Showing posts with label கவிதைகள் (பாகம் - 8). Show all posts
Showing posts with label கவிதைகள் (பாகம் - 8). Show all posts

Sunday, September 4, 2011

கடற்கரை நினைவுகள்!

கடற்கரை மணலில்
நம்மிருவர் கால்த்தடங்கள்!

உன்பெயரை நானும்
என்பெயரை நீயும்
எழுதிய அக்கணமே
நம்மிருவர் மனங்களும்
நமையறியாமல்
காதலை எழுதிவிட்டன!

மணல்வீடு கட்டி
வாசல்வைத்து
கள்ளங்கபடமில்லாமல்
சிறுகுழந்தையென சிரித்தாய்!

அலைவந்து அடித்தவுடன்
சிதைந்ததையெண்ணி
சீற்றங்கொண்டு அழுதாய்!

உன்னை ஆறுதல்படுத்தி
மறுபடியும் மணலால்
மாளிகை கட்டினேன்!

கடற்கரை மணலில்
இப்படித் தொடர்ந்த
நம்காதல் பயணம்
கல்யாணத்தில் முடிந்தது!

இன்பமான வாழ்க்கைதான்!
இரண்டு குழந்தைகள்தான்!!

அன்றும் வழக்கம்போல்
கடற்கரை மணலில்
நம்குடும்பத்தின் குதூகலம்!

குதூகலம் முடிந்ததோடு
சுனாமியின் சீற்றத்தால்
நீமட்டும் சிதைந்துபோனாய்!

இன்று
நீயின்றி நான்மட்டும்
நம்மிரண்டு குழந்தைகளோடு
அதே கடற்கரைமணலில்!

அன்று போலவே
அலையின் சீற்றம்
இன்றும்!

ஐந்தாண்டுகள் ஆனாலும்
என்னுயிரில் உறைந்திருக்கின்றன
கடற்கரை மணலில் உரு(கரு)வான
நம்காதல் நினைவுகள்!!

புத்தாண்டே வருக!

சத்தான புத்தாண்டே! – நித்தமும்
முத்தான புத்தாண்டே!!
வருகவருக நீ! – புத்துணர்வைத்
தருகதருக நீ!!

சித்திரைமாதத்தை முதலாய்க் கொண்டு – உன்
முத்திரைப்பாதத்தை தடம்பதிக்க – தமிழ்ப்
புத்தாண்டே வருகவருக! – நித்தம்
புத்தொளியைத் தருகதருக!!

இருள்விலக்கும் ஒளியாய் – வாழ்வின்
பொருள்விளக்கும் மொழியாய் – தமிழ்ப்
புத்தாண்டே வருகவருக! – நித்தம்
புத்தொளியைத் தருகதருக!!

எத்தனை மொழிகள் வந்தாலும்
பத்தரைமாற்றுத் தங்கம்போல்
மாசுமறுவற்று மங்காப்புகழுடன் – தமிழ்ப்
புத்தாண்டே வருகவருக! – நித்தம்
புத்தொளியைத் தருகதருக!!


இக்கவிதை வெளிவந்துள்ள ஊடகங்கள்

1. பதிவுகள் (இணைய இதழ்) – 01-04-2012

தமிழ்மகளே வா!

சங்கத்தமிழ் மூன்றுபடைத்தும் – தமிழன்
தங்கச்சிமிழால் சீராட்ட – உனைத்
தரணியெல்லாம் பாராட்ட...
நீ நீடூழி வாழ்வாய் தமிழ்மகளே!
பிரபஞ்சத்தில் மாறாது உன்புகழே!!


இக்கவிதை வெளிவந்துள்ள ஊடகங்கள்

1. பதிவுகள் (இணைய இதழ்) – 01-04-2012

துளிப்பா!

உயிரெழுத்தும் மெய்யெழுத்தும்
புணர்ந்தபின்பு உரு(கரு)வான
எழுத்துப் பிழை!
உடல் ஊனமுற்ற குழந்தை!!

இந்தியா?

உலக வரலாற்றிலேயே
முதல்முறையாய்
வாக்காளர்களுக்கு பணம்கொடுத்து
வாக்களிக்க வைத்த
அரசியல் கட்சிகளைக் கொண்ட
பெருமை மிக்க
பண(ஜன)நாயக நாடு!
உலக வங்கியில்
கோடிக்கணக்கில் கடன்வாங்கிய
பிச்சைக்கார நாடு!!