Saturday, July 12, 2014

௨௦௦௬ புதிய சிற்பி மாத இதழில் பொறுப்பாசிரியராக...

௨௦௦௬ புதிய சிற்பி மாத இதழில் பொறுப்பாசிரியராக அங்கம் வகித்தபோது முதுநிலை கணினி பயன்பாட்டியல் (M.C.A.,) படித்துக் கொண்டிருந்தேன்.

இந்த பட்டியலில் என்னைத்தவிர ஏனைய பலபேர் அழகப்பா பல்கலைக்கழகத்தில் தமிழ்த்துறையில் முதுகலை, இளங்கலை தமிழ் படித்துக் கொண்டிருந்தவர்கள்.

ஒருநாள் நான்கு மணிக்கு முடியவேண்டிய என் கணினித்துறை வகுப்புகள் மாலை மூன்று மணிக்கே முடிந்துவிட்டது. அதனால் பக்கத்திலிருந்த தமிழ்த்துறைக்கு ஒரு கவிதை நண்பரை பார்க்க அவர் வகுப்பறைக்குள் நுழைந்தேன். சில நிமிடங்களில் தமிழம்மா உள்ளே நுழைந்துவிட்டாள். நான் ஏற்கனவே கவிதைப்போட்டியில் கலந்துகொண்டது குறித்து அந்த தமிழம்மாவுக்கு தெரியும் என்பதாலும் என்னுடைய துறை தேர்வுகளுக்கு அவள் தேர்வு மேற்பார்வை அதிகாரியாக (Exam Supervisor) வந்ததை வைத்து என்னை அவளுக்கு தெரியும் என்பதாலும் தமிழ் அல்லாத வேறுதுறை மாணவனாகிய நான் அவள் நடத்தும் வகுப்பில் அமர்ந்திருந்ததை கண்டும் எதுவும் சொல்லாமல் பாடம் நடத்திவிட்டு வகுப்பு முடிந்தவுடன் கிளம்பினாள். அதன்பிறகு என் கவிதை நண்பர்களோடு பேசி, பகிர்ந்து கடந்த நினைவுகள் பசுமையானவை.

அப்போதெல்லாம் எனக்கு என் துறையில் என் விடுதியில் என் அறையில் உள்ளவர்களோடு இருந்ததைவிட இப்படி கவிதைகளோடு வாழும் தமிழ்த்துறை நண்பர்களோடு கவிஞனான நானும் அதிக ஈடுபாடோடு கடந்த பசுமையான கால நினைவுகள்.


No comments: