Saturday, September 14, 2013

நம் உரத்தசிந்தனை மாத இதழில் டிராபிக் இராமசாமியைப் பற்றி...

கடந்த ஐந்து நாட்களுக்கு முன்பு என்னுடைய வீட்டில் என் கைகளில் செப்டம்பர் ௨௦௧௩ மாத இதழ் என் கைகளில் கிடைத்தது. வாசிக்கத் துவங்கினேன்.

திரு. உதயம்ராம் அவர்கள் எழுதிய டிராபிக் இராமசாமியைப் பற்றிய கட்டுரை என் கண்களில் பட்டது.

டிராபிக் இராமசாமியைப் பற்றி அவர் தனி ஆளாக போராடிய விதம், அதனால் அவர் கண்கள் பறிபோனது, இருந்தும் தனி ஆளாக இன்னமும் போராடி வரும் விதம் ஆகியவற்றைப் பற்றி தெளிவாக அந்தக் கட்டுரையில் சொல்லப் பட்டிருந்தது.

கடந்த எட்டு மாதங்களுக்கு முன்பு டிஆர்பி யால் பாதிக்கப்பட்ட இருநூறுக்கும் மேற்பட்ட ஆசிரியர் பட்டப் படிப்புப் படித்த மாணவ மாணவிகளுக்காக யாரிடம் உதவி கேட்கலாம் என்று என் நண்பர்களோடு விவாதித்தபோது ஒரு நண்பர் டிராபிக் இராமசாமியி பரிந்துரை செய்தார்.

அதன்பிறகு தான் அவரைப் பற்றி இணையத்தில் தேட ஆரம்பித்தேன்.

அவரைப் பற்றிய முழு விபரங்கள் அடங்கிய கட்டுரையை நம் உரத்த சிந்தனை வெளியிடுவது வரவேற்கத் தக்கது.

கடந்த ௨௦௧௩ பெப்ரவரி மாதம் ௨௬ ல் (26-02-2013) சென்னை சந்திரசேகர் திருமண மண்டபத்தில் நடைபெற்ற நம் உரத்த சிந்தனையின் ௨௯வது ஆண்டு விழாவையொட்டி பார்வையாளனாகப்  பங்குபெற எனக்கும் அழைப்பிதழ் வந்திருந்தது. நானும் கலந்து கொண்டேன்.

கவிஞர் வைரமுத்து, இயக்குநர் / நடிகர் பாக்யராஜ் மற்றும் பல சிறப்பு விருந்தினர்களின் உரையை நேரில் பார்க்கும் / கேட்கும் வாய்ப்பு எனக்குக் கிடைத்தது.

திரு. உதயம் இராம் அவர்களுக்கும் நம் உரத்த சிந்தனை மாத இதழுக்கும் என் நெஞ்சார்ந்த நன்றி.

(http://vidhai2virutcham.com/2013/02/26/%E0%AE%89%E0%AE%B0%E0%AE%A4%E0%AF%8D%E0%AE%A4-%E0%AE%9A%E0%AE%BF%E0%AE%A8%E0%AF%8D%E0%AE%A4%E0%AE%A9%E0%AF%88%E0%AE%AF%E0%AE%BF%E0%AE%A9%E0%AF%8D-29%E0%AE%86%E0%AE%B5%E0%AE%A4%E0%AF%81-%E0%AE%86/)

No comments: