Tuesday, April 18, 2017

என் செல்லம்

ஆறு மாதங்களுக்கு என் மனைவிக்காக ஒரு வெள்ளைத்தாளில் எழுதிய கவிதை. நேற்று எதார்த்தமாக எதையோ தேடும்போது இந்த கவிதை கிடைத்தது. தற்போது தட்டச்சு செய்தாகி விட்டது.

நீ எங்கள் வீட்டுத்தாரகை
என் நெஞ்சம் நிறைந்த தேவதை
பொங்கும் எங்கும் சந்தோசம்
புது உயிரால் கருவில் சங்கீதம்
என் உயிரில் கலந்த காதலிது
இது உனக்கும் உனக்கும் புரிகிறது
செல்லம் சொல்லிக் கொஞ்சுகிறேன்
என் உள்ளமெங்கும் உன்நினைவே
நீ இத்தனை நாளாய் காணவில்லை
என் திருமணம் தந்தது வானவில்லை
நிலவின் முதுகு இரகசியந்தான்
உன் அழகிய திருமுகம் அதிசயந்தான்
அழுதே கிடந்தேன் அன்றுவரை
இன்று ஆனந்தத்தில் அழுகிறேன்
குயிலின் குரலும் இனிமைதான்
உன் குரலும் தந்தது குயிலைத்தான்
நீ அன்பாய் பார்க்கும் பார்வையிலே
என் ஆயுள் நீண்டது பொன்மயிலே
நம் முன்னோர் செய்த புண்ணியமே
நம் பிள்ளை வயிற்றில் வளர்கிறது
நம் பெற்றோர் செய்த வேண்டுதலால்
நாம் இணைந்தே வாழ்கிறோம் நிம்மதியாய்
இன்றுமுதல் எனக்கு இரு பிள்ளை
என்றுமே எனக்கு நீ முதற்பிள்ளை
நினைப்பது எல்லாம் நடக்கிறது
என் நெஞ்சம் மகிழ்ச்சியில் திளைக்கிறது

No comments: