Tuesday, July 8, 2014

சஞ்சிகை மாத இதழில் வெளியான என் ஹைக்கூ



ஜூன் சஞ்சிகை மாத இதழில் வெளியான என் ஹைக்கூ இது. முகநூலில் பலரால் வரவேற்கப்பட்ட ஹைக்கூ இது. ஆனால், என்னுடைய கவிதை எப்போதுமே ஊடகங்களால் அவ்வளவு எளிதில் வரவேற்கப்படுவதே இல்லை. இதனாலேயே இணையத்தில் இந்த பிரபஞ்சம் முழுக்க அனுப்பி வைப்பதுண்டு. அப்படி அனுப்புவதையும் விளம்பரப்படுத்துவதாக என்னை குறை சொல்பவர்களும் இருக்கிறார்கள்.

இந்த கவிதையை வெளியிட்டு எனக்கு ஆறுதல் அளித்த சஞ்சிகை மாத இதழுக்கு என் நன்றி.

என்னுடைய ஊரில் மணலாக ஓடும் வைகை ஆறரை நினைவில் வைத்தே எழுதப்பட்ட ஹைக்கூ இது. நான் பிறப்பதற்கு முன்புவரை வைகை ஆற்றில் நீர் பாலத்தை உடைக்குமளவிற்கு வந்ததாக சொல்வார்கள். எனக்கு நினைவு தெரிந்த நாளிலிருந்து அப்படி நீர் வந்ததில்லை. நான் என் ஊருக்கு செல்லும் ஒவ்வொரு முறையும் ஆற்றில் மணல்தான் ஓடுகிறது.

வைகை ஆற்றின் முகப்பில் இருப்பதால் தான் இராமநாதபுரம் என்ற ஊருக்கு முகவை (முக+வை - முக - முகப்பில், வை - வைகை, வைகையின் முகப்பில் உள்ள ஊர்) என்று பெயர் வந்தது. அதனாலேயே பலரும் முகவை மாவட்டம் என்றே எழுதுவர்.

மற்ற மொழிகளில் இடுகுறிப் பெயர்கள் அதிகம். காரணப் பெயர்கள் குறைவு. ஆனால் தமிழ்மொழியில் மட்டுந்தான் காரணப் பெயர்கள் அதிகம். இடுகுறிப் பெயர்கள் மிகமிகக் குறைவு. அதனால் தான் "தேங்காயை உடைத்துப் பார். தமிழ் வார்த்தைகளை பிரித்துப் பார்" என்று நம் முன்னோர்கள் சொன்னார்கள். தேங்காயை உடைத்தால் அது நல்ல தேங்காயா இல்லையா என்று தெரியும். தமிழ் வார்த்தைகளை பிரித்துப் பார்த்தால் பொருள் புரியும்.

No comments: