள் உட்பட ஜெயலலிதாவை மறந்துவிட்டு ஜெயலலிதா பிரதமராக வேண்டும் என்று சொல்லும் 'நாம் தமிழர்' கட்சியின் முகத்திரை கிழிக்கப்பட்டு விட்டது.

உண்மையை சொல்லப்போனால், காங்கிரஸ் கொள்ளைக்காரக் கட்சி அதற்கு சரிசமமாக பா.ஜ.க இங்கும் தி.மு.க கொள்ளைக்காரக் கட்சி அதற்கு சரிக்கு சமமாக அ.தி.மு.க. 

தமிழர்களின் மீதும் தமிழ்நாட்டின்மீதும் 'நாம் தமிழர்' கட்சிக்கு உண்மையிலேயே அக்கறை இருந்திருந்தால் யாரையும் ஆதரிக்காமலும் யாரையும் எதிர்க்காமலும் இருந்திருக்க வேண்டும். அல்லது, தனித்தமிழ்நாடு கேட்டு போராடியிருந்திருக்க வேண்டும். ஆனால், 'நாம் நமிழர்' கட்சியும் பத்தோடு பதினொன்றாக தனக்கான சுயநலத்தை காட்டத் துவங்கிவிட்டது. 'நாம் தமிழர்' கட்சியின் மீது வைத்த நம்பிக்கை தவிடுபொடியானது.

உண்மையில் தமிழர்கள் அனைவரும் 'வாக்களிக்க விருப்பமில்லை' என்ற சின்னத்திலேயே வாக்களிக்கலாம். அதுதான் சாலச்சிறந்தது. மனசாட்சிப்படி மிகச்சரியானதும் கூட.

'பண்ணு', 'பண்ணி' தமிழர்களும் 'மாடி' கன்னடர்களும் 'செய்' தெலுங்கர்களும்:

நான் தற்போது பெங்களூருவில் வசித்துவரும் விடுதியில் நான் மட்டுந்தான் தமிழன். என்னைத்தவிர அனைவரும் தெலுங்கர்கள், மராட்டியர்கள் மற்றும் தமிழர் அல்லாத சிலர். சில தினங்களுக்குமுன்பு என்னுடைய அறையில் வசிக்கும் தெலுங்கை தாய்மொழியாகக் கொண்ட ஒரு அன்பரோடு அவருடைய தாய்மொழியான தெலுங்கில் பேசினேன்.

அவர் ஆச்சர்யப்பட்டார். அவர் அடைந்த மகிழ்ச்சிக்கு அளவே இல்லை. (ஆங்கிலத்தில் உரையாடத்துவங்கினோம்.) 'உன்னுடைய தாய்மொழி தமிழ் தானே? நீ எப்படி தெலுங்கில் பேசுகிறாய்?' என்றார். நான் சொன்னேன் 'இங்கு பெரும்பாலும் தெலுங்கு பேசுபவர்கள் தான் இருக்கிறீர்கள். தெலுங்கு, கன்னடம், மலையாளம் உட்பட பலமொழிகளில் அவர்களின் வட்டார வழக்கு மற்றும் தங்களுக்கான மண்டலம் சார்ந்தவற்றை நீக்கிவிட்டுப் பார்த்தால் அங்கு தமிழ்தான் மிஞ்சும் என்ற உண்மை எனக்குத் தெரியும். நீங்கள் அனைவரும் உங்களுக்குள் பேசும் தெலுங்கிலிருக்கும் தமிழ் அல்லாத சொற்கள் மிகக்குறைவாகத்தானிருக்கும். அவற்றையெல்லாம் கவனிக்கத் துவங்கினேன். நீங்கள் தொலைக்காட்சியில் பார்க்கும் நிகழ்ச்சியிலும் அவர்கள் பேசும் தெலுங்கை கவனித்தேன். அவற்றிலும் அதிகபட்சமான வார்த்தைகள் இலக்கியத் தமிழ் வார்த்தைகளிலோ அல்லது தமிழர்களின் பேச்சுவழக்கு வார்த்தைகளிலோ தான் இருக்கின்றன. அவற்றையெல்லாம் கவனிக்கத் துவங்கினேன். உதாரணத்திற்கு அவசரம், அற்புதம், அன்னம், பாம்பு, புலி (இன்னும் சொல்லிக்கொண்டே போகலாம்.)' என்றேன்.

அதன்பிறகு அவரிடம் தமிழில் உள்ள வார்த்தைகளுக்கு தெலுங்கில் எப்படி சொல்வீர்கள் என்றும் எவையெல்லாம் தமிழிலிருந்து வேறுபடுகின்றன என்பனவற்றை தெரிந்துகொள்ளத் தொடங்கினேன்.

அவற்றில், 'ஆங்கிலத்தில் bus என்பதற்கு தமிழில் பேருந்து என்று சொல்வோம், தெலுங்கில் எப்படி சொல்வீர்கள்?' என்று கேட்டேன்.

அவர் சொன்னார் 'தெலுங்கிலும் bus என்றுதான் சொல்வோம்'. (அதாவது தமிழர்கள் அனைவரும் தற்போது  மிதிவண்டி என்று சொல்லவேண்டிய cycle ஐ சைக்கிள் என்றும், சாலை என்று சொல்லவேண்டிய road ஐ ரோடு என்றும் சொல்கிறோமே. இதனைப்போலத்தான்.)

நான் சொன்னேன் 'ஆங்கிலம் பேசும்போது மட்டும் ஒரு வார்த்தைகூட பிறமொழி கலக்காமல் பேசும் தமிழர்கள், தன்னுடைய தாய்மொழியான தமிழில் பேசும்போது மட்டும் ஆங்கிலம் கலந்து பேசுகிறார்கள் (இதற்கு ஈழத்தமிழர்களும் விதிவிலக்கல்ல, நானும் விதிவிலக்கல்ல. ஏனெனில் நாம் அனைவருமே அப்படித்தான் தமிழ் பேசவேண்டும் என வளர்த்தெடுக்கப் பட்டுவிட்டோம்.) என்று இதுவரை நினைத்துக்கொண்டிருந்தேன். உன்னுடைய தாய்மொழியான தெலுங்கிலும் இந்த அக்கப்போர் உள்ளதுபோலவே. கன்னடத்திலும் உண்டு என்பது எனக்கு தெரியும்.' என்றேன்.

நானே தொடர்ந்தேன் 'தமிழில் திற, மூடு, அழை, என்பன போன்றவற்றிற்கு பதிலாக open பண்ணு, close பண்ணு, call பண்ணு அல்லது open பண்ணி, close பண்ணி, call பண்ணி' என்று சொல்கிறார்கள். இதனையே கன்னடத்தில் open மாடி, close மாடி, call மாடி என்றும் தெலுங்கில் open செய், close செய், call செய் என்றும் சொல்கிறார்கள். (தெலுங்கில் செய் என்ற வார்த்தை தூய தமிழ் வார்த்தை. ஆனால், நாம் பண்ணு, பண்ணி என்று பேசுகிறோம்.)

மொழி குறித்து உங்களோடு பகிர்ந்துகொண்டு வரும் இந்த இடத்தில் சமீபத்தில் எழுதிய ஒரு காதற்கவிதையை பகிர்ந்துகொள்ள வேண்டுமென்ற விருப்பம் எழுகிறது.

எத்தனையோ பேர்
மொழியியல் நிறைஞரென
பட்டம்பெறும் போது

விழியியல் நிறைஞனென
பட்டம்பெற வைத்தாய்.

உன்னை காதலித்த
என்னை...
-------------------------

ஈழப்போராட்டத்தில் விடுதலைப்புலிகள் குறித்து ஈழத்தமிழரோடு உரையாடல்:

கடந்த ஓராண்டிற்கு முன்பு வரை சென்னையில் தங்கியிருந்தபோது அங்கு ஒரு ஈழத்தமிழரை சந்திக்க நேர்ந்தது. தொடர்ந்து நட்பு பாராட்டிக் கொண்டோம். சமீபத்தில் அவரை அங்கு சந்தித்தேன். அப்போது தமிழின விடுதலை குறித்து உரையாடத்துவங்கினோம். நான் மேலே சொன்ன தமிழர்கள் அண்டை மாநிலங்களிடம் இழந்த நிலப்பரப்புகள், தமிழர்கள் தமிழ்நாட்டில் இந்தியாவால் மறைமுகமாக பாதிக்கப்படுகிறார்கள், இது தொடர்பான செய்திகள் இருட்டடிப்பு செய்யப்படுகின்றன என்பன குறித்து பேசத்துவங்கினேன்.

'அப்படிப் பார்த்தால் முழு இலங்கையையும் நாங்கள் தமிழீழமாகக் கேட்க வேண்டும். தமிழர்கள் தமிழ்நாட்டில் இந்தியாவால் பாதிக்கப்படுகிறார்கள் என்று நீங்கள் சொல்வது வேடிக்கையாக உள்ளது. வடஇந்தியாவில் பாதிக்கப்படும் இன மக்களை விடவா தமிழின மக்கள் தமிழ்நாட்டில் பாதிக்கப்படுகிறார்கள்?' என்றார்.

'நான் இங்கு முப்பது வருடங்களாக வாழ்ந்து வருகிறேன். தாங்கள் இங்கு கடந்த ஒரு வருடமாகத்தான் வாழ்கிறீர்கள். இங்கு நடைமுறையில் என்ன நடக்கிறது என்பதை புரிந்துகொள்ள வேண்டுமெனில் இங்கேயே தொடர்ந்து வாழ்ந்து பார்க்கவேண்டும். அதனால் தங்களுக்கு அதெல்லாம் புரிய வாய்ப்பில்லை. இவையெல்லாம் என்னைப்போன்ற தமிழின விடுதலையை உள்ளன்போடு எதிர்பார்த்து உள்ளே நேசித்துக் கொண்டிருக்கக் கூடியவர்களுக்குத்தான் தெரியும். உங்கள் இனத்தைப் பற்றி நீங்கள் முதலில் யோசியுங்கள். மற்றவர் உதவியை எதிர்பார்க்கும் ஒருவர் எப்படி மற்றவர்களுக்கு உதவி செய்யமுடியும்? முதலில் நாம் பத்துப்பேருக்காவது உதவி செய்யும் நிலைக்கு உயரவேண்டும். நமக்கான, நம் இனத்திற்கான விடுதலையை நாம் முதலில் பெற்றாக வேண்டும். அதன்பிறகு மற்ற இனத்தை, இனத்தின் விடுதலையை பற்றி யோசிக்கலாம். முடிந்தால் உதவலாம். ' என்றேன்.

அப்படியே தமிழீழம் குறித்தும் விடுதலை புலிகள் குறித்தும் பேசத்துவங்கினார்.

'நான் மாணவர் பேரவைத் தலைவராக ஈழத்தில் இருந்தவன். அங்கு பலதரப்பட்ட பகுதிகளுக்கு பயணப்படுபவன். போர்க்காலங்களிளெல்லாம் நான் பாதிக்கப்பட்ட மக்களுக்கு முடிந்த உதவிகளை செய்வது, ஒருங்கிணைப்பது என்று செய்து கொண்டிருந்தேன். ௨௦௦௪ (2004) ல் சுனாமி இயற்கை சீற்றத்தின்போது ஈழத்தில் சிங்களர்களும் தமிழர்களும் இனவேற்றுமையை மறந்து சுனாமியிடமிருந்து தப்பித்தால் போதும் என்ற நிலையில் அங்கு அந்தக் காலகட்டத்தில் இன நல்லிணக்கம் ஏற்படும் சூழல் நிலவியது. அந்த வாய்ப்பை விடுதலை புலிகள் சரியாக பயன்படுத்தத் தவறிவிட்டனர். அப்போது அவர்கள் அரசாங்கத்தினரோடு பேச்சுவார்த்தை நடத்தியிருந்திருக்கலாம். அப்போது தனித்தமிழீழம் கிடைப்பதற்கான சாத்தியக்கூறுகள் இருந்தன.' என்றார். (இவ்வளவிற்கும் அவருடைய குடும்பத்தில் உள்ளவர்கள் விடுதலை புலிகளோடும் இயக்கத்தின் மேல்மட்டக் குழுக்களோடும் மிகவும் நெருங்கிய தொடர்பு உடையவர்கள் என்றும் சொன்னார்.)

விடுதலை புலிகளின் தீர்க்கதரிசனமான முடிவுகளை, போராட்டங்களை குறைசொல்லும் அளவிற்கு அல்லது விமர்சிக்கும் அளவிற்கு நாம் இன்னும் சிந்திக்கவில்லை என்பதே உண்மை.