Wednesday, October 20, 2010

இளவரசி!

2006 ம் ஆண்டு நான்காம் பருவத் தேர்வு முடிந்தவுடன் நான் என் ஊருக்கு செல்லாமல் விடுதியிலேயே தங்கி விட்டேன். அவள் மறுதேர்வெழுத வரும்போது அவளிடம் இந்த கவிதையை கொடுத்து காதலையும் சொல்லி விடலாம் என்று நினைத்திருந்தேன். ஆனால் கவிதையை கொடுக்கவோ காதலை சொல்லவோ அன்று எனக்கு தைரியம் வரவில்லை.


எனக்குத்தான் நீ அரசி!
எப்போதுமே இளவரசி!!
எனக்கு மட்டுந்தான் நீ அரசி!
எப்போதுமே இளவரசி! - என்விழிகளால்
உனைமெல்ல உரசி - கவிதைகள்
பலவடித்தேன் கலையரசி!!

கோட்டைக்கு நீதான் அரசி! - பட்டுக்
கோட்டைக்கு நீதான் அரசி! - என்
பாட்டுக்கு நீதான் தலைவி!

பகலெல்லாம் உன்பேச்சு!
இரவெல்லாம் உன்மூச்சு!!

உன்னைப்போலொரு குணவதியை
இவ்வுலகில் கண்டதில்லையடி!

அமைதியாகவும் இருக்கிறாயடி!
அழகாகவும் இருக்கிறாயடி! - என்னிடம்
பழகத்தான் மறுக்கிறாயடி! - என்னைவிட்டு
விலகத்தான் நினைக்கிறாயடி!

நாம் பழகியது கொஞ்சம்தானடி!
அதனால் இளகியது என்நெஞ்சம்தானடி!
கண்களின் மோதல்தானடி! - அதில்
கருவானது நம்காதல்தானடி!!

சத்தமில்லாப் பெண்ணிலவே!
நித்தமும் உன்நினைவே!!

என் கவிதைக்கொரு பரிசாய்
நீ உன்னைத்தருவாயா இளவரசி?

கவிதையான உன்னிடமே யாசிக்கிறேன்!
கவிதைஎழுதி உன்னை நேசிக்கிறேன்! - என்றும்
உன்மூச்சையே சுவாசிக்கிறேன்! - இரவில்
உன்பெயரையே வாசிக்கிறேன்!!

என் கவிதைக்கொரு பரிசாய்
நீ உன்னைத்தருவாயா இளவரசி?
என்னோடு வாழவருவாயா இளவரசி??

No comments: