பாடல் வரிகளை கேட்க, சேர்ந்து பாடி மகிழ - https://youtu.be/qxPI1-zlTmE
வரும் மார்ச் 2 ம் தேதி (வியாழக்கிழமை) என் மனைவி ஆனந்தியின் பிறந்தநாள். என் கற்பனையில் உருவான இந்த புத்தம் புது மெட்டும் மெட்டுக்கு அமைந்த காதல் பாடலும் என் மனைவியின் பிறந்தநாளுக்காய் நான் அவளுக்கு கொடுக்கும் அன்பு பரிசு.
இன்னும் சில தினங்களுக்குள் இதே பாடலின் பெண் ஆணைப் பார்த்து பாடுவது போலான பதிவினை, விழியத்தினை வெளியிடுவேன்.
நன்றி.
உணர்வில் கலந்து உயிரில் நிறைந்த
எனது சுவாசம் நீயடி
உறக்கம் நுழைந்து கனவில் கலந்த
காதல் கவிதை நீயடி
பெண்ணே நீ யாரடி
எந்தன் வானும் மண்ணும்
பெண்ணே நீ யாரடி
எந்தன் வாழ்வும் சாவும்
பெண்ணே நீ யாரடி
எந்தன் கவியும் இசையும்
பெண்ணே நீ யாரடி
எந்தன் உயிரும் மூச்சும்
மனதில் எங்கும் மகிழ்வாய் நிறைந்த
எந்தன் தாயும் நீயடி
எனது உடலின் உள்ளே ஓடும்
இரத்த நாளம் நீயடி
பெண்ணே நீ யாரடி
எந்தன் இரவும் பகலும்
பெண்ணே நீ யாரடி
எந்தன் வலியும் மருந்தும்
பெண்ணே நீ யாரடி
எந்தன் வெயிலும் மழையும்
பெண்ணே நீ யாரடி
எந்தன் அறிவும் மடமும்
அழகு மலராய் அருகில் நிற்கும்
எந்தன் அழகு தேவதை
விழிகள் நனைத்து விரலும் கோர்த்த
எந்தன் நெஞ்சின் மாமழை
பெண்ணே நீ யாரடி
எந்தன் விருப்பும் வெறுப்பும்
பெண்ணே நீ யாரடி
எந்தன் நீரும் நெருப்பும்
பெண்ணே நீ யாரடி
எந்தன் முதலும் முடிவும்
பெண்ணே நீ யாரடி
எந்தன் பேச்சின் மௌனம்