Tuesday, May 13, 2014

தவிப்பு


உன் காலடிசப்தம் கேட்டு
கதவிடுக்கில் ஒளிந்துகொண்டு
புன்னகைக்கிறேன்
ஒளிந்து விளையாடும்
குழந்தையைப் போல..

வேகமாய் உள்ளே நுழைந்தாய்
ஒவ்வொரு அறையாய்
தவிப்புடன் தேடுகிறாய்

பரண்மேல் ஏறிப் பார்க்கிறாய்
ஒவ்வொரு தளமாய் தேடுகிறாய்

களைத்துப்போய் ஓய்வெடுக்கிறாய்

விரக்தியுடன் கடந்துபோகிறாய்
என்னை பார்க்காமலேயே...

உன்னை அழைத்தபடி
பின்தொடர்ந்து ஓடிவருகிறேன்

தொடர்ந்து நடக்கிறாய்
என்னை திரும்பிப் பார்க்காமலேயே...

No comments: