Wednesday, November 7, 2012

பிள்ளையார் சதூர்த்தி

பல்லக்கிலும் தேரிலும்
மாட்டு வண்டிகளிலும்
ஊர்வலம் போகின்றன
சிறிதும் பெரிதுமாய்
பிள்ளையார் சிலைகள்

கோஷங்கள்
முழக்கங்கள் இட்டபடி
பக்தர்கள்

கோடிகளில் கடன்வாங்கிவிட்டு
கட்டமுடியவில்லையென
பல்லிளிக்கும் புறம்போக்கிற்கு
பல்லக்குத் தூக்குகின்றன
ஊழலில் திளைத்த எலிகள்

விலையேற்றி விலையேற்றி
வாழ்வுரிமையை
கேள்விக்குறியாக்கும்
பெருச்சாளிகளுக்கு
விருப்பமில்லை
ஏழைகளைப் பற்றி சிந்திக்க...

ஊழல் செய்த
பெருச்சாளிகள் அனைத்துமே
சிறையில் சுகபோகமாய்
இருந்துவிட்டு
வெளியே வருகின்றன
தியாகிகள் போல்...

பெருச்சாளிகள் செய்த
கோடிகோடி ஊழல்களை
அடிக்கடி கரைத்துவிடுகின்றன
ஆட்டுமந்தைகள்
நினைவாற்றல் குறைபாடுள்ள
மனக்கடல்களில்...
ஆண்டுக்கொருமுறை
பிள்ளையாரை
கடலில் கரைப்பதுபோல...

சுயநினைவிற்கு வந்தவனாய்
பிள்ளையாரையும் பல்லக்கையும்
வெறித்த கண்களால் பார்த்தபடி
நிற்கிறான்
அந்த நடைபாதைவாசி

1 comment:

PUTHIYAMAADHAVI said...

kavithai arumaiyaaka vanthuLLathu.
vaazththukkaL