Tuesday, April 25, 2023

விஷ்ணு பிறந்தான் - புத்தம் புது மெட்டும் மெட்டில் அமைந்த பிறந்தநாள் வாழ்த்துப் பாடலும்...

பாடல் வரிகளை கேட்க, சேர்ந்து பாடி மகிழ - https://youtu.be/W7NWrdtdx8Y



பிறந்தநாள் வாழ்த்து 
====================

நாளை (26-04-2023) என் மருமகன் விஷ்ணுவின் பிறந்தநாளிற்காய் நான் இயற்றிய மெட்டும் மெட்டிலமைந்த பாடலும் இது.

என் மருமகனின் முழுப்பெயர் விஷ்ணு சபரீஷ். இங்கு சபரி என்பது சபரி மலை ஐயப்பனாகிய கிருஷ்ணனையே குறிக்கும்.

சிவனை தன் தகப்பனாக அதாவது தன் மானசீகக் குருவாக ஏற்றவர் முருகன். அதேபோல் ஏற்றவர் இராவணனும் ஆவார். முருகனை தன் தகப்பனாக அதாவது தன் மானசீகக் குருவாக ஏற்றவர் கிருஷ்ணன்.  அதேபோல், கிருஷ்ணனை தன் தகப்பனாக அதாவது தன் மானசீகக் குருவாக ஏற்றவர் திருமால் என்ற விஷ்ணு. 

அனைவர் வீட்டிலும் வசிப்பவன், இருப்பவன் என்ற பொருளில் வீட்டினன் என்ற பெயரே வீட்னு என்று மருவி அதுவே விஷ்ணு என்றானது.





சின்ன நிலா வண்ண உலா 
போனதென்ன தம்பியுடன்
எண்ணமதில் உன்னினைவே
எங்க குல சாமி நீயே

எங்க தம்பி தங்கக் கம்பி
எங்க பலம் உன்ன நம்பி
பொங்கும் பொங்கல் தங்கு மெங்கும்
அங்க மதில் அன்பு பொங்கும்

செங்கமலம் பெத்த புள்ள
பெத்தெடுத்த முத்துப்பிள்ள
தங்கைமகன் விஷ்ணுப்பிள்ள
எங்களோட செல்லப்பிள்ள

கள்ளமில்லா உள்ளங்கொண்ட
காளை எங்க விஷ்ணுப்பிள்ள
எல்லையில்லா அன்புகொண்ட
என் தங்கை பெற்ற புள்ள

மன்னாதி மன்னனான
மருதுபாண்டி வம்சத்துல
பொன்னான சிவகங்கைச் 
சீமை பெற்ற மச்சக்காள

அப்புக்குட்டி செல்லக்குட்டி
தங்கக்கட்டி வெல்லக்கட்டி
முத்துப்பெட்டி வைரப்பெட்டி
முத்தந்தரும் கன்னுக்குட்டி 

Saturday, April 8, 2023

செறிவூட்டப் பட்ட விஷம் கலந்த அரிசி வழங்கும் (அ)நியாய விலைக்கடைகளும் திருநெல்வேலியில் நெல் வேளாண்மைக்காக நடந்த மகாபாரதப் போரின் பின்னணியும் ஒற்றை உலக ஆட்சியும் (One World Order)


இந்த விழியத்தை பார்த்து விட்டு பிறகு தொடர்ந்து இந்தப் பதிவை வாசியுங்கள்.

 


 தமிழர் உண்மை வரலாற்றைத் தெரிந்துகொண்டே தூய தமிழ் தேசியம் என்ற மூக்குக் கண்ணாடியின் வழியே பார்க்கும்போது தான், இல்லுமினாட்டி குறித்தும் உலக அரசியல் குறித்தும் தெளிவாகத் தெரிகிறது, புரிகிறது.

இல்லுமினாட்டி குறித்து ஹீலர் பாஸ்கர் சொன்னபோது கற்பனை என்று நினைத்த இல்லுமினாட்டி, உலக அரசியல் எல்லாம், இப்போது தூய தமிழ் தேசியம் தொடர்பான தொடர் தேடலுக்குப் பிறகு இல்லுமினாட்டி குறித்தும் உலக அரசியல் குறித்தும் தெளிவாகத் தெரிகிறது, புரிகிறது.

ஏனெனில் உலக அரசியலே விஞ்ஞானம் மற்றும் தொழில்நுட்பத்தில் சிறந்து விளங்கிய தமிழர்களை சுற்றித்தான் பழிவாங்க நடந்து கொண்டிருக்கிறது. நம் சித்தர்கள் அருளால், நம் முன்னோர்கள் செய்த புண்ணியத்தால், நாம் தொடர்ந்து பாதுகாக்கப் பட்டுக் கொண்டிருக்கிறோம்.

அரசாங்கமே தன் குடிமக்களை செறிவூட்டல் என்ற விஷம் கலந்த அரிசியை வழங்கி கொல்லப் பார்க்கிறது.

​அரசாங்கம் என்பது மக்களுக்கானது அல்ல. அது தனிப்பட்ட முதலாளிகளுக்கானது என்பதை நியாய விலைக்கடைகளில் அரிசி வாங்கி சாப்பிடும் ஏழை மக்கள் புரிந்து கொள்ள வேண்டும். ஏழ்மையை ஒழிப்பதற்குப் பதிலாக ஏழைகளை ஒழிக்க அரசின் பின்னால் உள்ளவர்கள் திட்டம் தீட்டி செயல்படுத்தத் துவங்கியுள்ளனர். இதுபோல் பல நாசக்காரத் திட்டங்கள் உள்ளன. 

மோடியின் பின்னாலும் ஸ்டாலினின் பின்னாலும் யூத பிராமண இல்லுமினாட்டி கும்பலே இவற்றையெல்லாம் செய்யத் தூண்டுகிறது.

இதற்கான காரணம் மகாபாரதப் போரில் தமிழரான கிருஷ்ணன் யூதச் சகுனியை கொன்றதன் பழிவாங்கல் நடவடிக்கையே.

ஏற்கனவே திருநெல்வேலியில் முதன்முதலில் நெல் விவசாயம் செய்யவேண்டி குறவர்களுக்கும் பஞ்ச பாண்டியர்களுக்கும் தாமிரபரணி ஆற்றங்கரை மற்றும் ஆதிச்சநல்லூரில் நடந்த மகாபாரதப் போரில் கிருஷ்ணன் அணுகுண்டைப் பயன்படுத்தி எதிரிகளை வீழ்த்தி சகுனியைக் கொன்றார்.

கிருஷ்ணனே e=mc2 என்ற சூத்திரத்தைக் கண்டறிந்தார். ஐன்ஸ்டீன் அல்ல.

 நெல்லுக்காகவும் அரிசிக்காகவும் நடந்த போரின் சகுனியின் சாவுக்குக் காரணமான கிருஷ்ணனின் வம்சாவழிகளாகிய தமிழர்களான நம்மை அதே அரிசியில் விஷம் வைத்துக் கொல்லத் திட்டம் தீட்டி செயல்படுத்திக் கொண்டிருக்கின்றனர்.

அநியாய விலைக்கடை அதாவது ரேஷன் கடையில் அரிசி வாங்குபவர்கள் எச்சரிக்கையாக இருங்கள்.

பத்து அரிசிக்கு ஒரு அரிசி செறிவூட்டப் பட்ட அரிசியாம். அதாவது விசமாம். கொஞ்சம் கொஞ்சமாய் கொல்லும் விசம்.

ஏற்கனவே, உப்பில் அயோடின் கலந்து உப்பில் உள்ள காலசியத்தை ஆவியாக வைத்து உப்பு என்ற பெயரில் விசத்தை சாப்பிட்டுக் கொண்டிருக்கிறோம். இதனால் பெண்களுக்கு தைராய்ட்டு நோய் அதிகம் வருகிறது. இதுவே நாளைடைவில் புற்றுநோயாக மாறுகிறது.

எனவே, மக்களே உஷார்.

அரசாங்கத்தை நம்பாதீர்கள்.

ஸ்டாலினை புகழாதீர்கள். புத்தகத் திருவிழா நடத்தினார். மரபுக் கவிதைக்காக மு. வா. சேதுராமன் அவர்களுக்கு பத்து இலட்சம் பரிசு கொடுத்தார் என்பதற்காக ஸ்டாலினை புகழாதீர்கள். அவர் தன் பதவியைக் காப்பாற்றிக் கொள்ள அவ்வாறு செய்கிறார்.

மக்களே எச்சரிக்கை.