Tuesday, April 22, 2014

என் தங்கச்சிப்பிள்ள பாமினி (திரைப்படப் பாடலாசிரியை) க்கு நான் எழுதிய வாழ்த்துக்கவிதை




தங்கச்சி சாமியார் 'எஸ்விஆர் பாமினி' - http://munaivendrinaasureshkumarkavithaikal.blogspot.com/2013/12/blog-post_29.html என்ற என்னுடைய முந்தைய பதிவில் சொன்னபடி கடந்த ௨௦௧௩ ஜூன் மாதம் என் தங்கச்சிப்பிள்ள பாமினி கவிதைநூல் வெளியிடுவது தொடர்பாக என்னிடம் கேட்டாள்.

அதன்பிறகு கடந்த ௨௦௧௪ பிப்ரவரி மாத இறுதியில் என்னிடம் பேசும்போது 'அடுத்த கவிதைநூலை எப்போது அண்ணா வெளியிடப் போகிறீர்கள்?' என்றாள். 'இப்போது இல்லப்பா' என்றேன். 'என்னுடைய முதல்கவிதைநூலை வரும் ஏப்ரல் ௨௭ அன்று வெளியிட வேண்டும். அனைத்தும் ஈழம் சார்ந்த கவிதைகள். அதற்கு தங்களின் வாழ்த்துச்செய்தியொன்று வேண்டும் அண்ணா' என்றாள். 'மகிழ்ச்சிப்பா. விரைவில் அனுப்பி வைப்பா' என்றேன். 



வரும் ஞாயிறு (ஏப்ரல் ௨௭, வ௦௧௪) அன்று நடைபெறும் 'கலைகளுக்குள் ஓர் சங்கமம்' விழாவில் தன்னுடைய 'உன்னிடம் திருடிய பொய்கள்' பாடல் தொகுப்பு வெளியிடுவதோடு தன்னுடைய முதல் கவிதைநூலையும் வெளியிட்டு விடலாம் என்ற எண்ணத்தில் தங்கச்சி இருந்தாளென்று இப்போது புரிகிறது. 

அவள் என்னிடம் கடந்த பிப்ரவரி மாத இறுதியில் பேசியபிறகு சில நாட்களில் மருத்துவமனை, சிகிச்சை என கடந்த ஒன்றரை மாதங்கள் ஓடிப்போயின. 

தங்கச்சி,

இந்த அண்ணா எழுதிய "‘ஆற்றுங்கவிச் செல்லம்’ பாமினி - http://munaivendrinaasureshkumarkavithaikal.blogspot.in/2014/04/blog-post_6858.html" என்ற என்னுடைய இந்த கவிதையை என்னுடைய கையெழுத்துபிரதியோடு பத்திரமா வச்சுக்கடா. சரியா? 

நான் முதுநிலை கணினிப்பயன்பாட்டியல் (M.C.A.,) படிக்கும்போது ௨௦௦௬ ல் அழகப்பா பல்கலைக்கழக தமிழ் நண்பர்களோடு சேர்ந்து 'புதிய சிற்பி' என்ற மாத இதழை நடத்தினோம். அந்த இதழின் பொறுப்பாசிரியர்களுள் ஒருவராக என்னை நியமித்த அந்த இதழின் ஆசிரியர் முதல்மாத இதழின் தலையங்கத்தில் ஒவ்வொருவரையும் அறிமுகப்படுத்தி வந்தவர் என்னுடைய கவிதையேடுகளை படித்துவிட்டு என்னை இப்படித்தான் அறிமுகப்படுத்தினார். 

ஒரு சங்கீதக் கலாநிதியைப் போல், தொடையில் தட்டிப் பாடச்சொல்லும் கவிதைகளைத் தருபவர் முனைவென்றி நா. சுரேஷ்குமார்.

சந்தமும் தொடைநயமும் துள்ளலோசையும் சேர்ந்துவருவதே நான் எழுதும் கவிதைகளுக்கான இயல்பான கவிதைநடை. இந்த எனக்கான இயல்பான கவிதைநடையிலேயே உனக்கான வாழ்த்துக்கவிதையும் என்னால் எழுதப்பட்டுள்ளது. வாழ்த்துச்செய்தி கேட்டாய். வாழ்த்துக்கவிதை அனுப்பியிருக்கிறேன். 

முதல் கவிதைநூலை வெளியிட முடியவில்லை என நீ வருத்தப்படாதே. விரைவில் நல்லபடியாக வெளியிடுவோம். 

ஒரு மாதத்திற்கு முன்பு நீ மருத்துவமனையில் சிகிச்சை பெற்றபோது skype IM ல் நலம் விசாரித்தேன். மறுமுனையிலிருந்து 'பாமினியில்லை' என்று பதில் வந்தது. 'தங்கச்சியை நான் மிகவும் கேட்டேன் என்று சொல்லுங்கள்" என்றேன். 'சரி' என்று பதில் வந்தது. சில நாட்கள் கழித்தபிறகு skype IM ல் 'தங்கச்சி எப்டி இருக்கா? அவளுக்கு என்மேல ரொம்ப பாசம்' என்று அனுப்பினேன். மறுமுனையிலிருந்து 'நீங்கள் நலம் விசாரித்ததை ஏற்கனவே சொல்லிவிட்டேன். பாமினி சிரிச்சுக்கிட்டே சொன்னவ, அண்ணாவுக்கு என்மேல ரொம்ப பாசம் என்று.'

பிறகொருநாள் நான் skype IM ல் பேச முயற்சித்தேன். காணொளி அழைப்பு வந்தது. மருத்துவமனையில் நீ நன்றாக உறங்கி ஓய்வெடுத்துக் கொண்டிருந்தாய். நான் ஞாபகமில்லாமல் 'தங்கச்சி ஏன் தூங்குது?' என்று கேட்டபிறகே எனக்கு புரிந்தது நீ இன்னும் மருத்துவமனையில்தான் இருக்கிறாய் என்று. அதற்குள் யாரோ பக்கத்தில் உன்னை எழுப்ப முயற்சித்தனர். 'தங்கச்சி நல்லா ஓய்வெடுக்கட்டும். அவள தொந்தரவு செய்யவேண்டாம்' என்று சொன்னேன். 

நீ சென்னைக்கு வரும்போது மறக்காம என்னுடைய அலைபேசிக்கு அழைத்து நீ வந்த தகவலை சொல்லிவிடு. உன்னை நேரில் சந்திக்க நான் எங்கிருந்தாலும் ஓடோடி வந்துவிடுகிறேன். சரியா? உனக்கு பொம்மைகள் வேணும் னா நான் வாங்கித்தர்றேன். நீ ஏற்கனவே ஒரு புலிபொம்மை வச்சிருக்கிற தானே. உனக்கு கரடி பொம்மை பிடிக்குமா? நான் ஏற்கனவே சொன்னமாதிரி ஒரு பெரிய்ய்ய கரடி பொம்மை வாங்கித்தர்றேன்.

ஆத்தா, நம்முடைய பாசமும் மழலைகள் போன்ற அன்பும் நம்முடைய மரணத்தைத்தாண்டியும் இப்படியே தொடரணும். இதுதான் இந்த அண்ணாவோட விருப்பம்.

‘ஆற்றுங்கவிச் செல்லம்’ பாமினி - http://munaivendrinaasureshkumarkavithaikal.blogspot.in/2014/04/blog-post_6858.html

------------



---------- Forwarded message ----------
From: முனைவென்றி நா சுரேஷ்குமார் நாகராஜன்
Date: 2014-03-16 12:21 GMT+05:30
Subject: என் தங்கைக்கு இன்று பிறந்தநாள்.
To: 


என் தங்கைக்கு இன்று பிறந்தநாள். அவள் மருத்துவமனையில் சிகிச்சை பெறுகிறாள். 

என்னுடைய அன்பும் வேண்டுதல்களும் அவளை நல்லபடியாக நீண்ட ஆயுளோடு தொடர்ந்து உயரத்தில் அவளை கொண்டுபோய் சேர்க்கும்.

அவ இன்னும் நிறைய சாதிப்பா.


No comments: