Friday, June 25, 2010

நூறுநூறு ஆசை!

நூறுநூறு ஆசை! - எல்லாமே
வேறுவேறு ஆசை!!

எல்லாரிடமும் அன்புடன் வாழ ஆசை!
நல்லார் போல் பண்புடன் வாழ ஆசை!
கல்லாமை இல்லாமையாக்க ஆசை! - காதலியின்
கடைக்கண் பார்வை கிடைக்க ஆசை!!

நண்பனைக்கூட சகோதரனாய் மாற்ற ஆசை!
நட்பில் கற்பை ஏற்ற ஆசை!
ஜாதியொழிய ஆசை! - நானும்
சாதிக்கத்தான் ஆசை!!
மதம்பிடிக்கா மனிதனைப் பார்க்க ஆசை! - காதல்
மதம்பிடித்த மனிதனைப்பார்க்க ஆசை!!

தமிழ்மண்ணில் என்னுடலை
புதைக்கச் சொல்ல ஆசை!
பரந்த விண்ணிலே என்னுயிரை
கண்ணீர் சிந்தச் சொல்ல ஆசை!!

நூறுநூறு ஆசை! - எல்லாமே
வேறுவேறு ஆசை!! - எல்லாமே
நிறைவேறாத ஆசைகள்தான்!!

எது காதல்?

கடலை போடச் சொல்வதல்ல
காதல்! - கண்ணீரில்
கவிதை பாடச்சொல்வதுதானே
காதல்!!

உடலைப் பார்த்து வருவதல்ல
காதல்! - உயிரை
உருக்கி எடுப்பதுதானே
காதல்!!

விடலையில் தோன்றும்
விஷப்பரு அல்ல
காதல்! - சிறு
விதையில் தழைக்கும் முளைக்கருதானே
காதல்!!

வறுமைக்கொரு பாடல்!

நாளும் கிழமையும்
நலிந்தோர்க்கில்லை!
நாளும் உழைத்தும்
வறுமையால் தொல்லை!!
கிராமங்கள்தானே
இந்தியாவின் செல்லப்பிள்ளை! - தமிழ்
அகராதியிலிருந் தகற்றுவோம்
வறுமையெனும் சொல்லை!
கண்ணீர் மட்டுந்தானா
உழைப்பவனின் எல்லை???
இல்லை இல்லை
தன்னம்பிக்கை நீண்டால்...
தன்னை நம்பி கைநீண்டால்
துயரமினி இல்லை!!

வறுமையின் நிறம் சிவப்பு!

தாய்க்கும் பிள்ளைக்கும்
ஜென்மஜென்ம பந்தம்!
வறுமைக்கும் குருதிக்கும்
ஏதேதோ சொந்தம்!!

பச்சிளங்குழந்தை கதறினால்
பதறுவாள் தாய்! - தன்
குருதியை பாலாய் மாற்றுவாள்! - மன
உறுதியை பால்வடிவில் ஊட்டுவாள்!!

வயிற்றுப் பிழைப்பிற்காய்
கயிற்றில் நடக்கும் வாழ்க்கையை
பயிற்றுவித்தது வறுமை!

ஒருவேளை உணவிற்காய்
குருதியை பணமாக்கவைக்கிறது வறுமை! - மன
உறுதியை விற்கவைக்கிறது வறுமை!!

தாய்க்கும் பிள்ளைக்கும்
ஜென்மஜென்ம பந்தம்! - உறுதியாய்
வறுமைக்கும் குருதிக்கும்
ஏதேதோ சொந்தம்!!

இரத்ததானம்!

கத்தும் குயிலுக்கு - யாரும்
இராகம் கற்றுக்கொடுப்பதில்லை!
நித்தம் தனம் வருமென்று - யாரும்
இரத்ததானம் செய்வதில்லை!!

சிவப்பணு இரத்தத்தின் சுவாசப்படை!
வெள்ளையணு இரத்தத்தின் அதிரடிப்படை!!
நம்நினைவில் என்றுமே குருதிக்கொடை!!

நித்தம் நித்தம் ஊறுதே இரத்தம்! - அதை
சத்தமின்றி கொடுப்பது நம் சித்தம்!!
வாழ்க்கைப்பாடங்கள் கொஞ்சமாய்க் கற்றும்
இரத்தத்தை விற்றால் அதுபெரும் குற்றம்!
இரத்ததானத்தின் புகழ் பரவட்டும் திக்கெட்டும்!
இத்துடன் இக்கவிதை முற்றும்!!

செத்த பிறகாவது...

என்னிடம் பேச
உன் நாணம் தடுக்கிறது!
நான் பிணமான பிறகாவது
என்னுடன் பேசுவாயா நீ?

உன்னைப் பற்றி!

அவளுடைய பிறந்தநாள் 15-01-1984. 2005 ம் ஆண்டு ஜனவரி 16 திங்களன்று அவளிடம் பிறந்த நாளுக்கு மிட்டாய் கேட்டேன். 'விடுதியில் உள்ளது' என பொய் சொல்லிவிட்டு போனாள். என் குழந்தை உள்ளம் ஏங்கி ஏமார்ந்து போனதை அவள் அறியவில்லை.

கண்களிலே ஓவியமாய் நுழைந்துவிட்டாய்!
இதயத்தில் காவியமாய் நிலைத்துவிட்டாய்!!
பட்டாம்பூச்சியாம் இம்மண்ணில் பறக்கிறாய்!
பார்வைகளால் என்மனக்கண்ணை திறக்கிறாய்!!
உன்னை மறக்கவும் முடியவில்லை!
இவ்வுலகில் இறக்கவும் முடியவில்லை!!
கறுப்பாய்த்தான் பிறந்துவிட்டேன்! - தமிழ்க்
கவிதையால்நான் சிறந்துவிட்டேன்!!
சுத்தமாய் உறக்கமே இல்லை! - உன்னிடம்
நித்தமும் இரக்கமே இல்லை!!
உன் அழகான முகத்தை இரசித்துக்கொண்டே
நீ பழகுவதில் பரிவுகண்டேன்!
மெல்லத்தான் சிரிக்கிறாய்! - எனைக்
கொல்லத்தான் சிரிக்கிறாய்!!
காலையில் பூவாய் பிறந்துவிடுவாய்!
என் கண்ணைவிட்டு
மாலையில் மாயமாய் மறைந்துவிடுவாய்!!
பார்க்குமிடமெங்கும் 'நலமா?' என்பாய்!
புகைவண்டி நிலையத்திலும்
புன்னகை சிந்துவாய்!
பிறந்த நாளுக்கு
இனிப்பு வாங்கித்தருவதாய்
இனிப்பாய்க் கூறுவாய்!
'இனிப்பு எங்கே?' என்று கேட்டால்
'தங்கிய இடத்திலிருக்கிறது' என்று
தயங்காமல் பொய் கூறுவாய்!!

உன்னை நினைக்கும்போது
உள்ளம் அழுகிறது!
உதடு சிரிக்கிறது!
கண்ணீரால் என் நெஞ்சம் நனைகிறது!
நம் காதலால் என் உயிர் வாழ்கிறது!!

Thursday, June 24, 2010

இயற்கையை இரசிக்கலாமே!

யாரும் இராகம் கற்றுக்கொடுத்து
புதுக் கீதம் பாடவில்லை
குயில்!

யாரும் நடனம் கற்றுக்கொடுத்து
புது நாட்டியம் ஆடவில்லை
மயில்!

குளிர்தென்றல் மேனிதொட
மணம்வீசும் மழையை
தண்ணீராய்... - ஆனந்தக்
கண்ணீராய்...
மானுடத்திற்கு பொழியவிட்டு
மரஞ்செடிகொடிகளை தளிர்க்கவைத்து
உயிர்களின் உயிரைக்காத்து
சோகந்தனை சாகடித்து
தாகந்தனை தீர்த்துவைத்து
தேகம் சிலிர்க்கவைக்கிறது
மேகம்!

கூடிவாழும் வாழ்க்கையை
கோடிவருடத்திற்கு முன்பே
தேடிப்பிடித்து வாழ்கிறது
காகம்!

வேதியியல் மாற்றத்தால்
வீதிகளில் பரவுகிறது
மண்வாசம்!
சுவாசத்தில் மூச்சாகிறது
பூவாசம்!
என் தாய்த்தமிழால்
தலைநிமிரட்டும் நம்தேசம்!

ஆபத்துள்ள வீடுகளில்
குகைபோன்ற கூடுகளில்
சத்தமாய் ஒலிஎழுப்பி
சந்தோசமாய் வாழ்கிறது
தூக்கணாங்குருவி!
பூமித்தாயின் பாறைக்கருவில் பிறந்து
உற்சாகத்தை தற்செயலாய்த் தருகிறது
தூய்மையான அருவி! -பின்னர்
தரணியெங்கும் தண்ணீரால் சிறந்து
மானுடத்திற்கு வாழ்க்கைப்பாடத்தை
வெள்ளோட்டமாய் வாழ்ந்துகாட்டுகிறது
ஆறு!!

உழைத்துக் களைத்தவனுக்கு
இதமான குளிர்தென்றல் காற்றை - பல
விதமான பூக்களின் பாட்டை
நிழலோடு தருகிறது
மரம்!

இவையெல்லாம் கற்றுக்கொடுப்பதை
சற்றே உற்றுநோக்கினால்
இயற்கையோடு இயைந்த வாழ்க்கைதான்!
செயற்கையோடு சேராத வாழ்க்கைதான்!!

மானுடப்பிறவிகளான நாமும்
எவரையும் எதிர்க்காமல்
எவரையும் எதிர்பார்க்காமல் வாழ்ந்தால்
மறுப்பேதும் இல்லாமல்
வெற்றி நமக்குத்தான்!!

காதல் யாசகம்!

உன்னை நினைத்து
கண்ணீர்வழி அழுகிறேன்!
கவிதைவழியும் தொழுகிறேன்! - காலையில்
காதல்வலியுடன் எழுகிறேன்!!

காதலைப் பற்றி யோசித்தேன்!
கன்னியுனை நேசிக்கிறேன்!!

தேங்கிய நீரில்
என்றுமே படியும் பாசம்! - என்னுடலில்
தேங்கிய உயிரில்
என்றுமே படியும் உன் பூவாசம்!
என்னகமெலாம் உன்வசம்!
என்றுமே நீதான் என்சுவாசம்!!

அழியாமல் வாழ்கிறது!

விண்ணில்
பறக்கும் பட்டமாய்
உன்னைச் சுற்றியே பறக்கிறது
என்னுயிர்!

குட்டிபோட்ட பூனைபோல்
உன்நிழலையே வட்டமடிக்கிறது
என்பார்வை!

நிறைமாத கர்ப்பிணிபோல்
என்நினைவுகளிலே சுமக்கிறேன்
உன்னை!

வாடாமலராய் பூத்துக்குலுங்கும்
பூஞ்சோலைபோல்
என்மனதில்
அழியாமல் வாழ்கிறது
உன்புன்னகை!!