Saturday, May 1, 2010

சொல்லமுடியாக் காதல்!

(அன்று 2005, ஜனவரி 13 (வியாழன்) அல்லது 14 (வெள்ளி). அடுத்த சில நாட்களில் தமிழர் திருநாள். அதற்கு அடுத்த நாள் மாட்டுப் பொங்கல். மாட்டுப் பொங்கல் அன்றுதான் அவள் பிறந்தாள். அந்த புகைவண்டி நிலையத்தில் அவளும் அவள் தோழியும் நின்று கொண்டிருந்தனர். அவளுடைய தோழி எனக்கும் தோழிதான். என் காதலியிடம் நான் ஏற்கனவே எழுதிய 'தமிழர் திருநாள்' என்ற சிறு கவிதையை சொன்னேன். உடனே அவள் 'சுரேஷ், நீ பெரிய கவிஞனாயிட்ட' என்று வெட்கம் கலந்த புன்னகையில் சொன்னாள். 'உன்னை காதலித்த பிறகுதான் நான் கவிஞனானேன்' என்று அவளிடம் சொல்ல வாயெடுத்தேன். சொல்ல முடியாமல் போனது. அந்த நிமிடத்தில் தோன்றிய கவிதை தான் இது. என் தேவதையின் முகத்தைப் பார்த்தேன். அந்த அழகிய முகத்தில் இடது கன்னத்தில் ஒரு பரு இருந்தது. 'இது என்ன?' என்ற படி அந்த பருவை தொடுவதற்காக கை விரலை நீட்டினேன். அவள் வெட்கப்பட்டு பின்னால் நகர்ந்து கொண்டிருந்தாள். 'எதிரில் நிற்பது என் மனைவி' என்ற நினைவிலேயே அவ்வாறு செய்தேன். அவளும் 'என்ன சுரேஷ் இது?' என்றபடி வெட்கப்பட்டாள். அப்போது தான் நாங்கள் நிற்பது புகைவண்டி நிலையத்திற்கு செல்லும் சாலையோரம்' என்ற நினைவு வந்து கைவிரலை சுருக்கிக் கொண்டேன். அருகில் நின்று கொண்டிருந்த எங்களின் தோழி சிரித்துக் கொண்டிருந்தாள்.)

கள்ளங்கபடமற்ற
கள்ளியொருத்தி நிற்பதைப் பார்த்து - நான்
மெல்லச் சிரித்துவிட்டு - காதலைச்
சொல்ல வாயெடுத்ததும்
நில்லாமல் வந்த வார்த்தை
வஞ்சியவள் வதனம் பார்த்ததும்
வரமாட்டேன் என்றது!!

No comments: