Tuesday, August 31, 2010

அரசிளங்குமரி!

உன்னை பேருந்தில் பார்த்ததும்
என்னுள் நேர்ந்தது பூகம்பமா? - இல்லை
என்னுள் பூவே உன் பிம்பமா?

உன்னைப் பார்த்தது என்விழி!
கவிதைவழி என்னுள் ஏற்றமடி!!

அறிவை வளர்த்தது பள்ளிதான்! - என்னுள்
பரிவை வளர்த்தவள் கள்ளி நீதான்!!

உன் பெயருக்கேற்றபடி
எனைநீ ஆளுகிறாய்!

நீதானடி என்னிதயநாட்டின்
அரசிளங்குமரி!!

No comments: