Showing posts with label பதிவுகள் (பாகம் - 1). Show all posts
Showing posts with label பதிவுகள் (பாகம் - 1). Show all posts

Thursday, September 18, 2014

தமிழ்நாட்டின் உண்மையான வரைபடம்



தமிழ்நாட்டின் உண்மையான வரைபடம் இதுதான். 

"வட வேங்கடம் தென் குமரி ஆயிடைத் தமிழ் கூறு நல்லுலகம்" என்றே வரையறுக்கிறது தொல்காப்பியம் (தொல்காப்பியம், சிறப்புப் பாயிரம், 1-3) 

தற்போதைய கேரள மாநிலத்திலிருந்து தமிழ்நாட்டிற்கு வந்து சேர்ந்திருக்க வேண்டிய நிலப்பரப்புகள்:

அகஸ்தீஸ்வரம், தோவாளை, நெய்யாற்றுப் பகுதி, நெடுமங்காடு, இடுக்கி மாவட்டத்தின் பெரும்பகுதி, வண்டிப் பெரியாறு, தேவிகுளம், பீரிமேடு, குமுளி, கொச்சின், சித்தூர், பாலக்காடு

தற்போதைய ஆந்திராவிலிருந்து தமிழ்நாட்டிற்கு வந்து சேர்ந்திருக்கவேண்டிய நிலப்பரப்புகள்:

சித்தூர் மாவட்டம், நெல்லூர் மாவட்டம், இவற்றில் தங்கிய திருப்பதி, காளகஸ்தி, புத்தூர், நகரி, ஆரணியாறு, வடபெண்ணை ஆறு, பொன்வாணி ஆறு

தற்போதைய கர்நாடகாவிலிருந்து தமிழ்நாட்டிற்கு வந்து சேர்ந்திருக்கவேண்டிய நிலப்பரப்புகள்:

பெங்களூரு, மைசூரு மாவட்டத்தின் ஒரு பகுதி (காவிரி உற்பத்தியாகும் குடகு உட்பட), கோலார் தங்கவயல்.

ஒரு மாநிலத்தின் முதலமைச்சர் அவருடைய அதிகாரத்திற்குட்பட்ட எல்லைகளில் பிச்சையெடுக்கிறார். அரசு ஊழியர்களை பிச்சையெடுக்க வைக்கிறார். இன்னும் புரியும்படி சொல்லப்போனால் கொள்ளையடிக்கிறார். கொள்ளையடிக்க வைக்கிறார். அவருடைய அதிகார பலத்திற்கேற்றவாறு அவருடைய level க்கு ஏற்றவாறு கொள்ளையடிக்கிறார். இதையே ஒரு நாட்டின் பிரதமர் அவருடைய level க்கு ஏற்றவாறு கொள்ளையடிக்கிறார். 

இங்கு அதைத்தாண்டி உலக அளவில் கொள்ளையடிப்பவர்களை பற்றி தெரிந்துகொள்ளத் துவங்கியபோதுதான் "தேவையில்லாததை எதிர்ப்பதைவிட தேவையுள்ளதை ஆதரிப்பதை மட்டும், தேவையுள்ளதை தொடர்ந்து எண்ணுவது மட்டுமே வெற்றிக்கான வழி" என்று ஏற்கனவே எனக்கு தெரிந்த உண்மையை மீண்டும் நினைவுபடுத்திவிட்டு அந்த உண்மையை என் அனுபவ உரைகல்லில் உரசிப்பார்க்க வைத்துகொண்டிருக்கிறது என் மூளை.

கடந்த ஞாயிறன்று (௧௪-௦௯-௨௦௧௪ - 14-09-2014) இராமேஸ்வரத்திலிருந்து மதுரை செல்லும் பயணிகள் தொடர்வண்டியில் இரவு ஏழு ஐம்பது மணிக்கு பரமக்குடியிலிருந்து மதுரை, (அதைத் தொடர்ந்து பெங்களூரு செல்வதற்காக மதுரை செல்லவேண்டி) கூட்டநெரிசலில் சென்றுகொண்டிருந்தேன். 

ஒருவர் மீசையை முறுக்கியவண்ணம் எனக்கு சற்று தள்ளி நின்றுகொண்டு வந்தார். அமர இடமிருந்தபோதும் இடமளிக்காமல் அமர்ந்திருந்த தமிழ் பேசும் ஒருசிலரிடமும் வடஇந்தியாவிலிருந்து வந்த ஒருசிலரிடமும் தமிழிலும் ஹிந்தியிலும் பேசி இடம்கேட்டுப் பார்த்தார் அந்த முறுக்குமீசைக்காரர். சில நிமிடங்கள் கழித்தபிறகு, அவரிடம் ஏதோ கேட்கவேண்டி பேசினேன். அவர் பேசியதை கேட்டு "நீங்கள் தமிழை வித்தியாசமாக பேசுகிறீர்கள். நீங்கள் தமிழ்நாட்டின் எந்த ஊர்?" என்றேன். "நான் தமிழ்நாடு அல்ல. தமிழீழம். என்னுடைய சொந்த ஊர் கதிர்காமம். இங்கு தான் தமிழை யாரும் கண்டுகொள்வதில்லை. எங்கள் நாட்டில் தமிழை அனைவரும் மதிப்போம்." என்றார். நான் சட்டென்று பதில் சொன்னேன் "எங்கள் தமிழ்நாட்டிலும் தமிழை மதிப்பவர்கள் பலர் உள்ளனர். உங்களுக்கு சரியாக தெரியவில்லை." என்றேன். 

பிறகு, "கதிர்காமம் எங்கு உள்ளது? கதிர்காமம் முருகன் கோவில் என்று சொல்வார்களே. அந்த ஊரா நீங்கள்?" என்றேன். "ஆமாம். நீங்கள் எங்கள் நாட்டிற்கு வரவில்லை என்றால் எப்படி உங்களுக்கு அந்த ஊர் எந்தப்பகுதியில் உள்ளது என்று தெரியும்?" என்றார்.

"நான் அங்கு வரவில்லை எனினும் ஈழத்தின்மீது தனித்த ஈடுபாடு உண்டு." என்று சொன்னேன். அவருடைய பெயரைக் கேட்டேன். "முத்தாண்டி" என்றார். இராமேச்வரத்திரத்திற்கு அருகிலுள்ள மண்டபம அகதிகள் முகாமில் தான் தான் பிறந்ததாகவும் இங்கேயே வளர்ந்ததால் வடஇந்திய நண்பர்கள் மூலமாக ஹிந்தி தெரியும் என்று என்னிடம் தெரிவித்தார்.

குமரிக்கண்டம், தமிழ்க்குடியரசு, ஈழத்தில் தற்போதைய நிலை என பேசிக்கொண்டே வந்தோம். திருப்பாச்சேத்தி நிலையம் வந்தவுடன் "விடைபெறுகிறேன் அண்ணா" என்று கூறி விடைபெற்றார் அந்த முறுக்குமீசை ஈழத்தமிழர்.

Wednesday, August 20, 2014

பரிசு வாங்கியபோது...

கடந்த ஜூலை ௨௭ ம் தேதி சென்னை மயிலாப்பூரில் நடைபெற்ற முப்பெரும் விழாவில் என்னுடைய "குழந்தைகளும் பொம்மைகளும் கடவுளும்" ஹைக்கூ நூலிற்காக மின்மினி - கார்முகிலோன் விருதின் முன்றாம் பரிசை வாங்கியபோது எடுத்த புகைப்படம் கீழே. (ஞானபாலன் மற்றும் கன்னிக்கோவில் ராஜா அவர்களிடமிருந்து நேற்று முன்தினம்தான் இந்த புகைப்படங்கள் எனக்கு கிடைத்தன.)



​மேடையில் ஐயா புதுவைத் தமிழ்நெஞ்சன், கவிஞர் கார்முகிலோன், ஐயா ஈரோடு தமிழன்பன், முனைவர் மித்ரா அம்மையார் மற்றும் ஐயா கன்னிக்கோவில் ராஜா.


Saturday, August 9, 2014

என் பிறந்தநாளையொட்டி குழந்தைகளின் கல்விக்காக...




இந்த மாதம் என் பிறந்தநாளையொட்டி நான் வாங்கிய மூன்றாம் பரிசுக்குரிய தொகையை குழந்தைகளின் கல்விக்காக எழுத்தேணி அறக்கட்டளைக்குரிய வங்கிக் கணக்கில் இணைய வங்கி மூலமாக அனுப்பியிருக்கிறேன்.

அதோடு என் சம்பளப் பணத்திலிருந்து ஒரு தொகையை செவிவழி தொடுசிகிச்சை குழுமத்திற்கு (http://anatomictherapy.org/) இணைய வங்கி மூலமாக அனுப்பியிருக்கிறேன்.

என்னிடமிருந்த செவிவழி தொடுசிச்சை குறித்த காணொளிகளை (videos) குறுந்தகடுகள் மூலமாக வித்யாசாகர் அண்ணாவின் குவைத் முகவரிக்கும், தங்கை பாமினியின் பிரான்ஸ் முகவரிக்கும் இரண்டு மாதங்களுக்கு முன்பு அனுப்பி வைத்தேன்.

கடந்த ஒரு வருடத்திற்கு முன்பு வரை "சீமான் அண்ணாவிற்கு முப்பத்தைந்து வயதாகி விட்டதே விரைவில் அவருக்கு திருமணம் ஆகவேண்டும்" என்று நான் என் அம்மாவிடம் சொன்னதுண்டு. நானும் அவருக்கு திருமணம் ஆகவேண்டும் என மனதில் நினைத்துக் கொண்டிருந்தேன். அடுத்த சில மாதங்களில் அவருக்கு திருமணம் நடந்தேறியது. கடந்த மார்ச் மாதம் முதல் தங்கை பாமினிக்கு திருமணம் நடைபெற வேண்டும் என நினைத்துக் கொண்டிருந்தேன். அடுத்த சில மாதங்களில் அவளுக்கு நிச்சயதார்த்தம் ஆனது. எனக்கு தெரிந்தவரை அடுத்த ஆண்டு அதாவது 2015, ஜூன் மாதத்திற்கு மேல் அவளுக்கும் அவளுடைய வருங்காலக் கணவர் திரு. விஜயரூபனுக்கும் சென்னையில் திருமணம் நடைபெறும்.

பாஸ்கர் ஐயா, உங்களின் ஒரு காணொளியில் நீங்கள் உங்களைப் பற்றி சொன்னபோது மனம் நெகிழ்ந்தேன். நீங்கள் காதலித்து திருமணம் செய்த உங்கள் காதல் மனைவி மனந்திருந்தி உங்களை விரைவில் தேடிவரும்போது அவளை ஏற்றுக்கொள்ளும் மனநிலையில் இருப்பீர்கள் அல்லது உங்களுக்கு விரைவிலேயே ஒரு நல்ல வாழ்க்கைத்துணை அமையும்.

உதவி செய்யும் மனப்பாங்கு உள்ளவர்கள் தாராளமாக எழுத்தேணி அறக்கட்டளை, செவிவழி தொடுசிகிச்சை குழுமம் (Anatomic Therapy Foundation), ஈரநெஞ்சம் போன்ற பல உதவும் உள்ளங்களுக்கு அனுப்பி வைக்கலாம்.

நன்றி.

Sunday, July 27, 2014

மடிந்த ஹிட்லரின் மறுபிறவி

௨௦௦௯ ல் முத்தாரம் வார இதழில் வெளிவந்திருந்த பல விமர்சனக் கடிதங்களில் ஒன்று.


இன்று நடந்தேறிய முப்பெரும் விழா

கடந்த சில நாட்களுக்கு முன்பு இன்று (27-07-2014) சென்னை மயிலாப்பூரில் நடந்த முப்பெரும் விழாவைப் பற்றி தினமணி செய்தி வெளியிட்டிருந்தது.



விழாவில் நமது நூல் "குழந்தைகளும் பொம்மைகளும் கடவுளும்" நூலுக்கு சிறந்த முறையில் வடிவமைக்கப்பட்ட சான்றிதழும் மூன்றாம் பரிசாக ரூபாய் ஆயிரமும் வழங்கப்பட்டது.






விழா மிகவும் எளிமையாகவும் சிறப்பாகவும் நடந்தேறியது. விழாவில் பரிசுகள் கொடுத்து ஊக்கப்படுத்தும் இந்த விழாவின் அனைவருக்கும் என் நெஞ்சார்ந்த நன்றி.

என்னுடன் பழகி என்னை நன்றாக புரிந்துகொண்ட ஒவ்வொருவருமே ஏதோவொரு தருணத்தில் என்னிடம் சொல்லும் வார்த்தைகள் "நீ என்ன இன்னும் சின்ன குழந்தையா?", "நீ ஒன்றும் குழந்தையில்ல..." என்று. இதனையே, இன்றைய விழாவில் விழா குறித்த துண்டு பிரசுரத்தில் "குழந்தை மனம் படைத்த கவிஞர்" என்று எழுதப்பட்டிருந்தது.



இதனையே குமுதம் இதழும் வெளியிட்டிருந்தது "பாசாங்கு இல்லாத இயல்பான மனதை ஹைக்கூவாக வடித்திருக்கிறார் சுரேஷ்குமார்" என்று.

விழாவில் பரிசுகள் வாங்கியபோது எடுத்த புகைப்படங்களை கன்னிக்கோவில் ராஜா ஐயா விரைவில் அனுப்பி வைப்பார். அனைத்தையும் உங்களோடு பகிர்ந்து கொள்ளவிருப்பதில் மகிழ்ச்சியடைகிறேன்.

Wednesday, July 23, 2014

௨௦௦௬ தினமலரில் என் தங்கச்சி பாப்பா சோபனா பெயரில் என் கவிதை...

௨௦௦௬ தினமலரில் என் தங்கச்சி பாப்பா சோபனா பெயரில் நான் எழுதிய கவிதை பிரசுரமாகியிருந்தது.

சமீபத்தில் ஒரு திரைப்படம் பார்த்தேன். அதில் ஒரு அண்ணன் தன் தங்கையிடம் தனக்கு பிடித்த ஒரு பெண்ணை அலைபேசியில் காணொளியாக காட்டும்போது “இவள் எவ்வளவு அழகாக இருக்கிறாள்.” என்று சொன்னதும் “அண்ணா, நான் மட்டுந்தான் அழகு என்று சொன்னாயே” என்று அந்த தங்கை சொன்னவுடன் அந்த அண்ணன் சொல்வான் “தங்கச்சியில் வேணும் னா நீ அழகு” என்று. உடனே அந்த தங்கை சொல்வாள் “என்னது வேணும் னா வா? அப்பா.., அப்பா...” என்று கத்திக்கொண்டு கோபித்துக் கொண்டு ஓடுவாள்.

தங்கச்சியை தான் பெற்றெடுக்காத மகளாக அன்பு செலுத்தும் அண்ணன்களுக்கு மேற்சொன்ன வசனங்களின் மகோன்னதம் புரியும்.

என் சிறுவயதில் தொடங்கி என் தங்கச்சி பாப்பா சோபனா எப்போதும் எனக்கு அக்கா போலவே பக்குவம் நிறைந்தவள். “வாமன அவதாரம்”
என்று அவளை நான் அடிக்கடி அழைப்பதுண்டு.

என் சொந்த ஊரான முனைவென்றி பள்ளிக்கூடத்தில் நான் எட்டாம் வகுப்பும் என் தங்கச்சி ஆறாம் வகுப்பும் படித்தபோது எங்களுக்கு பாடம் நடத்த வந்த ஆசிரியர் அண்ணன் ம. சிவசங்கர செல்வம் அவர்களுக்கு எங்கள் இருவரும் மீதும் நிறைய அன்பு. அவருடைய வங்கிக் கணக்கில் பணம் செலுத்த என்னிடம் கொடுத்தனுப்புவார். என்னை தனியே அழைத்து “நீ, சோபனா இருவரில் யார் புத்திசாலி?” என்று கேட்பார். நான் சொன்னேன் “என் தங்கை தான்.” என் தங்கச்சியை அழைத்து அவர் கேட்டபோது “என் அண்ணன் தான்.” என்று.

அதன்பிறகு அந்த அண்ணன் அவருடைய ஊருக்கு மாற்றலாகிப் போனபோதும் அவருடைய அலைபேசி என் மூலமாக அவருடன் தொடர்பு இருந்தது. கடந்த ௨௦௦௯ க்கு பிறகு அவருடைய அலைபேசி எண் பழையதாகிப் போனதோ என்னவோ இப்போதெல்லாம் அந்த அண்ணன் என்னுடனான இணைப்பில் இல்லை.


Tuesday, July 22, 2014

அமெரிக்க சுதந்திரதேவி சிலையின் மர்மம்

என்னுடைய சிறுவயதில் என் தாத்தா கடைகளில் அமர்ந்துகொண்டு மற்றவர்களோடு பேசும்போது "அமெரிக்கா தான் இரண்டு பக்கமும் சிண்டு மூட்டி விட்டு குளிர்காய்கிறது. தீவிரவாதம் வேண்டாம் என்று சொல்வதும் பிறகு அவர்களே தீவிரவாதத்தில் ஈடுபடுவதும் என தந்திரங்களை மேற்கொள்கிறது." என அவரை கடந்து போனபோதெல்லாம் இப்படி அமெரிக்காவை பற்றி அவர் பேசியதெல்லாம் அப்படியே பதிவுகளாக கடந்த சில நாட்கள் வரை இருந்தன.



ஆனால், கடந்த சில நாட்களாக மருத்துவ அறிஞர் பாஸ்கர் ஐயா அவர்கள் பேசிய "உலக அரசியல்" காணொளிகளை கேட்கக் கிடைத்தபோது பல தெரியாத தகவல்களை தெரிந்துகொண்டேன். அமெரிக்கா எந்த நாட்டையும் கட்டுப்படுத்தவில்லை. "அமெரிக்காவையே ஒரு குழு பின்னாலிளிருந்து இயக்கி வருகிறது. நாம் வசிக்கும் கோளான பூமியை, இங்குள்ள அனைத்து நாடுகளையும் இயக்கி, இயக்க முயற்சித்து வரும் ஒரு தீய சக்தி இருக்கிறது." என ஐயா பாஸ்கர் இந்த காணொளிகளின் மூலம் தெரிவித்திருக்கிறார். இவர் பேசிய ஒன்பது பாகங்களையும் கேட்டு விட்டேன். அதிர்ந்தேன். என் மூளைக்குள் இருக்கும் அனுபவ உரைகல்லின் மூலம் இவர் சொன்ன செய்திகளையெல்லாம் உரசிப் பார்க்க வேண்டும். என் மூளைக்குள் உள்ள சோதனைக்குழாய்க்குள் இவர் சொன்ன தகவல்களையெல்லாம் போட்டு குலுக்கிப் பார்க்க வேண்டும்.

உலக அரசியல் - http://anatomictherapy.org/tworld-poltics.php

பாகம் ௧ - https://www.youtube.com/watch?v=YWCzZYO6Sgs

பாகம் ௨ - https://www.youtube.com/watch?v=vHFf-sKpcEY

பாகம் ௩ - https://www.youtube.com/watch?v=9H2SY-neU8Y

பாகம் ௪ - https://www.youtube.com/watch?v=KPPlY532U44

பாகம் ௫ - https://www.youtube.com/watch?v=qQwvMPM3kHc

பாகம் ௬ - https://www.youtube.com/watch?v=pIe9uKm2eHM

பாகம் ௭ - https://www.youtube.com/watch?v=oJM1lpir5lg

பாகம் ௮ - https://www.youtube.com/watch?v=0uWAf2y0Vc8

பாகம் ௯ - https://www.youtube.com/watch?v=Lp_6BaThVKc

இந்த படத்தை பார்த்தால் புரியும். "இந்த உலகில் உள்ள அனைவரும் எதுவரை யோசிக்க வேண்டும், எப்படி நடந்து கொள்ள வேண்டும், எப்படி வாழ வேண்டும், நாம் என்ன உண்ண வேண்டும், நாம் எதனை கல்வி என கற்க வேண்டும் என அந்த மறைமுக மனிதர்கள் முடிவெடுக்கிறார்கள். அவர்கள் இதுவரை நேரடியாக இயங்கியதில்லை. மறைமுகமாகவே இயங்குகிறார்கள்." என தெரிய ஆரம்பித்திருக்கிறேன்.



"பணம் பாதாளம் வரை பாயும்" என்ற நம் முன்னோர்களின் வாக்கை கடந்த சில நாட்களில் தான்  முழு அர்த்தத்தையும் உணர ஆரம்பித்திருக்கிறேன்.

நான் பெரிதும் மதிக்கும் அமரர் எம். எஸ். உதயமூர்த்தி ஐயா அவர்களும் அமெரிக்காவில் தொழிலதிபராக பல காலமாய் வாழ்ந்தவர். இவர் பலருக்கும் பரிச்சயமான எழுத்தாளர். இவர் சமூக அக்கறை உள்ளவர். இவருக்குக் கூடவா அந்த மறைமுக மனிதர்களை பற்றி தெரிய வாய்ப்பில்லாமல் போனது. தெரிந்தால் நிச்சயம் ஏதாவது ஒரு இடத்தில் சொல்லாமல், எழுதாமல் இருந்திருக்க மாட்டாரே என்ற எண்ணம் மனதில் உதிக்கிறது.

இந்த படத்தை பாருங்கள். DNA வரைபடம் இந்த சுற்றப்பட்ட பாம்பை அடிப்படையாகக் கொண்டு கணினியில் வடிவமைக்கப் பட்டதாக sofware program என இந்த காணொளியில்  சொல்கிறார்கள். ஆக DNA இப்படித்தான் இருக்கும் என்பது கண்டுபிடிப்பல்ல, இது திட்டமிட்டு செய்யப்பட்ட வடிவமைப்பு என எண்ணம் வலுக்கிறது. https://www.youtube.com/watch?v=Eu3oN9sQwTQ இன்னமும் இதுபோன்ற காணொளிகளை நான் முழுமையாக பார்க்கவில்லை. பார்க்க ஆரம்பித்திருக்கிறேன். நாம் பள்ளியில், கல்லூரியில், பல்கலைக்கழகத்தில் படித்தவற்றையெல்லாம் மறுபரிசீலனை செய்ய வேண்டியிருக்கிறது. ஏனெனில் நாம் கற்ற கல்வியே நம்மை வழிநடத்துகிறது.



இந்த காணொளியை பாருங்கள். https://www.youtube.com/watch?v=IxNw8OhmVZE
அமெரிக்க குடியரசு தலைவர் ஜான் கென்னடி பேசிய உரை. அவர் மறைமுகமாகத் தான் அந்த இரகசிய மனிதர்களை பற்றி பேசியிருக்கிறார். ஆனால், அவர் கொல்லப்பட்டார்.

இன்னும் பல மர்மங்கள் புதைந்து கிடக்கின்றன.

நாம் எப்படிப்பட்ட உலகில் வாழ்கிறோம்? என்றே தலை சுற்றுகிறது.

