Sunday, April 13, 2014

நேற்று அதிகாலை நான் எழுதிய பதிவிற்கான சில வரவேற்புகளில் ஒன்று.




அருமையான தகவலையே சொல்லியிருக்கிறார் ஒரு அன்பர். நாம் இழந்தவற்றை மறந்துவிட்டோம். நினைத்துப்பார்க்க, சிந்தித்துப்பார்க்க மறந்துவிட்டோம். மாணவர்களிடம் சிலவற்றை பகிர்ந்துகொண்டேன் என்ற செய்தி மனதிற்கு மிகவும் மகிழ்ச்சியாக உள்ளது.

 http://munaivendrinaasureshkumarkavithaikal.blogspot.com/2013/11/70000.html

அன்று உரிமைகளுக்காக குரல் கொடுத்திருக்கவேண்டிய தமிழ்நாட்டு மக்களும் தமிழ்நாட்டில் வாழ்ந்த அரசியல்வாதிகளும் இந்திய தேசியம் என்றும் திராவிடம் என்றும் பேசிக்கொண்டதன் விளைவு இன்று தண்ணீர், தொழில் மற்றும் கனிம வளங்கள் ஏறத்தாழ அழிக்கப்பட்டு விட்டன.


http://munaivendrinaasureshkumarkavithaikal.blogspot.com/2014/04/blog-post_12.html

Saturday, April 12, 2014

நிலப்பரப்புகளை இழந்து தமிழ்நாட்டில் வாழும் தமிழர்களும் ஈழப்போராட்டத்தில் விடுதலை புலிகளும்

நிலப்பரப்புகளை இழந்து தமிழ்நாட்டில் வாழும் தமிழர்கள்

என்னுடைய சிறுவயதில் நடந்த நிகழ்வொன்று இன்னும் ஆழமாக என் நினைவினில் நிற்கிறது. நான் பிறந்த ஊரான முனைவென்றியில் ஒரு அண்ணன் ஒருமுறை ஏதோ ஒரு சூழலில் என்னிடம் சொன்னார் 'மாநிலங்களுக்கான எல்லைகள் பிரிக்கப்படும்போது ஆந்திராவுக்காக சென்னையை கேட்டார்கள். ஆனால் நாம் திருப்பதியை கேட்டோம். அதனால் சென்னையை நமக்கு கொடுத்து விட்டார்கள்.' என்று திருப்பதியும் நமக்குத்தான் (தமிழர்களுக்குத்தான்) கிடைத்திருக்க வேண்டியது என்ற உண்மை அந்த அண்ணனுக்கு புரியவில்லை. வரலாற்றை தவறாக எனக்கு சொல்லிவிட்டார் என்ற உண்மை சமீப காலங்களில் என்னால் உணரப்படுகிறது.

கடந்த ஓராண்டிற்கு முன்பு நான் பெங்களூரு வந்தபோது ஒரு அண்ணன் என்னிடம் அலைபேசி ஊடாக பேசியபோது சொன்னார் 'பெங்களூரு தமிழ்நாட்டிற்கு வரவேண்டியது. ஓசூர் அவர்களுக்கு போகவேண்டியது. ஆனால், பெங்களூருவை அவர்கள் வாங்கிக் கொண்டார்கள்.' என்று.

தமிழர்களின் வரலாற்றைப் பற்றி சரியான உண்மையை புரிந்துகொள்ளாமல் அதாவது திருப்பதியும் சரி, பெங்களூருவும் சரி நமக்கு வரவேண்டிய நிலப்பரப்புகள் என்ற உண்மையை புரிந்துகொள்ளாமல் 'அவர்களுக்கு (தெலுங்கர்களுக்கு) உண்மையிலேயே திருப்பதி சேரவேண்டியது. அதனை நாம் கேட்டதால்தான் அவர்கள் சென்னையை கேட்டார்கள்' என தவறாக என்னுடைய சிறுவயதில் ஒரு அண்ணன் சொன்னார். கடந்த ஓராண்டிற்கு முன்பு பெங்களூருவும் சரி அவர் சொன்ன ஓசூரூம் சரி தமிழ்நாட்டிற்கே வரவேண்டியவை என்ற உண்மையை புரிந்துகொள்ளாமல் 'கன்னடர்களுக்கு உண்மையிலேயே பெங்களூரு சேரவேண்டியது. அதனை நாம் கேட்டதால் அவர்கள் ஓசூரை கேட்டார்கள்' என தவறாக இன்னொரு அண்ணன் சொன்னார். அவர்களுக்கு எப்படி உண்மை புரியும்? ஏனெனில் இந்த உண்மைகளெல்லாம் ஏற்கனவே மூடி மறைக்கப்பட்டு தவறான செய்திகளை பரப்பி விட்டவர்கள் பலர். அதனையும் உண்மையென நம்பி நாம் உண்மையிலேயே பல நிலப்பரப்புகளை இந்தியாவின் துரோகத்தினால் அண்டை மாநிலங்களிடம் இழந்திருக்கிறோம். அப்படி கோலார், முல்லைப்பெரியாறு, குடகு மலை என நமக்கு கிடைக்கவேண்டிய அனைத்து வளங்களும் இந்தியாவின் உதவியோடு மற்றபிற மாநிலங்களுக்கு கொடுத்துவிட்டு 'வேற்றுமையில் ஒற்றுமை காணும் நாடு இந்தியா' என்று நம் தலையில் மிளகாய் அரைக்கும் வேலையை மிகக்கச்சிதமாக பாடப்புத்தகம் தொடங்கி தமிழர்கள் மூளை மழுங்கியவர்களாக வளர்த்தெடுக்கப்படுகிறார்கள். தமிழர்களின் வரலாறு திட்டமிட்டே இருட்டடிப்பு செய்யப்படுகிறது என்ற உண்மைக்கு பல சான்றுகள் உள்ளன.

அன்றே விழித்துக்கொண்ட மலையாளிகளும் தெலுங்கர்களும் கன்னடர்களும் தமிழர்களின் முட்டாள்தனத்தை மிகச்சரியாகவும் சாதூர்யமாகவும் பயன்படுத்தி நம்முடைய வளங்களையெல்லாம் அபகரித்துக்கொண்டனர். அன்று உரிமைகளுக்காக குரல் கொடுத்திருக்கவேண்டிய தமிழ்நாட்டு மக்களும் தமிழ்நாட்டில் வாழ்ந்த அரசியல்வாதிகளும் இந்திய தேசியம் என்றும் திராவிடம் என்றும் பேசிக்கொண்டதன் விளைவு இன்று நீர், தொழில் மற்றும் கனிம வளங்கள் ஏறத்தாழ அழிக்கப்பட்டு விட்டன. இதனாலேயே தென்தமிழ்நாட்டைச்சேர்ந்த பலரும் வேலைவாய்ப்பின்றி தாய்நிலமான தமிழ்நாட்டைவிட்டு வெளிநாடுகளுக்கு ஓடும் நிலைக்கு தள்ளப்படுகின்றனர்.

அந்த இரு அண்ணன்களின் மேல் எந்தவொரு தவறும் இல்லை. ஏனெனில், அவர்களுக்கு உண்மையென்ன என்று தெரிந்துகொள்ளும் வாய்ப்பை யாரும் தரவில்லை. தமிழர்கள் தொடர்பான பெரும்பாலான உண்மைகள் இருட்டடிப்பு செய்யப்படும் நிலையில் உண்மைகளை அறியும் வாய்ப்புகள் அவர்களுக்கெப்படி கிடைக்கும்? தமிழர்களின் வரலாறு தொடர்பாக தொடர்ந்து தேடிக்கொண்டிருக்கும், இந்தியாவிலிருந்து பிரிந்து தனித்தமிழ்நாடு வேண்டும் என்று ஆத்மார்த்தமாய் விரும்புகிற என்னைப்போன்ற தமிழர்களுக்கு புரியும் இந்த உண்மைகள்.

உண்மையில் தமிழ்நாடு அண்மையில் அண்டைமாநிலங்களான ஆந்திரா, கேரளா, கர்நாடகா விடம் இழந்த நிலப்பரப்புகள் கீழ்க்கண்டவாறு,

http://munaivendrinaasureshkumarkavithaikal.blogspot.in/2013/11/70000.html


தற்போதைய கேரள மாநிலத்திலிருந்து தமிழ்நாட்டிற்கு வந்து சேர்ந்திருக்க வேண்டிய நிலப்பரப்புகள்:

அகஸ்தீஸ்வரம், தோவாளை, நெய்யாற்றுப் பகுதி, நெடுமங்காடு, இடுக்கி மாவட்டத்தின் பெரும்பகுதி, வண்டிப் பெரியாறு, தேவிகுளம், பீரிமேடு, குமுளி, கொச்சின், சித்தூர், பாலக்காடு

தற்போதைய ஆந்திராவிலிருந்து தமிழ்நாட்டிற்கு வந்து சேர்ந்திருக்கவேண்டிய நிலப்பரப்புகள்:

சித்தூர் மாவட்டம், நெல்லூர் மாவட்டம், இவற்றில் தங்கிய திருப்பதி, காளகஸ்தி, புத்தூர், நகரி, ஆரணியாறு, வடபெண்ணை ஆறு, பொன்வாணி ஆறு

தற்போதைய கர்நாடகாவிலிருந்து தமிழ்நாட்டிற்கு வந்து சேர்ந்திருக்கவேண்டிய நிலப்பரப்புகள்:

பெங்களூரு, மைசூரு மாவட்டத்தின் ஒரு பகுதி (குடகு உட்பட), கோலார் தங்கவயல்.

பத்தோடு பதினொன்றாக 'நாம் தமிழர்' கட்சி:

தமக்கான மேற்சொன்ன இவ்வளவு நிலப்பரப்புகளையும் இழந்துவிட்டு எதுவுமே இழக்காததுபோலவே ஈழத்தமிழர்களுக்காக உச்சுக்கொட்டும் தமிழ்நாட்டில் வாழும் பலர் ஈழத்தை வைத்து அரசியலாக்கி ஆதாயம் தேடிக்கொண்டிருக்கின்றனர். இவர்கள் உச்சுக்கொட்டியதால் எந்தவொரு மாற்றமும் அங்கு நிகழவில்லை. 

தம்மினத்தின்மீது உண்மையான அக்கறைகொண்ட தமிழன் எப்போதும் ஈழத்தைப்பற்றியே பேசிக்கொண்டிருக்க மாட்டான். தனித்தமிழ்நாட்டைப் பற்றி சிந்திக்கத் தொடங்கியிருந்திருப்பான். ஏனெனில் தனித்தமிழ்நாட்டிற்கான தேவை இங்கு பலகாலமாய் இருக்கிறது. அதனை உணர யாரும் முன்வரவில்லை. 

நினைவு முற்றத்தை இடித்து அராஜகம் செய்த ஜெயலலிதாவை, மூவர் தூக்குதண்டனையை நீக்கக்கோரி தீக்குளித்த தோழர் செங்கொடிக்கு கிடைக்கவேண்டிய மதிப்பை அரசியல் காய்நகர்த்தி தனக்கு கிடைக்கச் செய்த ஜெயலலிதாவை, தி.மு.க விற்கு எந்தவகையிலும் குறையாமல் கொள்ளையடித்த ஜெயலலிதாவை,  ஈழத்தமிழர்களின் நலனுக்காக இலயோலா கல்லூரி மாணவர்கள் போராடியபோது அவற்றை திசைதிருப்பி விட்ட இன்ன பிற கட்சிகள் உட்பட ஜெயலலிதாவை மறந்துவிட்டு ஜெயலலிதா பிரதமராக வேண்டும் என்று சொல்லும் 'நாம் தமிழர்' கட்சியின் முகத்திரை கிழிக்கப்பட்டு விட்டது.

உண்மையை சொல்லப்போனால், காங்கிரஸ் கொள்ளைக்காரக் கட்சி அதற்கு சரிசமமாக பா.ஜ.க இங்கும் தி.மு.க கொள்ளைக்காரக் கட்சி அதற்கு சரிக்கு சமமாக அ.தி.மு.க. 

தமிழர்களின் மீதும் தமிழ்நாட்டின்மீதும் 'நாம் தமிழர்' கட்சிக்கு உண்மையிலேயே அக்கறை இருந்திருந்தால் யாரையும் ஆதரிக்காமலும் யாரையும் எதிர்க்காமலும் இருந்திருக்க வேண்டும். அல்லது, தனித்தமிழ்நாடு கேட்டு போராடியிருந்திருக்க வேண்டும். ஆனால், 'நாம் நமிழர்' கட்சியும் பத்தோடு பதினொன்றாக தனக்கான சுயநலத்தை காட்டத் துவங்கிவிட்டது. 'நாம் தமிழர்' கட்சியின் மீது வைத்த நம்பிக்கை தவிடுபொடியானது.

உண்மையில் தமிழர்கள் அனைவரும் 'வாக்களிக்க விருப்பமில்லை' என்ற சின்னத்திலேயே வாக்களிக்கலாம். அதுதான் சாலச்சிறந்தது. மனசாட்சிப்படி மிகச்சரியானதும் கூட.

'பண்ணு', 'பண்ணி' தமிழர்களும் 'மாடி' கன்னடர்களும் 'செய்' தெலுங்கர்களும்:

நான் தற்போது பெங்களூருவில் வசித்துவரும் விடுதியில் நான் மட்டுந்தான் தமிழன். என்னைத்தவிர அனைவரும் தெலுங்கர்கள், மராட்டியர்கள் மற்றும் தமிழர் அல்லாத சிலர். சில தினங்களுக்குமுன்பு என்னுடைய அறையில் வசிக்கும் தெலுங்கை தாய்மொழியாகக் கொண்ட ஒரு அன்பரோடு அவருடைய தாய்மொழியான தெலுங்கில் பேசினேன்.

அவர் ஆச்சர்யப்பட்டார். அவர் அடைந்த மகிழ்ச்சிக்கு அளவே இல்லை. (ஆங்கிலத்தில் உரையாடத்துவங்கினோம்.) 'உன்னுடைய தாய்மொழி தமிழ் தானே? நீ எப்படி தெலுங்கில் பேசுகிறாய்?' என்றார். நான் சொன்னேன் 'இங்கு பெரும்பாலும் தெலுங்கு பேசுபவர்கள் தான் இருக்கிறீர்கள். தெலுங்கு, கன்னடம், மலையாளம் உட்பட பலமொழிகளில் அவர்களின் வட்டார வழக்கு மற்றும் தங்களுக்கான மண்டலம் சார்ந்தவற்றை நீக்கிவிட்டுப் பார்த்தால் அங்கு தமிழ்தான் மிஞ்சும் என்ற உண்மை எனக்குத் தெரியும். நீங்கள் அனைவரும் உங்களுக்குள் பேசும் தெலுங்கிலிருக்கும் தமிழ் அல்லாத சொற்கள் மிகக்குறைவாகத்தானிருக்கும். அவற்றையெல்லாம் கவனிக்கத் துவங்கினேன். நீங்கள் தொலைக்காட்சியில் பார்க்கும் நிகழ்ச்சியிலும் அவர்கள் பேசும் தெலுங்கை கவனித்தேன். அவற்றிலும் அதிகபட்சமான வார்த்தைகள் இலக்கியத் தமிழ் வார்த்தைகளிலோ அல்லது தமிழர்களின் பேச்சுவழக்கு வார்த்தைகளிலோ தான் இருக்கின்றன. அவற்றையெல்லாம் கவனிக்கத் துவங்கினேன். உதாரணத்திற்கு அவசரம், அற்புதம், அன்னம், பாம்பு, புலி (இன்னும் சொல்லிக்கொண்டே போகலாம்.)' என்றேன்.

அதன்பிறகு அவரிடம் தமிழில் உள்ள வார்த்தைகளுக்கு தெலுங்கில் எப்படி சொல்வீர்கள் என்றும் எவையெல்லாம் தமிழிலிருந்து வேறுபடுகின்றன என்பனவற்றை தெரிந்துகொள்ளத் தொடங்கினேன்.

அவற்றில், 'ஆங்கிலத்தில் bus என்பதற்கு தமிழில் பேருந்து என்று சொல்வோம், தெலுங்கில் எப்படி சொல்வீர்கள்?' என்று கேட்டேன்.

அவர் சொன்னார் 'தெலுங்கிலும் bus என்றுதான் சொல்வோம்'. (அதாவது தமிழர்கள் அனைவரும் தற்போது  மிதிவண்டி என்று சொல்லவேண்டிய cycle ஐ சைக்கிள் என்றும், சாலை என்று சொல்லவேண்டிய road ஐ ரோடு என்றும் சொல்கிறோமே. இதனைப்போலத்தான்.)

நான் சொன்னேன் 'ஆங்கிலம் பேசும்போது மட்டும் ஒரு வார்த்தைகூட பிறமொழி கலக்காமல் பேசும் தமிழர்கள், தன்னுடைய தாய்மொழியான தமிழில் பேசும்போது மட்டும் ஆங்கிலம் கலந்து பேசுகிறார்கள் (இதற்கு ஈழத்தமிழர்களும் விதிவிலக்கல்ல, நானும் விதிவிலக்கல்ல. ஏனெனில் நாம் அனைவருமே அப்படித்தான் தமிழ் பேசவேண்டும் என வளர்த்தெடுக்கப் பட்டுவிட்டோம்.) என்று இதுவரை நினைத்துக்கொண்டிருந்தேன். உன்னுடைய தாய்மொழியான தெலுங்கிலும் இந்த அக்கப்போர் உள்ளதுபோலவே. கன்னடத்திலும் உண்டு என்பது எனக்கு தெரியும்.' என்றேன்.

நானே தொடர்ந்தேன் 'தமிழில் திற, மூடு, அழை, என்பன போன்றவற்றிற்கு பதிலாக open பண்ணு, close பண்ணு, call பண்ணு அல்லது open பண்ணி, close பண்ணி, call பண்ணி' என்று சொல்கிறார்கள். இதனையே கன்னடத்தில் open மாடி, close மாடி, call மாடி என்றும் தெலுங்கில் open செய், close செய், call செய் என்றும் சொல்கிறார்கள். (தெலுங்கில் செய் என்ற வார்த்தை தூய தமிழ் வார்த்தை. ஆனால், நாம் பண்ணு, பண்ணி என்று பேசுகிறோம்.)

மொழி குறித்து உங்களோடு பகிர்ந்துகொண்டு வரும் இந்த இடத்தில் சமீபத்தில் எழுதிய ஒரு காதற்கவிதையை பகிர்ந்துகொள்ள வேண்டுமென்ற விருப்பம் எழுகிறது.

எத்தனையோ பேர்
மொழியியல் நிறைஞரென
பட்டம்பெறும் போது

விழியியல் நிறைஞனென
பட்டம்பெற வைத்தாய்.

உன்னை காதலித்த
என்னை...
-------------------------

ஈழப்போராட்டத்தில் விடுதலைப்புலிகள் குறித்து ஈழத்தமிழரோடு உரையாடல்:

கடந்த ஓராண்டிற்கு முன்பு வரை சென்னையில் தங்கியிருந்தபோது அங்கு ஒரு ஈழத்தமிழரை சந்திக்க நேர்ந்தது. தொடர்ந்து நட்பு பாராட்டிக் கொண்டோம். சமீபத்தில் அவரை அங்கு சந்தித்தேன். அப்போது தமிழின விடுதலை குறித்து உரையாடத்துவங்கினோம். நான் மேலே சொன்ன தமிழர்கள் அண்டை மாநிலங்களிடம் இழந்த நிலப்பரப்புகள், தமிழர்கள் தமிழ்நாட்டில் இந்தியாவால் மறைமுகமாக பாதிக்கப்படுகிறார்கள், இது தொடர்பான செய்திகள் இருட்டடிப்பு செய்யப்படுகின்றன என்பன குறித்து பேசத்துவங்கினேன்.

'அப்படிப் பார்த்தால் முழு இலங்கையையும் நாங்கள் தமிழீழமாகக் கேட்க வேண்டும். தமிழர்கள் தமிழ்நாட்டில் இந்தியாவால் பாதிக்கப்படுகிறார்கள் என்று நீங்கள் சொல்வது வேடிக்கையாக உள்ளது. வடஇந்தியாவில் பாதிக்கப்படும் இன மக்களை விடவா தமிழின மக்கள் தமிழ்நாட்டில் பாதிக்கப்படுகிறார்கள்?' என்றார்.

'நான் இங்கு முப்பது வருடங்களாக வாழ்ந்து வருகிறேன். தாங்கள் இங்கு கடந்த ஒரு வருடமாகத்தான் வாழ்கிறீர்கள். இங்கு நடைமுறையில் என்ன நடக்கிறது என்பதை புரிந்துகொள்ள வேண்டுமெனில் இங்கேயே தொடர்ந்து வாழ்ந்து பார்க்கவேண்டும். அதனால் தங்களுக்கு அதெல்லாம் புரிய வாய்ப்பில்லை. இவையெல்லாம் என்னைப்போன்ற தமிழின விடுதலையை உள்ளன்போடு எதிர்பார்த்து உள்ளே நேசித்துக் கொண்டிருக்கக் கூடியவர்களுக்குத்தான் தெரியும். உங்கள் இனத்தைப் பற்றி நீங்கள் முதலில் யோசியுங்கள். மற்றவர் உதவியை எதிர்பார்க்கும் ஒருவர் எப்படி மற்றவர்களுக்கு உதவி செய்யமுடியும்? முதலில் நாம் பத்துப்பேருக்காவது உதவி செய்யும் நிலைக்கு உயரவேண்டும். நமக்கான, நம் இனத்திற்கான விடுதலையை நாம் முதலில் பெற்றாக வேண்டும். அதன்பிறகு மற்ற இனத்தை, இனத்தின் விடுதலையை பற்றி யோசிக்கலாம். முடிந்தால் உதவலாம். ' என்றேன்.

அப்படியே தமிழீழம் குறித்தும் விடுதலை புலிகள் குறித்தும் பேசத்துவங்கினார்.

'நான் மாணவர் பேரவைத் தலைவராக ஈழத்தில் இருந்தவன். அங்கு பலதரப்பட்ட பகுதிகளுக்கு பயணப்படுபவன். போர்க்காலங்களிளெல்லாம் நான் பாதிக்கப்பட்ட மக்களுக்கு முடிந்த உதவிகளை செய்வது, ஒருங்கிணைப்பது என்று செய்து கொண்டிருந்தேன். ௨௦௦௪ (2004) ல் சுனாமி இயற்கை சீற்றத்தின்போது ஈழத்தில் சிங்களர்களும் தமிழர்களும் இனவேற்றுமையை மறந்து சுனாமியிடமிருந்து தப்பித்தால் போதும் என்ற நிலையில் அங்கு அந்தக் காலகட்டத்தில் இன நல்லிணக்கம் ஏற்படும் சூழல் நிலவியது. அந்த வாய்ப்பை விடுதலை புலிகள் சரியாக பயன்படுத்தத் தவறிவிட்டனர். அப்போது அவர்கள் அரசாங்கத்தினரோடு பேச்சுவார்த்தை நடத்தியிருந்திருக்கலாம். அப்போது தனித்தமிழீழம் கிடைப்பதற்கான சாத்தியக்கூறுகள் இருந்தன.' என்றார். (இவ்வளவிற்கும் அவருடைய குடும்பத்தில் உள்ளவர்கள் விடுதலை புலிகளோடும் இயக்கத்தின் மேல்மட்டக் குழுக்களோடும் மிகவும் நெருங்கிய தொடர்பு உடையவர்கள் என்றும் சொன்னார்.)

விடுதலை புலிகளின் தீர்க்கதரிசனமான முடிவுகளை, போராட்டங்களை குறைசொல்லும் அளவிற்கு அல்லது விமர்சிக்கும் அளவிற்கு நாம் இன்னும் சிந்திக்கவில்லை என்பதே உண்மை.

Sunday, March 23, 2014

வைகை ஆற்றுப்பாலத்தில் விஷ்ணு பாப்பா (மொ.மு - மொட்டையடிப்பதற்கு முன், மொ.பி - மொட்டையடித்ததற்கு பின்)



இன்று என் தங்கச்சி பாப்பாவுக்கு பிறந்தநாள்

இன்று என் தங்கச்சி பாப்பா சோபனாவுக்கு பிறந்தநாள்.

இன்று என் தங்கச்சி பாப்பா சோபனாவின் பிறந்தாநாளை  கொண்டாடும் விதமாக ஈரநெஞ்சம் தொண்டு நிறுவனத்திற்கு என்னால்  தொகையை அனுப்பியிருக்கிறேன்.

Saturday, March 22, 2014

ஆஸ்திரேலியா வானொலியில் தோழர் செங்கொடி பற்றி வித்யாசாகர் அண்ணா சொன்ன கவிதை

பிரபஞ்சவாழ் தமிழர் தமிழச்சிகளுக்கு,

அன்பு வணக்கம். சில நாட்களுக்கு முன்பு நான் அனுப்பிவைத்த தோழர் செங்கொடி பற்றி வித்யாசாகர் அண்ணா சொன்ன கவிதை இன்று ஞாயிறு ஆஸ்திரேலியா நேரப்படி முற்பகல் பதினொரு மணிக்கு ஆஸ்திரேலியா தமிழ் ஒலிபரப்பு கூட்டுத்தாபன வானொலியில் ஒலிபரப்பாகவிருக்கிறது.

இதன்மூலம் பிரபஞ்சவாழ் தமிழர் தமிழச்சிகள் அனைவரும் தோழர் செங்கொடியைப் பற்றி விரிவாக தெரிந்துகொள்ள உதவியாக இருக்கும் என்ற வித்யாசாகர் அண்ணாவின் எண்ணமும் என்னுடைய விருப்பமும் எண்ணமும் நிறைவேறவிருக்கிறது.

அனுப்பி வைத்த எனக்கு ஆஸ்திரேலியா தமிழ் ஒலிபரப்பு கூட்டுத்தாபன வானொலி ஊடாக நன்றி சொன்ன நிகழ்ச்சி அறிவிப்பாளர் திரு. அப்துல் ஜாபர் அவர்களுக்கு என் நெஞ்சார்ந்த நன்றி.


---------- Forwarded message ----------
From: Abdul Jabbar
Date: 2014-03-22 23:15 GMT+05:30
Subject: உங்களது செங்கொடிக்கான அஞ்சலி.
To: munaivendri.naa.sureshkumar@gmail.com


வணக்கம்,

மேற்சொன்ன விஷயம் நாளை ஞாயிறு ஆஸ்த்ரேலிய நேரப்படி
முற்பகல் பதொனொரு மணிக்கு ஆஸ்த்ரேலியா தமிழ் ஒலிபரப்பு
கூட்டுத்தாபன வானொலியில் ஒலிபரப்பாகவிருக்கிறது.

