கடவுளின்
நேரடித் தூதுவர்கள்
இவர்கள்!!
Wednesday, September 29, 2010
உன்னால்தான்!
பெண்ணே...
நான் வாழ்ந்துகொண்டே
சாவதும் உன்னால்தான்!
நான் சிரித்துக்கொண்டே
அழுவதும் உன்னால்தான்!!
நான் வாழ்ந்துகொண்டே
சாவதும் உன்னால்தான்!
நான் சிரித்துக்கொண்டே
அழுவதும் உன்னால்தான்!!
புதுமொழி!
அவனின்றி
ஓரணுவும் அசையாது!
இது இறைமொழி!! - என்
அவளின்றி என்னுள்
உயிரணுக்கள் அசையாது!
இது காதல்மொழி!!
ஓரணுவும் அசையாது!
இது இறைமொழி!! - என்
அவளின்றி என்னுள்
உயிரணுக்கள் அசையாது!
இது காதல்மொழி!!
சாதனைகள் தூரமில்லை!
சத்தியத்தின் பாதைவழி
சரிசமமாய் நாம்நடந்தால்
நித்திரையில் கண்டகனா
நிஜமாகும் பாரீர்!
அச்சமில்லை அச்சமில்லை
அச்சமில்லை என்றுசொல்லி
உச்சத்தைத் தொடத்துணிந்த
உயர்வு நம்முளத்தில்!
தத்துவத்தை படைத்த - பழந்
தமிழர்கள் நாம்தானே!
சாதனைகள் தூரமில்லை
சாதிப்போம் வாரீர்!!
சரிசமமாய் நாம்நடந்தால்
நித்திரையில் கண்டகனா
நிஜமாகும் பாரீர்!
அச்சமில்லை அச்சமில்லை
அச்சமில்லை என்றுசொல்லி
உச்சத்தைத் தொடத்துணிந்த
உயர்வு நம்முளத்தில்!
தத்துவத்தை படைத்த - பழந்
தமிழர்கள் நாம்தானே!
சாதனைகள் தூரமில்லை
சாதிப்போம் வாரீர்!!
பலாப்பழம்!
என்னவளே...
நீ ஒரு
பலாப்பழம் தான்!
உன் இதழ்கள்
பலாச்சுவைபோல்
சுவைக்கின்றன!
உன் இதயமோ
என்னை முட்களால்
தைப்பதால்...
நீ ஒரு
பலாப்பழம் தான்!
உன் இதழ்கள்
பலாச்சுவைபோல்
சுவைக்கின்றன!
உன் இதயமோ
என்னை முட்களால்
தைப்பதால்...
அழுகிறேன்!
சித்திரப்பூ செந்தமிழே
சிரிப்பழகே என்மகளே!
நித்திரையில் உன்நாமம்
நிதம்பாடித் துதிக்கிறேன்!
கத்திரிவெயில் வேளையிலும்
கவிபாடித் தொழுகிறேன்!
யுத்தமில்லா உலகுகாண
யுகந்தோறும் அழுகிறேன்!!
சிரிப்பழகே என்மகளே!
நித்திரையில் உன்நாமம்
நிதம்பாடித் துதிக்கிறேன்!
கத்திரிவெயில் வேளையிலும்
கவிபாடித் தொழுகிறேன்!
யுத்தமில்லா உலகுகாண
யுகந்தோறும் அழுகிறேன்!!
யுத்தமடி!
காதலைச் சொல்லவே - உன்பெயரில்
கவிதைகளும் எழுதினேன்!
கவிதைகளும் அழுததடி! - உன்
காலடி தொழுததடி!! - என்
கண்ணீரைப் போக்கிடவே
தண்ணீரில் குளித்திட்டேன்!
தண்ணீரில் இரத்தமடி!
உன்னால் என்னுள் யுத்தமடி!!
கவிதைகளும் எழுதினேன்!
கவிதைகளும் அழுததடி! - உன்
காலடி தொழுததடி!! - என்
கண்ணீரைப் போக்கிடவே
தண்ணீரில் குளித்திட்டேன்!
தண்ணீரில் இரத்தமடி!
உன்னால் என்னுள் யுத்தமடி!!
Tuesday, September 28, 2010
மலரட்டும் புத்தாண்டு!
சாதியுள்ள சமுதாயம் சரியட்டும்!
நீதியுள்ள சமுதாயம் நிலவட்டும்!
வீதிகளில் தீவிரவாதம் பொசுங்கட்டும்!
போதிமர ஞானம் பிறக்கட்டும்!!
மண்ணுலகில் மனிதம் வாழட்டும்!
மதங்கொண்ட மனிதன் வீழட்டும்!
பெண்ணுலகம் சமமாய் வளரட்டும்!
பாரதிகண்ட கனவு நனவாகட்டும்!!
நன்மைகள் நலமாய் வாழட்டும்!
தீமைகள் தீக்கிரையாய் பொசுங்கட்டும்!
உண்மைகள் உயர்வாய் உலவட்டும்!
பொய்மையும் அச்சமும் சாகட்டும்!!
எத்திக்கும் தமிழ்மணம் கமழட்டும்!
ஏழைகளின் அகங்குளிரட்டும்!
தித்திக்கும் தை பிறக்கட்டும்!
தேன்சுவைப் பொங்கல் பொங்கட்டும்!!
எழில்கொஞ்சும் இந்தியா
இரண்டாயிரத்து ஏழாம் ஆண்டை
இனிமையாய் வரவேற்கிறது!!
இக்கவிதை வெளிவந்துள்ள ஊடகங்கள்
1. தினத்தந்தி (மதுரை பதிப்பகம்) – 08-11-2007
2. பதிவுகள் (இணைய இதழ்) – 31-12-2011
3. வார்ப்பு (இணைய இதழ்) – 21-12-2011
நீதியுள்ள சமுதாயம் நிலவட்டும்!
வீதிகளில் தீவிரவாதம் பொசுங்கட்டும்!
போதிமர ஞானம் பிறக்கட்டும்!!
மண்ணுலகில் மனிதம் வாழட்டும்!
மதங்கொண்ட மனிதன் வீழட்டும்!
பெண்ணுலகம் சமமாய் வளரட்டும்!
பாரதிகண்ட கனவு நனவாகட்டும்!!
நன்மைகள் நலமாய் வாழட்டும்!
தீமைகள் தீக்கிரையாய் பொசுங்கட்டும்!
உண்மைகள் உயர்வாய் உலவட்டும்!
பொய்மையும் அச்சமும் சாகட்டும்!!
எத்திக்கும் தமிழ்மணம் கமழட்டும்!
ஏழைகளின் அகங்குளிரட்டும்!
தித்திக்கும் தை பிறக்கட்டும்!
தேன்சுவைப் பொங்கல் பொங்கட்டும்!!
எழில்கொஞ்சும் இந்தியா
இரண்டாயிரத்து ஏழாம் ஆண்டை
இனிமையாய் வரவேற்கிறது!!
இக்கவிதை வெளிவந்துள்ள ஊடகங்கள்
1. தினத்தந்தி (மதுரை பதிப்பகம்) – 08-11-2007
2. பதிவுகள் (இணைய இதழ்) – 31-12-2011
3. வார்ப்பு (இணைய இதழ்) – 21-12-2011
வெற்றிப்பண்!
நாடும் வளம்பெற
நாமும் நலம்பெற
தேடும் திரவியம்
தெவிட்டாமல் பெறலாம்!
கூடும் இடங்களில்
குண்டுமழை வேண்டாம்!
நாட்டம் வேண்டும்
நாளை நீயும் உயரலாம்!!
நாமும் நலம்பெற
தேடும் திரவியம்
தெவிட்டாமல் பெறலாம்!
கூடும் இடங்களில்
குண்டுமழை வேண்டாம்!
நாட்டம் வேண்டும்
நாளை நீயும் உயரலாம்!!
Wednesday, September 22, 2010
பிரபஞ்ச அழகி!
2005 ம் ஆண்டு மே மாதம் 7 ம் தேதி சனிக்கிழமை அவள் வீட்டிற்கு போயிருந்தேன். மதிய உணவு உண்டேன். அதன்பிறகு அவளிடம் 'கண்ணாடி எதற்கு அணிகிறாய்?' என்று கேட்டேன். 'எனக்கு சிறுவயதிலிருந்தே தலைவலி' என்றாள். கண்ணாடி அணிந்த அவள் எவ்வளவு அழகாய் இருப்பாள் தெரியுமா? என் குட்டிப்பாப்பா தேவதையை, என் செல்லக்குழந்தையை அப்டியே என் மடியில் தூக்கி வைத்து செல்லங்கொஞ்ச வேண்டும் போல் இருக்கு.
உலகத்தை ஆள்பவன்
இறைவன்! - காதல்
கலகத்தை உண்டாக்கி - எனை
கவிஞனாய் மாற்றியவள்
நீதான்!
என் பக்கத்தில் நின்று
என்னால் வெட்கத்தில் சிவப்பவளே...
நீ சொர்க்கத்தில் பிறந்தவளா...?!! - இல்லை
நீ ஆண்வர்க்கத்தைக் கொல்பவளா...?!!!!
அமைதியாய் வந்து -
என்னுள்
புயலை வீசவைத்து - காதல்
தயவில் வாழவைத்த
தமிழச்சி நீதான்!!
இலக்கின்றி வாழ்ந்த
என்னை - தமிழ்
இலக்கியத்தில் மூழ்கவைத்த
இலக்கியமானவளே...!!!
என்தலைவியான உனக்கு
சிறுவயதிலிருந்தே தலைவலி!
உன்னால்தான் எனக்கு இதயவலி!!
உன் கண்ணுக்கழகு கண்ணாடியா?!!!
அழகுக்கே நீ முன்னோடியா?!!
மழையால் சிரபுஞ்சி அழகு!
உன்னால் இந்த பிரபஞ்சமே அழகு!!
Labels:
கவிதைகள் (பாகம் - 2.3)
Subscribe to:
Comments (Atom)