Wednesday, October 20, 2010

முதிர்ச்சி!

என் அண்ணன் சு. கார்த்திகேயனுக்காக நான் எழுதிய கவிதை


நீ பேசும் பேச்சு...
எனக்குத் தந்தது புதுமூச்சு!
நீ ஏற்றிய ஒளி...
எனக்குக் காட்டியது புதுவழி!
நீ கொடுத்த முயற்சி...
என்வாழ்வின் வளர்ச்சி!
நீ செய்த உதவி...
எனக்குத் தந்தது உயர்பதவி!
நீ கொடுத்த தோழமை...
எனக்குக் கொடுத்தது புதுக்கவிஞனை!
நீ சிரிக்கும் சிரிப்பு...
என் உள்ளத்தில் பூரிப்பு!
நீ வளர்த்த புலமை...
எனக்கு இன்னொரு கவிதை!
நீ பிரியும் தருணம்...
எனக்கு இன்னொரு மரணம்!!

No comments: