கடவுளைக்
காணவேண்டுமென்ற
ஆசை போய்விட்டது!
என்காதலி உனை
பேருந்தில் பார்த்த
அந்த நிமிடத்திலிருந்து...
Wednesday, August 31, 2011
வடிவேல் முருகா!
சிவனின் மகனே!
உமைபா லகனே!!
முத்தமிழ் அழகா!
வடிவேல் முருகா!!
அமிழ்தினு மினிய
தமிழ்மொழி தருவாய்!
வணிகம் செய்ய
ஆங்கிலம் தருவாய்!!
முந்தி வந்தோரின்
முன்வினைகள் தீர்ப்போனாம்
தொந்தி வயிற்றோனின்
தம்பி வேலவனே! – என்
சிந்தையை சீர்படுத்தி – எனை
சிறப்புடனே வாழவைப்பாயே!!
உமைபா லகனே!!
முத்தமிழ் அழகா!
வடிவேல் முருகா!!
அமிழ்தினு மினிய
தமிழ்மொழி தருவாய்!
வணிகம் செய்ய
ஆங்கிலம் தருவாய்!!
முந்தி வந்தோரின்
முன்வினைகள் தீர்ப்போனாம்
தொந்தி வயிற்றோனின்
தம்பி வேலவனே! – என்
சிந்தையை சீர்படுத்தி – எனை
சிறப்புடனே வாழவைப்பாயே!!
துள்ளிவருகுது வேல்!
துள்ளிவருகுது வேல்!
தள்ளிப்போ பகையே!
சொல்லிப்பார் தினமிதையே!
உன்னை அண்டாது பகையே!
உன்னை அண்டாது பகையே!!
தள்ளிப்போ பகையே!
சொல்லிப்பார் தினமிதையே!
உன்னை அண்டாது பகையே!
உன்னை அண்டாது பகையே!!
Sunday, August 28, 2011
இறந்த நாள்!
என்
ஒவ்வொரு பிறந்தநாளும்
எனக்கு
ஒவ்வொரு இறந்தநாள்தான்!!
என் சிறுவயது முதலே
அன்பு கிடைக்காத காரணத்தினால்...
ஒவ்வொரு பிறந்தநாளும்
எனக்கு
ஒவ்வொரு இறந்தநாள்தான்!!
என் சிறுவயது முதலே
அன்பு கிடைக்காத காரணத்தினால்...
உன் அம்மாவுக்கு...
என்னுள்
தேக்கிவைத்திருந்த
காதல்
உன்னுள்ளும்
பாக்கியில்லாமல் வரும்!
அதுவரை
காத்திருப்பேன்!
பாக்கியத்தைக்
கேட்டதாகச் சொல்
கண்மணி!!
தேக்கிவைத்திருந்த
காதல்
உன்னுள்ளும்
பாக்கியில்லாமல் வரும்!
அதுவரை
காத்திருப்பேன்!
பாக்கியத்தைக்
கேட்டதாகச் சொல்
கண்மணி!!
உன் அப்பாவுக்கு...
என் மதியையும்
மயங்கவைத்த
மகளைப் பெற்றெடுத்த
மதியழகனை
என்மதியில்
வைத்துக்கொண்டேன்
என்று சொல்லிவிடு
கண்மணி!!
மயங்கவைத்த
மகளைப் பெற்றெடுத்த
மதியழகனை
என்மதியில்
வைத்துக்கொண்டேன்
என்று சொல்லிவிடு
கண்மணி!!
அன்பிற்கு நான் அடிமை!
MCA நான்காம் பருவத்தில் அந்த மரத்தடி நிழலில் விசாலம் அக்கா, கல்பனா, இன்னும் சிலர் கலகலவென்று பேசிக்கொண்டிருப்பர். எனக்கு மிதிவண்டி எப்போதெல்லாம் தேவைப்படுகிறதோ அப்போதெல்லாம் விசாலம் அக்காவும் கல்பனாவும் முகம் சுளிக்காமல் கொடுத்து உதவுவார்கள். ஐந்தாம் பருவத்தில் அவர்களை காணவில்லை. அப்போது தோன்றிய கவிதை இது.
அன்பிற்கு நான் அடிமை! – உங்கள்
அன்பிற்கு நான் அடிமை!!
எப்போதும் சிரித்தீர்கள்! – நட்பால்
என்மனம் பறித்தீர்கள்!!
அடிக்கடி விளையாடினாலும்
நொடிக்கொருமுறை நலம் விசாரிப்பீர்கள்!!
மரத்தடி நிழலில் – உங்கள்
சிரிப்பொலி கேட்கும்! – இனி
சிரிப்பொலி கேட்குமா? – என்
உயிர் மெல்ல சாகுமா??!!
அன்பிற்கு நான் அடிமை! – உங்கள்
அன்பிற்கு நான் அடிமை!!
எப்போதும் சிரித்தீர்கள்! – நட்பால்
என்மனம் பறித்தீர்கள்!!
அடிக்கடி விளையாடினாலும்
நொடிக்கொருமுறை நலம் விசாரிப்பீர்கள்!!
மரத்தடி நிழலில் – உங்கள்
சிரிப்பொலி கேட்கும்! – இனி
சிரிப்பொலி கேட்குமா? – என்
உயிர் மெல்ல சாகுமா??!!
கல்பனா!
கார்த்திகேயன் அண்ணன் கல்பனாவைப் பற்றி சொன்ன அடுத்த நாளே அவளைப் பார்த்து அவளிடம் சரவணராஜ் அண்ணனை பார்த்ததாக சொன்னதுதான் தாமதம். கன்னாபின்னாவென்று திட்டிவிட்டாள். அருகில் விசாலம் அக்கா இருந்தாள். மறுநாள் விசாலம் அக்காவிடம் விளக்கிச் சொன்னேன். அவளும் கல்பனாவிடம் சொல்லியிருந்திருப்பாள் போல. சிலநாள் கழித்து நான் வகுப்பிற்கு சென்று கொண்டிருந்தேன். ‘sorry suresh’ என்று கத்தினாள். நான் ‘எதற்குப்பா?’ என்றேன். ‘உன்னை திட்டியதற்கு sorry’ என்றாள். நானும் ‘பரவாயில்லைப்பா’ என்றபடி நகர்ந்தேன். அவளைப் பார்க்கும்போதெல்லாம்
சரவணராஜ் அண்ணனும் அவள் அக்காவும் கை கோர்த்து வருவது போலவே தோன்றும்.
2006, ஏப்ரல் 17 திங்கட்கிழமை c# exam முடித்துவிட்டு மதியம் 1.25 க்கு வெளியே வந்தேன். என் மகேஸ்வரி அக்காவுக்கு பேசுவதற்காக STD போய்விட்டு திரும்பி வந்துகொண்டிருந்தேன். என் எதிரே பாண்டிலக்ஷ்மி ம்மா, மகாலக்ஷ்மி கன்னுக்குட்டி, தெய்வானை மூன்றுபேரும் எதிரே வந்து ‘xerox எடுக்கப் போகிறோம் சுரேஷ்’ என்று சொல்லிவிட்டு என்னைக் கடந்து போனார்கள். அதன்பிறகு கல்பனா வந்தாள். அவள் சேலை கட்டியிருந்தாள் ‘என்னப்பா விசேசம்?’ என்றேன். ‘இன்று என் பிறந்த நாள் சுரேஷ்’ என்றாள். சாக்லேட் நீட்டினாள். நான் வாங்கிக்கொண்டேன். ‘எனக்கு படிப்பு முடிந்துவிட்டது சுரேஷ். இனிமேல் நாமிருவரும் பார்க்க முடியாது.’ என்று சொன்னாள். ‘உன் சோபனா அக்காவை ஒருநபர் (நான்) நலம் விசாரித்ததாக சொல்லுப்பா.’ என்றேன். என் குரல் தளுதளுத்தது. கண்ணீர் வந்தது. தலையைக் குனிந்துகொண்டு அவள் முகத்தை பார்க்காமலேயே விடுதி நோக்கி நடந்தேன். அவளும் என்னை திரும்பி திரும்பி பார்த்துக் கொண்டே சென்றாள்.
சோபனா உன் அக்கா!
சோபனா என் தங்கை!
இவள்தானே நம் அன்பிற்குப் பாலம்!
என்றும் குன்றாது நம்நட்பின் ஆழம்!!
நான் முகவையில் படித்தவன்!
உன்னைவிட அகவையில் சிறியவன்!
கள்ளங்கபடமற்றது உன்னுருவம்!
மழலை மாறாதது என்பருவம்!!
உன்னுள் ஆண்மை கலந்த பெண்மை!
என்னுள் மென்மை கலந்த ஆண்மை!!
உன் பிறந்தநாளை
இனி நீ மறக்கமாட்டாய்!!
நான் உன்னைப் பிரியும்போது
கண்ணீர் என்கண்ணில்! – என்னுயிர்
இம்மண்ணைவிட்டுப் பிரியும்போது
என்ன நேரும் உன்னில்?!!
சரவணராஜ் அண்ணனும் அவள் அக்காவும் கை கோர்த்து வருவது போலவே தோன்றும்.
2006, ஏப்ரல் 17 திங்கட்கிழமை c# exam முடித்துவிட்டு மதியம் 1.25 க்கு வெளியே வந்தேன். என் மகேஸ்வரி அக்காவுக்கு பேசுவதற்காக STD போய்விட்டு திரும்பி வந்துகொண்டிருந்தேன். என் எதிரே பாண்டிலக்ஷ்மி ம்மா, மகாலக்ஷ்மி கன்னுக்குட்டி, தெய்வானை மூன்றுபேரும் எதிரே வந்து ‘xerox எடுக்கப் போகிறோம் சுரேஷ்’ என்று சொல்லிவிட்டு என்னைக் கடந்து போனார்கள். அதன்பிறகு கல்பனா வந்தாள். அவள் சேலை கட்டியிருந்தாள் ‘என்னப்பா விசேசம்?’ என்றேன். ‘இன்று என் பிறந்த நாள் சுரேஷ்’ என்றாள். சாக்லேட் நீட்டினாள். நான் வாங்கிக்கொண்டேன். ‘எனக்கு படிப்பு முடிந்துவிட்டது சுரேஷ். இனிமேல் நாமிருவரும் பார்க்க முடியாது.’ என்று சொன்னாள். ‘உன் சோபனா அக்காவை ஒருநபர் (நான்) நலம் விசாரித்ததாக சொல்லுப்பா.’ என்றேன். என் குரல் தளுதளுத்தது. கண்ணீர் வந்தது. தலையைக் குனிந்துகொண்டு அவள் முகத்தை பார்க்காமலேயே விடுதி நோக்கி நடந்தேன். அவளும் என்னை திரும்பி திரும்பி பார்த்துக் கொண்டே சென்றாள்.
சோபனா உன் அக்கா!
சோபனா என் தங்கை!
இவள்தானே நம் அன்பிற்குப் பாலம்!
என்றும் குன்றாது நம்நட்பின் ஆழம்!!
நான் முகவையில் படித்தவன்!
உன்னைவிட அகவையில் சிறியவன்!
கள்ளங்கபடமற்றது உன்னுருவம்!
மழலை மாறாதது என்பருவம்!!
உன்னுள் ஆண்மை கலந்த பெண்மை!
என்னுள் மென்மை கலந்த ஆண்மை!!
உன் பிறந்தநாளை
இனி நீ மறக்கமாட்டாய்!!
நான் உன்னைப் பிரியும்போது
கண்ணீர் என்கண்ணில்! – என்னுயிர்
இம்மண்ணைவிட்டுப் பிரியும்போது
என்ன நேரும் உன்னில்?!!
கவிவள்ளல்!
சரவணராஜ் அண்ணனுக்கு நான் எழுதிக் கொடுத்த மூன்றாவது கவிதை இது.
காதலியை நினைத்து...
காற்றினில் பறந்து – காதல்
கவிதையால் சிறந்து – வெறுமைக்
கனவுகளில் மிதந்து – புதுக்
காவியந்தனைப் படைத்து...
அகிலமெங்கும் பெயர்போற்ற...
சகலரும் பாராட்ட...
பகலவன் பார்வைகொண்டு
பரிவுடன் வாழ்கிறான்
கவிதைவள்ளல்! – இவனை
பாடிவாழ்த்தினாலே என்மனதில்
ஒருவகைத் துள்ளல்!!
காதலியை நினைத்து...
காற்றினில் பறந்து – காதல்
கவிதையால் சிறந்து – வெறுமைக்
கனவுகளில் மிதந்து – புதுக்
காவியந்தனைப் படைத்து...
அகிலமெங்கும் பெயர்போற்ற...
சகலரும் பாராட்ட...
பகலவன் பார்வைகொண்டு
பரிவுடன் வாழ்கிறான்
கவிதைவள்ளல்! – இவனை
பாடிவாழ்த்தினாலே என்மனதில்
ஒருவகைத் துள்ளல்!!
சாதனைக்கவி!
இன்னொருமுறை சரவணராஜ் அண்ணனைப் பார்க்க கானாடுகாத்தான் சென்றிந்தபோது இவரிடம் ‘அனைவரும் என்னை ஊக்கப்படுத்துவதற்கு பதிலாக கிண்டலடிக்கின்றனர்.’ என்றேன். ‘நீ உன் கவிதைகளை பத்திரிகளுக்கு அனுப்பு. கவிதைகளை இரசிக்கத் தெரியாதவர்களிடம் உன் கவிதைகளை கான்பிக்காதே’ என்று சொன்னார். அவர் சொன்னதையே அவருக்கு திரும்ப இந்த கவிதை வடிவில் சொல்லியிருக்கிறேன்.
கவித்தேனில்
நனைக்கவைத்தான் நம்செவியை!
புவிதனில்
நினைக்கவைத்தான் காதல்கவிதை!!
அண்ணா...
உன் தம்பி சொல்கிறேன்
அண்ணா...
சாகும்வரை சோபனாவா?
நிறுத்திவிடு அவள்நினைவை! – புதிதாய்
நினைத்துவிடு வாழ்க்கைத்துணிவை! – உன்னால்
சகலமும் கற்றுக்கொள்ளும் கனிவை! – இதனால்
அகிலமும் புரிந்துகொள்ளும் பணிவை!!
கண்ணுள்ளவர்களுக்கு
உன் க(வி)தை தேன்! – செவியின்கண்
புண்உள்ளவர்களுக்கு
உன் கவிதை ஏன்?
நான் சொன்னேன்
உன்னை
காதல்கவி என்று!
நாளை உன்பெயர் மாறுமே
சாதனைக்கவி என்று!!
கவித்தேனில்
நனைக்கவைத்தான் நம்செவியை!
புவிதனில்
நினைக்கவைத்தான் காதல்கவிதை!!
அண்ணா...
உன் தம்பி சொல்கிறேன்
அண்ணா...
சாகும்வரை சோபனாவா?
நிறுத்திவிடு அவள்நினைவை! – புதிதாய்
நினைத்துவிடு வாழ்க்கைத்துணிவை! – உன்னால்
சகலமும் கற்றுக்கொள்ளும் கனிவை! – இதனால்
அகிலமும் புரிந்துகொள்ளும் பணிவை!!
கண்ணுள்ளவர்களுக்கு
உன் க(வி)தை தேன்! – செவியின்கண்
புண்உள்ளவர்களுக்கு
உன் கவிதை ஏன்?
நான் சொன்னேன்
உன்னை
காதல்கவி என்று!
நாளை உன்பெயர் மாறுமே
சாதனைக்கவி என்று!!
Subscribe to:
Comments (Atom)