Monday, May 9, 2022

அன்பு மகள் ரிதன்யா - புத்தம் புது மெட்டும் மெட்டில் அமைந்த பிறந்தநாள் (09-05-2022) வாழ்த்துப் பாடலும்

பாடல் வரிகளை கேட்க - https://youtu.be/2dHNHVKGzgQ


5வது பிறந்தநாள் வாழ்த்து (09-05-2022)
====================================

பெயர்: ரிதன்யா  
பெற்றோர் பெயர்: நா. வேல்முருகன் - ஆனந்தி  
சொந்த ஊர் - முனைவென்றி  
இருப்பு - பரமக்குடி 
பெற்றோர் தற்காலிகமாக: சூளைமேடு, சென்னை.

என் முதல் மகள் ரிதன்யா தன்னுடைய 5வது பிறந்தநாளை தன்னுடைய இல்லத்தில் சென்னையில் வெகு சிறப்பாக கொண்டாடவிருக்கிறாள். அப்பா முனைவென்றி நா. வேல்முருகன், அம்மா ஆனந்தி, தங்கை நிறைமதி, அத்தை சோபனா, மாமா நே. சுரேந்தர், அத்தை மகன் விஷ்ணு சபரீஷ், அத்தை மகள் பிரகதி, அம்மப்பா த. நாகராசன், அம்மம்மா கமலம் மற்றும் உற்றார் உறவினர் நண்பர்கள் அனைவரும் சேர்ந்து வாழ்த்துகிறோம்.



கண்ணுமணியே காலைநிலவே
கண்ணான கண்ணே - எந்தன்
கன்னத்தில் முத்தம் வைக்கு மழகே
பொன்னான பொன்னே
நெல்லுமணியே நீலக்குயிலே 
நெஞ்சத்தில் நீயே - அன்பைச்
சொல்லுமயிலே சொக்குமழகே 
செல்லமே தாயே

அன்னையைப் போலே அன்பைப் பொழியும்
அன்பே நிலவே - எந்தன் 
திண்ணையில் தெய்வம் வந்ததைப் போலே
தேனே அழகே
பொன்னினு முயர்ந்த பெண்ணே கண்ணே
பூவே கனியே - இங்கு
மண்வாசந் தந்திடும் மழையைப் போலே
நீயே தாயே

நடக்கும் நிலவே நிலவின் ஒளியே
அமுதே தமிழே - இங்கே
அடிக்கும் மழையே ஆனந்தக் காற்றே
அழகே மலரே
கொடுக்கும் கரமே குழந்தை மனமே
கொஞ்சல் மொழியே - என்னுள்
கிடக்கும் அறிவே கனவின் நிஜமே
நீடுழி வாழ்க