என் மகள் ரிதன்யா பிறந்தபோது ஒரு புகைப்படம் எடுத்து வைத்திருந்தேன். என் தங்கை பார்த்துவிட்டு "அண்ணே, பாப்பா பிறக்கும்போதே கடவுள் பாப்பாவுக்கு கண் மை, lip stick, nail polish எல்லாம் போட்டுத் தான் அனுப்பியிருக்கிறார்" என்று சொன்னாள்.
நான் கடந்த ஐந்தாண்டுகளாக பாடல்கள் மெட்டமைத்து எழுதிப் பாடி வருகிறேன். கடந்த 2005 ம் ஆண்டு தொடங்கி கவிதைகள் எழுதி வருகிறேன். நான் எழுதிய பாடல்களில் மனதிற்கு மிக நெருக்கமான பாடல்களில் இதுவும் ஒன்று. ஏனெனில், என் மூத்த மகள் ரிதன்யா "என் அறிவின் முழுமை, என் உயிரின் உருவம்" என்பதை நன்றாகவே உணர்ந்து கடந்த வருடங்களில் நான் அவளுக்கு எழுதிய பாடல்களில் கொண்டு வர முயற்சித்து ஓரளவுக்குக் கொண்டு வந்திருந்தேன். ஆனால், இந்தப் பாடலில் மெட்டுக்குள் அப்படியே கச்சிதமாக அமர்ந்து பல வருடங்களாக நான் மெட்டுக்குள் என் மகள் பற்றி மேலே சொல்ல நினைத்ததையும் முழுமையாகவே சொல்லியிருக்கிறேன்.
பாடல் வரிகளும் மெட்டும் என்னிடமிருந்து அருமையாக வந்திருக்கின்றன.
பாடல் வரிகளை கேட்க, சேர்ந்து பாடி மகிழ - https://youtube.com/shorts/Frmetd1DO8s?feature=share
உன் முகம் பார்ப்பதும்
ஒன்று தான் கண்மணியே
நீ வந்து நிற்பதும்
வெண்ணிலா ஒளிர்வதும்
ஒன்று தான் கண்மணியே
மலரே என் அருகில் வாடா
மகளே என் அழகே வாடா
மலரும் காலைப் பொழுதும் வாடா
மனதில் என்றும் மகிழ்ச்சி வாடா
(வானவில்)
----
நீ வந்த பின்பு தான்
என் வாழ்வில் வசந்தம்
என் அன்பு தேவதையே
உன் செல்லம் நானாக
என் செல்லம் நீயாக
எப்போதும் பேரழகி
அழகே என் உயிரின் உருவம்
அமுதே என் அறிவின் மொத்தம்
நிலவே என் கனவில் சத்தம்
அடடா நீ கொடுக்கும் முத்தம்
(வானவில்)
----
மழையினில் நனைவதும்
உன் அன்பில் நனைவதும்
ஒன்று தான் கண்மணியே
குயில் பாட்டுக் கேட்பதும்
உன் குரல் கேட்பதும்
ஒன்று தான் கண்மணியே
நிலவே உனில் கறைகள் இல்லை
மகளே நீ அன்பின் எல்லை
மலரே இதழ் சிரிக்கும் முல்லை
அடடா பேரழகே வாடா
(வானவில்)
----
விண்மீன்கள் பார்ப்பதும்
உன் கண்கள் பார்ப்பதும்
ஒன்று தான் கண்மணியே
இசை கொஞ்சம் கேட்பதும்
உன் கொலுசொலி இசைப்பதும்
ஒன்றுதான் கண்மணியே
இசையாய் நீயும் மலர்ந்த செல்லம்
திசைகள் எட்டும் விரிந்த உள்ளம்
அசைந்தே இசை மீட்டும் இல்லம்
என்னுயிரே நீடூழி வாழ்க
(வானவில்)
----