அலைபேசியில் நாம் பேசுவன, இணையம் வழி நாம் பேசுவன என தொடங்கி இவை அனைத்தும் satellite, database server மூலமாக அவர்களால் கண்காணிக்கப் படுகிறதா? நாம் நம் குழந்தைகளுக்கு அனுமதிக்கும் தடுப்பூசிகள் மூலமாக நம் வருங்கால சந்ததி பாதிக்கப் படுகிறதா, மனித இனம் மறைமுகமாக அழிக்கப்படுகிறதா? என பலவிதமான கேள்விகள் தொக்கி நிற்கின்றன.

அந்த மறைமுக குழுவை பற்றி ஏன் இதுவரை யாரும் இங்கு சொல்லவே, எழுதவே இல்லை என வருத்தமாக இருக்கிறது.

தயவு செய்து இந்த மின்னஞ்சலை உங்களை எத்தனை பேருக்கு முடியுமோ அத்தனை பேருக்கு அனுப்புங்கள். பகிர்ந்து கொள்ளுங்கள்.

என் பதிவுகளை தொடர்ந்து படிக்கும் அன்பர்கள், இந்த மின்னஞ்சலை படித்து முழுமையாய் படித்து மற்றவர்களிடம் பகிர்ந்து பகிரச் சொல்லி ஆதரவு அளிக்குமாறு வேண்டுகிறேன்.

இங்கு எல்லா உணர்வுகளுக்கும் அடிநாதமாக, அந்தமாக விளங்கக் கூடியது அன்புதான். எல்லா உணர்வுகளின் கடைசி புள்ளி அன்பு தான்.

இந்த அன்பும் கருணையும் மனித நேயமும் எங்கும் பெருகினால் நமக்கு அளவுகடந்த மகிழ்ச்சி தான்.

௨௦௦௮ ல் நான் எழுதிய ஒரு கவிதையின் கடைசி சில வரிகள்

மனிதநேயத்தின் எல்லைக்கோடுகள்
பிரபஞ்சமாகும் நாள் 
எப்போது வரும்?

Sunday, July 20, 2014

௨௦௦௬ (2006) தினமலரில் பாண்டிலக்ஷ்மி அக்கா பெயரில் என் கவிதை...

௨௦௦௬ (2006) தினமலரில் என் அக்கா பாண்டிலக்ஷ்மி பெயரில் நான் எழுதி வெளிவந்த என் கவிதை.

௨௦௦௬ ம் ஆண்டு என் பட்ட மேற்படிப்பின் நான்காம் பருவ தேர்வு விடுமுறை. விடுமுறை நாட்களில் இப்படி என் பெயரிலும் என்மீது அன்பு கொண்டவர்களின் பெயரில் என் கையெழுத்தை மாற்றியும் எழுதி அனுப்பி அவை தினமலரில் பிரசுரமாவதை பார்த்து மகிழ்ந்தேன்.

சில மாதங்கள் கழித்து, சரவணராஜ் அண்ணாவை அலைபேசியில் அழைத்தபோது அவர் சொன்னார் "என் கவிதை வெளிவந்ததற்கு பக்கத்தில் அந்த பெண் பாண்டிலக்ஷ்மி எழுதிய கவிதையொன்று வெளிவந்திருக்கிறது." என்று.

நான் சொன்னேன் "அந்த கவிதையை அவள் பெயரில் நான் தான் எழுதி அனுப்பியிருந்தேன்." என்று.

இப்படி என்மீது அன்பு கொண்டவர்கள் என் ஆழ்மனதில் ஆழமாய் பதிந்து போகிறார்கள்.

என் பாண்டிலக்ஷ்மி அக்கா என்னிடம் அடிக்கடி சொல்வாள் "எதையும் யோசிக்காதப்பா" என்று.

சமீப காலங்களில் அவளை நினைவுபடுத்தும் விதமாக என் தங்கை பாமினி என்னிடம் ஸ்கைப், முகநூல் அல்லது அலைபேசி என ஏதாவதொன்றில் பேசி முடிக்கும்போது "யோசிக்காம இருங்க அண்ணா" என்றே சொல்வாள்.

என் வாழ்வில் நடந்த இரண்டு நிகழ்வுகளை இங்கு பகிர்ந்து கொள்கிறேன்.

௨௦௦௬ ம் ஆண்டில் ஒருநாள் இரயிலில் பயணப்பட அந்த நிலையத்திற்கு போனேன். அங்கு பாண்டிலக்ஷ்மி அக்காவும் அமர்ந்திருந்தாள். ஏற்கனவே சில நாட்களாக என்னிடம் ஏதோ கோபத்தில் பேசாமல் இருந்தாள். அப்போது தான் என் நினைவிற்கு வந்தது நான் இன்னும் பயணச்சீட்டு எடுக்கவில்லை என்பது.

பயணச்சீட்டு எடுப்பதற்காக விரைந்தேன். நான் எழுந்து நடப்பதை அக்கா பார்த்து விட்டு அவள் என்னிடம் பேசாமல் இருப்பதால் நான் கோபத்தில் கிளம்புவதாக நினைத்துக் கொண்டு அவள் உடனிருந்த தங்கை மகாலக்ஷ்மியிடம் "சுரேஷ் கோபத்தில் போகிறது. என்ன ன்னு கேளு" என்றபடி மகாலக்ஷ்மி என்னை நோக்கி வேகமாக ஓடிவர அவள் பின்னால் பாண்டிலக்ஷ்மி அக்கா ஓடிவந்தாள்.

மகாலக்ஷ்மி என்னை அழைக்கும் சத்தம் கேட்டு திரும்பி நின்று "பயணச்சீட்டு எடுக்க மறந்துட்டேன் ப்பா. அதான் எடுக்க போறேன். எடுத்துட்டு வந்துருவேன். லூசுங்களா எதுக்காக இப்டி ஓடி வர்றீங்க?" என்றபடி பாண்டிலக்ஷ்மி அக்காவின் முகம் பார்த்தேன். அவள் என்மீதுள்ள கோபத்தில் என்முகம் பார்க்காமல் முகத்தை திருப்பிக் கொண்டாள். "நான் பாண்டிலக்ஷ்மி அக்காவின் மீது கோபமாகத்தான் எழுந்து நடக்க ஆரம்பித்தேன்" என நினைத்துத்தான் இருவரும் ஓடிவந்தார்கள் என புரிந்துகொண்டேன்.

௨௦௦௫ ம் ஆண்டில் ஒருநாள் ஏதோவொரு சூழலில் என் பாண்டிலக்ஷ்மி அக்கா காதலித்த அந்த என் அத்தானைப் பற்றி அழவும் முடியாமல் சிரிக்கவும் முடியாமல் என்னிடம் சொன்னாள். அந்த அவளின் முகம் என் ஆழ்மனதில் இன்றும் கண்ணீரோடு கலந்திருக்கிறது.

என் பாண்டிலக்ஷ்மி அக்கா என் அத்தானை எப்படியெல்லாம் நேசித்திருப்பாள் என்ற அந்த தாக்கத்தில் பிறந்த கவிதையே “அவள் உயிர் அழுகிறது” -  http://munaivendrinaasureshkumarkavithaikal.blogspot.com/2011/09/blog-post_653.html

இதே தாக்கத்தில் நான் எழுதி வைத்திருக்கும் ஒரு கவிதைநூல் "உள்ளம் உருக்கிப் போனாயடா..."

௨௦௦௫ ல் என் பாண்டிலக்ஷ்மி அக்கா என்னிடம் அழவும் முடியாமல் சிரிக்கவும் முடியாமல் என்னிடம் அவளின் காதலனை அதாவது என் அத்தானைப் பற்றி சொன்னபோது அவள் சொன்னாள் "இந்நிகழ்வை இனி நான் நினைவுபடுத்த விரும்பவில்லை. நீயும் என்னிடம் இனி நினைவுபடுத்தாதே ப்பா. பிறகு என்னால் தாங்கிக்கொள்ள முடியாது." என்றாள்.

என்னிடம் அன்புகொண்ட இவள் போன்றவர்கள் அவ்வப்போது என்னிடம் பேசினால் எனக்கு எந்த வலியும் தாக்கமும் தெரியாது. ஆனால், யாரும் அப்படி இருப்பதில்லை. மனிதர்கள் காலப்போக்கில் மறந்துபோகிறார்கள். மனிதர்கள் காலப்போக்கில் மாறிப்போகிறார்கள். இதனாலேயே மனதில் ஏற்பட்ட மன அழுத்தத்தின் காரணமாக "யாரிடமும் பகிர்ந்துகொள்ள வேண்டாம்" என அவள் சொன்னதையும் மீறி பகிர்ந்துகொள்ள வேண்டியிருக்கிறது.

என் காதலை சேர்த்து வைக்க ஆசைப்பட்டவள் அவள்.

அவளுக்கு நான் எழுதிய சில கவிதைகளில் ஒரு கவிதையில் சில வரிகள்.

படிப்பதில் படுசுட்டி தான் - அன்பால்
துடிப்பதில் படுகெட்டிதான்

நான் என்னிடம் பழகிய பலருக்கும் அவர்கள் கேட்காமலேயே எழுதிக் கொடுத்திருக்கிறேன். சமீபத்தில் என் தங்கை பாமினிக்கு அவள் தன் கவிதைநூலிற்கு வாழ்த்துச்செய்தி கேட்டு நான் கவிதையாக எழுதிக் கொடுத்த கவிதைகள் வரை அனைத்தும் அவரவர் பத்திரமாக வைத்திருப்பார்கள் என்ற நம்பிக்கை எனக்கிருக்கிறது.

அதே சமயத்தில் என் இப்படி என்னோடு பழகிய சகோதர சகோதரிகளுக்காக, தோழிக்காக, என் தங்கச்சி பாப்பா சோபனாவிற்காக என நான் எழுதிய கவிதைகளை, அவர்கள் பெயர்களில் நான் எழுதி வெளிவந்த கவிதைகளையும் பத்திரமாக பாதுகாத்து வருகிறேன். ஏனெனில் இவைகள் அனைத்தும் என் குழந்தைகள்.


Wednesday, July 16, 2014

தமிழர் எழுச்சி ஜூலை மாத இதழ்



தமிழர் எழுச்சி ஜூலை ௨௦௧௪ (2014) மாத இதழ் - http://thamizharezhuchchi.blogspot.in/2014/07/2014.html

தமிழர் எழுச்சி ஜூன் ௨௦௧௪ (2014) மாத இதழ் - http://thamizharezhuchchi.blogspot.com/2014/06/2014_2960.html

தமிழர் எழுச்சி மே ௨௦௧௪ (2014) மாத இதழ் - http://thamizharezhuchchi.blogspot.com/2014/06/2014_4170.html

தமிழர் எழுச்சி ஏப்ரல் ௨௦௧௪ (2014) மாத இதழ் - http://thamizharezhuchchi.blogspot.com/2014/06/2014_1222.html

தமிழர் எழுச்சி மார்ச் ௨௦௧௪ (2014) மாத இதழ் - http://thamizharezhuchchi.blogspot.com/2014/06/2014_27.html

தமிழர் எழுச்சி பிப்ரவரி ௨௦௧௪ (2014) மாத இதழ் - http://thamizharezhuchchi.blogspot.com/2014/06/2014_26.html

தமிழர் எழுச்சி ஜனவரி ௨௦௧௪ (2014) மாத இதழ் - http://thamizharezhuchchi.blogspot.com/2014/06/2014_708.html

தமிழர் எழுச்சி டிசம்பர் ௨௦௧௩ (2013) மாத இதழ் - http://thamizharezhuchchi.blogspot.com/2014/06/2014_25.html

தமிழர் எழுச்சி நவம்பர் ௨௦௧௩ (2013) மாத இதழ் - http://thamizharezhuchchi.blogspot.com/2014/06/2014.html

தமிழர் எழுச்சி மாத  இதழுக்கான இணையதளம் - http://thamizharezhuchchi.blogspot.in/

Tuesday, July 15, 2014

என் சமீபத்திய புகைப்படங்கள்

இரண்டு வாரங்களுக்கு முன்பு பரமக்குடி திரௌபதி அம்மன் கோயில் வாசலில் என் அலைபேசியில் உள்ள புகைப்படக் கருவி மூலம் என் தங்கச்சி பாப்பா சோபனாவால் எடுக்கப்பட்ட புகைப்படங்கள்.




Sunday, July 13, 2014

அழகு ராட்சசி கவிதைநூலிற்கு சமீபத்தில் எனக்கு கிடைத்த குறுஞ்செய்தி விமர்சனம்

"கவிஞரே, தாங்கள் எழுதிய அழகு ராட்சசி நூலை மறு வாசிப்பு செய்தேன். காதல் சொட்டச்சொட்ட இருந்தது. அருமை."

- கவித்துளி குமார். ௯௭௯௧௫௬௫௯௨௮ (9791565928)

என்னுடைய கவிதைநூலை இவர் எப்போது வாங்கினார்?, எங்கே வாங்கினார்? என்ற விவரங்கள் எனக்கு தெரியவில்லை.

இந்த கவிதைநூலிற்கு ஏற்கனவே கிடைத்த விமர்சனங்களில் மிகமிக முக்கியமான விமர்சனத்திலிருந்து

- (சிவகங்கை) மீரா, தபுசங்கர் வரிசையில் சுரேஷ்குமாருக்கு ஓரிடம் உண்டு.

- (முத்தம் தொடர்பான ஒரு கவிதை தொடர்பாக) திருவள்ளுவரின் கொள்ளுப்பேரனாக இருப்பார் என நினைத்துக் கொண்டேன்.

- இவரது கவிதைகள் இளைஞர்களை கவரும். சாதாரண இளைஞர்களை கவிதை எழுதத் தூண்டும். காதலித்துக் கொண்டிருப்பவர்கள் கடிதம் எழுத மிகவும் உதவியாக இருக்கும்.


அழகு ராட்சசி கவிதை நூலிற்காக திரு. ஸ்ரீரங்கம் செளரிராஜன் அவர்கள் எழுதிய நூல் விமர்சனத்திலிருந்து...

Saturday, July 12, 2014

௨௦௦௬ புதிய சிற்பி மாத இதழில் பொறுப்பாசிரியராக...

௨௦௦௬ புதிய சிற்பி மாத இதழில் பொறுப்பாசிரியராக அங்கம் வகித்தபோது முதுநிலை கணினி பயன்பாட்டியல் (M.C.A.,) படித்துக் கொண்டிருந்தேன்.

இந்த பட்டியலில் என்னைத்தவிர ஏனைய பலபேர் அழகப்பா பல்கலைக்கழகத்தில் தமிழ்த்துறையில் முதுகலை, இளங்கலை தமிழ் படித்துக் கொண்டிருந்தவர்கள்.

ஒருநாள் நான்கு மணிக்கு முடியவேண்டிய என் கணினித்துறை வகுப்புகள் மாலை மூன்று மணிக்கே முடிந்துவிட்டது. அதனால் பக்கத்திலிருந்த தமிழ்த்துறைக்கு ஒரு கவிதை நண்பரை பார்க்க அவர் வகுப்பறைக்குள் நுழைந்தேன். சில நிமிடங்களில் தமிழம்மா உள்ளே நுழைந்துவிட்டாள். நான் ஏற்கனவே கவிதைப்போட்டியில் கலந்துகொண்டது குறித்து அந்த தமிழம்மாவுக்கு தெரியும் என்பதாலும் என்னுடைய துறை தேர்வுகளுக்கு அவள் தேர்வு மேற்பார்வை அதிகாரியாக (Exam Supervisor) வந்ததை வைத்து என்னை அவளுக்கு தெரியும் என்பதாலும் தமிழ் அல்லாத வேறுதுறை மாணவனாகிய நான் அவள் நடத்தும் வகுப்பில் அமர்ந்திருந்ததை கண்டும் எதுவும் சொல்லாமல் பாடம் நடத்திவிட்டு வகுப்பு முடிந்தவுடன் கிளம்பினாள். அதன்பிறகு என் கவிதை நண்பர்களோடு பேசி, பகிர்ந்து கடந்த நினைவுகள் பசுமையானவை.

அப்போதெல்லாம் எனக்கு என் துறையில் என் விடுதியில் என் அறையில் உள்ளவர்களோடு இருந்ததைவிட இப்படி கவிதைகளோடு வாழும் தமிழ்த்துறை நண்பர்களோடு கவிஞனான நானும் அதிக ஈடுபாடோடு கடந்த பசுமையான கால நினைவுகள்.


Wednesday, July 9, 2014

நேசிக்காதே (காதல் கவிதை)

௨௦௧௨ இராணிமுத்து மாதமிருமுறை இதழில் வெளிவந்த கவிதை.


Tuesday, July 8, 2014

பரமக்குடி பூங்காவில் விஷ்ணு பாப்பா

கடந்த சனிக்கிழமையன்று பரமக்குடி உழவர்சந்தை பூங்காவில் எங்க வீட்டு விஷ்ணு பாப்பா விளையாடினான். அப்போது எடுத்த புகைப்படங்கள்.

என் மருமகன் விஷ்ணு பாப்பாவின் அழகைக்காண கோடி கண்கள் வேண்டும்.



சஞ்சிகை மாத இதழில் வெளியான என் ஹைக்கூ



ஜூன் சஞ்சிகை மாத இதழில் வெளியான என் ஹைக்கூ இது. முகநூலில் பலரால் வரவேற்கப்பட்ட ஹைக்கூ இது. ஆனால், என்னுடைய கவிதை எப்போதுமே ஊடகங்களால் அவ்வளவு எளிதில் வரவேற்கப்படுவதே இல்லை. இதனாலேயே இணையத்தில் இந்த பிரபஞ்சம் முழுக்க அனுப்பி வைப்பதுண்டு. அப்படி அனுப்புவதையும் விளம்பரப்படுத்துவதாக என்னை குறை சொல்பவர்களும் இருக்கிறார்கள்.

இந்த கவிதையை வெளியிட்டு எனக்கு ஆறுதல் அளித்த சஞ்சிகை மாத இதழுக்கு என் நன்றி.

என்னுடைய ஊரில் மணலாக ஓடும் வைகை ஆறரை நினைவில் வைத்தே எழுதப்பட்ட ஹைக்கூ இது. நான் பிறப்பதற்கு முன்புவரை வைகை ஆற்றில் நீர் பாலத்தை உடைக்குமளவிற்கு வந்ததாக சொல்வார்கள். எனக்கு நினைவு தெரிந்த நாளிலிருந்து அப்படி நீர் வந்ததில்லை. நான் என் ஊருக்கு செல்லும் ஒவ்வொரு முறையும் ஆற்றில் மணல்தான் ஓடுகிறது.

வைகை ஆற்றின் முகப்பில் இருப்பதால் தான் இராமநாதபுரம் என்ற ஊருக்கு முகவை (முக+வை - முக - முகப்பில், வை - வைகை, வைகையின் முகப்பில் உள்ள ஊர்) என்று பெயர் வந்தது. அதனாலேயே பலரும் முகவை மாவட்டம் என்றே எழுதுவர்.

மற்ற மொழிகளில் இடுகுறிப் பெயர்கள் அதிகம். காரணப் பெயர்கள் குறைவு. ஆனால் தமிழ்மொழியில் மட்டுந்தான் காரணப் பெயர்கள் அதிகம். இடுகுறிப் பெயர்கள் மிகமிகக் குறைவு. அதனால் தான் "தேங்காயை உடைத்துப் பார். தமிழ் வார்த்தைகளை பிரித்துப் பார்" என்று நம் முன்னோர்கள் சொன்னார்கள். தேங்காயை உடைத்தால் அது நல்ல தேங்காயா இல்லையா என்று தெரியும். தமிழ் வார்த்தைகளை பிரித்துப் பார்த்தால் பொருள் புரியும்.

Friday, June 27, 2014

தமிழர் எழுச்சி மாத இதழ்கள் தற்போது மின்னூல்களாக... (E Books)



தமிழர் எழுச்சி மாத இதழ்கள் தற்போது மின்னூல்களாகவும் (E Books) வெளிவர ஆரம்பித்திருக்கின்றன.

தமிழர் எழுச்சி ஜூன் ௨௦௧௪ (2014) மாத இதழ் - http://thamizharezhuchchi.blogspot.com/2014/06/2014_2960.html

தமிழர் எழுச்சி மே ௨௦௧௪ (2014) மாத இதழ் - http://thamizharezhuchchi.blogspot.com/2014/06/2014_4170.html

தமிழர் எழுச்சி ஏப்ரல் ௨௦௧௪ (2014) மாத இதழ் - http://thamizharezhuchchi.blogspot.com/2014/06/2014_1222.html

தமிழர் எழுச்சி மார்ச் ௨௦௧௪ (2014) மாத இதழ் - http://thamizharezhuchchi.blogspot.com/2014/06/2014_27.html

தமிழர் எழுச்சி பிப்ரவரி ௨௦௧௪ (2014) மாத இதழ் - http://thamizharezhuchchi.blogspot.com/2014/06/2014_26.html

தமிழர் எழுச்சி ஜனவரி ௨௦௧௪ (2014) மாத இதழ் - http://thamizharezhuchchi.blogspot.com/2014/06/2014_708.html

தமிழர் எழுச்சி டிசம்பர் ௨௦௧௩ (2013) மாத இதழ் - http://thamizharezhuchchi.blogspot.com/2014/06/2014_25.html

தமிழர் எழுச்சி நவம்பர் ௨௦௧௩ (2013) மாத இதழ் - http://thamizharezhuchchi.blogspot.com/2014/06/2014.html

தமிழர் எழுச்சி மாத இதழுக்கான இணையதளம் - http://thamizharezhuchchi.blogspot.in/

Monday, June 16, 2014

இரண்டாயிரத்து ஐநூறு ஆண்டுகளுக்கு முன்பு இந்தியா முழுவதும் தமிழே!

நன்றி: முகநூல் (Facebook)





இரண்டாயிரத்து ஐநூறு ஆண்டுகளுக்கு முன்பு இந்தியா முழுவதும் தமிழே பரவியிருந்தது. அசோக மாமன்னன் தமிழ் மொழியிடம் கடன் பெற்றுத்தான் அவனது கல் வெட்டுக்களைப் பொறித்திருக்கிறான். தமிழனின் தொன்மையான வரலாற்றை மறைக்க சதி நடக்கிறது என்று கூறி அதிர்ச்சியை அள்ளித் தெளித்திருக்கிறார், ஓய்வு பெற்ற தொல்லியல் துறை அதிகாரி ஒருவர்.

நெல்லை பாளையங்கோட்டையில், மத்திய செம்மொழி தமிழாய்வு மையமும், சென்னையிலுள்ள பெரியார் ஈ.வெ.ராமசாமி நாகம்மை கல்வி ஆராய்ச்சி அறக்கட்டளையும் இணைந்து நடத்திய ‘தமிழ்நாட்டுத் தொல்லியல் ஆய்வுகள் மற்றும் ஆதிச்சநல்லூர் சிறப்பும், எதிர்காலத்திட்டங்களும் என்கிற தலைப்பிலான தேசிய கருத்தரங்கில்தான் இப்படிப் பேசி பரபரப்பைக் கிளப்பியிருக்கிறார் அவர். நடன காசிநாதனை நாம் சந்தித்துப் பேசினோம்.

‘‘1989-ம் ஆண்டு முதல் 1998-ம் ஆண்டு வரை தமிழ்நாடு தொல்லியல்துறை இயக்குநராக நான் பணியாற்றிய போதுதான் தமிழ்நாட்டில் உள்ள வரலாற்று முக்கியத்துவம் வாய்ந்த பல இடங்களில் அகழ்வாராய்ச்சிகள் நடந்தன" என்று ஆரம்பித்தார் அவர்.

குறிப்பாக ராமநாதபுரம் மாவட்டத்தில் வைகை ஆறு கடலோடு கலக்கும் அழகன்குளம், ஈரோடு மாவட்டம் கொடுமணல், நாகை மாவட்டம் பூம்புகார் ஆகிய இடங்களில் நிலம் மற்றும் கடல் அகழ்வாராய்ச்சிகள் நடத்தப்பட்டன. அழகன்குளத்தில் கொத்துக் கொத்தாய் ரோமானிய காசுகள், இடுப்பில் குழந்தையுடன் கூடிய மரத்தால் ஆனதாய் சிற்பம், கண்ணாடி கைப்பிடியை வைத்திருக்கும் மூன்று தாய்மார்களின் சிற்பம் போன்றவையும் கண்டுபிடிக்கப்பட்டன. கி.மு. முதல் நூற்றாண்டைச் சேர்ந்த அந்தப் பொருட்கள் மூலம் பழங்காலத் தமிழன் ரோமானியர்களுடன் வணிகம் புரிந்திருக்கிறான் என்பதைத் தெளிவாகத் தெரிந்து கொள்ள முடிந்தது.

கொடுமணலில் சாம்பிராணிப் புகை போடப் பயன்படும் செப்புப் பாத்திரம், இரும்பு ஈட்டிகள், தவிர ராஜஸ்தானிலிருந்து தருவிக்கப்பட்ட கார்னிலியன் கல்மணிகள் கண்டெடுக்கப்பட்டன. மத்திய தொல்லியல் துறை நடத்திய ஆய்வில் சங்ககால படகுத்துறை, நீர்த்தேக்கம், புத்தவிகாரை போன்றவை கிடைத்தன. தமிழக தொல்லியல்துறை சார்பில் நாங்கள் செய்த அகழ்வாராய்ச்சியில், கிழார்வெளி என்கிற இடத்தில் 2400 ஆண்டுகளுக்கு முந்தைய இன்னொரு படகுத்துறை, படகுகளைக் கட்டும் இலுப்பை மரம், எழுத்துக்களுடன் கூடிய பானை ஓடுகளைக் கண்டுபிடித்தோம்.

அதேபோல் கோவா கடல் ஆய்வு நிறுவனத்துடன் சேர்ந்து நாங்கள் நடத்திய ஆய்விலிருந்து, கடல் தற்போது 5 கி.மீ. தூரம் முன்னேறி ஊருக்குள் வந்திருப்பதைக் கண்டறிந்தோம். தவிர, ‘சைட் ஸ்கேன் சோனார் என்கிற நவீன தொழில்நுட்ப முறையின் மூலம் கடலுக்குள் 21 அடி ஆழத்தில் 5 கட்டடங்கள் இருப்பதையும் கண்டுபிடித்தோம். அவை செம்புரான் கல்லினால் கட்டப்பட்ட கோயில்கள் அல்லது புத்த விகாரைகளாக இருக்கலாம்.

அதுபோல பூம்புகார் அருகே வானகிரி பகுதியில் கடலுக்குள், 19-ம் நூற்றாண்டைச் சேர்ந்த ஒரு டேனிஷ் கப்பல்மூழ்கிக் கிடப்பதைக் கண்டுபிடித்தோம். அது டென்மார்க் அல்லது இங்கிலாந்திலிருந்து வந்த கப்பலாக இருக்கலாம். அதிலிருந்த ஈயக்கட்டிகள் சிலவற்றை எடுத்து கடல் அகழ் வைப்பகத்தில் வைத்தோம். நான் பதவியிலிருந்த காலத்தில்தான் இவை அனைத்தும் நடந்தன என்றவர், அடுத்ததாக...

‘‘தூத்துக்குடி மாவட்டம் தாமிரபரணிக் கரையிலுள்ள ஆதிச்சநல்லூரை ‘தமிழகத்தின் ஹரப்பா என்றே சொல்லலாம். அத்தனை முக்கியத்துவம் வாய்ந்த தொல்லியல்களம் அது. கடந்த 2004-2005-ம் ஆண்டில் மத்திய தொல்லியல் அகழாய்வு இயக்குநர் எஸ்.டி.சத்தியமூர்த்தி தலைமையில் அங்கே நீண்டநாட்களாக நடந்த அகழாய்வுகளில் 150 -க்கும் மேற்பட்ட முதுமக்கள் தாழிகள் கண்டெடுக்கப்பட்டன. அதில் ஒரு தாழி, 3000 ஆண்டுகள் பழைமையானது. அதியற்புதமான அந்தத் தாழியில் ‘அப்ளிக்யூ முறையில் ஒரு பெண், மான், வாழை மரம், ஆற்றில் இரண்டு முதலைகள் இருப்பது மாதிரியான உருவங்கள் வரையப்பட்டிருந்தன.

அந்தப்பானைகளின் ஓட்டில் இருந்த சில குறியீடுகள் ஹரப்பா கால உருவ எழுத்தை ஒத்திருந்தன. அது மூவாயிரம் முதல் ஐயாயிரம் ஆண்டுகள் பழைமையானது. தவிர, அங்கு கிடைத்த செப்புப் பொருட்கள் குஜராத் டைமமாபாத்தில் கிடைத்தது போன்ற ஹரப்பா காலப் பொருட்கள் என்பதும் குறிப்பிடத்தக்கது.

எல்லாவற்றுக்கும்மேலாக ஒரு தாழியின் உட் பகுதியில் பழந்தமிழ் எழுத்துக்கள் இருந்தன. அதைப் பார்த்த சத்தியமூர்த்தி உடனடியாக கல்வெட்டுத்துறை இயக்குநர் எம்.டி.சம்பத்தை அழைத்து வந்து, அந்தக் கல்வெட்டை வாசிக்கச் சொன்னார். அதில் ‘கரி அரவ நாதன் என்று எழுதப்பட்டிருந்ததாக சம்பத் சொல்லியிருக்கிறார் ‘கதிரவன் மகன் ஆதன் என்று அதற்குப் பொருள். ஆதனைப் புதைத்த தாழிதான் அது. கல்வெட்டு ஆய்வாளர் ஐராவதம் மகாதேவன் போன்றோரும் அந்தத் தாழியை அபூர்வமானது, அந்தப் பழந்தமிழ் எழுத்துக்கள் ஹரப்பா கால உருவ எழுத்துக்களைப் போல இருப்பதாக கருத்துச் சொன்னார்கள். அந்தத் தகவல்கள் கடந்த 01.07.05-ம் தேதி ஃப்ரண்ட்லைன் ஆங்கில இதழில் வெளிவந்தன.

ஆனால் அதன்பிறகு அவர்களுக்கு என்ன நெருக்கடி வந்ததோ? தற்போது தாழியில் கல்வெட்டே இல்லை என்று சொல்கிறார்கள். ‘அது அபூர்வமான தாழி என்று சொன்ன ஐராவதம் மகாதேவன், இப்போது, ‘அது ஹரப்பா கால எழுத்தல்ல என்கிறார். தாழியைக் கண்டுபிடித்த சத்தியமூர்த்தியும், சம்பத்தும் கூட இப்போது அதுபற்றி வாய்திறக்க மறுக்கிறார்கள். அவர்கள் இருந்த பல மேடைகளில் நான் இதுபற்றிப் பேசியும் அவர்கள் பதில் சொன்னதில்லை. இதையெல்லாம் நான் எழுதிய ‘தமிழகம் அரப்பன் நாகரிக தாயகம் என்ற நூலில் குறிப்பிட்டிருக்கிறேன்.

‘வடநாட்டில் அசோகர் கால கல்வெட்டுக்கள் தான் முதன்மையானவை, பழைமையானவை, அதன் காலம் கி.மு. 2300 ஆண்டுகள் என்பதுதான் இதுவரை சொல்லப்பட்ட வரலாறு. ஆனால், ஆதிச்சநல்லூரில் கண்டெடுக்கப்பட்ட முதுமக்கள் தாழியிலிருந்த பழந்தமிழ் எழுத்துக்கள் கி.மு. 2500 ஆண்டுகளுக்கு முந்தையவை. அதாவது அசோகர் கல்வெட்டை விட 200 ஆண்டுகள் பழைமையானவை.

அப்படியானால் தமிழ்மொழியில் இருந்து கடன்பெற்றுத்தான் அசோகர் அவரது கல்வெட்டுகளைப் பொறித்திருக்கிறார் என்பது இதிலிருந்து தெளிவாகிறது. இதுவரை வடக்கிலிருந்துதான் எழுத்துக்கள் வந்தன என்கிற வாதம் இதனால் தவிடுபொடியாகிறது. ‘தமிழன் அந்தக் காலத்திலேயே கற்றறிந்தவனாக இருந்திருக்கிறான். அவன் பயன்படுத்திய தமிழ் மொழியில்தான் இந்திய மக்கள் அனைவரும் எழுதியிருக்கிறார்கள் என்பதும் உறுதியாகிறது.

இந்த வரலாற்று உண்மைகள் வெளியே வந்து தமிழனுக்குப் பெருமை சேர்ந்து விடக்கூடாது என்பதாலேயே சிலர் வரலாற்றை மறைக்கப் பார்க்கிறார்கள். ஆய்வு முடிந்து ஆறு ஆண்டுகள் ஆன பின்னரும் ஆதிச்சநல்லூர் ஆய்வறிக்கை வெளியிடப்படாததற்கு இதுவே காரணம்.

Thursday, June 12, 2014

மின்னஞ்சலை (E-mail) கண்டுபிடித்த விஞ்ஞானி சிவா அய்யாதுரை சொல்கிறார் "தனித்தமிழ்நாடு இயலும்"



இரண்டரை ஆண்டுகளுக்கு முன்பிருந்து தனித்தமிழ்நாடு குறித்து எழுதி வருகிறேன். என்னுடைய தமிழின்மீது கொண்ட வலிமையான எண்ணத்திற்கு எனக்கு கிடைத்த பரிசு கீழே.

கடந்த ௨௦௧௩, என் பிறந்த நாளிற்காய் வாழ்த்து தெரிவித்திருந்தார் கூகிள் குழுமத்திலிருந்து ஒரு அன்பர்.

On Tuesday, August 20, 2013 11:45:57 AM UTC-7, உதயன் மு wrote:

பிறந்தநாள் வாழ்த்துக்கள் முனைவென்றி நா. சுரேஷ்குமார்

பெரிய கவிஞராக முனைவென்றியார் வளர வாழ்த்துக்கள்.
அவரது ஈழம் பற்றிய கவிதைகள் தமிழகத்தில் தாக்கத்தை ஏற்படுத்தும்.

அன்புடன்,
நா. கணேசன்

http://nganesan.blogspot.com/

https://groups.google.com/forum/#!topic/vallamai/2sh4Hq4uKKw

இதனைப் பார்த்தவுடன் வித்யாசாகர் அண்ணா குவைத்திலிருந்து உடனே அலைபேசி ஊடாக எனக்கு அழைத்து, பெரிய வாழ்த்து மடலொன்றை வாசித்தார்.

தமிழ் தேசியம் குறித்தும் இந்திய தேசிய எதிர்ப்பு குறித்தும் நான் எழுதியபோது பலரால் நான் பரிகாசிக்கப் பட்டேன். பலர் என்னை பார்த்து சிரித்தனர். சிலர் பாராட்டினர். பலர் இதெல்லாம் வேலைக்காத கற்பனை என்றனர். இப்போது மின்னஞ்சலை (E-mail) கண்டுபிடித்த விஞ்ஞானி சிவா அய்யாதுரை அவர்களே சொல்கிறார். இப்போது என்னை பரிகசித்தவர்கள் எல்லாம் இன்று அவர்கள் முகத்தை எங்கு வைத்துக் கொள்ளப் போகின்றனர்?

தற்போதைய கேரள மாநிலத்திலிருந்து தமிழ்நாட்டிற்கு வந்து சேர்ந்திருக்க வேண்டிய நிலப்பரப்புகள்:

அகஸ்தீஸ்வரம், தோவாளை, நெய்யாற்றுப் பகுதி, நெடுமங்காடு, இடுக்கி மாவட்டத்தின் பெரும்பகுதி, வண்டிப் பெரியாறு, தேவிகுளம், பீரிமேடு, குமுளி, கொச்சின், சித்தூர், பாலக்காடு

தற்போதைய ஆந்திராவிலிருந்து தமிழ்நாட்டிற்கு வந்து சேர்ந்திருக்கவேண்டிய நிலப்பரப்புகள்:

சித்தூர் மாவட்டம், நெல்லூர் மாவட்டம், இவற்றில் தங்கிய திருப்பதி, காளகஸ்தி, புத்தூர், நகரி, ஆரணியாறு, வடபெண்ணை ஆறு, பொன்வாணி ஆறு

தற்போதைய கர்நாடகாவிலிருந்து தமிழ்நாட்டிற்கு வந்து சேர்ந்திருக்கவேண்டிய நிலப்பரப்புகள்:

பெங்களூரு, மைசூரு மாவட்டத்தின் ஒரு பகுதி (குடகு உட்பட), கோலார் தங்கவயல்.

இவற்றையே ஐயா சிவா அய்யாதுரை வலியுறுத்துகிறார். தோழர்களே தங்களால் எத்தனை பேருக்கு இந்த மின்னஞ்சலை கொண்டு செல்ல முடியுமோ செல்லுங்கள். பிரபஞ்சத் தமிழர்கள் அனைவரும் படிக்க வேண்டும் என்றே இரண்டாம் முறையாக பதிவிடுகிறேன்.

ஐயா சிவா அய்யாதுரை அவர்களின் நேர்காணலை முழுமையாக படியுங்கள். http://munaivendrinaasureshkumarkavithaikal.blogspot.com/2014/06/blog-post_11.html மற்றவர்களுக்கும் எடுத்துச் சொல்லுங்கள். நம்முடைய உரிமைகளை காக்க நாம் தான் இணையத்தின் வழி எழுத்தின் மூலமோ, பேச்சின் மூலமோ, ஆயுததமேந்தியோ போராட வேண்டும். நமக்காக யாரும் வரமாட்டார்கள். நாம் தான் நமக்காக போராடியாக வேண்டும்.

"தமிழர்களின் மீதும் தமிழினத்தின்மீதும் உண்மையான, ஆத்மார்த்தமான அக்கறையும் அன்பும் உள்ளவர்கள் இந்நேரம் தனித்தமிழ்நாடு குறித்து சிந்திக்கத் துவங்கியிருந்திருப்பார்கள்." என்று ஏற்கனவே ஒரு பதிவில் நான் சொல்லியதை இங்கே நினைவுபடுத்துகிறேன்.

http://munaivendrinaasureshkumarkavithaikal.blogspot.com/2014/06/blog-post_11.html