பாடல் வரிகளை கேட்க, சேர்ந்து பாடி மகிழ - https://youtube.com/shorts/eEAyboetAF8
சில தினங்களுக்கு முன்பு தான் கள்ளழகராகிய திருமாலாகிய அனைவரின் வீட்டில் வசிப்பவன் என்ற பொருளில் வீட்டினன் -> வீட்னு -> விஷ்ணு என்ற விஷ்ணுவின் ஆற்றில் இறங்கும் விழா வெகு விமர்சையாக மதுரை, பரமக்குடி போன்ற ஊர்களில் கொண்டாடப்பட்டது. இப்போது, எங்கள் வீட்டு விஷ்ணுவுக்கு இன்று பிறந்தநாள். நான் எழுதிய இப்பாடலைப் பாடி வாழ்த்துவோம்.
என்றென்றும் தங்கக்கம்பி
எங்க குலம் உன்ன நம்பி
எந்த னுயிர் சுட்டித்தம்பி
தத்தி வரும் மானே - என்
தங்கை மகன் தானே
சொட்டும் மலைத் தேனே - சிவ
கங்கைச் சீமைக் கோனே
முத்தந்தரும் மச்சக்காள
முழுநிலவின் அழகு போல
சொத்துசுகம் எல்லாம் ஆள
செல்ல மகன் பிறந்த வேள
கண்ணின் மணி போல - இங்கு
கவிதை பாடும் சோல
கண்ணன் பிறந்த நாள - இங்கு
கவியும் வாழ்த்தும் வேள
பள்ளி செல்லும் மான்குட்டி
துள்ளி ஓடும் வான்முட்டி
வெள்ளி நிலா எட்டியெட்டி
அள்ளி அணைக்கும் சுட்டிச்சுட்டி
தங்கத் தம்பி செல்லம்
முத்தம் கொடுக்கும் வெல்லம்
பொங்கும் அன்பு வெள்ளம்
பாடி வாழ்த்தி வாழ்த்துச் சொல்லும்