அன்புடன் - சாத்தான்குளம் அப்துல் ஜப்பார்

--
Sathankulam Abdul Jabbar,

செங்கொடி அரங்கத்தில் வளைகுடா வானம்பாடி கவிஞர்சங்கக் கூட்டம்.. (வித்யாசாகர்) காணொளி..

அப்படிப்பட்ட பெண்ணை தீயில் தள்ளியது யாரென்று யோசிக்கையில்தான் கனத்தப் பார்வையொன்று நம் மீதும் நம் தேசத்து அரசியல் மீதும் அசிங்கமாகப் படுகிறது...

---------- Forwarded message ----------
From: வித்யாசாகர்
Date: 2014-03-16 18:52 GMT+05:30
Subject: {பகலவன் குழுமம்} - செங்கொடி அரங்கத்தில் வளைகுடா வானம்பாடி கவிஞர்சங்கக் கூட்டம்.. (வித்யாசாகர்) காணொளி..
To: "editor@vidhyasaagar.com"


14.03.2014 அன்று, குவைத் வளைகுடா வானம்பாடி கவிஞர் சங்கம் நடத்திய மாதாந்திரக் கூட்டநிகழ்வில், மூவர் விடுதலைப்போராட்டம் வெல்லும் தீர்ப்படைந்ததை எண்ணத்திலேற்று "தமிழர் பெருமை" எனும் தொடர் மாதந்திரத் தலைப்பில் இம்முறை 'தியாகி செங்கொடி'யைப் பற்றிப் பேசப்பட்டது. கீழுள்ளவாறு பதிவிடப்பட்டது.
தலைப்பு - தமிழர் பெருமையில் தாயம்மா செங்கொடி...

யூடியூப் இணைப்பு - http://youtu.be/uCB6HJni8B8
தீயள்ளித் தின்னவ
நீதிக்குத் தன்னுயிரைத் தந்தவ
யாருக்கோ செத்தவ
எனக்காகவும் அழுதவள் என் தாயம்மா
செங்கொடிக்கு வணக்கம்!

எனைச் செந்தீயில் எரித்தாலும்
தீயள்ளி என்மீது தெளித்தாலும்
தமிழாகவே எரிந்து
தமிழாகவே கரிந்து
தமிழாகவே மண்ணிலூறி
தமிழாகவே மணத்து
தமிழாக மட்டுமே எனைத் தலைநிமிரச் செய்த என் தாய்மொழிக்கு வணக்கம்!

எந் தமிழுக்கும் செவிசாய்த்து, என் தமிழர்ப்பெருமையைக் கேட்கஇசைந்த இம்மாமன்றத்திற்கும்
பெரியோர் இளையோருக்கும் எனது சிரந்தாழ்ந்த வணக்கம்!!

ஒரு குழந்தையைப் பெற்றவர்களுக்கு ஒரு கனவிருக்கும், ஒரு குழந்தையோடு வளரும் சகோதர சகோதரிகளுக்கும், அந்தக் குழந்தைப்பற்றியாதொரு கனவிருக்கும்,

கொட்ட கொட்ட கண்விழித்து ஏக்கத்தோடு நமைப் பார்த்துக்கொண்டிருக்கும் நமது சமுதாயத்திற்கும் நமைப் பற்றியோர் கனவிருக்கும்..

வளர வளர, வயசு தீர வயசு வர, வாழ்க்கைப் பற்றி; வளரும் குழந்தைக்கும் ஒரு கனவிருக்கும்.

அப்படி எல்லாக் கனவுகளையும் தீயிலிட்டு, நெருப்போடு தன் உடலையேந்திப் போராடியச் செங்கொடிக்கு மூன்று உயிருக்கான நீதி மட்டுமே கனவாக இருந்ததெனில்; அந்த உத்தமியின் பெருமயைப் பேச எனக்குக் கிடைத்த இந்த மாமன்றத்தைப் பெரிதாக மதிக்கிறேன்.. நன்றியோடு நினைக்கிறேன்..

ஒரு சின்னப்பொண்ணு அவ;
சமூக அக்கறையும் குடும்பப் பாசமும் துள்ளலும் விளையாட்டும் நிறைந்த திறமையான பெண்ணவள்..

நாள்தோறும் பக்கத்துல இருக்கிற முந்திரிதோப்புக்கு போய் அங்குள்ளப் பிள்ளைகளுக்கு பாடம் சொல்லிக் கொடுப்பது அப்பொழுதிலிருந்தே அவளுக்கு வழக்கமா இருந்திருக்கு..

ஒருமுறை ஒருத்தர் செங்கொடிகிட்ட… ‘ஏம்மா, படிப்புல இவ்வளவு ஆர்வம் காட்டுறியே… பேசாம தபால்ல பட்டப்படிப்புக்கு படி’னு சொல்லியிருக்காரு. அதுக்கு யோசிக்காம செங்கொடி சொன்ன பதிலென்ன தெரியுமா? நான் மக்களை படிக்கறேன். இதுதான் இருக்கிற கல்வியிலயே உயர்ந்த கல்வி. எந்த டிகிரியும் இதுக்கு ஈடாகாது. இந்தப் படிப்பு எனக்கு போதும்…’ என்றிருக்கிறாள்..

இசையில் அந்தப்பொண்ணுக்கு அத்தனை ஆர்வம் அதிகமாம். பறையை எடுத்து அடிக்க ஆரம்பிச்சாள்னா, இன்றைக்கெல்லாம் கேட்டுகிட்டே இருக்கலாமாம். எப்படிப்பட்ட வலு உள்ளவங்களும் ஒரு மணி நேரத்துக்கு மேல பறை அடிக்க மாட்டாங்க. கை வலிக்குமாம். ஆனா, செங்கொடி தொடர்ந்து பல மணி நேரங்கள் விடாம பறையடிப்பாளாம்.

தனி நபர் போராட்டத்தையோ அல்லது சமூக நிலை சார்ந்த தற்கொலை முயற்சியையோ எந்தச் சூழ்நிலைலயும் அவள் ஆதரிக்கவே கூடாதுன்றதுல உறுதியா இருந்திருக்கா. அப்படிப்பட்ட பெண்ணை தீயில் தள்ளியது யாரென்று யோசிக்கையில்தான் கனத்தப் பார்வையொன்று நம் மீதும் நம் தேசத்து அரசியல் மீதும் அசிங்கமாகப் படுகிறது...

தன்னோட பதினோரு வயதில்.. தவறாத நியாயம் வேணும்னு தன்னோட தந்தையையே சிறைக் கூண்டுல ஏத்தி இருக்கிறாள்..

ஒரு கூலி வேலை செய்யுற அப்பா, சின்ன வயசுலையே அம்மா இறந்துப்போறாங்க, ஒரு கட்டத்துல அப்பா இரண்டாவது திருமணம் செய்து வறாரு. வாழக் கிடைக்காத தாயன்பை அந்த அம்மா தறா, அதையும் பொறுக்காத அப்பா குடிச்சிட்டு வந்து சண்டைப் போடுறாரு, குழந்தைகளைப் போட்டு அடிக்கிறாரு. தட்டிக்கேட்ட சிற்றன்னையையும் அடித்து சண்டைக்கு இழுக்க ஒரு கட்டத்துல சண்டை முத்திப்போயி கோபத்துல மண்ணெண்ணெயை ஊற்றி அந்த இரண்டாம் தாயை எரித்தே விடுகிறான் அந்தப் படுபாவி..

எப்படியேனும் அந்த இரண்டாம் தாயை காப்பாற்றப் போராடும் செங்கொடியும் அவளுடைய தங்கச்சும் தீப்புண்ணிற்கு ஆளாகி மருத்துவமனையில் சேர்க்கப்படுகிறார்கள், அப்போது அவளுக்கு பதினோரு வயது. நேரே காவல்நிலையம் சென்று நடந்ததைக் கூறி தனது தந்தையை சிறையிலிட்டு தண்டனை வாங்கித் தருகிறாள் செங்கொடி.

கடைசியில் யாருமற்ற நிலையில் அவளுடைய சிற்றப்பா எடுத்தவளை வளர்க்கிறார். சமுதாயப் பார்வைகள் விரிகிறது செங்கொடிக்கு. மக்கள் மன்றத்துல சேர்ந்து பல தொண்டாற்றி வரும்போதுதான் ஈழத்துப் பிரச்சனைகள் அவளுடையக் கண்ணில்படவருது. முத்துக்குமார் தீக்குளிக்கிறார்.

அந்த சம்பவம் அவளுடைய மனதில் மிக ஆழமாகப் படுகிறது. எல்லா நேரத்திலும் ஆசானாக இருக்கும் தனது சிற்றப்பாவை நோக்கிக் கேட்கிறாள்; “ஏம்பா, ஏதோ ஒரு கட்டத்துல எல்லோரும் பொங்கியெழுறோம், போராடுறோம், நீதி நியாயம்னு கத்துறோம், பிறகு நாளாக ஆக அது மறந்து அந்தப் பிரச்சனைகளை அப்படியே விட்டுட்டுக் கடந்துப் போயிடுறோமே, பிறகு நமது பிரச்சனைகளுக்கெல்லாம் தீர்வு தான் என்னப்பா? என்கிறாள். அதற்கு யாராலும் பதில்சொல்ல முடியவில்லை.

அந்தச் சமயம் பார்த்துத் தான் இந்த மூவர் விடுதலைக் கோரியப் போராட்டம் எழுகிறது. தானும் கலந்துக் கொண்டு பெரும் ஆற்றலோடு களமாடுகிறாள். ஒரு கட்டத்தில் அரசியலின் அவலநிலைவெடிக்கும் ஆட்டம் துவங்க நீதி வேறாகவும் உண்மை வேறாகவும் திரிந்துவருகிறது. பொங்கி எழுகிறாள் செங்கொடி.

இதை இப்படியே விடக்கூடாது, நீதி வேண்டும். நியாயம் வெல்லனும், எனது அண்ணன்கள் அநீதியால் சாகக் கூடாது என்று முடிவெடுக்கிறாள். எத்தனையோ போராட்டம், எங்கெங்கோ கெஞ்சல், அழை என எல்லாவற்றிலும் கலந்துக்கொள்கிறாள். கடைசியில் எல்லாம் தோற்றுப் போக அவளுக்குக் கடைசியாக மிஞ்சியது; தனது உயிரும் உடலும் மட்டுமே...

அதை கயிலேந்துகிறாள். மண்ணெண்ணெய் ஊற்றினால் அணைத்துவிடுவார்கள் என்று பெட்ரோல் வாங்கி உடலின்மேல் ஊற்றிக் கொண்டு நியாயம் வேண்டும்.. நீதி வேண்டும்.. எனது அண்ணன்கள் மூவரைக் காப்பாற்று.. காப்பாற்று.. என்றுக் கத்தி கூச்சலிட்டவாறே முனகி முனகி தீயில் வெந்துக் கருகிச் சரிகிறாள்...

இங்கே தற்கொலை சரியான தீர்ப்பென்பது வாதமில்லை. அவளை அந்நிலைக்குத் தள்ளியது யார்? அவளைக் கொன்றது யார்? சமூக அக்கறைக் கொண்ட அழுத்தமானப் பெண்ணொருத்தியை அப்படி கருகி சாம்பலாக்கியது யார்? நம் திராணி போதாத அரசியல் செயல்களும் அதைத் தட்டிக்கேட்காமல் மறைமுகமாக ஊக்குவித்த நாமுமில்லையா?

அதை நாம் சரிசெய்யவேண்டும். அரசியல் நேர்மை, நடத்தையில் கண்ணியம், செயலில் பொதுதர்மம், பேச்சில் உண்மை என்று வாழ்ந்தவர்கள் நாம்; தமிழர்கள். அந்தத் தமிழரின் பெருமை காலத்திற்கும் நன்னிலத்தில் நிலைத்தல் வேண்டும். அங்ஙனம் தமிழரின் பெருமையில் ஒன்றான நீதிக்குவேண்டி உயிர்தந்த தமிழச்சி என் செங்கொடியின் தியகாத்தையும் எனது தமிழர் பெருமையில் ஒன்றெனக் கருதி.. இந்த அஞ்சலிக் கவிதையோடு விடைகொள்கிறேன்..

பசிநெருப்புக் கொள்ளுதேன்னு
பள்ளிப்படிப்பை பாதியில் விட்டவ
பட்டுத்துணிப் பாவமுன்னு
கறுப்புச் சட்டையைப் போட்டவ..

கல்லுமுள்ளு மிதித்து
காலத்துள் காலடியைப் பதிந்தவ
ஐய்யய்யோ வலிக்குதேன்னு –
அதர்மத்தை எதிர்த்து உயிராலச் சுட்டவ..

சுடும்தீன்னுத் தெரிந்தும்
துணிந்து உடலாலத் தொட்டவ
தூக்குக் கயிறு முடிச்சவிழ்க்க
மொத்தத் தீயிலேறி நின்னவ..

மூவுயிரைக் காக்க
தன்னுயிரைத் தந்தவ
என் தமிழச்சி வீரத்தைக் காட்ட
உயிரேந்திப் போனவ..

மரணதண்டனை தீர்ப்பொழிக்க
தன் தலையெழுத்தைக் கலைத்தவ
இனி அழியாப் புகழுக்குள்; நினைவுக்குள்
எம் தாயாக நிலைப்பவள் –

தங்கச்சி செங்கொடிக்கு வணக்கம் கூறி நன்றியோடு விடைகொள்கிறேன்..
குறிப்பு: செங்கொடி பற்றிய அரியத் தகவல்களை நேரடியாக ஆராய்ந்துப் பதிந்துள்ள வினவு வலைதளத்திற்கும் நன்றி..

Monday, March 17, 2014

தோழர் செங்கொடி பற்றி நான் எழுதிய பாடல் தமிழர் எழுச்சி மாத இதழில்...

கடந்த வாரம் வீட்டிற்கு சென்றிருந்தபோது தமிழர் எழுச்சி மாத இதழில் தோழர் செங்கொடி பற்றி நான் எழுதிய பாடல் பின் அட்டையின் உட்பக்கத்தில் வெளிவந்திருந்தது.

என் தங்கச்சி சோபனா என்னிடம் செங்கொடி பற்றி சுருக்கமாகக் கேட்டாள்.

'என்போன்ற தமிழின விடுதலையை விரும்புகிறவர்களுக்கு அன்புத்தங்கையானவள் தோழர் செங்கொடி. இவளுக்கு கிடைக்கவேண்டிய பேரும் புகழும் (credit) ஜெயலலிதாவிற்கு கிடைத்துக் கொண்டிருக்கிறது. தமிழ்நாட்டு மக்கள் செங்கொடியை மறந்துவிட்டார்களோ என்ற அச்சம் எழுகிறது. ' என்று சொன்னேன்.


Friday, March 7, 2014

கத்தாரிலிருந்து என் பதிவுகளுக்கான ஒரு வரவேற்பு... (அலைபேசி ஊடாக)

இன்று காலை தமிழ்நாட்டு நேரப்படி மணி பதினொன்று இருக்கலாம், (வளைகுடா நாடுகள்) கத்தாரிலிருந்து என் அலைபேசிக்கு ஒரு அழைப்பு வந்தது. 'பேசுவது சுரேஷ்குமார் தானே... தங்களின் பதிவுகளை, கட்டுரைகளை தொடர்ந்து வாசித்து வருகிறேன். குறிப்பாக தமிழர்களின் விடுதலை குறித்தான பதிவுகள், கட்டுரைகள் அருமையாக உள்ளன. தொடர்ந்து எழுதுங்கள்.' என மனதார வாழ்த்தினார்.

Tuesday, March 4, 2014

ஆழ்ந்த இரங்கல் (பாகம் - இரண்டு)

இந்தப் பதிவை முதல் பாகத்துடனேயே முடித்துவிடலாம் என்று தான் நினைத்தேன். கடந்தசில நாட்களாகவே இரண்டாம் பாகத்தை எழுதிவிட வேண்டும் என்ற மனநெருக்கடி, கட்டாயம், எழுதவேண்டிய அவசியம் இதுவே என்பன போன்ற காரணங்களால் எழுதத் துவங்குகிறேன்.

முதல் பாகத்தை படிக்காதவர்கள் http://munaivendrinaasureshkumarkavithaikal.blogspot.com/2014/02/blog-post_26.html படித்து விட்டு இந்தப் பாகத்தை தொடரலாம்.

சரியாக பத்து அல்லது பதினைந்து நாட்களுக்கு முன் பல வாரங்களுக்குப் பிறகு என் தங்கை என்னிடம் பேசினாள்.

'இடையில் பேசாததனால் வருத்தம் வேண்டாம் அண்ணா. வருத்தப்படாதீர்கள். தங்களின் அடுத்த கவிதைநூலை எப்போது வெளியிடப் போகிறீர்கள் அண்ணா? என்னுடைய முதல் கவிதைநூலை வரும் ஏப்ரல் மாதம் வெளியிட முடிவு செய்துள்ளேன். நான் இன்னும் சில வாரங்களில் அதனை தங்களுக்கு அனுப்பி வைக்கிறேன். வாழ்த்துச்செய்தி ஒன்று உங்களிடமிருந்து வேண்டும். பிழைத்திருத்தமும் செய்யவேண்டும் அண்ணா.' என்று தலைப்பை சொல்லி 'நன்றாக இருக்கிறதா அண்ணா?' என்று கேட்டு என்மீதிருந்த அன்பை வெளிப்படுத்தினாள்.

அவளைப்பற்றி நான் அவளிடம் பகிர்ந்துகொண்டதை, என்னுடைய வலைத்தளத்தில் அவளைப்பற்றி பதிவதை படித்து இப்போதும் நினைவில் நிறுத்தி என்னிடம் அவள் அதனை பகிர்ந்துகொண்ட அந்தசில நிமிடங்களில் அவள்மனதில் என்மீதிருக்கும் அதீத அன்பை ஆழமாக உணர்ந்துகொண்டேன்.

ஏற்கனவே பத்து மாதங்களுக்கு முன்பு அவள் கேட்டதுபோலவே 'உங்களுக்கு எத்தனை வயது?' என்றாள். 'முப்பது. எதற்காக ப்பா கேட்கிறாய்?' என்றேன். 'திருமணம் ஆகிவிட்டதா அண்ணா?' என்றாள். 'இல்லப்பா' என்றேன். 'இப்போது திருமணம் செய்துகொள்ளாமல் நாற்பது வயதிலா திருமணம் செய்துகொள்ளப் போகிறீர்கள்? நான் வேண்டுமானால் இங்கு பெண் பார்க்கவா அண்ணா?' என்றாள்.

என்மீது அதீத அன்பு கொண்டவர்களிடம் தான் நான் உரிமையோடு உதவி கேட்கமுடியும் என்பதால் உதவி கேட்டேன். 'ஓரிரு நாட்கள் ஆகும் அண்ணா. சொல்கிறேன் அண்ணா.' என்றாள்.

என் தங்கை பல வேலைகளில் இருப்பாள். தற்காலிகமாக மறந்து விடுவதற்கு வாய்ப்புகள் இருக்கும் என்பதால், தொடர்ந்து நினைவுபடுத்த முயன்றும் தொலைபேசி ஊடாக பேச முயற்சித்தும் தோற்றுப்போனேன். அதன்பிறகே பொதுஇடத்தில் உரிமையோடு கோபப்பட வேண்டியதாயிற்று. அன்றிரவு நிம்மதியான உறக்கமில்லை. அதிகாலை நான்கரை மணிக்கு தெரிந்தது 'சித்தப்பா மரணம்' என்று. அன்று முழுவதும் என்னால் சாப்பிட இயலவில்லை. நான் கோபப்பட்டு ஓரிரு வார்த்தைகள் கூடக்குறைய பேசியிருந்தாலும் என்மனதில் அவள் என் தங்கைதான். நான் அவளின் அண்ணா தான்.

அடுத்த சில நாட்களில் நான் அவளிடம் தெரிவித்திருந்தேன்.

'நான் உன்னை பலர் முன்னிலையில் அவமானப்படுத்திவிட்டதாகச் சொன்னாய். அப்படி யாராவது உன்மேல் கோபமாக இருந்தால் அவர்களை என்னிடம் பேசச்சொல். நான் அவர்களிடம் உண்மையை விளக்கி மன்னிப்பு கேட்கிறேன்.' என்று சொல்லியிருந்தேன்.

மேலே அவளுக்கும் எனக்கும் இடையே நடந்தவற்றைப் பற்றி எதுவுமே தெரியாமல் கருத்து கந்தசாமியாக, மாத இதழின் ஆசிரியராக, பதிப்பாளராக வலம்வரும் ஒரு 'மனுச' பிரபல எழுத்தாளர் அரைவேக்காடு போல நாட்டாமை செய்வதாக நினைத்துக்கொண்டு, கருத்து சொல்வதாக, நியாயம் சொல்வதாக நினைத்துக்கொண்டு வெளியிட்டிருந்த ஓரிரு பதிவுகளை பார்க்க நேர்ந்தது.

'மனுச' பிரபலமானவரைப் பற்றி ஒரு தகவலை இந்த இடத்தில் நினைவுகூறவேண்டியது அவசியமாகிப் போகிறது. கடந்த பத்து மாதங்களுக்கு முன்பு பெங்களூருவிற்கு புதிதாக நான் வந்திருந்தபோது ஒரு நண்பர் வீட்டில் பத்து நாட்கள் தங்கியிருந்தேன். அந்த வீட்டில் தங்கியிருந்த நண்பர் ஒருவர் தொலைக்காட்சியில் நிகழ்ச்சிகளை பார்த்துக் கொண்டிருந்தவர், வேறுவேறு சானல்களை மாற்றிக் கொண்டிருந்தார். அந்த 'மனுச' பிரபலம் எப்போதும் தொலைக்காட்சி நேரடி நிகழ்ச்சிகளில் பங்குபெறுபவர் என்பதால் அப்போது நேரலையில் அந்த பிரபலமானவர் பேசிக்கொண்டிருந்ததை பார்த்த இன்னொரு நண்பர் சானலை மாற்றிக்கொண்டிருந்த நண்பரைப் பார்த்து 'இந்த நாயா? வேறு சானலில் வை' என்றார். எனக்கு அன்று முதல் அவர் சொன்ன வார்த்தை என் மனதில் ஆழமாகவே பதிந்துவிட்டது. ஏன் அந்த நண்பர் அந்த 'மனுச' எழுத்தாளரைப் பார்த்து நாய் என்று திட்டினார் என்பதற்கான காரணம் இப்போது நன்றாகவே புரிகிறது. எந்தவிதமான பின்புலமும் இல்லாதவர்களை தெருநாய் என்று திட்டுவதும், நாய்போல் வாலை ஆட்டிக்கொண்டு ஸ்டாலினுக்கு மாலையிட்டு பிறந்தநாள் சொல்வதும், ஜெயலலிதாவை பார்க்கப் போனால் அங்கு போய் பம்முவதுமாய், தனக்குள் நாய்க்குரிய குணம் அதிகம் இருப்பதால்தான் எந்தவிதமான பின்புலமும் இல்லாதவர்களை தெருநாய் என்று திட்டுவதும் பதவியில் இருப்பவர்களிடம் பம்முவதுமாய் வாழ்வதால் தான் அன்று அந்த நண்பர் இந்த 'மனுச' பிரபலத்தை நாய் என்று திட்டினார் என்று தெள்ளத்தெளிவாக இப்போது உணர்கிறேன்.

சில தினங்களுக்குமுன்பு முகநூலில் ஒரு சிலர் இந்த 'மனுச' பிரபலத்தைப் பற்றி 'மங்கூஸ் மண்டையன்' என்று எழுதியிருந்ததையும் பார்க்க நேர்ந்தது.

ஆனந்தவிகடனில் பத்துப்பேரிலோ நூறுபேரிலோ ஒருவராக அவரை வெளியிட்டிருக்கலாம். 'அறிவுமதிக்கு என்ன தெரியும்? நான் எழுத்து, பத்திரிகை, பதிப்பகம் என்று மட்டுமல்லாமல் அரசியலில் பலகாலமாய் இயங்கிக் கொண்டிருப்பவன் என்று சொல்லிக்கொண்டு தன்னைச்சுற்றி ஒருசில அடிவருடிகளையும் ஒரு பத்து அல்லது பதினைந்து ஜால்ராக்களையும் கூட்டிகொண்டு சுயதம்பட்டம் அடித்துக்கொண்டு பிரபலம் என்ற போர்வைக்குள் இப்படியும் சிலர் இருக்கத்தான் செய்கின்றனர். அதற்கு என்ன செய்வது? அவனவன் புத்தி லட்சணம் அவ்வளவுதான் என்று நினைத்து விலகிப் போகவேண்டியது தான்.

நான் இரண்டு முக்கியமான தகவல்களை இந்த நிகழ்வுகளின்மூலம் தெரிந்துகொள்ள வேண்டியது அவசியமாகிறது.

அ. 'என்ன நடந்தது?' என்று மட்டும் பார்த்துவிட்டு கருத்து சொல்லாமல் 'ஏன் நடந்தது? எந்த சூழலில் நடந்தது?' என்றும் பார்க்கவிடாமல் இவரைப் போன்ற பிரபலங்களின் பொய்யான பிம்பமும் அகந்தையும் அவர்களுடைய அறிவை வேலை செய்யவிடாமல் மழுங்கடித்து விடுகின்றன. அதனால் இவரால் எந்த அளவு மட்டமாக இறங்கமுடியுமோ அந்த அளவுக்கு கீழிறங்கி அவர்களின் பின்புலம் பார்த்து ஆளுக்குத் தகுந்தாற்போல் திட்டுவதும், வாலாட்டுவதுமாய் இருக்கிறார்.

'என்ன நடந்தது? ஏன் நடந்தது? எந்த சூழலில் நடந்தது?' என்று பார்க்கும் அறிவை வளர்த்துக்கொள்ள வேண்டியது அவசியமான ஒன்றாகும்.

ஆ. எதிரியாகப் பார்த்தல், அதனால் கிடைக்கும் பிரதிபலன் என்று சொல்வதெல்லாம் இதற்குமுன் பல்வேறு எழுத்தாளர் குழுக்கள் ஒருவரையொருவர் திட்டிக் கொண்டதைப் பார்த்துப் பார்த்து வந்ததனால் எழுதியிருக்கிறார் அந்த 'மனுச' எழுத்தாளர். அவர்கள் அப்படி எதிர்த்துக் கொள்வதனால் கிடைக்கும் பிரதிபலனை எதிர்பார்த்திருக்கலாம். ஆனால், ஏற்கனவே நடந்த பல நிகழ்வுகளுக்கும் இப்போது நடக்கும் நிகழ்விற்கும் வித்தியாசம் இருக்கிறது. இப்படி மூளை இதற்கு முன் பார்த்தவற்றை தற்போது நடக்கும் நிகழ்வுகளோடு தொடர்புபடுத்திப் பார்ப்பதற்கு 'Artificial Neural Networks - Artificial Intelligence (A.I)' ல் 'Auto associative memory' என்கிறார்கள்.