என்னைவிட உன்மேல்
அன்பாய் இருக்கும்
ஆணொருவன் உனக்கு
கணவனாய்க் கிடைத்துவிட்டால்
யார் அதிகமாய் மகிழ்வார்கள்
என்னைவிட...
Showing posts with label கவிதைகள் (பாகம் - 1). Show all posts
Showing posts with label கவிதைகள் (பாகம் - 1). Show all posts
Saturday, May 1, 2010
இறைவன்!
உலகில் உள்ள
உயிர்களையெல்லாம்
உன்னதமாய் படைத்தவன்
இறைவன்!
ஏழைக்காக
இரங்கும் குணத்தை
இயற்கையாய் படைத்தவன்
இறைவன்!
மண்ணிலுள்ள
மக்களையெல்லாம்
மகனாய்ப் பார்ப்பவன்
இறைவன்!
காக்கைக்கூட்டில்
குயில்க்குஞ்சு வாழும்
கருணையைக் கூறியவன்
இறைவன்!
உருவத்தை மறந்து
உள்ளத்தை நினைக்க - உன்னை
உருவாக்கி விட்டவன்
இறைவன்!
அன்பின் எல்லையில்
அமைதியாய் அமர்ந்து
உண்மையாய் வாழ்பவன்
இறைவன்!
கண்ணீரில் வாழ்ந்து
கவலையை மறந்து - எனைக்
கண்போல்காத்த
என் அம்மா தானே
இறைவன்!!
இந்த கவிதை வெளிவந்துள்ள ஊடகங்கள்
1. தினத்தந்தி (மதுரை பதிப்பகம்) - 06-11-2006
உயிர்களையெல்லாம்
உன்னதமாய் படைத்தவன்
இறைவன்!
ஏழைக்காக
இரங்கும் குணத்தை
இயற்கையாய் படைத்தவன்
இறைவன்!
மண்ணிலுள்ள
மக்களையெல்லாம்
மகனாய்ப் பார்ப்பவன்
இறைவன்!
காக்கைக்கூட்டில்
குயில்க்குஞ்சு வாழும்
கருணையைக் கூறியவன்
இறைவன்!
உருவத்தை மறந்து
உள்ளத்தை நினைக்க - உன்னை
உருவாக்கி விட்டவன்
இறைவன்!
அன்பின் எல்லையில்
அமைதியாய் அமர்ந்து
உண்மையாய் வாழ்பவன்
இறைவன்!
கண்ணீரில் வாழ்ந்து
கவலையை மறந்து - எனைக்
கண்போல்காத்த
என் அம்மா தானே
இறைவன்!!
இந்த கவிதை வெளிவந்துள்ள ஊடகங்கள்
1. தினத்தந்தி (மதுரை பதிப்பகம்) - 06-11-2006
சொல்லமுடியாக் காதல்!
(அன்று 2005, ஜனவரி 13 (வியாழன்) அல்லது 14 (வெள்ளி). அடுத்த சில நாட்களில் தமிழர் திருநாள். அதற்கு அடுத்த நாள் மாட்டுப் பொங்கல். மாட்டுப் பொங்கல் அன்றுதான் அவள் பிறந்தாள். அந்த புகைவண்டி நிலையத்தில் அவளும் அவள் தோழியும் நின்று கொண்டிருந்தனர். அவளுடைய தோழி எனக்கும் தோழிதான். என் காதலியிடம் நான் ஏற்கனவே எழுதிய 'தமிழர் திருநாள்' என்ற சிறு கவிதையை சொன்னேன். உடனே அவள் 'சுரேஷ், நீ பெரிய கவிஞனாயிட்ட' என்று வெட்கம் கலந்த புன்னகையில் சொன்னாள். 'உன்னை காதலித்த பிறகுதான் நான் கவிஞனானேன்' என்று அவளிடம் சொல்ல வாயெடுத்தேன். சொல்ல முடியாமல் போனது. அந்த நிமிடத்தில் தோன்றிய கவிதை தான் இது. என் தேவதையின் முகத்தைப் பார்த்தேன். அந்த அழகிய முகத்தில் இடது கன்னத்தில் ஒரு பரு இருந்தது. 'இது என்ன?' என்ற படி அந்த பருவை தொடுவதற்காக கை விரலை நீட்டினேன். அவள் வெட்கப்பட்டு பின்னால் நகர்ந்து கொண்டிருந்தாள். 'எதிரில் நிற்பது என் மனைவி' என்ற நினைவிலேயே அவ்வாறு செய்தேன். அவளும் 'என்ன சுரேஷ் இது?' என்றபடி வெட்கப்பட்டாள். அப்போது தான் நாங்கள் நிற்பது புகைவண்டி நிலையத்திற்கு செல்லும் சாலையோரம்' என்ற நினைவு வந்து கைவிரலை சுருக்கிக் கொண்டேன். அருகில் நின்று கொண்டிருந்த எங்களின் தோழி சிரித்துக் கொண்டிருந்தாள்.)
கள்ளங்கபடமற்ற
கள்ளியொருத்தி நிற்பதைப் பார்த்து - நான்
மெல்லச் சிரித்துவிட்டு - காதலைச்
சொல்ல வாயெடுத்ததும்
நில்லாமல் வந்த வார்த்தை
வஞ்சியவள் வதனம் பார்த்ததும்
வரமாட்டேன் என்றது!!
கள்ளங்கபடமற்ற
கள்ளியொருத்தி நிற்பதைப் பார்த்து - நான்
மெல்லச் சிரித்துவிட்டு - காதலைச்
சொல்ல வாயெடுத்ததும்
நில்லாமல் வந்த வார்த்தை
வஞ்சியவள் வதனம் பார்த்ததும்
வரமாட்டேன் என்றது!!
ஏழைகளின்எதிர்காலம்?
எண்ணெய் பார்த்திராத கேசத்துடன்
எண்ணிலடங்கா சோகத்துடன்
உதிரம் உதிர உழைத்தும்...
வியர்வை வழிய உழைத்தும்...
கேள்விக்குறியாய் முதுகு வளைந்தும்...
இன்னமும் ஒருவேளை உணவின்றி
தண்ணீரின்றி கண்ணீருடன்...
நித்தமும் வாழும் ஏழைகளின்
விழிகள்வழி தெரியும்
எதிர்காலம் கேள்விக்குறிதானோ?
இந்த கவிதை வெளிவந்துள்ள ஊடகங்கள்
1. தினத்தந்தி (மதுரை பதிப்பகம்) - 05-06-2006
2. வெற்றிநடை - 01-01-2013
3. பதிவுகள் (இணைய இதழ்) - 23-12-2012
எண்ணிலடங்கா சோகத்துடன்
உதிரம் உதிர உழைத்தும்...
வியர்வை வழிய உழைத்தும்...
கேள்விக்குறியாய் முதுகு வளைந்தும்...
இன்னமும் ஒருவேளை உணவின்றி
தண்ணீரின்றி கண்ணீருடன்...
நித்தமும் வாழும் ஏழைகளின்
விழிகள்வழி தெரியும்
எதிர்காலம் கேள்விக்குறிதானோ?
இந்த கவிதை வெளிவந்துள்ள ஊடகங்கள்
1. தினத்தந்தி (மதுரை பதிப்பகம்) - 05-06-2006
2. வெற்றிநடை - 01-01-2013
3. பதிவுகள் (இணைய இதழ்) - 23-12-2012
Wednesday, April 28, 2010
காதல் தேர்தல்!
என் இதயநாட்டில்
நடைபெற்ற தேர்தலில்
போட்டியின்றி வென்றவள்
என்னவளே...
நீ மட்டுந்தான்!!
இந்த கவிதை வெளிவந்துள்ள ஊடகங்கள்
1. முத்தாரம் – 04-06-2006
2. அறிமுகம் – 01-06-2009
3. தமிழ்நலக்கழகம் – 01-12-2011
நடைபெற்ற தேர்தலில்
போட்டியின்றி வென்றவள்
என்னவளே...
நீ மட்டுந்தான்!!
இந்த கவிதை வெளிவந்துள்ள ஊடகங்கள்
1. முத்தாரம் – 04-06-2006
2. அறிமுகம் – 01-06-2009
3. தமிழ்நலக்கழகம் – 01-12-2011
உயிர்!
உனை
நிலவென்று சொல்லமாட்டேன்!
தேய்வதும் வளர்வதுமாய்
இருப்பதால்...!
உனை
மலரென்று சொல்லமாட்டேன்!
உதிர்வது மலர்வதுமாய்
இருப்பதால்...!
உனை
மழையென்று சொல்லமாட்டேன்!
கோடையில் பொழிய
மறுப்பதால்...!
உனை
என்னுயிரென்று சொல்வேன்!
நீ பிரிந்தால்
எனக்கு மதிப்பில்லை
என்பதால்...!!
இக்கவிதை வெளிவந்துள்ள ஊடகங்கள்
1. கோடை பண்பலை – 10-06-2006
நிலவென்று சொல்லமாட்டேன்!
தேய்வதும் வளர்வதுமாய்
இருப்பதால்...!
உனை
மலரென்று சொல்லமாட்டேன்!
உதிர்வது மலர்வதுமாய்
இருப்பதால்...!
உனை
மழையென்று சொல்லமாட்டேன்!
கோடையில் பொழிய
மறுப்பதால்...!
உனை
என்னுயிரென்று சொல்வேன்!
நீ பிரிந்தால்
எனக்கு மதிப்பில்லை
என்பதால்...!!
இக்கவிதை வெளிவந்துள்ள ஊடகங்கள்
1. கோடை பண்பலை – 10-06-2006
நான் மட்டுந்தான்!
காதுகளால் சுவாசிக்கும்
ஒரே மனிதன்
இவ்வுலகில் நான்மட்டுந்தான்!
என்னவளே...
உன் காலடியோசையை
என்காதுகள் சுவாசித்துக்கொண்டே
இருப்பதால்....
இக்கவிதை வெளிவந்துள்ள ஊடகங்கள்
1. கோடை பண்பலை – 15-07-2006
ஒரே மனிதன்
இவ்வுலகில் நான்மட்டுந்தான்!
என்னவளே...
உன் காலடியோசையை
என்காதுகள் சுவாசித்துக்கொண்டே
இருப்பதால்....
இக்கவிதை வெளிவந்துள்ள ஊடகங்கள்
1. கோடை பண்பலை – 15-07-2006
இறைத்தூதன் இயேசு!
மாட்டுத்தொழுவத்தில்
பிறந்து - மரியன்னையின்
மடியில் தவழ்ந்த
மகான்!
அன்பின் மகத்துவத்தை
அன்பினால் உணர்த்த
விண்ணிலிருந்து பிறந்த
வீரத்திருமகன்!
மக்களோடு மக்களாய்
மனிதருள் மாணிக்கமாய்
எக்காலமும் பேர்போற்ற
ஏசுவாய்ப் பிறந்த
மெசியா இவன்!
ஆதவன் உதிப்பது
அகிலம் சிறக்கத்தான்!
பிதாமகன் பிறந்தது
பேருலகம் உய்யத்தான்!!
இந்த கவிதை வெளிவந்துள்ள ஊடகங்கள்
1. பதிவுகள் (இணைய இதழ்) - 23-12-2011
பிறந்து - மரியன்னையின்
மடியில் தவழ்ந்த
மகான்!
அன்பின் மகத்துவத்தை
அன்பினால் உணர்த்த
விண்ணிலிருந்து பிறந்த
வீரத்திருமகன்!
மக்களோடு மக்களாய்
மனிதருள் மாணிக்கமாய்
எக்காலமும் பேர்போற்ற
ஏசுவாய்ப் பிறந்த
மெசியா இவன்!
ஆதவன் உதிப்பது
அகிலம் சிறக்கத்தான்!
பிதாமகன் பிறந்தது
பேருலகம் உய்யத்தான்!!
இந்த கவிதை வெளிவந்துள்ள ஊடகங்கள்
1. பதிவுகள் (இணைய இதழ்) - 23-12-2011
தேடல்!
தடையிலா வாழ்வுதனை
தேடித்தேடி அலையுதடி!
மடைதிறந்த வெள்ளம்போல்
மனக்கதவு திறந்ததடி!
படைகள்பல வந்தபோதும்
பாசம்மட்டும் மிஞ்சுதடி!
விடைகாணா கேள்விகளை
வினவமனம் அஞ்சுதடி!!
என்னுள்ளே கடவுளுமுண்டு!
என்னுள்ளே மிருகமுண்டு!
'நான் யார்?'என்ற கேள்விமட்டும்
நாட்கணக்காய் நீளுதடி!
உள்ளொன்று வைத்து
புறமொன்று பேசுதடி!
உண்மையிலா உலகத்திலே!!
கள்ளமும் கபடமும்
களியாட்டம் போடுதடி! - இதை
கவனிக்க யாருமிலையோ!!
தடையிலா வாழ்வுதனை
தேடித்தேடி அலையுதடி!
தேடித்தேடி அலையுதடி!
மடைதிறந்த வெள்ளம்போல்
மனக்கதவு திறந்ததடி!
படைகள்பல வந்தபோதும்
பாசம்மட்டும் மிஞ்சுதடி!
விடைகாணா கேள்விகளை
வினவமனம் அஞ்சுதடி!!
என்னுள்ளே கடவுளுமுண்டு!
என்னுள்ளே மிருகமுண்டு!
'நான் யார்?'என்ற கேள்விமட்டும்
நாட்கணக்காய் நீளுதடி!
உள்ளொன்று வைத்து
புறமொன்று பேசுதடி!
உண்மையிலா உலகத்திலே!!
கள்ளமும் கபடமும்
களியாட்டம் போடுதடி! - இதை
கவனிக்க யாருமிலையோ!!
தடையிலா வாழ்வுதனை
தேடித்தேடி அலையுதடி!
அன்பின் சின்னமாய்...!
எந்நேரமும்
உன் நினைவுகளிலேயே
உறைந்து கிடக்கிறேன்
நான்!
இன்று
ஒரு கைக்குழந்தையுடன்
எனைக் கடந்து
போகிறாய் நீ!
எனக்கு முன்னே
அதோ...
தூரத்தில்
மூதாட்டி ஒருத்தி
போய்க்கொண்டிருக்கிறாள்!
நீ என்னிடம் பேசிய
தொலைபேசி உரையாடல்கள்
இன்னும்
என் மூளைக்குள்
ஒலித்துக்கொண்டே இருக்கின்றன!
காலங்கள் வேகமாய் கடந்தன! - என்
கால்களும் வேகமாய் நடந்தன!!
நடந்த வேகத்தில்
அம்மூதாட்டியை முந்திவிட்டேன்!
ஏதோஓர் உள்ளுணர்வு
அவள்முகம் பார்க்கச் சொன்னது!
திரும்பி நின்று
அவளைப் பார்த்தேன்!
கலையான முகம்!
கறையிலா முகம்!
கண்ணாடி அணியா முகம்!!
அவளும் எனை வெகுநேரமாய்
உற்றுப்பார்த்துக் கொண்டிருந்தாள்!
அவள் கண்களில்
கண்ணீர்மழை!
தள்ளாடிவந்து
என்மார்மீது சாய்ந்தாள்!
அன்று
கைக்குழந்தையுடன் சென்ற நீ
இன்று
என் கைக்குழந்தையாய்
என் மார்மீது!!
உன் நினைவுகளிலேயே
உறைந்து கிடக்கிறேன்
நான்!
இன்று
ஒரு கைக்குழந்தையுடன்
எனைக் கடந்து
போகிறாய் நீ!
எனக்கு முன்னே
அதோ...
தூரத்தில்
மூதாட்டி ஒருத்தி
போய்க்கொண்டிருக்கிறாள்!
நீ என்னிடம் பேசிய
தொலைபேசி உரையாடல்கள்
இன்னும்
என் மூளைக்குள்
ஒலித்துக்கொண்டே இருக்கின்றன!
காலங்கள் வேகமாய் கடந்தன! - என்
கால்களும் வேகமாய் நடந்தன!!
நடந்த வேகத்தில்
அம்மூதாட்டியை முந்திவிட்டேன்!
ஏதோஓர் உள்ளுணர்வு
அவள்முகம் பார்க்கச் சொன்னது!
திரும்பி நின்று
அவளைப் பார்த்தேன்!
கலையான முகம்!
கறையிலா முகம்!
கண்ணாடி அணியா முகம்!!
அவளும் எனை வெகுநேரமாய்
உற்றுப்பார்த்துக் கொண்டிருந்தாள்!
அவள் கண்களில்
கண்ணீர்மழை!
தள்ளாடிவந்து
என்மார்மீது சாய்ந்தாள்!
அன்று
கைக்குழந்தையுடன் சென்ற நீ
இன்று
என் கைக்குழந்தையாய்
என் மார்மீது!!
Tuesday, April 27, 2010
இன்னும்...
உன்னை நினைத்து நினைத்தே
கீறல் விழுந்துபோன
இசைத்தட்டு நான்!
இன்னும்
சுற்றிக்கொண்டே இருக்கிறேன்!!
கீறல் விழுந்துபோன
இசைத்தட்டு நான்!
இன்னும்
சுற்றிக்கொண்டே இருக்கிறேன்!!
எங்கே நீ?
பச்சிளங்குழந்தை
தாயைத்தேடி அலைவது போல்
என் மனக்குழந்தை
உனை நினைத்து அழுகிறது!
உனைப் பற்றி யாரிடம் பேச...?
என்னருகில் இல்லையே நீ!!
தாயைத்தேடி அலைவது போல்
என் மனக்குழந்தை
உனை நினைத்து அழுகிறது!
உனைப் பற்றி யாரிடம் பேச...?
என்னருகில் இல்லையே நீ!!
Sunday, April 25, 2010
காதலே சுகம்!
கண்ணீர் வடித்து
வாழ்வதை விட
கவிதைகள் வடித்து
வாழ்வதில்
சுகமெனக்கு!
கடவுளை தொழுது
வாழ்வதை விட
நம் காதலை தொழுது
வாழ்வதில்
சுகமெனக்கு!
காற்றை சுவாசித்து
வாழ்வதை விட
நம் காதலை தொழுது
வாழ்வதில்
சுகமெனக்கு!!
வாழ்வதை விட
கவிதைகள் வடித்து
வாழ்வதில்
சுகமெனக்கு!
கடவுளை தொழுது
வாழ்வதை விட
நம் காதலை தொழுது
வாழ்வதில்
சுகமெனக்கு!
காற்றை சுவாசித்து
வாழ்வதை விட
நம் காதலை தொழுது
வாழ்வதில்
சுகமெனக்கு!!
இனியொரு புதுவிதிசெய்வோம்!
கடந்த 2009 ம் ஆண்டு ஈழத்தில் நடந்த தமிழினப்படுகொலையை அறிந்தபோது எழுதிய கவிதை.
கண்சிமிட்டும்
கருவறை மொட்டுகள்
கண்திறக்கும்முன்னே
கல்லறையில் பூத்ததென்ன?
மொழியறியாக் குழந்தைகள்
மொழியறியும்முன்னே - தமிழ்
மொழிபேசியதாய் காரணங்காட்டி
பலிகொடுக்கப்பட்டதென்ன?
கடலன்னை தாலாட்டும்
எழில்மிகு தீவு!
புத்தனை கடவுளாய்
வழிபடும் நாடு!
இரத்தத்தில் மிதக்கிறது
கண்டீர்!!
ஊரடங்கு உத்தரவு
பிறப்பிக்கப்படாமலேயே
ஊர் அடங்கியது
உயிர்கள் பிரிந்தன
குட்டித்தீவில்...
அகதியாய் திரிந்த
நம் தாய்த்தமிழ்மொழிக்கு
அடைக்கலம் கொடுத்த
ஈழத் தமிழர்கள்
அகதிகளாய் அடைக்கலம்தேடி!
தமிழ்மொழியின் மானங்காத்த
ஈழ உறவுகள் ஈன உயிர்களாய்...!
போதும்
இனவெறியின் ருத்ரதாண்டவம்!
அந்தோ...
எம்தமிழ்மக்கள் உயிர்பாவம்!!
வீதிகளெங்கும் பிணக்குவியல்!
வறுமையால் அல்ல...
பிணியால் அல்ல...
இயற்கை சீற்றத்தால் அல்ல...
இனவெறியின் சேட்டையால்!!
தமிழகத்தின் மௌனம்!
விளைவு...
தமிழினத்தின் மரணம்!!
இத்தோடு போகட்டும்
இனப்படுகொலை!
அன்பிலே கிடைக்கட்டும்
விடுதலை!!
மனஉறையில் உள்ள
இனவெறிதனை
புதுப்பறை அடித்து
தனிச்சிறையில் வைப்போம்!!
இனியொரு புதுவிதிசெய்வோம்!!
கண்சிமிட்டும்
கருவறை மொட்டுகள்
கண்திறக்கும்முன்னே
கல்லறையில் பூத்ததென்ன?
மொழியறியாக் குழந்தைகள்
மொழியறியும்முன்னே - தமிழ்
மொழிபேசியதாய் காரணங்காட்டி
பலிகொடுக்கப்பட்டதென்ன?
கடலன்னை தாலாட்டும்
எழில்மிகு தீவு!
புத்தனை கடவுளாய்
வழிபடும் நாடு!
இரத்தத்தில் மிதக்கிறது
கண்டீர்!!
ஊரடங்கு உத்தரவு
பிறப்பிக்கப்படாமலேயே
ஊர் அடங்கியது
உயிர்கள் பிரிந்தன
குட்டித்தீவில்...
அகதியாய் திரிந்த
நம் தாய்த்தமிழ்மொழிக்கு
அடைக்கலம் கொடுத்த
ஈழத் தமிழர்கள்
அகதிகளாய் அடைக்கலம்தேடி!
தமிழ்மொழியின் மானங்காத்த
ஈழ உறவுகள் ஈன உயிர்களாய்...!
போதும்
இனவெறியின் ருத்ரதாண்டவம்!
அந்தோ...
எம்தமிழ்மக்கள் உயிர்பாவம்!!
வீதிகளெங்கும் பிணக்குவியல்!
வறுமையால் அல்ல...
பிணியால் அல்ல...
இயற்கை சீற்றத்தால் அல்ல...
இனவெறியின் சேட்டையால்!!
தமிழகத்தின் மௌனம்!
விளைவு...
தமிழினத்தின் மரணம்!!
இத்தோடு போகட்டும்
இனப்படுகொலை!
அன்பிலே கிடைக்கட்டும்
விடுதலை!!
மனஉறையில் உள்ள
இனவெறிதனை
புதுப்பறை அடித்து
தனிச்சிறையில் வைப்போம்!!
இனியொரு புதுவிதிசெய்வோம்!!
மரங்களை வளர்ப்போம்!
யாருமே தவமிராமல்
இயற்கை நமக்களித்த
வரங்கள்!
மரங்கள்!!
உலக உயிர்களையெல்லாம்
காத்துக்கொண்டிருக்கிற
கடவுள் நீட்டிய
கரங்கள்!
மரங்கள்!!
காற்று வரும் திசையை
நம் கண்களுக்கு உணர்த்தும்
கலங்கரை விளக்கம்!
மரங்கள்!!
உழைத்துக் களைத்த
உழவன்
உறங்கத் துடிக்கும்
தாய்மடி!
மரங்கள்!!
நம் சுவாசக்காற்றை
சுத்திகரித்து அனுப்பும்
சுத்திகரிப்பு ஆலைகள்!
மரங்கள்!!
தாயில்லா குழந்தைகட்கும்
சேயில்லா தாய்தந்தையர்க்கும்
குடிசைகள்கூட இல்லா
ஏழைகட்கும்
தாயாய்... சேயாய்...
குடிசைகளாய்...
மரங்கள்!!
அன்பாலும் கருணையாலும்
பிறரிதயந்தொட்ட
ஞானிகளைப் போல்
இதமான தென்றலால்
வான் மேகங்களை
வருடிக்கொடுத்து
மழைபொழிய வைக்கும்
மகாத்மாக்கள்!
மரங்கள்!!
செடியாய் கொடியாய்
இலையாய் பூவாய்
காயாய் கனியாய்
விதையாய் விறகாய்
சருகாய் மருந்தாய்
தன்னையே அர்ப்பணிக்கும்
தியாகச் செம்மல்கள்!
மரங்கள்!!
ஜாதிமத இனமொழி
வேறுபாடின்றி
பாரினில் உயர்ந்த
நம் பாரத தேசத்தினைப்போல்
ஓரறிவு முதல் ஆறறிவு வரை
உயிர்கள் அனைத்திற்கும்
அடைக்கலம் தரும்
ஆலயங்கள்!
மரங்கள்!!
மரங்களைப் பார்த்தாவது
மதங்கொண்ட மனிதர்களின்
மனங்கள் மாறட்டுமே!
மரங்களை வளர்ப்போம்!!
இக்கவிதை வெளிவந்துள்ள ஊடகங்கள்
1. தமிழ் ஆத்தர்ஸ்.கொம் (இணைய இதழ்) – 20-11-2011
2. பதிவுகள் (இணைய இதழ்) - 03-12-2011
3. காயல்பட்டினம் (இணைய இதழ்) - 31-01-2012
இயற்கை நமக்களித்த
வரங்கள்!
மரங்கள்!!
உலக உயிர்களையெல்லாம்
காத்துக்கொண்டிருக்கிற
கடவுள் நீட்டிய
கரங்கள்!
மரங்கள்!!
காற்று வரும் திசையை
நம் கண்களுக்கு உணர்த்தும்
கலங்கரை விளக்கம்!
மரங்கள்!!
உழைத்துக் களைத்த
உழவன்
உறங்கத் துடிக்கும்
தாய்மடி!
மரங்கள்!!
நம் சுவாசக்காற்றை
சுத்திகரித்து அனுப்பும்
சுத்திகரிப்பு ஆலைகள்!
மரங்கள்!!
தாயில்லா குழந்தைகட்கும்
சேயில்லா தாய்தந்தையர்க்கும்
குடிசைகள்கூட இல்லா
ஏழைகட்கும்
தாயாய்... சேயாய்...
குடிசைகளாய்...
மரங்கள்!!
அன்பாலும் கருணையாலும்
பிறரிதயந்தொட்ட
ஞானிகளைப் போல்
இதமான தென்றலால்
வான் மேகங்களை
வருடிக்கொடுத்து
மழைபொழிய வைக்கும்
மகாத்மாக்கள்!
மரங்கள்!!
செடியாய் கொடியாய்
இலையாய் பூவாய்
காயாய் கனியாய்
விதையாய் விறகாய்
சருகாய் மருந்தாய்
தன்னையே அர்ப்பணிக்கும்
தியாகச் செம்மல்கள்!
மரங்கள்!!
ஜாதிமத இனமொழி
வேறுபாடின்றி
பாரினில் உயர்ந்த
நம் பாரத தேசத்தினைப்போல்
ஓரறிவு முதல் ஆறறிவு வரை
உயிர்கள் அனைத்திற்கும்
அடைக்கலம் தரும்
ஆலயங்கள்!
மரங்கள்!!
மரங்களைப் பார்த்தாவது
மதங்கொண்ட மனிதர்களின்
மனங்கள் மாறட்டுமே!
மரங்களை வளர்ப்போம்!!
இக்கவிதை வெளிவந்துள்ள ஊடகங்கள்
1. தமிழ் ஆத்தர்ஸ்.கொம் (இணைய இதழ்) – 20-11-2011
2. பதிவுகள் (இணைய இதழ்) - 03-12-2011
3. காயல்பட்டினம் (இணைய இதழ்) - 31-01-2012
அன்பெனும் உணர்வு!
உன்னை நான்
'அம்மா' என்று
அழைக்கட்டுமா?
நீ என்
அன்னையாகவே
என்னுள் வாழ்கிறாய்!
உன்னைக் காதலிப்பதற்கான
காரணம் என்னவென்று
கேட்டாய் நீ!
காரணமின்றி
வருவது காதல்
என்றேன்!
உண்மைதான்!
காரணகாரியங்காட்டும்
பகுத்தறிவிற்கு அப்பாற்ப்பட்டது
அன்பெனும் உணர்வு!!
'அம்மா' என்று
அழைக்கட்டுமா?
நீ என்
அன்னையாகவே
என்னுள் வாழ்கிறாய்!
உன்னைக் காதலிப்பதற்கான
காரணம் என்னவென்று
கேட்டாய் நீ!
காரணமின்றி
வருவது காதல்
என்றேன்!
உண்மைதான்!
காரணகாரியங்காட்டும்
பகுத்தறிவிற்கு அப்பாற்ப்பட்டது
அன்பெனும் உணர்வு!!
Subscribe to:
Posts (Atom)