Wednesday, October 24, 2012

தமிழீழம்

இடிவிழுந்த தேசம் – எங்கள்
ஈழர்வாழும் தேசம்
விடியல்தேடும் தேசம் – எங்கள்
வீரத்தமிழர் தேசம்
கடலுஞ்சூழ்ந்த தேசம் – நற்
கவிதைகூறும் தேசம்
மிடிமைகொன்ற தேசம் – எங்கள்
மேன்மைபோற்றும் தேசம்

பண்பும் போற்றுந்தேசம் – தமிழ்ப்
பழமை வாழுந்தேசம்
அண்மை தூரந்தேசம் – நல்
அழகு வாழுந்தேசம்
அன்னைத் தமிழர்தேசம் – நல்
அறமும் வாழுந்தேசம்
அன்பு போற்றுந்தேசம் – தமிழ்
அருமை தெரிந்ததேசம்

Sunday, August 19, 2012

மல்லிகைப்பூ

காலையில் சூடிய
மல்லிகைப்பூ வாடியதென்று
மாலைப்பொழுதில்
குப்பைத்தொட்டியில் எறிகிறாய்

உன் கூந்தலைவிட்டு
பிரியமனமின்றி
வாடிவதங்கிப்போனது
வாடாத மல்லிகைப்பூ!!

Sunday, August 12, 2012

காமராசர்

ஏட்டுக்கறி சுவைக்காத
நாடுபோற்றும் நல்லவர்
காமராசர்
-------------------------------------------------------

சுதந்திர தினம்

அகிம்சையெனும் ஆயுதமேந்த
அடிபணிந்தனர் ஆங்கிலேயர்
கிடைத்தது சுதந்திரம்
-------------------------------------------------------

சுதந்திரம் கொடுத்த சுதந்திரத்தில்
சுதந்திரமாய்ச் சுற்றித்திரிகிறது
ஜாதி
-------------------------------------------------------

விடுதலை கிடைத்தும்
விழலுக் கிறைத்த நீரானது
ஊழல் அரசியலால்
-------------------------------------------------------

நாம் விடுதலையடைந்ததை
ஆண்டுக்கொருமுறை நினைவுபடுத்துகிறது
சுதந்திரதினம்
-------------------------------------------------------

பள்ளிகளில் மிட்டாய் கொடுக்கப்பட்டது
குழந்தைகள் நன்றி சொன்னனர்
சுதந்திர தினத்திற்கு
-------------------------------------------------------


இக்கவிதை வெளிவந்துள்ள ஊடகங்கள்

1. பதிவுகள் (இணைய இதழ்) - 15-08-2012

2. தமிழ்முரசு - 02-09-2012

3. இராணி - 09-09-2012

4. தமிழ்த்தோட்டம் (இணைய இதழ்) - 16-10-2012

5. அருவி - 10-11-2012 

தமிழா... (இந்தியாவை) விட்டு விடுதலைகாண்

தமிழனுக் கென்று தாய்நா டிரண்டு
தரணியில் வேண்டும் தோழா வாடா
செம்மொழித் தமிழன் செருப்பாய் இழிவாய்
இருப்பதும் முறையோ? பொறுப்பதும் சரியோ?
எம்மொழி தமிழ்மொழி என்றொரு பற்றுதல்
இங்ஙனம் வேண்டும் எழுந்திரு தோழா
பொம்மையைப் போலவே பழந்தமிழ்க் கூட்டம்
பகுத்தறி வெங்கே போனது தோழா?

இந்தியன் என்றொரு இனமிங் கில்லை
இருந்தால் தமிழர்க் கதுவே தொல்லை
செந்தமிழ் மொழியெங்கள் சிறப்பின் எல்லை
சேற்றினில் வாழ்தல் சிறப்பிங் கில்லை
சிந்திய செந்நீர் சோகத்தின் எல்லை
சிங்களன் வெற்றி நிரந்தர மில்லை
முந்தைய தமிழர் மோகத்தின் பிள்ளை
முத்தமிழ் எத்திசை முழங்கவு மில்லை

வேதனை யுடனே வாழ்ந்தது போதும்
வேள்விகள் செய்தொரு வாளெடு தீரும்
தீதிந்த அரசியல் தெளிந்தால் மாறும்
தேருதல் தானிங்கு தீர்வினைக் கூறும்
ஜாதியைச் சொல்லி சேர்ந்தது போதும்
செம்மொழித் தமிழால் சேர்ந்திடல் பாரும்
நீதியும் விழித்தே நேர்மையைக் கூறும்
நேசிக்கும் தமிழகம் தனிநா டாகும்

இன்னொரு சுதந்திரம் வேண்டுமே நமக்கு
இமைபோல் காத்தது என்தமிழ் மொழியே
பொன்னென மின்னும் புகழுடைத் தமிழா
புழுதியில் சகதியில் பிழைப்பதும் தகுமா?
இன்னல்கள் தந்திடும் இந்தியா எப்படி
என்னுடைத் தமிழனின் இடுக்கண் களையும்?
அன்னைத் தமிழினை அடியேன் மறவேன்
அன்பால் அவளெனை அனுதினம் காப்பாள்


இக்கவிதை வெளிவந்துள்ள ஊடகங்கள்

1. காற்றுவெளி (இலண்டன் இதழ்) – 31-08-2012

2. தமிழர் எழுச்சி - 01-09-2012

ஏழை

கரைந்தது காகம்
விருந்தாளிகள் வரவில்லை
ஏழையின் குடிசைக்கு
-------------------------------------------------------

மின்சாரம் தேவையில்லை
நிலவொளி போதும்
ஏழையின் குடிசைக்கு
-------------------------------------------------------

வயிற்றுவலி இல்லை
வயிற்றில் ஈரத்துணி
கண்ணீரில் ஏழை
-------------------------------------------------------

ஏழை சிரித்தான்
இறைவனைக் காணவில்லை
முதுமொழி பொய்யானது
-------------------------------------------------------

பணமழை பெய்தது
ஏழை சிரித்தான்
தேர்தல் வரவால்...
-------------------------------------------------------

கோடிகளில் ஊழல்
கோடிகளில் வாழ்க்கை
நாதியில்லாத் தமிழன்
-------------------------------------------------------

செல்போன் இலவசம்
பிச்சைக்காரன் மகிழ்ந்தான்
சா(வே)தனை இந்தியா
-------------------------------------------------------

அம்மனுக்கு கூழ் ஊற்றினார்கள்
வயிறு நிறைந்தது
ஏழைகளுக்கு
-------------------------------------------------------

வறுமையில் வாடாத
உழவனையும் புலவனையும்
பார்ப்பதரிது
-------------------------------------------------------


இக்கவிதை வெளிவந்துள்ள ஊடகங்கள்

1. மூன்றாம் கோணம் (இணைய இதழ்) – 28-08-2012

2. வெற்றிநடை - 01-09-2012

3. அருவி - 10-11-2012

Monday, August 6, 2012

தங்கக்குதிரை

 29-07-2012 அன்று கல்கி வாரஇதழில் ஒரு தங்கக்குதிரை படத்தைக் கொடுத்து கவிதை எழுதி அனுப்பச் சொன்னதன் பேரில் நான் எழுதி அனுப்பியிருந்த கவிதைகள்.

தன் சாம்பலிலிருந்து
உயிர்த்தெழுந்தோடும்
பீனிக்ஸ் குதிரை
-------------------------------------------------------

நெருப்பில் வெந்து
நீரில் குளித்த
தங்கக்குதிரை
-------------------------------------------------------

தணலில் குளித்து
தெறித்தோடும் தங்கக்குதிரை
தன்னம்பிக்கையால்தான்
-------------------------------------------------------

உன்னை வென்றிட
உலகிலில்லை யாரும்
ஓடு குதிரையே
-------------------------------------------------------

ஏழை இந்தியாவின்
கனவுக்குதிரையே
வருக வருக
-------------------------------------------------------

இயக்குனர்கள் உனைப்பார்த்தால்
கிடைத்துவிடும்
வெள்ளித்திரை வாய்ப்பு
-------------------------------------------------------

மஞ்சள்நிறக் குதிரையொன்று
மான்போல் ஓடுகிறது
மகிழ்ச்சியில் திளைத்த மனமாய்...
-------------------------------------------------------

எந்த ஓட்டப்பந்தயத்தில்
கலந்துகொண்டாய்?
இவ்வளவு வேகமாய் ஓடுகிறாய்?
-------------------------------------------------------

அந்திமாலைப் பொழுதின்
வெளிச்சத்தில்
தங்கக்குதிரை
-------------------------------------------------------

Friday, July 27, 2012

வாழைமரம்

தன்னையே அர்ப்பணிக்கிறது
தண்ணீர் ஊற்றி வளர்த்தவனுக்காக
வாழைமரம்

தமிழா...

மாணவனுக்கிருக்கும் மதிப்பு
மீனவனுக்கில்லை
தமிழ்நாட்டில்
-------------------------------------------------------

கண்ணீரில் வாழ்கிறான்
தண்ணீரில் பிழைக்கிறான்
தமிழக மீனவன்
-------------------------------------------------------

பாஸ்மார்க் பெறவில்லை
டாஸ்மாக் நடத்தும்
தமிழக அரசு
-------------------------------------------------------

கள்ளச்சாரயத்துக்குத் தடை
டாஸ்மாக்கிற்கு கடை
வாழ்க தமிழ்நாடு(?????)!!!!
-------------------------------------------------------

ஆறறிவிருந்தும்
பயனில்லாமல்ப் போனது
தமிழனுக்கு மட்டும்
-------------------------------------------------------

நாதியில்லாத் தமிழனுக்கு
ஆதரவளிக்கின்றன
டாஸ்மாக் கடைகள்
-------------------------------------------------------

தமிழ்நாட்டின் சாதனை
கோடிகோடியாய் வசூல்
டாஸ்மாக் கடைகளால்
-------------------------------------------------------

தலைகுனிந்த ‘குடி’மக்களால்
தலைநிமிர்ந்து நிற்கிறது
தமிழக அரசு
-------------------------------------------------------

கொள்ளையடித்தவன்
குடியரசுத் தலைவன்
இந்தியாவில்...
-------------------------------------------------------

ஊழல் குற்றவாளி
முதலமைச்சராய்...
என் தமிழ்நாட்டில்(??????)!!!!!!!!!!
-------------------------------------------------------

கடலில் அழும் மீன்போல்
கரையில் அழுகிறாள்
மீனவனின் மனைவி
-------------------------------------------------------

ஆட்சி மாறுகிறது
காட்சி மாறவில்லை
தமிழ்நாட்டில்...
-------------------------------------------------------

கோடிகளில் வாழ்வதும்
கோடிகளில் வாழ்வதும்
இந்தியாவில் மட்டுந்தான்...
-------------------------------------------------------

டாப்டென் பணக்கார்கள்
வசிக்கும் ஏழைநாடு(??????????)
இந்தியா
-------------------------------------------------------

உப்பில்லா உணவுபோலவே
துப்பில்லா அரசியல்வாதிகள்
தமிழ்நாட்டில்....
-------------------------------------------------------

தமிழன் எப்போதுமே
பலியாடுதான்
உலகநாடுகளின் பார்வையில்...
-------------------------------------------------------

பச்சோந்தியைத்
தோற்கடித்து விட்டனர்
தமிழ்நாட்டு அரசியல்வாதிகள்
-------------------------------------------------------

நம்பித்தான் ஆகவேண்டும்
நாணயத்துக்கு மதிப்பில்லை
இந்திய நாட்டில்
-------------------------------------------------------

அரசியல்வாதிகளைவிட
விலைமாதர்கள் பரவாயில்லை
தமிழ்நாட்டில்
-------------------------------------------------------

களவுபோன உடமைகளைப்பற்றி
கவலைப்படாத உள்ளம்
தமிழனுக்கு மட்டுந்தான்
-------------------------------------------------------


இக்கவிதைகள் வெளிவந்துள்ள ஊடகங்கள்

1. பதிவுகள் (இணைய இதழ்) - 07-09-2012

2. தமிழ்த்தோட்டம் (இணைய இதழ்) - 16-10-2012

Monday, July 23, 2012

வாழிய சமுதாய நலச்சங்கம்

 கடந்த ஜூலை 19, 2012 வியாழன் அன்று இரவு 8 மணியளவில் சென்னை குரோம்பெட்டியில் இருந்து ஒரு அன்பர் என்னோடு அலைபேசியில் பேசினார். தானும் தான் சார்ந்த ஒரு சிலரும் சேர்ந்து அங்கு சமுதாய நலச்சங்கம் ஒன்றை நடத்துவதாகவும் அதனுடைய முதலாமாண்டு நிறைவு விழாவையொட்டி தனக்கு ஒரு சிறு வாழ்த்து கவிதை வேண்டும். எழுதி அனுப்புங்கள் என என்னிடம் கேட்டார். அன்றிரவு நான் எழுதிய கவிதை.


பெற்றோரே கற்றோரே உற்றோரே மற்றோரே
பெருமையுள்ள பெரியோரே வணக்கமுங்க வணக்கம்
சுற்றியுள்ள மக்களுக்கு சமுதாயத் தொண்டாற்றும்
சமுதாய நலச்சங்கம் சிறப்புடனே வாழியவே
மற்றவரின் துயர்துடைக்கும் மனமிங்கு வாழியவே