Sunday, December 29, 2013

தங்கச்சி சாமியார் 'எஸ்விஆர் பாமினி'





என் அன்புத்தங்கையும் ஈழத்தமிழச்சியுமான கவிக்குயில் எஸ்விஆர் பாமினி சமீபத்தில் ஒரு பாடல் எழுதிய திரைப்படம் 'சித்திரைவீதி'.




வித்யாசாகர் அண்ணாவின் மகள் வித்யா பொற்குழலிக்காக அவளின் youtube பக்கத்தில் இருந்த காணொளி http://www.youtube.com/watch?v=HR9M5oYFF-U

௨௦௧௨ ஆம் ஆண்டு தங்கை எழுதிய ஒரு பாடலொன்று முகநூலில் காணொளியாக பகிர்ந்துகொள்ளப்பட்டது. நான் கேட்க, பார்க்க கிடைத்தது.

அந்த பாடல் இதுதான்.

சூழுகின்ற பகையை வென்றே 
ஈழம் எங்கள் கையில் வந்தது தெரிகின்றதே...




இந்த ஒரு பாடல் அவளை எனக்கு அறிமுகம் செய்து வைத்தது. முகநூலில் நண்பர்களானோம்.

எமது தாய்நிலமான தமிழீழத்தின் மீதும் என் தாய்த்தமிழின்மீதும் கொண்ட தாளாத காதலால் தான் இந்த இளம்வயதிலேயே அவள் ஈழக்குயில், கவிக்குயில், கவிதாயினி போன்ற பட்டங்களை பெறமுடிந்திருக்கிறது. நம் தாய்த்தமிழை எவ்வளவுதூரம் ஆழமாய் நேசித்து உயர்த்துகிறோமோ அதே அளவுக்கு தமிழ்த்தாயும் அவர்களை மிக உயர்ந்த இடத்தில் வைப்பாள் என்பதற்கு தங்கை பாமினியே சாட்சி என்பதை இன்று நான் முன்பைவிட ஆழமாக தெள்ளத்தெளிவாக உணர்கிறேன்.

௨௦௧௨ நவம்பர் அல்லது டிசம்பர் மாதம் இருக்கலாம். ஒரு ஞாயிற்றுக்கிழமை இரவு ௧௧ மணி இருக்கும். சுவிட்செர்லாந்திலிருந்து தங்கை பேசினாள்.

'நான் பாமினி கதைக்கிறன் அண்ணா. நலமா?' என்றாள்.

'நான் நல்லா இருக்கேன். நீங்க எப்டி இருக்கீங்க?' என்றேன்.

'நலம் அண்ணா. இந்த நேரத்தில் அங்கு என்ன நேரம் என்பதை நான் யோசிக்கவில்லை. இப்போது பேசலாமா என்று நான் யோசிக்கவில்லை. (அவள் அப்போது பண்பலை வானொலியின் நிகழ்ச்சி தொகுப்பாளினியாக இருந்ததால்) என் குரல் எப்படி அண்ணா இருக்கிறது?' என்றாள்.

'நல்லா இருக்கு. சின்னபிள்ளை குரல் மாதிரி இருக்கிறது.' என்றேன்.

'அப்படியா? மகிழ்ச்சி அண்ணா' என்றாள்.

அப்போதைய என்னுடைய ஒருசில பதிவுகளை குறித்து பாராட்டி பேசினாள். 

'இந்த இளம்வயதிலேயே பாடல்கள் எழுதுகிறீர்கள்.' என்றேன்.

'அப்படியெல்லாம் ஒன்றும் இல்லை அண்ணா. எனக்குத்தெரிந்த தமிழில் எழுதுகிறேன்.' என்றாள். 

சிலநாட்கள் கழித்தபிறகு வித்யாசாகர் அண்ணா என்னிடம் பேசும்போது தங்கை பாமினி என்னிடம் அலைபேசி ஊடாக பேசியதை தெரிவித்தேன்.

'அவள் நல்ல தங்கையாயிற்றே. சிலமுறை அவள் என்னுடைய அலைபேசிக்கு அழைத்துவிட்டு யார் கதைக்கிறீங்கள் யார் கதைக்கிறீங்கள் என்று கேட்டு விளையாடுவாள்.' என்றார்.

சிலநாட்கள் கழித்தபிறகு அண்ணா சொன்னதுபோலவே என்னுடைய அலைபேசிக்கு அழைத்துவிட்டு 'யார் கதைக்கிறீங்கள் யார் கதைக்கிறீங்கள்' என்று கேட்டு விளையாடினாள். என்னவென்று கேட்பதற்குள் இரண்டுமுறையும் இணைப்பு துண்டிக்கப்பட்டு விட்டது.

இதன்பிறகு மூன்று மாதங்களாக அலைபேசி ஊடாக அவளின் பணிநிமித்தம் காரணமாக அவள் என்னிடம் பேசமுடியாத சூழல்.

முகநூலில் அவளிடம் 'நீ பேசாததால் எனக்கு மனவருத்தம்.' என்பது போன்ற கருத்தொத்த ஒரு தகவலை அனுப்பியிருந்தேன்.

மொட்டைமாடியில் தூக்கம் வராமல் உலாவிக் கொண்டிருந்தேன். தங்கையிடமிருந்து அழைப்பு வந்திருந்தது. 

குரல் தழுதழுக்க 'நான் ஜெர்மனியில நிக்கறன் அண்ணா. இப்போது தான் உங்கள் தகவலை அலைபேசி ஊடாக முகநூலில் பார்த்தேன். உங்கள் தங்கைதானே அண்ணா, மன்னித்துவிடுங்கள் அண்ணா. இனிமேல் நான் உங்களிடம் அடிக்கடி பேசுகிறேன். வருத்தப்படாதீர்கள் அண்ணா.' என்றாள்.

'அப்படியெல்லாம் ஒன்றும் இல்லப்பா. நீ வருத்தப்படாதே.' என்றேன்.

அவள் பேசி முடித்ததும் மனம் அதிகமாய் வலித்தது. அவள் பேசும்போது அவள் குரலில் ஒருவித பதற்றம், தழுதழுப்பு இவற்றை என்னால் உணர முடிந்தது. அவள் அழுதிருக்கிறாள் என்பதை என்னால் உணர்ந்தபோது என்னால் நிம்மதியாக இருக்க முடியவில்லை.

ஒருபுறம் அவளை நான் காயப்படுத்தி விட்டேனே என்று அன்றைய பொழுது நான் அழுதேன். மற்றொருபுறம் எனக்காக இன்னுமொரு அன்பான சொந்தம் கிடைத்திருக்கிறது. இதற்காக நான் பெரிதும் நேசிக்கும் என் தாய்மொழி தமிழுக்கு மறுபுறம் மகிழ்ச்சியோடு நன்றி சொன்னேன்.

கண்களை மூடி உறங்கிப் பார்த்தேன். உறக்கம் வரவில்லை. அப்படியே விடிந்துவிட்டது.

இவள் என் தாய்த்தமிழின் மீதும் எமது தாய்நிலமான தமிழீழத்தின்மீதும் கொண்ட காதலை இந்த ஒரு பாடலே சொல்லிவிடும். இந்த அன்பான என் செல்லக்குழந்தையின் மனதில் உள்ள தேடலை, வலியை இந்த ஒரு பாடலே உணர்த்திவிடும். 

என்காதல் நீ 
என் வாழ்வும் தாழ்வும் நீ.
என் தேடல் நீ 
என் உடலும் உயிரும் நீ.


அதன்பிறகு ௨௦௧௩ ஜூன் மாதம் நான் பெங்களூருவில் வேலைக்கு சேர்ந்த பதினைந்து அல்லது இருபது நாட்களில் நான் அலுவலகத்திலிருந்தபோது சுவிட்செர்லாந்திலிருந்து அழைத்து ஏறத்தாழ அரைமணி நேரம் பேசினாள்.

பிள்ளைக்கு அப்போதுதான் நேரம் கிடைத்திருக்கும்போல.

'என் வயதை கேட்டாள்.'

'௨௯ (29). ஏன் கேட்கிறாய்?' என்றேன்.

'இல்லை. உங்கள் குரலை கேட்டால் ௭௦ (70) வயது பெரியவர் குரல்போல் இருந்தது அண்ணா. அதனால் தான் கேட்டேன்.' என்றாள்.

எனக்கு ஒரே சிரிப்பு. (௨௦௧௨ நவம்பர் மாதம் இருக்கலாம் நான் சென்னையில் வேலைபார்த்த சமயம் மின்சார இரயிலில் பயணம் செய்து கொண்டிருந்தேன். அன்பர் ஐயப்பன் கிருஷ்ணன் பெங்களூருவிலிருந்து அலைபேசி ஊடாக அழைத்துவிட்டு 'உங்கள் குரல் எப்படி இருக்கிறது என்று கேட்கவேண்டும் போலிருந்தது.' என்று சொன்னது தான் நினைவிற்கு வந்தது.)

'நான் கவிதைநூல்கள் வெளியிட வேண்டும் அண்ணா. தொகுத்து வைத்திருக்கிறேன். பொருத்தமான ஓவியங்கள் கீறி கவிதை நூல்களை வெளியிட வேண்டும்.' என்றாள்.

'இணையத்தில் குறிப்பாக முகநூலில் தேடினால் நிறைய பதிப்பத்தினர் கிடைப்பார்கள் ப்பா. உன் எதிர்பார்ப்பிற்கு சரியாக வரும் பதிப்பகத்தை நீயே தேர்ந்தேடுக்கலாமே. வித்யாசாகர் அண்ணாவிடம் கேட்டுப்பார். அவர் நிறைய நூல்களை வெளியிட்டதால் என்னைவிட அவரிடம் கேள். அதோடு கூடுகள் சிதைந்தபோது அகில் அண்ணாவிடம் கேள். 

பதிப்பகத்தினரை அணுகுவதற்கு முன்பு சிறந்த ஓவியரை அணுகி படங்களை கீறி வாங்கிக்கொள். அல்லது பதிப்பகத்தினரிடம் கேட்டால் அவர்களே சொல்வார்கள். பதிப்பகத்தினரிடம் செல்வதற்கு முன்பு அணிந்துரை, கவிதைகள் என ஓரளவுக்கு இறுதி செய்துகொண்டு அவர்களை அணுகு. அப்போதுதான் நூல் சிறப்பாக, பிழைகள் இல்லாமல் வெளிவரும்.' என்றேன்.

'நன்றி அண்ணா.' என்றாள்.

'நீ சென்னைக்கு எப்போது வருவாய்? வரும்போது முன்கூட்டியே எனக்கு தகவல் தெரியப்படுத்து. நான் தற்போது பெங்களூருவில் இருப்பதால் முன்கூட்டியே நீ வரும்தகவல் தெரிந்தால் எனக்கு அங்கு வரும் ஏற்பாடுகள் செய்வது எளிது.' என்றேன்.

சரி அண்ணா. (இசை வெளியீடு போன்று ஏதோ ஒரு ) நிகழ்விற்கு வருவேன். சென்னையில் என் மாமா வீட்டில்தான் தங்குவேன். சொல்கிறேன் அண்ணா. இன்னொரு நாள் பேசலாம்.' என்றாள்.

சமைக்கும்போது கைகளில் தீக்காயம் பட்டு கடந்த செப்டம்பர் இறுதி அல்லது அக்டோபர் முதல் தொடங்கி இரண்டு மாதங்கள் ஓய்வில் இருந்திருக்கிறாள்.

கடந்த வாரம் என்னிடம் அலைபேசி ஊடாக பேசினாள்.

'அண்ண்ண்ண்ணா, அண்ண்ண்ண்ண்ணா, நலமா?' என்று பள்ளிக்கூட சிறுமிபோல் பேசினாள்.

'நான் நலம். நீ எப்டி டா இருக்க?' என்றேன்.

'நலம் அண்ணா.' என்றாள்.

skype ல் நண்பர்கள் ஆனதால் 'நீ skype க்கு வாடா. அலைபேசியில் பேசினால் காசு நிறைய வருமே' என்றேன்.

'அண்ணாவோடு பேசுவதற்கு நான் காசு பார்க்ககூடாது. பார்க்கமாட்டேன்.' என்றாள்.

இதைத்தாண்டி, இந்த கள்ளம்கபடமில்லாத அன்பைத்தாண்டி எனக்கு வேறு என்ன வேண்டும்?

நான் பிறந்த ஊரான முனைவென்றியிலிருந்து இடம்பெயர்ந்து பக்கத்தில் உள்ள பரமக்குடிக்கு வந்துவிட்டோம். அதன்பிறகு படிக்க வெளியூரில், விடுதியில் தங்கி படித்தபோதும், வேலைதேடி சென்னை வந்தபோதும் உறவுகளை பிரிந்து வருகிறோம் என்ற ஏக்கம் இருந்ததுண்டு.

௨௦௦௫ ல் எழுத ஆரம்பித்து இணையம் ஊடாக எழுத ஆரம்பித்தபின் இவளைப்போன்ற ஒருசில நல்ல சொந்தங்களை எனக்குக் கொடுத்திருக்கிறது என் தமிழ்மொழியின்மேல் நான் கொண்ட பற்றுதல்.

Saturday, December 28, 2013

(கள்ளத்துப்பாக்கி அறிமுகம்) பாடலாசிரியர் வத்திராயிருப்பு தெ.சு. கௌதமன்

கள்ளத்துப்பாக்கி திரைப்படத்தின்மூலம் அறிமுகமாகி இரண்டாவதாக சித்திரைவீதி திரைப்படத்தில் (என் அன்புத்தங்கை, ஈழத்து மங்கை கவிக்குயில் எஸ்விஆர் பாமினியுடன் இணைந்து ) பாடல்கள் எழுதியவர் பாடலாசிரியர் வத்திராயிருப்பு தெ.சு. கௌதமன் 

கடந்தசில நாட்களுக்கு முன்பு வத்திராயிருப்பு தெ.சு. கௌதமனின் வலைத்தளத்திற்கு செல்ல அவருடைய பெயரை இட்டு கூகிளில் தேடிப்பார்த்தேன்.

அப்போது இந்த இணைப்பு கிடைத்தது. http://www.youtube.com/watch?v=ay2_ekoIpf8

௨௦௧௧ (2011)  ல் PHP Developer ஆக வேலைக்குச்சேர்ந்த அலுவலகத்தில் ஏற்கனவே Photoshop Designer ஆக வேலைபார்த்தவர் தெ.சு.கௌதமன்.

கருத்துவேறுபாடுகளைத் தாண்டி தூரநின்று மற்றவர்களிடம் உள்ள தனித்தன்மையை, சிறந்த குணங்களை யாருக்கும் தெரியாமல் உள்ளுக்குள்ளே இரசித்துப் பார்ப்பது என்னுடைய குணம். அவரிடம் எப்போதும் நகைச்சுவை உணர்வு இருக்கும். உதாரணத்திற்கு நானும் அவரும் முகநூலில் நண்பராக இருந்தபோது அவருடைய பரணில் ஒரு சிறு பதிவை இட்டிருந்தார்.

'யாரோ என்னுடைய கொடைய திருடிட்டான். அதனால் நான் கொடை வள்ளலாகி விட்டேன்.' என்ற கருத்தொத்த அந்தப் பதிவு.

அவருக்கும் எனக்கு அப்போதிருந்த கருத்துவேறுபாடுகளைத் தாண்டி கிராமத்து மண்வாசனையோடு மண்ணியம் சார்ந்து எழுதும் படைப்பாளி.

அவருடைய முதல் கவிதைநூலை(அங்கூ அங்கூ) நான் கேட்டதன் பேரில் அவர் தந்தார். அவருடைய இரண்டாவது கவிதைநூல் (நான் பச்சை விளக்குக்காரி) வெளியீட்டு விழாவிற்கு அலுவலகத்தில் விடுப்பு எடுத்துக் கொண்டு சொந்த ஊருக்குச் சென்றிருந்தார். அன்று காலை அலுவலகத்தில் இருந்து இணையம் வழியாக குறுஞ்செய்தி ஊடாக அவருக்கு ஒரு வாழ்த்துச்செய்தி ஒன்றை அனுப்பியிருந்தேன். 

அவருடைய கவிதைகளில் என்னுள்ளே ஆழமாக பதிந்துவிட்ட ஒரு கவிதை.

லகரங்கள் இடம்மாறியதால் 
விளைநிலம் 
விலைநிலமானது.


விஜய் டிவியில் ஒளிபரப்பான 'லொள்ளுசபா' வில் பணியாற்றியவர் என்பதனை மேலே குறிப்பிட்ட காணொளியைப் பார்த்து தெரிந்துகொண்டேன்.

நான் அந்த அலுவலகத்திலிருந்து வெளியே வந்து வேறு ஒரு அலுவலகத்திற்கு செல்வதற்கு கொஞ்சகாலம் முன்போ அல்லது நான் சென்றபிறகோ அவருடைய தந்தை தவறியிருக்கக் கூடும். எனக்கு அப்போது தெரியவில்லை. 

நான் அந்த அலுவலகத்திலிருந்து வெளியே வந்து வேறு ஒரு அலுவலகத்திற்கு சென்றபிறகு மூன்று மாதங்கள் கழித்தபிறகு ஆனந்த விகடனில் அவர் அப்பாவைப் பற்றி அவரின் கவிதையொன்று பிரசுரமாகியிருந்தது. அதனை பலமுறை படித்தபிறகுதான் எனக்கே அவரின் தந்தை தவறி விட்டார் என்ற உண்மையை உணர்ந்து அவருக்கு ம்ன்னஞ்சல் ஊடாக என் வருத்தத்தை தெரிவித்தேன்.

'என்னோடு அலுவலகத்தில் பணியாற்றிய தெ.சு. கௌதமனும் நீ பாடல் எழுதிய சித்திரைவீதி திரைப்படத்தில் பாடல்கள் எழுதியிருக்கிறார்.' என்று என் தங்கை பாமினியிடம் ஏற்கனவே சொல்லியிருக்கிறேன்.

என்னதான் கருத்துவேறுபாடுகள் இருந்தபோதும் கௌரவத்தை விட்டுவிட்டு முதலில் பேசுபவன் நானாகத்தான் இருப்பேன். ஏனெனில் அவர்கள்மேல் கொண்ட அன்பு என்னை தோற்கடித்துவிடும்.

என்னிடம் அதிகம் செல்லமாய் திட்டு வாங்கியவன் மன்னார் அமுதன் அண்ணா தான். அவன் இணையத்திற்காக data card பயன்படுத்துவான் போல. அதனால் இணையத்திற்கு வேகமாக வந்துவிட்டு வேகமாக ஓடி விடுவான். இது தெரியாமல் அவனை கோபத்தில் திட்டிவிட்டேன். 

அவனும் பதிலுக்கு 'தவளைக்கு பற்கள் இருந்தால் கடிக்கும்' என்பது போன்று ஒரு வேற்று நாட்டு பழமொழியொன்றை சொன்னான். அதன்பிறகு அவனோடு சமாதானம் ஆனேன். கடந்த ஒன்பது மாதங்களுக்கு முன்பு ஒருமுறை skype ல் அவனும் குட்டி மன்னார் அமுதனும் காணொளி ஊடாக பேசினார்கள். நான் அலுவலகத்தில் இருந்ததால் சரியாகவே அவனோடு பேச இயலவில்லை.

என்னிடம் இதுவரை செல்லமாய் திட்டே வாங்காதவன் வித்யாசாகர் அண்ணா தான்.

தவறுதலாக என்னை எதிரியாக அப்போது நினைத்த வேறு ஒரு அன்பர்கூட 'நீ நன்றாக இருப்பாய். நீ மென்மேலும் வளர்வாய்' என்று என் அலுவலகப் பணி தொடர்பாக என்னை வாழ்த்தியதுண்டு.

அன்பைவிட வேறென்ன எனக்கு வேண்டும்? அன்பே கடவுளாக இருக்கும்போது...

Friday, December 27, 2013

என் தமிழ்நாட்டில் தேவை ஒரு அரசியல் புரட்சி (My tamizhnadu needs a political revolution) - நன்றி கூகிள் (படங்களுக்காக மட்டும்)

ஏற்கனவே பலதரப்பட்ட விளம்பரங்களால் கோடி கோடியாய் பணத்தை அள்ளுவது போதாதென்றுதமிழ்நாட்டு ஊடக விபச்சாரி மகன்கள்  அரசியல் விபச்சாரிகளான ஜெயலலிதா, கருணாநிதி போன்றவர்களை பற்றி பொய்யான புகழ் பாடும் விளம்பரங்களை வெளியிட்டு கோடிக்கணக்கில் பணத்தில் மிதக்கின்றனர். அந்த அளவிற்கு மனம் தறிகெட்டுப் போய், பணம் சம்பாதிக்க பேராசைப்பட்டு இவர்கள் வெளியிடும் விளம்பரங்களை நம்பி, வெளி மாநில தமிழர் அல்லாத வேற்று மொழி பேசும் வேற்று இனத்தவர்கள் உட்பட தமிழ்நாட்டில் வாழும் பாமர மக்கள் இவர்கள் தங்களுக்கு நன்மைகள் செய்வதாக நம்பிக் கொண்டிருக்கின்றனர்.

சில மாதங்களுக்கு முன்பு ஒருவர் என்னை 'கருணாநிதியை பற்றி பேச உனக்கு என்ன அருகதை இருக்கிறது?' என்று கேட்டார். நான் கருணாநிதி, ஜெயலலிதா போன்ற அரசியல் விபச்சாரிகளின் ஊழலைப்பற்றி பேசிக் கொண்டிருக்கிறேன். அவர் அவர்களின் தனிப்பட்ட வாழ்க்கையை நினைத்து பேசுகிறார்.

நான் கட்டும் வரிப்பணத்தை கொள்ளையடிக்கும் ஜெயலலிதா, கருணாநிதி போன்ற அரசியல் விபச்சாரிகள் செய்யும் ஊழலைப் பற்றி பேசுகிறேன். 

Inline image 3

Inline image 4


ஆனால், பலபேர் நியாயமாக பேசவேண்டிய இவற்றைப்பற்றி பேச பயப்படுகின்றனர். கௌரவக் குறைச்சல் என்று கருதுகின்றனர்.ஏனெனில், அவர்களிடம் பூர்வீகமாய் சொத்து, கோடி கோடியாய் பணம் இருக்கிறது. 

'money doesnt matter' என்று நுனிநாக்கில் ஆங்கிலம் பேசிக்கொண்டு திரியும் ஏராளமான நாகரிக அடிமைகளையும் நாகரிகக் கோமாளிகளையும் நான் கடந்து போயிருக்கிறேன்.




கொஞ்சநஞ்ச ஆண்மையிங்கு இறந்துபோனதே
           கோடிகளில் ஊழலைமனம் மறந்துபோனதே
நெஞ்சத்தில் தைரியமும் பறந்துபோனதே
           நேர்மையில்லா அரசியலே சிறந்துபோனதே

- முனைவென்றி நா. சுரேஷ்குமார் 




கடந்த ஜனவரி, ௨௦௧௩ (2013) ல் வெளிவந்த நம் உரத்த சிந்தனை மாத இதழில் என்னுடைய 'புத்தாண்டு கொண்டாட்டம்' என்ற மேலே உள்ள வரிகளை உள்ளடக்கிய கவிதையொன்று 'முனைவர் நா. சு. சுரேஷ்குமார்' என்று என் பெயர் பிழையாக பிரசுரமாகியிருந்தது.

அந்த இதழில் என்னுடைய புகைப்படத்துடன் என்னுடைய பெயரான முனைவென்றி நா. சுரேஷ்குமார் என்பதற்குப் பதிலாக முனைவர் நா. சு. சுரேஷ்குமார் என்று வெளிவந்திருந்தது. சில நாட்கள் கழித்த பிறகு சென்னையிலிருந்து என்னுடைய அலைபேசிக்கு ஒரு அழைப்பு வந்திருந்தது. "முனைவர் சுரேஷ்குமார் இருக்கிறாரா?" என்றார். எனக்குப் புரிந்து விட்டது. அதன்பிறகு நான் "ஐயா, நான் முனைவர் இல்லை. நான் எதிலும் முனைவர் பட்டம் பெற்றதில்லை. என்னுடைய பெயர் முனைவென்றி நா. சுரேஷ்குமார். என்னுடைய பெயரை இந்த மாத இதழில் பிழையாக வெளியிட்டு இருக்கின்றனர்." என்றேன். அவர் அந்த கவிதை குறித்து பேசினார் "கவிதை நன்று." என்றும் அந்த கவிதையில் ஒரு சில வரிகளின் வார்த்தையைக் குறிப்பிட்டு தான் நினைத்த வார்த்தையைச் சொல்லி அந்த வார்த்தையைப் பயன்படுத்தினால் அந்த இடத்தில் பொருள் இன்னும் அழுத்தமாக இருந்திருக்கும் என்று சொன்னார். அவருடைய விமர்சனத்திற்கும் பரிந்துரைக்கும் நான் நன்றி சொன்னேன். 




தி.மு.க வும் அ.தி.மு.க வும் ஒன்னு - இதை 
அறியாதவன் வாயில மண்ணு 

Inline image 1


Inline image 5

Tuesday, December 17, 2013

சாய்வு நாற்காலி

காற்றில் அசைந்து
ஆடிக்கொண்டிருந்தது
அந்த சாய்வு நாற்காலி.

பால்ய வயதில்
அதில் நான் அமர்ந்த போதெல்லாம்
அடிக்க வருவதாய் பயமுறுத்தி
அன்பாய் அணைக்கும்
இரு கைகள்

தேநீர் குவளையை
அவள் வைக்கும்போதெல்லாம்
மரணிக்கும் நிசப்தம்

அவள் திட்டும்போதெல்லாம்
‘இவளுக்கு வேறு வேலையில்லை’
என்றே நமட்டுச்சிரிப்போடு
செய்தித்தாளின் பக்கங்களோடு
ஒன்றிப்போகும் அவரின் கண்கள்

சிறுநீர் கழிக்கப்போவதாய்
பொய் சொல்லிவிட்டு
பஞ்சு எடுப்பதிலிருந்து
கொல்லைவழியே தப்பித்தோடி
மாடிவீட்டு ஜன்னலின்வழியே
நான் கால்கடுக்க நின்று
ஒளியும் ஒலியும்
பார்த்த பரவசம்

பேருந்து ஓட்டுவதாய்
நினைத்தபடி பயம்போக்க
சத்தமிட்டுக்கொண்டே
ஓடிவந்த என்னுடைய கால்கள்

பூனைபோல் கொல்லைவழி
நான் உள்ளே நுழைந்தாலும்
எங்கிருந்தோ வரும்
காற்றை கிழித்துக்கொண்டு...
அவளின் குரல்.

‘எங்கடா போன கழுத?’
என்று தன் மனைவியான அவளுக்கு கேட்கவே
உரக்க என்னை அதட்டிவிட்டு
என் பக்கம் வந்தபின்
உச்சிமுகர வருவதாய் 
மெல்ல வருடும்
அந்த வேல்கத்திமீசை

அதிகாலை
பனிப்போர்வையை விலக்கிக்கொண்டு
காளைகளை  கூட்டிக்கொண்டு
கலப்பையை தோளில் சுமந்துகொண்டு
ஏரோட்ட போய்...
பள்ளிக்கு நான் புறப்படும்போது
நீராத்தண்ணி குடிக்க
வயிற்றுப்பசியோடு
உழைத்துக் களைத்து
ஓடிவந்த அவரின்  கால்கள்...

வானம்பார்த்து
குடையை எடுக்கும் அவரது கணிப்பு
எப்போதும் தவறானதே இல்லை

அதிர்ந்து பேசாத அவர் உதடுகள்
அவளை சமாதானப்படுத்தும்
நேரம்போக...

காளைகளையும் பசுக்களையும்
தன் பேச்சால் தலையாட்ட வைக்கும்
மெ(மே)ன்மை..

காற்றில் அசைந்து
ஆடிக்கொண்டிருந்தது
தாத்தாவின் அந்த சாய்வுநாற்காலி.

Tuesday, December 10, 2013

மழையெச்ச நாளொன்றில்...

வெயிலில் 
தலையுலர்த்திக் கொண்டிருந்தது 
நேற்றுபெய்த மழையில் 
தொப்பலாய் நனைந்த 
அந்தக் குடிசை.
பெய்த மழையாய் 
கூரைவழி எட்டிப்பார்த்தது 
மேகத்தின் கண்ணீர் 
ஏழைகளின் வாழ்க்கையை...

மெதுமெதுவாய் 
மேகப்போர்வையை விலக்கி 
சோம்பல் முறித்தெழுந்தான் 
தன் சுட்டெரிக்கும் 
ஒளிக்கதிர் பற்கள் காட்டி...

குடிசைக்குள் 
மழைநீர் குளமாய்...
மிதக்கும் பாத்திரங்கள்...

கைகால்கள் நடுநடுங்க
சோர்வாய் திண்ணையில் 
குழந்தைகள்.

கடலோடு வலைவீசி 
கயல்தேடிக் கரைதிரும்பாக் 
கணவன்.

கால்கடுக்க
வாசலில் நின்றவாறு 
தெருமுனையை வெறிக்கப்பார்க்கும்
அவள் 

புயலின் கூரிய நகங்கள் 
பிய்த்து எறிந்திருந்தன
குடிசைகளின் கூரைகளை...

ஆறுதல் சொல்வதற்காய்
பறக்கும் ஹெலிகாப்டரும்...
பார்வையிடும் கண்களும்...
அடுத்தநாள் தலைப்பு செய்திக்காக... 

அண்ணார்ந்து பார்த்து 
வேதனை மறந்து
கைதட்டும் சிறுவர்சிறுமியர்

கரையொதுங்கியே கிடக்கிறது  
மீனவன் வாழ்க்கை.

மழைநின்றதாய் 
பெருமூச்சு விடும்போது 
கூரைவழி கொட்டத்துவங்குகிறது 
புயலோடு பெருமழை...

Saturday, December 7, 2013

விஷ்ணு பாப்பாவும் சிறப்பு ழகரமும்


சில நாட்களுக்குமுன் என் தங்கச்சி பாப்பாவிடம் அலைபேசியில் பேசும்போது ‘விஷ்ணு என்ன செய்கிறான்?’ என்று கேட்டபோது ‘உன் மருமகன் amenna சாப்பிடுகிறான்.’ என்றாள். ‘அதென்ன amenna?’ என்றேன். ‘ஒண்ணுமில்ல ண்ணே, வாழைப்பழம் வாங்கி வந்தேன். விஷ்ணுவுக்கு கொடுத்தேன். Banana என்று சொல்லிக்கொடுத்தேன். அதைத்தான் amenna என்கின்றான் விஷ்ணு.’ என்றாள்.

நான் பரமக்குடிக்கு சென்றிருந்த போதெல்லாம் அவன் அழுதால், வீட்டிற்குள் பிராண வாயு (oxygen) கிடைப்பதற்கு வாய்ப்பு குறைவு என்பதால் அவனை, வேப்பமரக் காற்று நல்ல மருந்து என்பதால் பக்கத்தில் உள்ள வேப்ப மரத்தடியில் அமர்ந்து மடியில் வைத்து பேசிக் கொண்டிருப்பேன். சாலையில் போகின்ற நாயை ஆச்சர்யமாக பார்ப்பான். அவனிடம் ‘நாய், dog’ என்று சொல்லிக்கொடுப்பேன். மரத்தின் உச்சியில் அமர்ந்திருக்கும் காகத்தை குறுகுறுவென்று பார்ப்பான். அவனிடம் ‘காகம், காக்கா, crow’என்று சொல்லிக்கொடுப்பதுண்டு.

சிலநாட்களுக்குப் பிறகு அந்த மரத்தடிக்கு மறுபடியும் அழைத்து வரும்போது நாய் அந்த வழியே வந்தால், என்னை கையால் தொட்டு அழைத்து நாயை சுட்டி நாய் என்று சொல்லத்தெரியாமல் ‘நா, நா’ என்று சொல்வான். உச்சியில் காக்கையை தேடுவான். பிறகு காகத்தைப் பார்த்துவிட்டு என்னை அழைத்து காக்கா என்று சொல்லத்தெரியாமல் ‘கா, கா’ என்று சொல்வான்.

அவனை ‘எங்க விஷ்ணு பாப்பால்ல, நல்ல பாப்பால்ல’ என்று சொல்லி செல்லங்கொஞ்சுவதுண்டு. அதனால் அவனை அவனே விஷ்ணு பாப்பா என்று சொல்லத்தெரியாமல் ‘விஷ்ஷப்பா’ என்றும் நல்ல பாப்பா என்று சொல்லத்தெரியாமல் ‘ல்லப்பா, ழ்ழப்பா’ என்றும் சொல்வான்.

இன்றைய நடைமுறை உலகில் தமிழர்கள் யாரும் சோம்பேறித்தனம் காரணமாக சிறப்பு ழகரத்தை அதற்குரிய அழுத்தத்தோடு சரியாக உச்சரித்து பேசாமல் சிறப்பு ழகரத்தின் சிறப்பு அழியத் தொடங்கியுள்ள நிலையில் ஒரு மலையாளி என்னுடைய உறவினர் மகனுக்கு ‘மலையாளத்தில் மழை என்ற வார்த்தையை எப்படி உச்சரிக்க வேண்டும் என்றும் சிறப்பு ழகரத்தை எப்படி உச்சரிக்க வேண்டும்’ என்றும் சொல்லித்தந்திருக்கிறான். என்னுடைய உறவினர் மகன் என்னிடம் வந்து தமிழில் சிறப்பு ழகரம் உள்ளதா? என்று கேட்டான். அதிர்ந்து விட்டேன். ‘தமிழை கடன்வாங்கி ஆங்கிலம், ஜப்பானிய மொழி உட்பட பல மொழிகளும் தத்தமது வாழும் தகவமைக்கேற்ப (region) தமிழை திரித்தும் வார்த்தைகளை சேர்த்தும் ஆங்கிலம், மலையாளம், தெலுங்கு, பஞ்சாபி, கன்னடம்,......’ என்று பலவாறு பேசிக்கொண்டிருக்கும் நிலையில் ஒரு மலையாளி தன்னுடைய மொழியில் உள்ளனவற்றை மறவாமல் பொக்கிஷமாக பாதுகாத்து வரும் நிலையில் ஒரு தமிழன் இப்படி சிறப்பு ழகரத்தை மறந்து விட்டானே? என்று அதிர்ந்தேன். அவனிடம் ‘நம்முடைய தாய்மொழியை நீ மறக்கலாமா டா?’ என்று கேட்டேன். அவன் சொன்னான். ‘பள்ளியில் என்னுடைய ஆசான்கள் இப்படி உச்சரிக்க வேண்டும் என்று சொல்லித்தரவில்லை. அதன்பிறகும் யாரும் சொல்லித்தரவில்லை. அதனாலேயே மழை என்பதை மலை என்றே இத்தனை நாளாய் உச்சரித்து வந்தேன். மலையாளத்தில் மழா என்று மழையை அழைப்பார்களாம்’ என்றும் மனவருத்தத்தோடு சொன்னான்.

உண்மையில் ஆங்கிலேயன் தன்னுடைய மொழியை பல்வேறு பதிப்புகளாக, உட்பிரிவுகளாக அந்தந்த நாட்டிற்கு தகுந்தாற்போல்British English, US English, Indian English என்று தன்னுடைய மொழி திரிவடைவதை அனுமதிக்கிறான். அதன்மூலம் தன்னுடைய தாய்மொழி உலகம் முழுவதும் பரவுகிறது என்பதை அவன் உணர்கிறான். ஏனெனில் அவன் ஒவ்வொரு நாட்டு மொழியின் பின்னும் englsih என்ற தன்னுடைய மொழியின் பெயரைச் சேர்த்து Indian English என்றே அழைக்கிறான். நாளை எவனாவது இந்த மொழி தன்னுடையது என்று சொன்னால் ஆங்கிலேயன் சொல்வான் இது எங்கள் மொழி. உன்னுடைய மொழி என்று நீ சொல்லும் மொழியின் கடைசியில் என்னுடைய தாய்மொழியான English என்ற வார்த்தை உள்ளது. எனவே நீ பேசும் US English, Indian English எல்லாமே என்னுடைய தாய்மொழியான English ன் உட்பிரிவுகள் தான் என்று மிக எளிமையாக தெளிவாக உறுதியாக ஆதாரத்தை முன் வைப்பான். ஆனால் தமிழன் தன்னுடைய மொழியிலிருந்து தோன்றிய மலையாளத்தை மலையாளத் தமிழ் என்றும் கன்னடத்தை கன்னடத் தமிழ் என்றும் தெலுங்கை தெலுங்குத் தமிழ் என்றும் மராட்டியை மராட்டித் தமிழ் என்றும் (பெரும்பாலான மொழிகளை இந்தப் பட்டியலில் சேர்த்துக் கொள்ளவும். இதற்கு ஆதாரமும் இருக்கிறது. கூகிள் குழுமத்தில் ஒருவர் ஒருமுறை ஆதாரத்துடன் தமிழிழிலிருந்து உகரத்தை, இகரத்தை இழந்து எப்படி இன்னொரு மொழியாக மாறியிருக்கிறது என்பதை விளக்கியிருக்கிறார்.) தான் நாம் அழைக்க வேண்டும். ஏனெனில் தமிழின் உட்பிரிவுகள் தான் ஏனைய பெரும்பாலான மொழிகள்.

உலகின் பெரும்பாலான மொழிகள் தமிழிலிருந்து தான் தோன்றின, பெரும்பாலான மொழிகளுக்கும் தமிழுக்கும் நெருங்கிய தொடர்பு உண்டு, ஒருசில ஆங்கில வார்த்தைகளின் 
வேர்ச்சொற்கள் தமிழில் இருக்கின்றன என்பதற்கு மொழியியல் ஆய்வாளர்களும், தொல்லியல் ஆய்வாளர்களும் சான்றுகளுடன் விளக்குகின்றனர்.

இருந்தபோதும் இன்று நாம் மலையாளத் தமிழ் என்று அழைக்கவேண்டிய மலையாளத்தை, மலையாளத் தமிழ் என்று அழைத்தால் மலையாளி நம்மோடு சண்டைக்கு வருவான். ஏனெனில், தமிழன் தனக்கு போகத்தான் தானதர்மம் என்று வாழாமல் அனைவருக்கும் தன்னுடைய பெருந்தன்மையான குணத்தால் மொழி, நிலப்பரப்பு என அள்ளியள்ளிக் கொடுத்தான். இன்று எல்லா இடங்களிலும் அடிவாங்கி சாவது தமிழன் தான். தமிழன் தன்னுடைய பெருந்தன்மையான குணத்தால் தான் வீழ்ந்து கொண்டிருக்கிறான்.

ஆங்கிலேயன் தன்னுடைய ஆங்கிலத்தை US English, Indian English, British English என்று உட்பிரிவுகளாக பிரித்து உலகம் முழுவதும் பரப்புவதைப் போல தமிழன் செய்ய இயலாமல் மொழி திரிந்து விடும் என்று பயப்படுகிறான். ஏனெனில் தமிழன் தன்னுடைய மொழியின் மேல் இனத்தின் மேல் அக்கறை இல்லாமல் வாழ்கிறான் என்ற கசப்பான உண்மையை நாம் ஏற்றுக் கொள்ளத்தான் வேண்டும்.

அதன்பிறகு சிறப்பு ழகரத்தைப் பற்றி ஒரு அன்பர் எழுதிய கட்டுரையை படிக்க நேர்ந்தது. அதில் ‘தமிழின் சிறப்புகளில் சிறப்பு ழகரமும் ஒன்று. அதனை உச்சரிக்க சோம்பேறித்தனப்பட்டால் அந்த சிறப்பு ழகரம் எதற்கு?’ என்று மன வேதனையோடு கேள்வி எழுப்பினார்.

இன்னொரு நண்பர் “திரைப்பட நடிகர்கள் வசனம் பேசும்போதும், அவர்களுக்காக குரல் கொடுக்கும் திரைமறைவு குரலொலி (dubbing artists) கலைஞர்களும், இப்போது தமிழ் திரைப்படப் பாடல்களை பாடுகிற வேற்றுமொழி பாடகர்களும் சிறப்பு ழகரத்தை லகரமாகவோ ளகரமாகவோ தான் உச்சரிக்கிறார்கள். உதாரணத்திற்கு அழகு என்பதற்கு பதிலாக அலகு என்றோ அளகு என்றோ தான் உச்சரிக்கின்றனர்.” என்று வருத்தப்பட்டார்.

தமிழர்கள் அல்லாத பிற மொழியினத்தினர் தமிழ்மேல் காதல்கொண்டு தமிழ்பேசக் கற்றுக்கொள்ள வேண்டும் என்ற ஆர்வத்தில் வெகுஜன ஊடகமான திரைப்படங்களையே உதாரணமாக வைத்து தமிழ் கற்கின்றனர். என்னுடைய அறையில் வசிக்கும் தெலுங்கின அன்பர், கன்னட அன்பர் தமிழ் கற்க ஆசைப்பட்டு தமிழ் திரைப்படங்களைப் பார்த்தே, தமிழை கற்றுக்கொண்டதாகவே தெரிவித்தனர். திரைப்பட இயக்குனர்கள் தயைகூர்ந்து திரைப்படக் கலைஞர்களின் தமிழ் உச்சரிப்பை ஆழமாக கவனித்து உச்சரிப்பு பிழைகளை நீக்கி வெளியிட வேண்டுமாய் இந்தக் கட்டுரை ஊடாக, கேட்டுக்கொள்கிறேன்.

சென்னையில் குழந்தை என்பதற்கு பதிலாக குயந்தை என்று ழகரத்தை யகரமாக உச்சரிப்பதை கவனிக்கலாம்.

சென்னை திருவல்லிக்கேணி பாரதி இல்லத்தில் ஒன்றரை ஆண்டுகளுக்கு முன்பு மாணிக்கவாசகர் பதிப்பகம் சார்பில் ஒரு விழாவில் கூடுகள் சிதைந்தபோது சிறுகதை நூலிற்காக அகில் அண்ணாவுக்கு விருது வழங்கினார்கள். அந்த விழாவில் நானும் பார்வையாளனாக கலந்துகொண்டேன். ஈரோடு மற்றும் சேலம் பகுதிகளை சேர்ந்த கொடுமுடி என்ற ஊரைச் சேர்ந்த புலவர் ஒருவர் பேசும்போது, ‘தற்கால புதிய பொருட்களை அழைக்கும்பொருட்டு, பயன்படுத்தும்பொருட்டு ஆங்கிலேயர்கள் ஆங்கில மொழியில் புதிய வார்த்தைகளை சேர்த்து அதை உடனடியாக பரப்புகின்றனர். ஆனால் தமிழில் அதைப் போன்ற காலத்திற்கேற்ப மாற்றங்கள் (Updates) செய்யவும் ஆளில்லை. செய்தாலும் தமிழர்களிடம் மொழி பற்றிய அக்கறையின்மையாலும், அவர்களின் முழு ஒத்துழைப்பின்மையாலும், வரவேற்பின்மையாலும் புதிய வார்த்தைகள் வழக்கொழிந்து போகின்றன. அதனாலேயே தமிழ் பழையமொழி தற்காலத்திற்கு உதவாத மொழி என்று முத்திரை குத்தப்பட்டு ஒதுக்கி வைக்கப்படுகிறது.’ என்று வருத்தப்பட்டார்.

௨௦௦௪ ல் (2004) நான் அழகப்பா பல்கலைக்கழகத்தில் படித்துக் கொண்டிருக்கும்போது விடுதியின் என்னுடைய அறையின் பக்கத்து அறை நண்பர் (தமிழில் முனைவர் பட்டம் பெற படித்துக் கொண்டிருந்தவர்) என்னிடம் ஒருமுறை பேசும்போது ‘அடுத்த தலைமுறையில் தமிழும் சமஸ்கிருதம் போல் பேச்சுவழக்கிலிருந்து அழிந்துவிடும்.’ என்று வருத்தத்தை என்னோடு பகிர்ந்து கொண்டார்.

என் மருமகனுக்கு யாருமே சிறப்பு ழகரத்தை எப்படி உச்சரிக்க வேண்டும் என்று சொல்லித்தராமலேயே அவன் சுயம்புவாக கற்றுக்கொண்டு என்னிடம் ‘ழ்ழப்பா, ழ்ழப்பா’ என்று சொன்ன கணத்தில் சிறப்பு ழகரத்தைப் பற்றி மேலே சொன்ன அனைத்தும் ஒரு கணத்தில் என்னுள்ளே தோன்றி மறைந்தன. என் மருமகன் விஷ்ணு பாப்பாவை ஆரத்தழுவி நெஞ்சோடு அணைத்துக்கொண்டு அவன் கன்னத்தில் மாறிமாறி முத்தமழை பொழிய ஆரம்பித்தேன் நான்.

Saturday, November 30, 2013

கடலுக்கடியில் தூங்கும் மாபெரும் “தமிழ்க் கண்டம்”

நன்றி: NewIndiaNews.com




கடலுக்கடியில் தூங்கும் மாபெரும் “தமிழ்க் கண்டம்”(வீடியோ இணைப்பு) [ செவ்வாய்க்கிழமை, 19 நவம்பர் 2013, 08:25.03 AM GMT +05:30 ]   
இந்திய திருநாட்டில் நம் மக்களிடையே மறைக்கப்பட்ட உண்மைகள் ஏராளம் என்றே சொல்லலாம்.
இனிமேல் நாம் 2000 வருடம் பழமையானவர்கள் என்ற பழங்கதையை விட்டு விட்டு, 20,000 வருடத்திற்கும் பழமை வாய்ந்த உலகின் முதல் இனம் நம் தமிழினம் என்று பெருமையுடன் கூறுவோம்.
சுமார் 20,000 வருடங்களுக்கு முன் கடலில் மூழ்கிய பகுதி தான் “நாவலன் தீவு” என்ற பெயரில் அழைக்கப்பட்ட குமரிப் பெருங்கண்டம்.

இங்குதான் உலகின் முதல் மனிதன் பிறந்ததாக வரலாற்று ஆய்வாளர்கள் தெரிவிக்கிறார்கள், இங்குதான் நம் மூதாதையர் வாழ்ந்தனர்.
இங்குதான் நாம் இன்று பேசிக்கொண்டிருக்கும் நம் தாய்த் தமிழ் பிறந்தது, இங்குதான் இன்னும் பல வரலாற்று அதிசயங்கள் நிகழ்ந்துள்ளன.
கடலுக்கடியில் இன்று அமைதியாக உறங்கிக் கொண்டிருக்கும் இக்கண்டம் ஒரு காலத்தில் பிரம்மாண்டமாக இயங்கிக் கொண்டிருந்த ஒரு மாபெரும் தமிழ்க் கண்டம்.
இன்று தனித்தனி நாடுகளாக உள்ள அவுஸ்திரேலியா, மடகாஸ்கர், தென்னாப்பிரிக்கா, இலங்கை,மற்றும் கிழக்கில் உள்ள சில சிறு, சிறு தீவுகளையெல்லாம் இணைத்தவாறு இருந்த ஒரு பிரம்மாண்ட நிலப்பரப்பு தான் குமரிக் கண்டம்.
ஏழுதெங்க நாடு, ஏழுமதுரை நாடு, ஏழுமுன்பலை நாடு, ஏழுபின்பலை நாடு, ஏழுகுன்ற நாடு, ஏழுகுனக்கரை நாடு, ஏழுகுரும்பனை நாடு என இந்நிலப்பரப்பில் நாற்பத்தொன்பது நாடுகள் இருந்துள்ளன. பறுளி, குமரி என்ற இரண்டு மாபெரும் ஆறுகள் ஓடியுள்ளன.
மேலும் குமரிக்கொடு, மணிமலை என இரண்டு மலைகள் இருந்துள்ளன, தென்மதுரை, கபாடபுரம், முத்தூர் என பிரம்மாண்டமான மூன்று நகரங்கள் இருந்தன.
உலகின் தொன்மையான நாகரீகம் என்று அழைக்கப்படும் சுமேரியன் நாகரீகம் வெறும் நான்காயிரம் வருடங்கள் முந்தையது தான்.
நக்கீரர் இறையனார் அகப்பொருள் என்ற நூலில் மூன்று தமிழ்ச் சங்கங்கள் 9990 வருடங்கள் தொடர்து நடைபெற்றதாக கூறியுள்ளார்.
தமிழின் முதல் சங்கம் இந்த கடலடியில் உள்ள “தென் மதுரையில்” கி.மு 4440-ல் 4449 புலவர்களுடன், சிவன், முருகர், அகஸ்தியருடன் 39 மன்னர்களும் இணைந்து நடத்தப்பட்டது.
இதில் பரிபாடல் முதுநாரை, முடுகுருக்கு, கலரியவிரை, பேரதிகாரம் ஆகிய நூல்களை இயற்றியுள்ளனர்.
இதில் அனைத்துமே கடற்கோளில் அழிந்துவிட்டன. இரண்டாம் தமிழ்ச் சங்கம் கபாடபுரம் நகரத்தில் கி.மு 3700-ல் 3700 புலவர்களுடன் நடத்தப்பட்டது.

மேலும் அகத்தியம், தொல்காப்பியம், பூதபுராணம், மாபுராணம் ஆகிய நூல்கள் இயற்றப்பட்டன. இதில் தொல்காப்பியம் மட்டுமே நமக்கு கிடைத்துள்ளது.
மூன்றாம் தமிழ்ச் சங்கம் இன்றைய மதுரையில் கி.மு 1850-இல் 449 புலவர்களுடன் நடத்தப்பட்டது. இதில் அகநானூறு, புறநானூறு, நாலடியார், திருக்குறள் ஆகிய நூல்கள் இயற்றப்பட்டன.
இவ்வளவு பழமையான தமிழனின் வரலாற்றை பெருமையுடன் உலகிற்கு தெரியப்படுத்த வேண்டிய இந்திய அரசு எந்த அக்கறையும் காட்டாமல் இருப்பது வேதனையான விடயம்.
இந்திய அரசு வெளிக்கொண்டுவராத நம் வரலாற்றை, நாமே இந்த உலகிற்குப் பரப்புவோம்!!!

ஆதாரம்: NewIndiaNews.com





விஷ்ணு பாப்பாவின் புகைப்படங்கள்













தமிழ்நாடு இழந்த நிலப்பகுதியின் அளவு சுமார் 70,000 சதுர கிலோமீட்டர்கள்

நன்றி: https://www.facebook.com/profile.php?id=100007079860823



நம் அரசியல் தலைவர்கள் அக்கறை காட்டாததால் தமிழகம் அண்டை மாநிலங்களிடம் இழந்த நிலப்பகுதியின் அளவு சுமார் 70,000 சதுர கிலோமீட்டர்கள். அந்தப் பகுதிகள் நம்மிடம் இருந்திருந்தால் இன்று நாம் சந்திக்கும் நதி நீர்ப் பிரச்சினைகள் இருந்திருக்காது

'முல்லைப் பெரியாறு பிரச்சினையில் கேரளத்தவர் நடந்துகொள்ளும் முறையைப் பார்க்கும்போது கேரளாவோடு சேர்க்கப் பட்ட தமிழ் நிலப் பகுதிகளான தேவிகுளம், பீரிமேடு போன்ற பகுதிகளை மீண்டும் தமிழகத்தோடு இணைக்க வேண்டும் என்று கேட்க வேண்டிய நிலைமை ஏற்பட்டிருக்கிறது’ என்று இன்று அரசியல்வாதிகள் பேச ஆரம்பித்திருக்கிறார்கள்.

ஆனால், வரலாற்றை திரும்பிப் பார்த்தால் மொழிவாரி மாநிலங்கள் பிரிக்கப்பட்டபோது தமிழ்நாடு இழந்த பகுதிகள் பல. அவை தமிழ்நாட்டோடு இருந்திருந்தால் இன்று நாம் சந்திக்கும் நதி நீர்ப் பிரச்சினைகள் இருந்திருக்காது. முல்லைப் பெரியாறு மட்டுமல்ல, காவிரி, பாலாறு பிரச்சினைகள்கூட. நாம் இழந்த நிலப் பகுதிகளை ஒப்பிடுகையில் தேவிகுளம், பீரிமேடு என்பது, கஜானாவையே கொள்ளை கொடுத்து விட்டு ஒற்றை மூக்குத்தியை மட்டும் திரும்பக் கேட்பது போலத்தான். ஏனென்றால், தமிழகம் அண்டை மாநிலங்களிடம் இழந்த நிலப்பகுதியின் அளவு சுமார் 70,000 சதுர கிலோமீட்டர்கள்.

அப்படி பல்லாயிரம் சதுர கிலோ மீட்டர் நிலப் பகுதிகளை தமிழகம் இழக்கக் காரணம், நமது அரசியல் கட்சிகள். இந்தக் கட்சி, அந்த இயக்கம் என்ற பேதம் இல்லாமல் எல்லோருமே அந்த இழப்புக்கு துணை போன அரசியலையே செய்தார்கள் என்பது வரலாறு முன் வைக்கும் கசப்பான உண்மை.

நாடு விடுதலை பெற்றதும் மொழிவாரி அடிப்படையில் மாநிலங்களைப் பிரிக்க வேண்டும் என்ற குரல்கள் அடுத்தடுத்து இந்தியா முழுக்க எழுந்தன. அப்படிக் குரல் எழுப்பியவர்கள் பிரிவினைவாதிகள் அல்ல. வெள்ளையனை வெளியேற்ற வேண்டும் என்பதற்காக சுதந்திரப் போராட்டத்தில் பங்கேற்றுச் சிறை சென்றவர்கள். அதிலும் குறிப்பாக காங்கிரஸ் இயக்கத்தில் இருந்தவர்கள்.

முதன் முதலில் மராத்தி மொழி பேசும் மக்களுக்கு தனியாக மராட்டிய மாநிலம் அமைக்க வேண்டும் என்று ‘சம்யுக்த மகாராஷ்டிரா சமிதி’ என்ற அமைப்பை ஏற்படுத்தி, போராடத் துவங்கியவர் விடுதலைப் போராட்ட தியாகியான சங்கர்ராவ் தேவ். அடுத்து, குஜராத் மாநிலத்தில் ‘மகா குஜராத் ஜனதா பரிஷத்’ என்ற அமைப்பின் மூலம் போராடத் துவங்கினார் இந்துலால் யக்னிக்.

அதன் பிறகு தென்னிந்தியாவில் தனி ஆந்திர மாநிலப் போராட்டம் எல்லாவற்றையும்விட பெரிய அளவில் விஸ்வ ரூபம் எடுத்தது. அடுத்து கர்நாடகா, கேரளாவிலும் போராட்டங்கள். ஆனால், தமிழ்நாட்டில் அப்படி ஒரு போராட்டம் எழவே இல்லை. இங்கிருந்த தேசிய உணர்வு, திராவிட உணர்வு இரண்டுமே அதற்கு காரணம்.

வெள்ளையர் ஆட்சியில், சென்னை ராஜதானி என்ற பெயரில் இன்றைய நான்கு தென் மாநிலங்களும் ஒன்றாக இருந்தன. அதனால், சென்னையும் தமிழ் மண்ணும் அரசியல் சமூகரீதியாக கேரள, ஆந்திர, கன்னடர்களும் உரிமையோடு செயல்படும் நிலமாகவே இருந்தது.

மொழிவாரி மாநிலங்கள் பிரிக்கப்பட்டபோது தென் இந்தியாவில் கேரள, கன்னட, ஆந்திர மாநிலத்தவர் காலகாலமாக தமிழ் நிலப் பகுதிகளாக இருந்த பகுதிகளை தங்கள் மாநிலத்தோடு இணைக்கக் கோரி போராடினர். அதில் முதன் முதலாக வெற்றி பெற்றவர்கள் கேரள மாநிலத்தவர்தான்.

அகஸ்தீஸ்வரம், தோவாளை, நெய்யாற்றுப் பகுதி, நெடுமங்காடு, இடுக்கி மாவட்டத்தின் பெரும்பகுதி, வண்டிப் பெரியாறு, தேவிகுளம், பீரிமேடு, குமுளி, கொச்சின், சித்தூர், பாலக்காடு பகுதிகள் போன்றவை எல்லாம் இன, மொழி, வரலாற்று, இலக்கிய ரீதியாக தொடர்புடைய தமிழகத்துடன் இணைக்கப்பட்டிருக்க வேண்டும். ஆனால் நடக்கவில்லை.

மொழிவாரி மாநிலப் போராட்டம் பொங்கி பிரவகித்த நிலையில் 1954ம் ஆண்டு மொழிவாரி மாநிலம் பற்றி ஆராய்ந்து அறிக்கை தர, பசல் கமிஷன் என்ற ஒரு கமிஷனை மத்திய அரசு நியமித்தது. அந்த கமிஷனிடம் கேரளத்தவர்கள் மேலே குறிப்பிட்ட பகுதிகளைத் தவிர கோவை மாவட்டத்தின் மேற்குப் பகுதி, நீலகிரி, கூடலூர், ஊட்டி ஆகிய பகுதிகளையும் கேட்டனர்.

அன்று (இன்று போல) கேரளத்தவர்கள் அரசியலிலும் நிர்வாகத்திலும் செல்வாக்கோடு இருந்தனர். அன்று நேருவின் அமைச்சரவையிலும் வெளிநாட்டுக் கொள்கை ரீதியான பதவிகள், அயல்நாட்டு தூதரகப் பதவிகள், சர்வதேச நெருக்கடிகளுக்கு பரிகாரம் காணும் பதவிகள், மூன்று மெய்க்காப்பாளர் பதவிகள், நேருவின் அந்தரங்கச் செயலாளர் பதவி, அகில இந்திய காங்கிரஸ் செயலாளர் பதவி, பாராளுமன்ற எதிர்க்கட்சித் தலைவர் பதவி என்று பல பொறுப்புக்களில் கேரளத்தவர் இருந்தனர்.

தவிர மொழிவாரி மாநிலம் பற்றி ஆராய்ந்து அறிக்கை தர அமைக்கப்பட்ட பசல் கமிஷனிலேயே கே.எம். பணிக்கர் என்ற மலையாளி பொறுப்பில் இருந்தார். தமிழகம் சார்பில் யாரும் இல்லை. அவர், ‘தனக்கு தேவிகுளம், பீரிமேடு பகுதிகளில் நிறைய தேயிலைத் தோட்டங்கள் இருப்பதால் அவற்றை தமிழ்நாட்டுக்குத் தர முடியாது’ என்று சொன்னதாகக் கூறப்படுகிறது (காண்க: பெட்டிச் செய்தி).

ஆனால், இந்த விஷயத்தில் கேரளத்தவரை மட்டும் குறை சொல்லிப் பயனில்லை. நம் அரசியல்கட்சிகளும், தலைவர்களும் தமிழ் மண்ணைவிடக் கட்சி விசுவாசத்திற்கே முக்கியத்துவம் அளித்தனர்.

தேவிகுளம், பீரிமேடு பகுதிகளை கேரளத்தோடு இணைப்பதற்கு எதிராகப் போராடிய பி.எஸ்.மணி என்ற தலைவர் சென்னை வந்து காமராஜரை சந்தித்து, ‘தேவிகுளம், பீரிமேடு பகுதிகள் காப்பாற்றப்பட வேண்டும்’ என வேண்டினார். அப்போது காமராஜர், ‘குளமாவது மேடாவது, இந்தியாவில்தானே இருக்கிறது மணி, காங்கிரஸ் வேலையைப் போய்ப் பார்’ எனச் சொல்லி அனுப்பினார். மணி, ‘தினமணி’ ஆசிரியர் ஏ.என்.சிவராமனைச் சந்தித்து பிரச்சினையை விளக்கினார். அவர், ‘குளமாவது மேடாவது’ என்ற தலைப்பில், ‘தினமணி’யில் தலையங்கம் ஒன்று எழுதினார். சி.சுப்ரமணியம் ஒருமுறை, ‘தேவிகுளம், பீரிமேடு நமக்கு வேண்டும்’ என சட்டமன்றத்தில் வாதிட்டவர். ஆனால், மத்திய தலைமையின் கருத்து வேறாக இருக்கிறது எனத் தெரிந்தபோது, 1956 மார்ச் 28ம் தேதி பசல் கமிஷனின் அறிக்கையை சட்டமன்றத்தில் அறிமுகப்படுத்தி அதை ஏற்குமாறு வாதிட்டவரும் அவர்தான்.

தேவிகுளம், பீரிமேடு போராட்டம் பற்றி விவாதிக்க 1956ம் ஆண்டு ஜனவரி 27ம் தேதி சென்னையில் அனைத்துக் கட்சிக் கூட்டம் ஒன்று நடந்தது. அதில் அண்ணா கலந்து கொள்கிறார் என்ற காரணத்தால் பெரியார் அந்தக் கூட்டத்தில் பங்கேற்கவில்லை (காண்க: அண்ணாவின் கடிதம்). ‘மொழிவழி பிரிந்து இனவழி ஒன்றுபட்டு சோஷலிச திராவிடக் குடியரசு கூட்டாட்சி’ காணும் கனவில் இருந்த திமுக, காங்கிரசிற்கு எதிராகக் கூட்டணி காண்பதிலும் மாநில உரிமைகள் சார்ந்த வேறு பிரச்சினையிலும் காட்டிய ஆர்வத்தை இந்தப் பிரச்சினையில் காட்டவில்லை. ‘பெரியாரும் அண்ணாவும் தட்சிணப் பிரதேசத் திட்டத்தை எதிர்ப்பதிலேதான் அதிக அக்கறை காட்டினார்கள். தேவிகுளம், பீரிமேடு பிரச்சினையில் அவ்வளவாக அக்கறை காட்டவில்லை’ என்று, ‘எனது போராட்டங்கள்’ நூலில் எழுதுகிறார் ம.பொ.சி.

பிரச்சினை வலுவாக இருந்தபோது அந்த ஆண்டு கம்யூனிஸ்டுக் கட்சியின் அகில இந்திய மாநாடு சென்னையில் நடக்க வேண்டி இருந்தது. ஆனால், கேரள மாநிலத்தவர் அதை தங்கள் செல்வாக்கால் கேரளாவுக்கு மாற்றினர். அங்கு திடீர் என அந்த மாநாட்டில், ‘தேவி குளம், பீரிமேடு பகுதிகள் கேரளாவுக்கே சொந்தம்’ என்று தீர்மானம் போட, தமிழக கம்யூனிஸ்ட் தலைவர்கள் அதை எதிர்க்காமல் கட்சிக் கட்டுப்பாடு என்ற பெயரில் அதை ஏற்றுக் கொண்டனர். (ஆனால், ஜீவா எல்லைகளை மீட்கத் தொடர்ந்து போராடினார்).

அப்போது தமிழக அரசின் தலைமைச் செயலாளராக இருந்தவர் கேரளத்தைச் சேர்ந்தவர். தேவிகுளம், பீரிமேடு பகுதிகள் யாருக்கு சொந்தம் என்பது பற்றிப் பேச, தமிழக-கேரள மாநிலத் தலைமைச் செயலாளர்களின் கூட்டம் திருவனந்தபுரத்தில் நடந்தது. அப்போது தமிழக அரசின் தலைமைச் செயலாளரான வர்கீஸ் அந்தப் பகுதிகளை கேரளாவுக்குத் தர சம்மதம் தெரிவித்துக் கையெழுத்திட்டார். ‘தமிழக அரசின் தலைமைச் செயலாளரான நீங்கள் இப்படி தமிழகத்துக்கு எதிராக கையெழுத்துப் போடலாமா?’ என்று ஒரு நிருபர் கேட்டபோது, ‘அந்தப் பகுதிகள் இல்லாவிட்டால் கேரளா ரொம்பக் கஷ்டப்படும்’ என்றார் வர்கீஸ்.

இவற்றிற்கு எதிராக நேசமணி, ம.பொ.சிவஞானம் போன்றோர் செய்த சில போராட்டங்களின் விளைவாக கேரளத்தவர் தங்களுக்கு கொண்டு போக நினைத்த செங்கோட்டை, அகஸ்தீஸ்வரம், தோவாளை, கன்னியாகுமரி பகுதிகள் மட்டும் மீட்கப்பட்டன. ஆனால், தமிழகத்தோடு சேர வேண்டிய சுமார் 1,500 சதுர கிலோமீட்டர் நிலப் பகுதி கேரளாவுக்கு போயிற்று. அதில் முக்கியமாகக் குறிப்பிடப்பட வேண்டியது செங்கோட்டை தாலுகாவில் இருந்த சில பகுதிகள். 1950களிலேயே ஆண்டுக்கு சுமார் எட்டு கோடி ரூபாய் வருமானம் தந்து கொண்டிருந்த வனப் பகுதியை தமிழகம் இழந்தது.

இந்த 1,400 சதுர கிலோமீட்டர் பகுதி மட்டும் நியாயமாக தமிழகத்துக்கு வந்திருந்தால்...

இன்று முல்லைப் பெரியாறு பகுதி முழுக்க நம்மிடம் இருந்திருக்கும். பிரச்சினையே கிடையாது.

பவானி நதிப் பிரச்சினை கிடையாது.

தமிழ்ப் பண்பாட்டு இலக்கிய வடிவமான கண்ணகிக் கோயில் நம்மை விட்டுப் போயிருக்காது. அங்கு நாம் வழிபடப் போனாலே, கேரள போலீசாரிடம் அடிபடும் நிலைமை வந்திருக்காது.

சிறுவாணி அணையின் ஒரு பகுதியை தம்மிடம் வைத்துக்கொண்டு சிறுவாணித் தண்ணீருக்கும் கடிவாளம் போட கேரளத்தவர் போடும் நினைப்புகளுக்கே வாய்ப்பிருந்திருக்காது.

எல்லா பிரச்சினைகளுக்கும் காரணம், தமிழகத்துடன் சேர வேண்டிய 1,400 சதுர கிலோமீட்டர் பரப்பை நாம் இழந்ததுதான்.

கேரளாவிடம் இழந்தது இப்படி என்றால், ஆந்திராவிடம் இழந்தது இன்னும் அதிகம்.

சுதந்திரம் வாங்குவதற்கு முன்பு ஆந்திராவின் ராயல சீமாவே தமிழர்கள் அதிகம் வாழ்ந்த பகுதிதான். திருப்பதிக் கோயில் கருவறை சுவர் கல்வெட்டுகளில்கூட தமிழ் எழுத்துகளே உள்ளன. திருப்பதியில் இருந்த தனித்தமிழ் பள்ளிகள், அங்கு தமிழ்க் கலை காலகாலமாக வளர்ந்த விதமே அழகு.

1912ம் ஆண்டு ஆந்திரப்பிரதேச காங்கிரஸ் சென்னை மாகாணத்தில் இருந்து ஆந்திரப் பகுதிகளை பிரித்து தனி மாநிலம் அமைக்க வேண்டும் என்று கோரிக்கை வைத்தது. தமிழகத்தில் திராவிடம் பேசிக் கொண்டிருந்த நீதிக் கட்சியின் ஆந்திரப்பிரதேசக் கிளையும் அதே கோரிக்கை வைத்தபோது இங்கிருந்த நீதிக்கட்சிப் புரவலர்கள் அதைக் கண்டிக்கவில்லை.

மொழி வாரி மாநிலங்கள் பிரிக்கப்பட்டபோது தமிழ் நாட்டுடன் இணைக்கப்பட்டிருக்க வேண்டிய சித்தூர் மாவட்டம், நெல்லூர் மாவட்டம், இவற்றில் தங்கிய திருப்பதி, காளகஸ்தி, புத்தூர், நகரி, ஆரணியாறு, வடபெண்ணை ஆறு, பொன்வாணி ஆறு இவற்றின் வளமான பகுதிகள், நந்தி மலை இவை எல்லாம் ஆந்திராவோடு போயின.

இதன் பின்னால் விதியின் விளையாட்டு ஒன்றுண்டு.

மொழிவாரி மாநிலப் பிரிவினைக்காக அமைக்கப்பட்ட பசல் கமிஷன் ஒரு விதியை வரையறுத்தது. அதாவது, பிரச்சினைக்குரிய பகுதிகளில் வாழும் மக்களின் மொழி என்ன என்பது முக்கியம் இல்லை. அங்கு உள்ள நிலம் யாருக்கு அதிகம் உரிமைப்பட்டதாக உள்ளது என்பதைப் பொறுத்தே சம்பந்தப்பட்ட மாநிலத்துடன் இணைக்கப்படும் என்று முடிவு எடுத்தது. அதன்படியே கேரள எல்லையை ஒட்டிய தமிழ் நிலப்பகுதிகள் கேரளாவுடன் இணைக்கப்பட்டன.

ஆனால், தமிழ்நாடு-ஆந்திரப் பிரிவினையின்போது நடந்தது என்ன தெரியுமா?

வடக்கே இருந்து பிழைப்பு தேடி வந்த தெலுங்கு பேசும் மக்கள் நெல்லூர், சித்தூர் பகுதிகளில் குறிப்பிட்ட எண்ணிகையில் இருந்தனர். ஆனால், நிலத்தின் உரிமையாளர்கள், தமிழர்களாகவே இருந்தனர். ஆனாலும் இங்கு விதியைத் தலைகீழாக மாற்றியது அப்போது மத்திய அரசு அமைத்த படாஸ்கர் கமிஷன் என்ற கமிஷன், ‘நிலம் யாருடையது என்பது முக்கியம் அல்ல. வாழும் மக்களின் மொழிதான் முக்கியக் கூறு’ என்று சொல்லி எல்லா பகுதிகளையும் ஆந்திராவுடன் இணைத்தது.

வடபகுதியில் மங்கலங்கிழார், ம.பொ.சிவஞானம் போன்றோர் மட்டுமே இதை எதிர்த்து தீவிரமாகப் போராடினர். இராஜாஜி இவர்களுக்கு ஆதரவாக இருந்தார். ஆனாலும் தமிழத்தின் தேசிய திராவிட அரசியல் நிலவரம் இந்த அநியாயங்களை தடுக்க பெருவாரியாக முன் வராததால், முறைப்படி தமிழகத்துக்கு வர வேண்டிய நிலப் பகுதியில் திருத்தணி, வள்ளி மலை, திருவாலங்காடு போன்ற பகுதிகள் மட்டுமே தமிழகத்துக்கு கிடைத்தன.

1960ம் ஆண்டு ஏப்ரல் மாதம் ஒன்றாம் தேதி வரையறுக்கப்பட்ட எல்லைகள்படி தமிழ்நாட்டுடன் இருந்த 32,000 சதுர கிலோ மீட்டர் நிலப் பகுதி ஆந்திராவுக்கு தரப்பட்டது. சேலம், செங்கல்பட்டு மாவட்டங்களில் இருந்து சுமார் 525 சதுர கிலோமீட்டர் பகுதி, ஆந்திராவுக்கு அளிக்கப்பட்டது. ஆரணியாறு அணைக்கட்டு ஆந்திராவுக்குப் போனது. திருப்பதி பறிபோனது. காளஹஸ்தி போனது. நந்தி மலை போனது. நந்தி மலை நம்மோடு இருந்திருந்தால் பாலாற்றுப் பிரச்சினை எழுந்திருக்காது.

சென்னையையே ஆந்திரர்கள் தங்களுக்குக் கேட்டார்கள். பல தமிழ் நிலப் பகுதிகளை இழந்து அதைத் தக்கவைத்துக் கொண்டார்கள் நம் அரசியல்வாதிகள்.

இந்த கேரள, ஆந்திர, சென்னை விவகாரங்களிலாவது அரசியல் கட்சிகள் சில போராட்டங்களை நடத்தின. அறிக்கைகள் விட்டன. ஆனால், கர்நாடகாவிடம் நாம் இழந்தது என்பது தூக்கத்தில் திருட்டுக் கொடுத்ததற்கு சமம்.

காவிரி எங்கே உற்பத்தி ஆகிறது என்றால், குடகு மலை என்று எல்லோருக்கும் தெரியும். பழந்தமிழில் குடக்கு என்றால், மேற்கு என்று பொருள். அங்கு வாழும் மக்கள் பேசும் மொழி கூர்க் மொழி. சுமார் முக்கால் நூற்றாண்டுக்கு முன்புவரை கன்னடர்களும் கூர்க் மக்களும் அரசியல் ரீதியாக விரோதம் பாராட்டிக் கொண்டிருந்தார்கள். அதனால், மொழிவாரி மாநிலப் பிரிவினையின்போது இந்த கூர்க் மக்கள், ‘நாங்கள் எங்கள் மொழி மற்றும் கலாச்சாரத்தின் அடிப்படையாக இருக்கும் தமிழ்நாட்டோடு இணைந்து விடுகிறோம்’ என்று சொன்னார்கள். அதற்காக அந்த மக்கள், கன்னடர்களை எதிர்த்து ஆயுதம் ஏந்தி சிறிய அளவில் போராடியதுகூட உண்டு. நாம் சற்றே கண் காட்டி இருந்தால்கூட அவர்கள் ஓடி வந்து ஒட்டிக் கொண்டிருப்பார்கள்.

அப்படி தமிழகத்தோடு இணைந்து இருந்தால், காவிரித்தாய் ‘தமிழகத்திலேயே’ உற்பத்தியாகி, தமிழகத்திலேயே கடலில் கலந்திருப்பாள். நமக்கு காவிரிப் பிரச்சினையே வந்திருக்காது. தமிழகத்தின் நெற்களஞ்சியம் பதராகி இருக்காது.

கன்னடர்கள் திட்டமிட்டுப் போராடியதால் முறைப்படி தமிழ்நாட்டுக்கு வர வேண்டிய பெங்களூரு, மைசூரு மாவட்டத்தின் ஒரு பகுதி, கோலார் தங்கவயல் பகுதிகள் கர்நாடகாவுக்குப் போயின.

பெங்களூரைத் தங்கள் வசமாக்கிக்கொள்ள கர்நாடகத்தினர் காய் நகர்த்திய விதம், அவர்கள் எவ்வளவு புத்திசாலிகள் என்பதைக் காட்டுகிறது. ஒரு மாநிலத்துடன் ஒரு பகுதி இணைக்கப்பட வேண்டும் என்றால் முதலில் நிலத் தொடர்பு, அடுத்து மொழித் தொடர்பு இருக்க வேண்டும் என்பது விதி. ஓசூரில் அப்போது தெலுங்கு பேசுவோர் 39 சதவிகிதமும் அடுத்து, கன்னடம் பேசுவோர் 35 சதவிகிதமும் இருந்தனர். தெலுங்கு பேசும் மக்களே அதிகம் இருந்தாலும் ஆந்திராவோடு நிலத்தொடர்பு இல்லை என்ற காரணத்தால், அதை ஆந்திரா கைவிட்டது. அன்று அது வறண்ட பூமி என்பது வெளியே சொல்லப்படாத காரணம். ஆந்திராவோடு அது இணைக்கப்படாத பட்சத்தில் கன்னடம் பேசுவோர் அதிகம் இருந்ததால், அதை கர்நாடகாவோடுதான் இணைத்திருக்க வேண்டும். ஆனால்-

பெங்களூரு விவகாரம் வந்தபோது, கன்னட மக்கள் அதிகம் இருந்தாலும் நாங்கள் ஓசூரை தமிழகத்துக்குக் தந்துவிட்டோம். அதற்குப் பதிலாக கன்னடம் பேசும் மக்களை விட தமிழ் பேசும் மக்கள் அதிகம் இருந்தாலும் நாங்கள் பெங்களூரை எடுத்துக்கொள்கிறோம் என்று கோரிக்கை வைத்தது கர்நாடகா.

தமிழகம் அதற்கு உரிமையான நிலப்பகுதிகளை இழந்ததற்கு, தமிழகத்தில் அன்று நிலவிய மண் சார்ந்த உணர்வு இல்லாத- வாய்ச்சவடால் அரசியல்தான் காரணம்.

இன்றைய தமிழகத்தின் பரப்பளவு 1,30,609 சதுர கிலோமீட்டர்கள் தமிழகம் அண்டை மாநிலங்களிடம் இழந்த நிலப்பகுதியின் அளவு சுமார் 70,000 சதுர கிலோமீட்டர்கள். இவையும் நம்மோடு இருந்திருந்தால் தமிழகம், கர்நாடகாவைவிட இன்னும் பெரிய மாநிலமாக இருந்திருக்கும். அப்போதும் ஆந்திராவைவிட சற்று சிறிய மாநிலமாக இருந்திருக்கும் என்றாலும்கூட, தமிழகமே மற்ற தென்னிந்திய மாநிலங்களைவிட வளமான மாநிலமாக இருந்திருக்கும்.

Saturday, November 23, 2013

வெற்றிநடை மாத இதழின் ஆசிரியர் திரு. பாலமுரளி அவர்களுக்கு உதவி தேவை.

இந்த உலகில் உள்ள அனைத்து மருத்துவங்களும் இரத்தத்தை சுத்தப்படுத்தும் வேலையைத்தான் செய்கின்றன. அவற்றிற்கு பலமடங்கு பணம் வசூலிக்கின்றன. ஒரு ரூபாய் செலவில்லாமல் நாமே நம்முடைய இரத்தத்தை எப்படி சுத்தப்படுத்தலாம் என்பதைத்தான் செவிவழி தொடுசிகிச்சை சொல்லித்தருகிறது. 'நம்முடைய இரத்தத்தை மட்டும் எப்போதும் நாம் சுத்தமாக வைத்திருந்தால், உடல் உறுப்புகள் தன்னைத்தானே சுத்தப்படுத்திக் கொள்ளும்.இரத்தத்தை எப்படி சுத்தப்படுத்துவது?' என்பதை சொல்லித்தருவதே செவிவழி தொடுசிகிச்சையின் நோக்கம்.

இந்த மின்னஞ்சலை செவிவழி தொடுசிகிச்சை நிபுணர் திரு. பாஸ்கர் அவர்களுக்கும் அனுப்பி வைத்திருந்தேன். சில நாட்கள் கழித்தபிறகு அவரிடமிருந்து ஒரு அலைபேசி அழைப்பு வந்தது. நாகை பாலமுரளி அவர்களின் அண்ணாவைப் பற்றி கேட்டறிந்தார். அவரின் அலைபேசி எண்களை கேட்டார். கொடுத்தேன். 

சில மணிநேரம் கழித்தபிறகு நாகை பாலமுரளி அவர்களிடம் பேசினேன். 'சென்னையில் இன்னும் சில தினங்களில் செவிவழி தொடுசிகிச்சை தொடர்பாக பேசுகிறேன். வந்து கலந்து கொள்ளுங்கள்.' என்று திரு. பாஸ்கர் சொன்னதாக பாலமுரளி ஐயா சொன்னார்.

அதன்பிறகு திரு. பாஸ்கர் அவர்கள் என்னிடம் பேசினார்.

'http://munaivendrinaasureshkumarkavithaikal.blogspot.in/ என்ற வலைத்தளம் யாருடையது?' என்று கேட்டார். 'என்னுடையது' என்று பதிலளித்தேன். 'எதற்காக கேட்கிறீர்கள்?' என்று கேட்டேன். விரிவாக பதிலளித்தார்.

'எனக்கு இணையம் பற்றி தெரியாத காலகட்டத்தில் உதவி செய்வதாக ஒருசிலர் பழகினர். ஆரம்பத்தில் எனக்கு ஒருசில உதவிகள் செய்தாலும் காலப்போக்கில் அவர்கள் என்பெயரைச் சொல்லியும் செவிவழி தொடுசிகிச்சை பெயரைச் சொல்லியும் பணம் பறிக்கத் தொடங்கிவிட்டனர். சில மாதங்களுக்கு முன்புதான் அவர்களிடமிருந்து நமக்கான http://anatomictherapy.org/ என்ற இணையத்தை என் பெயருக்கு மாற்றினேன். உங்களின் பதிவில் (http://munaivendrinaasureshkumarkavithaikal.blogspot.com/2013/11/blog-post_23.html) youtube ல் உள்ள காணொளிகளுக்கான இணைப்புகளை கொடுத்திருக்கிறீர்கள்.  நம்முடைய http://anatomictherapy.org/ சென்று அங்கிருந்து காணொளிகளை தரவிறக்கம் செய்யச்சொல்லி பரிந்துரை செய்யுங்கள். youtube ல் உள்ள காணொளிகளுக்கான இணைப்புகளை யாருக்கும் பரிந்துரை செய்யாதீர்கள். அப்படி செய்தால், அந்த காணொளிகளில் உள்ள எண்களுக்கு மக்கள் அழைப்பார்கள். அந்த ஏமாற்றுப் பேர்வழிகளும் பாஸ்கர் அவர்கள் இங்கிருக்கிறார். இவ்வளவு பணம் கொண்டு வாருங்கள். அவரைப் பார்க்கலாம். என்று என் பெயரைச் சொல்லி பணம் பறிக்கின்றனர். 

நான் வெளிநாடு செல்ல வேண்டிய தகவல்களை சேகரித்துக்கொண்டு நான் அங்கு போகும் முன்னரே அவர்கள் அங்கு சென்று என் பெயரைச் சொல்லி பொடி, மருந்து என்ற பெயரில் விற்று மக்களிடம் பணம் பறிக்கின்றனர். 

செவிவழி தொடுசிகிச்சை மருத்துவத்தில் மருந்தே இல்லை என்று நான் பரப்புரை செய்கிறேன். ஆனால், சென்னையில் ஒரு வீட்டில் ஒருவர் என்பெயரைச் சொல்லி பொடி, மருந்து போன்றவற்றை விற்று பணம் பறிக்கிறார். சென்னை சென்றபோதெல்லாம் கூட்டத்தில் இவரை பற்றி சொல்வேன். யாரும் அந்த மோசடிப் பேர்வழியை தட்டிக் கேட்பதில்லை. மக்கள் அனைவரும் நான் பேசுவதை பார்க்கின்றனர். சென்று விடுகின்றனர். 

இதனாலேயே, கூட்டத்தில் பேசும்போது அந்த மோசடிப் பேர்வழிகளுக்கும் எனக்கும் எந்த சம்பந்தமுமில்லை என்று சேர்த்தே சொல்கிறேன். 

உலக மருத்துவத்தில் நடக்கிற தில்லுமுல்லுகளை எதிர்த்து நாங்கள் பரப்புரை செய்கிறோம். ஒரு தனிமனிதனுக்காக பயந்து முடங்கினால், நாளை உலக அளவில் பிரச்சனைகள் உருவாகும்போது எப்படி அவற்றையெல்லாம் தீர்ப்பது? அதனாலேயே அவர்களிடமிருந்து எங்கள் மருத்துவம் தொடர்பான தகவல்களை படிப்படியாக நாங்கள் எங்கள் வசம் கொண்டுவர வேண்டும்.' என்றார்.

என்னிடம் அலைபேசி ஊடாக ஒருசிலமுறை தான் பேசினார். ஆரம்பிக்கும் ஒவ்வொரு முறையும் பேசி முடிக்கும் ஒவ்வொரு முறையும் 'வாழ்க இவ்வையகம்' என்ற வாக்கியத்தை உச்சரிக்கிறார்.

திரு. பாஸ்கர் அவர்களின் மனம்போலவே அவருக்கும் செவிவழி தொடுசிகிச்சை தொடர்பாக பணியாற்றும் பணியாளர்களுக்கும் எல்லாம் நல்லதாகவே அமையும் என்றே நான் கருதுகிறேன். மனதார வாழ்த்தி மகிழ்கிறேன்.

-----------

Dear Sir/Madam, My brother Mr.Devarajan admitted in GH, chennai for kidney transplant which cost Rs.2 Lks. I request you to help. Thanks&regards Balamurali Ct. 
8098858383, 9944527480 
S.DEVARAJAN. AXIS BANK, TRICHY BRANCH. A/C NO.137010100267908 IFS CODE: UTIB0000137

வெற்றிநடை மாத இதழின் ஆசிரியர் திரு. பாலமுரளி அவர்களின் அண்ணனுக்கு சிறுநீரகக் கோளாறு காரணமாக மாற்று உறுப்பு அறுவை சிகிச்சை சென்னையில் செய்ய வேண்டி ஒரு மாதத்திற்கு முன்பு வரை முகநூலின் ஊடாக ரூபாய் இரண்டு இலட்சம் வரை தேவைப்படுவதாகக் கேட்டிருந்தார். 

ஒரு வாரத்திற்கு முன்பு இது தொடர்பாக ஒரு மின்னஞ்சலை அனுப்பியிருந்தேன். திரு. இலக்குவனார் திருவள்ளுவன் அவர்கள் என்னிடம் தொடர்பு கொண்டு தான் ஆரம்பிக்கவிருக்கும் 'அகரமுதல' இணைய இதழில் உதவி தேவை என வெளியிட திரு. பாலமுரளி அவர்களின் கடவுச்சீட்டு (Passport size) புகைப்படம் கேட்டார். இதனால் நான், பாலமுரளி ஐயா அவர்களிடம் அலைபேசி ஊடாக தொடர்பு கொண்டு கேட்டேன்.

தற்போதைய நிலவரப்படி, தன்னுடைய அண்ணனுக்கு சர்க்கரை வியாதி இருப்பதால், காலை வெட்டி எடுத்து விட்டதாகவும்  அதனால் அறுவைசிகிச்சை செய்ய இயலவில்லை என்றும் வீட்டில் வைத்து பார்க்க வேண்டும் என்றும் சொன்னார்.

இந்தத் தகவலை இலக்குவனார் திருவள்ளுவன் ஐயாவிடம் சொன்னேன். அவரும், பாலமுரளி ஐயாவிடம் செயற்கைக் கால் பொருத்துவது தொடர்பாக ஏதேனும் உதவி தேவைப்படுமா என்று தெரிந்து கொள்வதற்காக பாலமுறை ஐயாவை அலைபேசி ஊடாக தொடர்பு கொண்டதாகவும் இணைப்பு கிடைக்கவில்லை என்றும் என்னிடம் தெரிவித்தார்.

இது தொடர்பாக நான் பாலமுரளி ஐயாவை தொடர்பு கொண்டேன். அவர் அதிகமாகத் தயங்கினார். என்ன யோசித்தார் என்பது தெரியவில்லை.

திண்டுக்கல் ஓவியா பதிப்பகம் மூலமாக சென்னை புத்தகக் கடையிலிருந்து என்னுடைய குழந்தைகளும் பொம்மைகளும் கடவுளும் ஹைக்கூ நூல் சிங்கப்பூரில் விற்பனையில் மூலம் கிடைத்த பணம் சில வாரங்களுக்கு முன்பு இணைய வங்கிக்கணக்கு உதவியுடன் அதன் உரிமையாளர் திரு. வதிலைபிரபா அவர்களின் மூலமாக எனக்கு அனுப்பி வைக்கப் பட்டது.

அந்தத் தொகையை திரு. பாலமுரளி ஐயாவின் வங்கிக் கணக்கிற்கு என்னுடைய இணைய வங்கிக் கணக்கின் உதவியுடன் சற்றுமுன் அனுப்பி வைத்தேன். 

ஏற்கனவே, சென்னை புத்தகத் திருவிழாவில் என்னுடைய இருநூல்கள் விற்பனையின் மூலம் கிடைத்த தொகையை அவருக்கு அனுப்பி வைத்தேன்.

என்னால் முடிந்ததை நான் செய்கிறேன்.

வித்யாசாகர் அண்ணாவும் பணம் அனுப்பி வைத்ததாக கேள்விப்பட்டேன். 

உதவி செய்யும் மனப்பாங்கு உள்ள அன்பர்கள் தங்களால் முடிந்த பண உதவியை செய்யுங்கள்.

இந்தத் தகவலை மற்றவர்களிடம் பகிர்ந்து கொண்டு அவர்களையும் உதவி செய்ய, பரிந்துரை செய்யுங்கள்.

குறிப்பு:
=============

செவிவழி தொடுசிகிச்சை நிபுணர் திரு. கோவை பாஸ்கர், ஒரு உறுப்பை வெட்டி எடுப்பது என்பது தவறான மருத்துவம். அப்படி வெட்டிஎடுத்தால் மற்ற உடல் உபாதைகள் (side effects) ஏற்படும். நம் உடல் உறுப்புகளே அவற்றை சரி செய்து கொள்ளும்.அறுவை சிகிச்சையோ உறுப்பு மாற்று அறுவை சிகிச்சையோ தேவையில்லை என்கிறார்.

ஆனால், வேறு வழியில்லாததால் தான், திரு. பாலமுரளி ஐயா அவர்களின் அண்ணனுக்கு அறுவை சிகிச்சை செய்ய வேண்டிய கட்டாயம்.

ஒரு ரூபாய் செலவில்லாமல், அறுவை சிகிச்சை செய்யாமல்,  எந்தவித மருந்து மாத்திரையும் உட்கொள்ளாமல் புற்றுநோய், சிறுநீரகக் கோளாறு, இதய நோய் போன்றவற்றை குணப்படுத்த இந்தப் பதிவை பாருங்கள், படியுங்கள். http://munaivendrinaasureshkumarkavithaikal.blogspot.com/2013/07/blog-post_20.html



வருமுன் காப்போம் என்பது நம் கடமையன்றோ...
வந்தபின் பார்ப்போம் என்பது நம் மடமையன்றோ...