Monday, May 28, 2018

தூத்துக்குடி துப்பாக்கிச்சூட்டிற்கு மூல காரணம் (root cause) யார்?

👉 தூத்துக்குடி துப்பாக்கிச்சூட்டிற்கு மூல காரணம் (root cause) யார்?



காவல்துறையின் அராஜகம்.



👉 எப்படி?



மாவட்ட ஆட்சியர் அலுவலகத்திற்கு நூறாவது நாளில் மனு கொடுப்பதற்காக சென்ற பொதுமக்களில் பெண்களின் நெஞ்சில் கை வைத்து காவல் துறையினர் அட்டூழியம் செய்துள்ளனர். இதனால் அங்கிருந்த பொதுமக்கள் கோபம் அடைந்திக்கலாம்.



மாவட்ட ஆட்சியர் அலுவலகம் முன்பு இருந்த cctv camera வில் பதிவான காட்சிப்பதிவில் பலபேர் சேர்ந்து அரசாங்க வண்டிகளை, உடைமைகளை கல்வீசி சேதப்படுத்தியுள்ளனர்.



இதை சாக்காக வைத்து காவல்துறையினர் அப்பாவி பொதுமக்கள் போராட்ட குணத்தை உயிர் பயம் காட்டி இனிமேல் போராட்டம் செய்தால் கொல்லுவோம் என்றே துப்பாக்கிச்சூடு நடத்தியுள்ளனர்.



உண்மையில் அங்கே கல் எறிந்தவர்கள் போராட்டக்காரர்களா இல்லை sterlite னால் ஏற்பாடு செய்யப்பட்ட கூலிப்படையா என்பது தெரியவில்லை.



உண்மையை புரிந்து கொள்ளுங்கள் sterlite என்ற வணிகனின் கட்டுப்பாட்டில் தமிழ்நாடும் இந்திய அரசாங்கமும் கடந்த சில வாரங்களாக இருந்து வந்துள்ளன. இந்த வணிகர்களை தான் என் போன்றவர்கள் இல்லுமிநாட்டிகள் என்று சொல்கிறோம். 



அரசாங்கத்திற்கே வட்டிக்குப் பணம் கொடுத்து அந்த அரசாங்கத்தை தம்முடைய கட்டுப்பாட்டில் கொண்டு வருபவர்கள் இந்த இல்லுமிநாட்டிகள்.



உண்மை இப்படியிருக்க, "தமிழ்நாடு அரசு sterlite க்கு மின்சாரம், தண்ணீர் இணைப்புகளை துண்டித்து விட்டது" என்று எடப்பாடி தமிழ்நாடு அரசு, உண்மை புரியாத ஏமாளிகளான இளிச்சவாயன்களான நம்முடைய காதிலே பூ சுற்றுகிறது.



மோடி, எடப்பாடி போன்றவர்கள் இந்த sterlite போன்ற corporate களிடமிடமிருந்து கையெழுத்து போட்டு commission வாங்கி broker வேலை செய்து வளர்ச்சி என்று நாம் தலையில் மிளகாய் அரைப்பது இன்னுமா நமக்குத் தெரியவில்லை?



மின்சாரத்தை உற்பத்தி செய்யும் நிறுவனமும் வேதாந்தா குழுமத்திலிருக்க "தமிழ்நாடு அரசு sterlite ற்கான மின் இணைப்பை துண்டித்து விட்டது" என்பதெல்லாம் முழு பூசணிக்காயை சோற்றில் மறைப்பது போன்றதாகும்.



வேதாந்தா குழுமத்தின் head office இங்கிலாந்தில் இலண்டனில் உள்ளது. இதன் முக்கிய பொறுப்பில் உள்ள அகர்வால் என்பவர் ஒரு சேட். அதாவது மார்வாடி. நம்மூரில் கோனார், அகமுடையார், வேளாளர் என்பது போல அகர்வால் என்பது ஒரு ஜாதிப்பட்டம்.



இந்தியாவின் இல்லுமிநாட்டிகள் இந்த பணியா (மார்வாடி) கும்பல் தான். இந்திய அரசாங்கத்தை இயக்குபவர்கள் இந்த இல்லுமிநாட்டிகளே.



தூத்துக்குடியில் துப்பாக்கிச்சூடு நடத்த உத்தரவிட்ட உயர் அதிகாரியின் மனைவி அந்த வேதாந்தா குழுமத்தோடு தொடர்புடையவர்.



இல்லுமிநாட்டிகளின் network இப்படித்தான் மறைமுகமாக இருக்கும். இவற்றையெல்லாம் அறிவின் துணைகொண்டு நாம்தான் ஆராய்ந்து உண்மையின் வேரைத்தேடி பயணிக்க வேண்டும்.



அரசாங்க, தனியார் வேலையில் பணி செய்து மாதம் ஒரு இலட்சம், ஒன்றரை இலட்சம் வாங்குபர்கள், அரசாங்கத்திடமிருந்து ஆதாயம் பெறுபவர்கள் ருசி கண்ட பூனையாகி இந்தப் பதிவினை வாசித்து விட்டு நமுட்டுச் சிரிப்போடு இதனை கடந்து போவார்கள். ஆனால் இப்படி சொகுசு வாழ்க்கை வாழ்பவர்கள் வீட்டிலும் ஒரு உயிர் போன பிறகே, அரசாங்கத்திற்கு பின்னால் வணிகர்கள் உள்ளனர், அந்த corporate நிறுவனங்களை காப்பாற்றவே அரசாங்கம் துடியாய் துடிக்கிறது, துப்பாக்கிச்சூடு நடத்துகிறது, உயிர்களை கொல்கிறது என்ற உண்மை புரிய ஆரம்பிக்கும்.



நீ காற்றுள்ள பந்தை எவ்வளவுக்கெவ்வளவு தண்ணீரில் அமுக்குகிறாயோ அவ்வளவு வேகமாக பந்து தண்ணீரின் மேலே எழும். இதைப்போலத்தான், இன்றைய ஆங்கிலம் போல் ஒரு காலத்தில் வணிக மொழியாக இருந்த தமிழை பேசும், உயிரநேயம் போதித்த எம் தமிழினம் எவ்வளவுக்கெவ்வளவு அடக்கப்படுகிறதோ ஒடுக்கப்படுகிறதோ அவ்வளவுக்கவ்வளவு மேலெழுந்து வரும். 



இந்த போராட்டங்களெல்லாம் தமிழ்நாடு என்ற தனிநாட்டிற்கான ஆரம்பமாகக் கூட இருக்கலாம்.