Friday, July 5, 2019

Oh my baby

Yesterday night i wrote the following english rhyme to my daughter Ritanya Servai.



👉 Oh my baby


Oh my baby oh my baby
Writing poems is my hobby

See my face see my face
Life is not a running race
God is only our own boss
Live your life like a sage

Come for a while come for a while
On your face keep always smile
Make your life with a different style
Live with pleasure in my soil

Oh my baby oh my baby
Writing poems is my hobby

ஒரு வருடத்திற்கு முன்பு மெரினா கடற்கரையில் என் மகள் ரிதன்யா சேர்வையோடு நான்...
























Tuesday, July 2, 2019

முப்பாட்டன் கதிர்காம முருகனும் விந்தணுவின் வடிவில் முருகன் கைகளில் உள்ள வேலும் கிறித்தவ இசுலாமியனின் பூர்வீகமும்

என்னுடைய சமீபத்திய பதிவுகள்.


நான் பிறந்தபோது என் அம்மா எனக்கு என்னுடைய முப்பாட்டன் முருகனின் பெயரையே சொல்லி "வேல்முருகன்" என்று பெயர் வைத்தாள். வேல்முருகன் என்பதே என்னுடைய ஜாதகத்தில் இருக்கும் பெயர்.

என்னுடைய முதற்பெயர் முனைவென்றி நா. வேல்முருகன் என்பதே.

என்னுடைய முதற்பெயர் வேல்முருகன் என்ற என் முப்பாட்டன் பெயர் தான். என் பெயரை நா. வேல்முருகன் சேர்வை என்று சான்றிதழ் தொடங்கி எல்லாவற்றிலும் மாற்ற முயற்சி எடுத்துக் கொண்டிருக்கிறேன்.

என்னுடைய ஆறு வயதில் என்னை முதல் வகுப்பில் சேர்க்கப் போகும்போது என்னுடைய அப்பா எனக்கு சுரேஷ்குமார் என்று பெயர் மாற்றம் செய்ததாக கூறினாள் என்னுடைய அம்மா.

ஆணின் விந்தணுவின் வடிவிலேயே தன்னுடைய வேலை வடிவமைத்திருக்கிறார் என்னுடைய முப்பாட்டன் முருகன். குமரிக் கண்ட அழிவின் போது தன்னுடன் மக்களை அழைத்துக் கொண்டு ஈழத்தில் உள்ள கதிர்காமத்திற்கு வந்து குடியேறி விவசாயத் தொழில் நுட்பத்தை முதன்முதலில் இந்த உலகத்திற்கு அறிமுகப் படுத்தியவர் முருகனே.

நீருழிப் பேரழிவால் மக்கட்தொகை குறைந்ததைக் கண்டு முருகன் மக்கட்தொகை பெருக்கத்தை அதிகரிக்க ஒரு மரத்தை அனைவரின் வீட்டிலும் வளர்க்கச் சொல்லி அதன் இலைகளை காய்களை உண்ணும்படி சொன்னார் முருகன். அந்த மரத்தின் பெயர் முருகன் மரம். அந்த மரமே இன்று நாம் வளர்க்கும் முருங்கை மரம். 

விந்தணுவின் வடிவத்தை ஒரு விஞ்ஞானி போல் ஆராய்ச்சி செய்து தன்னுடைய வேலை வடிவமைத்திருக்கிறார் முப்பாட்டன் முருகன்.

தமிழில் பெயர் வைப்பதால் மட்டுமே ஒருவர் தமிழராகி விட முடியாது. ஒரு வெள்ளைக்காரர் இங்கு வந்து நூறு ஆண்டுகள் தங்கிய பிறகு அவரின் பேரன் தமிழ் மொழி மீது பற்றுதலால் தனுடைய பேரை தூய தமிழில் வைப்பதால் அவரை நாம் தமிழராக ஏற்றுக் கொள்ள முடியாது.

தமிழ்நாட்டின் பூர்வ குடிகளே தூய தமிழர்கள்.தமிழரின் பூர்வ குடிகளை எப்படி தெரிந்து கொள்வது? தமிழரின் குலம் மற்றும் குடி அதாவது தமிழரின் ஜாதி அடையாளங்களை தேடுங்கள். தூய தமிழரை இனங்காணலாம்.

தமிழில் பெயர் வைக்கும் அனைவரையும் தமிழாராய் பார்க்கும் பெருந்தன்மை மனம் உள்ளதாலேயே தமிழ்நாட்டின் பூர்வீகக் குடிகளான தமிழன் வீழ்ந்து அரசியல் மற்றும் பொருளாதார பலமின்றி அடிமையாகக் கிடக்கிறான்.

இங்குள்ள பெரும்பான்மை தமிழர்கள் கிறித்தவர்களாகவும் இசுலாமியர்களாகவும் மதம் மாறியவர்கள்.

தமிழர்கள் இந்துக்கள் அல்லர். தமிழர்கள் குல தெய்வ வழிபாட்டாளர்கள். அதாவது, தமிழர்கள் பெருங்கோயில்களுக்குச் செல்லும் வழமை இல்லாதவர்கள். ஆதித்தமிழர்கள் ஆசிவக மார்க்கத்தை பின்பற்றியவர்கள். ஆசிவகத்தின் பாலைவன வடிவமே இசுலாம்.

இந்தியாவை ஆண்ட வெள்ளையர்கள் நம்மை எல்லாம் அவன் வசதிக்காக இந்துவாக, கிறித்தவனாக, இசுலாமாக பொத்தாம் பொதுவாக சொல்லிவிட்டு போய் விட்டான்.

சமீபத்தில், கர்நாடகாவில் ஒரு பிரிவினர் தாங்கள் இந்துக்கள் அல்லர், தாங்கள் லிங்காயத்துக்கள் என்று சொல்லி பிரிந்ததை நினைவு படுத்தினால் கொஞ்சமாவது அந்தந்த தேசிய இனங்களின் தொன்மையும் வரலாறும் புரியும்.

சாதி என்பது தமிழனின் குலம் மற்றும் குடி சார்ந்த அடையாளம். தமிழ்நாட்டில் தமிழர் அல்லாத பிற இனத்தவர்  குறிப்பாக தெலுங்கர்களும் யூத  பிராமணர்களும் ஊடுருவியுள்ளனர். பிற இனத்தவர்களை அடையாளம் காட்டுவதற்கு என்னுடைய குலம் மற்றும் குடிப்பட்டம் ஏனைய ஒரு சில கருவிகளோடு சேர்ந்து ஒரு கருவியாக செயல்படுகிறது.

வெங்காய ராமசாமி தமிழர்களுக்கு செய்த துரோகங்கள் கொஞ்ச நஞ்சமல்ல. சாதியை ஒழிக்கிறேன் என்று சொல்லி இல்லாத சாதிக் கலவரத்தை தூண்டி தமிழர்களின் பெயர்களுக்குப் பின்னால் உள்ள குல மற்றும் குடி வரலாற்றைத் தாங்கி நிற்கும் சாதிப் பட்டத்தை அழித்து தமிழ் தேசிய வரலாற்றை அழிக்கும் வேலையை தொடங்கி வைத்தவரே வெங்காய ராமசாமி தான்.

அடுத்தடுத்த பதிவுகளில் வெங்காய ராமசாமியின் துரோகங்களை விரிவாக சொல்கிறேன்.

தொடர்ந்து என்னுடைய பதிவுகளை படியுங்கள்.