Monday, August 5, 2013

காதல்நினைவுகளில்...

காதலைப் பற்றி எழுதாதவன் கவிஞனல்ல. அதற்காக, காதலைப் பற்றி மட்டுமே எழுதிக் கொண்டிருப்பவனும் கவிஞனல்ல.

இது என்னுடைய கருத்து.

எனக்குத் தெரிந்தவரை மகாகவி பாரதி (ஆணுக்கும் பெண்ணுக்கும் இடையே மலரும்) காதலைப் பற்றியும் ஓரிரு கவிதைகளில் சொல்லியிருக்கிறான்.

காதலினால் மானுடர்க்குக் கலவி யுண்டாம்;
கலவியிலே மானுடர்க்குக் கவலை தீரும்;
காதலினால் மானுடர்க்குக் கவிதை யுண்டாம்;
கானமுண்டாம்;சிற்பமுதற் கலைக ளுண்டாம்;
ஆதலினால் காதல்செய்வீர்;உலகத் தீரே!
அஃதன்றோ இவ்வுலகத் தலைமை யின்பம்;
காதலினால் சாகாம லிருத்தல் கூடும்;
கவலைபோம்,அதனாலே மரணம் பொய்யாம்.


காதலைப் பற்றி எழுதி ஐந்து மாதங்கள் ஆகின்றன. சற்றுமுன் தோன்றிய ஒரு கவிதை.

நிரந்தரமாய்
தொலைந்துவிட வேண்டுமென்றுதான்
மூழ்குகிறேன்
நம் காதல்நினைவுகளில்...

எப்படியும் என்னை
நிஜ உலகிற்கு அழைத்து வந்துவிடுகிறது....

கடைசியாய் உன் முகம்பார்த்து
உன்னையும் உன் அம்மாவையும்
நான் வழியனுப்ப
நீ பயணித்த
அந்த இரயிலின் சத்தம்

No comments: