ஒருமுறை காரைக்குடி புகைவண்டி நிலையத்தில் என் பாண்டிலக்ஷ்மி அம்மாவுடன் பேசிக்கொண்டிருந்தேன். ஏதோ பேச்சுவாக்கில் தன்னுடன் U.G யில் படித்த தோழி ஒருத்தியைப் பற்றி அழவும் முடியாமல் சிரிக்கவும் முடியாமல் சொன்னாள். அந்த நிமிடங்களில் என் எதிரே பாண்டிலக்ஷ்மி பாப்பாவின் உயிர் மட்டும் அழவும் முடியாமல் சிரிக்கவும் முடியாமல் பேசியது. முழுக்க முழுக்க அன்பினால் செய்யப்பட்ட ஒரு உயிர் என் பாண்டிலக்ஷ்மி பாப்பாவின் உடலில் புகுந்திருப்பதாகவே தோன்றியது. அந்த நிமிடங்களில் என் மகளெனவே தோன்றினாள் அவள். அந்த தோழியின் பிரிவை தாங்க முடியாமல் இரவு தூங்கும்போது தூங்கமுடியாமல் போர்வைக்குள் அழுது கண்ணீர் வடித்து தன் தோழியின் நினைவை மறக்க முயற்சி செய்திருக்கிறாள். அந்த அளவுக்கு அந்த தோழியின் மேல் பாசமாக இருந்திருக்கிறாள் பாண்டிலக்ஷ்மி. அவளின் அருகில் அமர்ந்திருந்த நான் எழுந்து போய் அவள் தலைமேல் கைவைத்தபடி ‘அழாதே அக்கா’ என்று ஆறுதல் சொன்னேன். அதன்பிறகு ம்மா படிகளிருந்து அழுதபடி கீழே இறங்கினாள். அழுதபடி என்னை திரும்பி பார்த்தபடியே புகைவண்டியில் ஏறி அமர்ந்தாள். அந்த பாண்டிலக்ஷ்மி பாப்பாவின் முகம் இப்போதும் என் கண்களுக்கு முன்னால் தெரிகிறது. அழவும் முடியாமல் சிரிக்கவும் முடியாமல் இருந்த என் பாண்டிலக்ஷ்மி பாப்பாவின் முகம் அப்படியே என் மூளைக்குள் பதிந்திருக்கிறது. அந்த தாக்கத்தில் தோன்றிய கவிதை இது. பாண்டிலக்ஷ்மிம்மா வருத்தப்படுவாள் என்பதற்காக ஒரு உண்மையை மறைத்து வேறுவிதமாக சொல்ல வேண்டியிருக்கிறது.
உயிர் பேசும்
மழலைமொழி!
Sunday, August 28, 2011
Saturday, August 27, 2011
பாண்டிலக்ஷ்மி!
பாசத்தில் பிறந்தவளே!
பாரினில் உயர்ந்தவளே!!
நேசத்தில் சிறந்தவளே! – என்
நெஞ்சத்தில் நிறைந்தவளே!! – என்னைவிட
குள்ளமாய் இருந்தாலும் – என்னை
குறையேதும் சொல்லமாட்டாய் நீ! – அன்பு
வெள்ளத்தில் மிதந்தாலும் – என்னிடம்
வெஞ்சினம் கொள்ளமாட்டாய் நீ!! – என்னைப்போல்
கறுப்பாய் இருந்தாலும் – புதுக்
காவியம் படைப்பவள் நீ! – என்மேல்
வெறுப்பை உமிழ்ந்தாலும் – நேச
வரலாற்றை உடைப்பவள் நீ!! – எனக்கு
தாயிருக்கும் வேளையிலே – என்னுள்
நோய்தீர்க்க வந்தவளே!
நீயிருக்கும் இடமெல்லாம் – எனக்குக்
கோயிலாகத் தோன்றுதம்மா!!
பாரினில் உயர்ந்தவளே!!
நேசத்தில் சிறந்தவளே! – என்
நெஞ்சத்தில் நிறைந்தவளே!! – என்னைவிட
குள்ளமாய் இருந்தாலும் – என்னை
குறையேதும் சொல்லமாட்டாய் நீ! – அன்பு
வெள்ளத்தில் மிதந்தாலும் – என்னிடம்
வெஞ்சினம் கொள்ளமாட்டாய் நீ!! – என்னைப்போல்
கறுப்பாய் இருந்தாலும் – புதுக்
காவியம் படைப்பவள் நீ! – என்மேல்
வெறுப்பை உமிழ்ந்தாலும் – நேச
வரலாற்றை உடைப்பவள் நீ!! – எனக்கு
தாயிருக்கும் வேளையிலே – என்னுள்
நோய்தீர்க்க வந்தவளே!
நீயிருக்கும் இடமெல்லாம் – எனக்குக்
கோயிலாகத் தோன்றுதம்மா!!
பாண்டிலக்ஷ்மி அக்கா!
என் இளைய அக்காவே!
பாசத்தின் மொத்த உருவமே நீதான்!
நேசத்தின் சொந்தக்காரியே நீதான்!!
நட்பின் நாணயத்தைக் காத்து
கற்பின் கண்ணியத்தைக் காத்துநிற்கும்
புண்ணியவதி நீதான்!!
படிப்பதில் படுசுட்டிதான்! – அன்பால்
துடிப்பதில் படுகெட்டிதான்!!
என்னைப்போலவே
கறுப்பாய் பிறந்தாலும்
பட்டைதீட்டாமல்
ஜொலிக்கும் வைரம் நீதான்!
இளைய அக்கா என்றாலும் – எனை
தழைக்க வைத்த தாயல்லவா நீ!!
அறந்தாங்கியில் பிறந்த உன்னை
சிரந்தாழ்த்தி வணங்குகிறேன் தாயே!!
நீ என் அக்காவா? இல்லை
நீ என் அம்மாவா?
தனிமையில் யோசித்துப் பார்க்கிறேன்! – உன்னிடம்
அன்பை மட்டும் யாசித்துத் தோற்கிறேன்!!
பாசத்தின் மொத்த உருவமே நீதான்!
நேசத்தின் சொந்தக்காரியே நீதான்!!
நட்பின் நாணயத்தைக் காத்து
கற்பின் கண்ணியத்தைக் காத்துநிற்கும்
புண்ணியவதி நீதான்!!
படிப்பதில் படுசுட்டிதான்! – அன்பால்
துடிப்பதில் படுகெட்டிதான்!!
என்னைப்போலவே
கறுப்பாய் பிறந்தாலும்
பட்டைதீட்டாமல்
ஜொலிக்கும் வைரம் நீதான்!
இளைய அக்கா என்றாலும் – எனை
தழைக்க வைத்த தாயல்லவா நீ!!
அறந்தாங்கியில் பிறந்த உன்னை
சிரந்தாழ்த்தி வணங்குகிறேன் தாயே!!
நீ என் அக்காவா? இல்லை
நீ என் அம்மாவா?
தனிமையில் யோசித்துப் பார்க்கிறேன்! – உன்னிடம்
அன்பை மட்டும் யாசித்துத் தோற்கிறேன்!!
உறவுகள்!
என் பாண்டிலக்ஷ்மி அக்காவைப் பற்றி மாகலக்ஷ்மி கன்னுக்குட்டி நிறைய சொன்னாள். அக்காவுக்காக தம்பி படிக்காமல் வேலைக்கு போவதாகவும் சொன்னாள். அதன்பிறகு எழுதிய கவிதை இது.
உனக்கு ஒளிகொடுத்து
உருகும் மெழுகுவர்த்தி
நம்தம்பி!
எனக்கு ஒளிகொடுக்க
உருகும் மெழுகுவர்த்தி
என் அக்கா நீதான்!
என் சமுதாயத்தை பொருத்தவரை
தியாகிகள் நீங்கள்!
என்னை பொருத்தவரை – என்
உயிரில் கலந்த
உறவுகள் நீங்கள்!!
உனக்கு ஒளிகொடுத்து
உருகும் மெழுகுவர்த்தி
நம்தம்பி!
எனக்கு ஒளிகொடுக்க
உருகும் மெழுகுவர்த்தி
என் அக்கா நீதான்!
என் சமுதாயத்தை பொருத்தவரை
தியாகிகள் நீங்கள்!
என்னை பொருத்தவரை – என்
உயிரில் கலந்த
உறவுகள் நீங்கள்!!
Saturday, March 26, 2011
தங்கைக்கொரு வாழ்த்து!
என் தங்கச்சி மகாலட்சுமி கண்ணுக்குட்டிக்காக நான் எழுதிக்கொடுத்த கவிதை இது.
பிள்ளைக் கனியமுதே!
பேசாத தெள்ளமுதே!!
முல்லைக் கொடியழகே!
மூன்றாம் பிறையழகே!!
வெட்கச் சிரிப்பழகே!
வெகுளித் தனமழகே!!
நட்புக்கு அணிகலனே!
நாவிலுதிருந் தமிழழகே!!
கொஞ்சும் கொலுசழகே!
கண்ணின் மணியழகே!!
பிஞ்சு விரலழகே!
பிறைசூடா பொட்டழகே!!
மெழுகுச் சிலையழகே!
மென்மை மனமழகே!!
பழமை மறவாத
பெண்மைத் தனமழகே!!
அறந்தாங்கி வீதிதனில்
ஆலோல பாட்டழகே!
இரக்க குணமழகே!
ஈகையிற் சிறந்தவளே!!
சிற்சில தருணங்களில்
சிரிக்கும் பொற்சித்திரமே!
பற்பல தருணங்களில்
பரிவுகாட்டும் இரத்தினமே!!
என்தங்கையென வந்தவளே!
அவனிதனில் சிறந்தவளே!!
பெண்மங்கை நீநீடூழிவாழ
பெருமையுடன் வாழ்த்துகிறேன்!!
பிள்ளைக் கனியமுதே!
பேசாத தெள்ளமுதே!!
முல்லைக் கொடியழகே!
மூன்றாம் பிறையழகே!!
வெட்கச் சிரிப்பழகே!
வெகுளித் தனமழகே!!
நட்புக்கு அணிகலனே!
நாவிலுதிருந் தமிழழகே!!
கொஞ்சும் கொலுசழகே!
கண்ணின் மணியழகே!!
பிஞ்சு விரலழகே!
பிறைசூடா பொட்டழகே!!
மெழுகுச் சிலையழகே!
மென்மை மனமழகே!!
பழமை மறவாத
பெண்மைத் தனமழகே!!
அறந்தாங்கி வீதிதனில்
ஆலோல பாட்டழகே!
இரக்க குணமழகே!
ஈகையிற் சிறந்தவளே!!
சிற்சில தருணங்களில்
சிரிக்கும் பொற்சித்திரமே!
பற்பல தருணங்களில்
பரிவுகாட்டும் இரத்தினமே!!
என்தங்கையென வந்தவளே!
அவனிதனில் சிறந்தவளே!!
பெண்மங்கை நீநீடூழிவாழ
பெருமையுடன் வாழ்த்துகிறேன்!!
Friday, March 25, 2011
இரண்டு லெட்சுமிகள்!
என் சின்ன அக்கா பாண்டிலக்ஷ்மிக்காகவும் என் பெரிய தங்கச்சிப் பாப்பா மகாலக்ஷ்மிக்காகவும் நான் எழுதிய கவிதையிது.
யாரிடமும்
பேசா மடந்தையாய்...
என்னைப்போல்
ஒரு அண்ணனிடம் மட்டும்
பேசும் குழந்தையாய்...
சோக லக்ஷ்மியாய்
இந்த மகாலட்சுமி!
என்னிடம் பேசும்
இன்னொரு தாயாய்...
என்னையும்கூட
அன்பால் வென்ற
தோழியாய்...
சந்தோஷ லக்ஷ்மியாய்
இந்த பாண்டிலக்ஷ்மி!!
யாழ்வேலன்!
என் ஆறாம் வகுப்பில் எனக்கு ஆசிரியராக இருந்த என் அண்ணன் ம. சிவசங்கரசெல்வம் அவர்களின் இரண்டாவது மகன் யாழ்வேலனுக்காக எழுதி அனுப்பியிருந்த கவிதை இது.
'குழலினிது யாழினிது'
சொல்லி வைத்தானடி
ஆணிபிடித்த தாடி!
இன்று
ஈழத்தமிழன் போல்
வீரத்தமிழன் உதித்துவிட்டான்!
யாரவன்?
யாழ்வேலன்!!
இனிமேல்
குழலினிது!
யாழ்வேலன் நமக்கு!!
பிரபாகரன்!
என் ஆறாம் வகுப்பில் எனக்கு ஆசிரியராக இருந்த என் அண்ணன் ம. சிவசங்கரசெல்வம் அவர்களின் மகன் பெயர் பிரபாகரன். பிரபாகரனுக்காக நான் எழுதி அனுப்பியிருந்த கவிதை இது.
பகுத்தறிவை காக்கவந்த
வெண்தாடி வேந்தனாய்...
ஜாதிகளை ஒழிக்கவந்த
முண்டாசு கவிஞனாய்...
வறுமையை போக்கவந்த
எம்.ஜி.இராமச்சந்திரனாய்...
செந்தமிழை வளர்க்கவந்த
பாரதிதாசனை...
புரட்சியை விதைக்கவந்த
சுபாஷ் சந்திரபோசாய்...
வீரத்தின் உருவாய்வந்த
கட்டபொம்மனாய்...
தென்தீவின் புகழுயர்த்தவந்த
விஞ்ஞானியாய்...
ஈழனின் துயர்துடைக்கவந்த
வீரத்தமிழனாய்...
கல்விவிளக்கை ஏற்ரவந்த
சிவசங்கர செல்வமாய்...
நாநிலத்தில் நல்லவனாய்...
உதித்தான் பிரபாகரன்!!
பகுத்தறிவை காக்கவந்த
வெண்தாடி வேந்தனாய்...
ஜாதிகளை ஒழிக்கவந்த
முண்டாசு கவிஞனாய்...
வறுமையை போக்கவந்த
எம்.ஜி.இராமச்சந்திரனாய்...
செந்தமிழை வளர்க்கவந்த
பாரதிதாசனை...
புரட்சியை விதைக்கவந்த
சுபாஷ் சந்திரபோசாய்...
வீரத்தின் உருவாய்வந்த
கட்டபொம்மனாய்...
தென்தீவின் புகழுயர்த்தவந்த
விஞ்ஞானியாய்...
ஈழனின் துயர்துடைக்கவந்த
வீரத்தமிழனாய்...
கல்விவிளக்கை ஏற்ரவந்த
சிவசங்கர செல்வமாய்...
நாநிலத்தில் நல்லவனாய்...
உதித்தான் பிரபாகரன்!!
Oh jesus oh jesus
Oh jesus oh jesus
Leave from burden
Leave from worries
Oh jesus oh jesus
Save my family
Save my country
Oh jesus oh jesus
Leave from burden
Leave from worries
Oh jesus oh jesus
Save my family
Save my country
Oh jesus oh jesus
Wednesday, March 23, 2011
Our Life
Life is a struggle
We fight it.
Life is a blossom
We smell it.
Life is a song
We sing it.
Life is a train
We travel it.
Life is a drama
We act it.
Life is a game
We play it.
Life is a passion
We feel it.
We fight it.
Life is a blossom
We smell it.
Life is a song
We sing it.
Life is a train
We travel it.
Life is a drama
We act it.
Life is a game
We play it.
Life is a passion
We feel it.
Subscribe to:
Posts (Atom)