தினம் தினம்
கண்ணாடியைப் பார்த்துக்கொண்டே
அதில் தெரியும்
என்னிடத்திலே
என்காதலை சொல்லிவிட்டு
உன்னிடத்தில் சொல்லியதாய்
மகிழ்கிறேன்!
ஏனெனில்
நம் காதலில்
நீ வேறில்லை
நான் வேறில்லையே...!!
Sunday, October 17, 2010
காதல் கிறுக்கன்!
நான் எங்கே சென்றாலும்
என்னுடனேயே பேசிக்கொண்டே
செல்கிறேன்!
பார்ப்பவர்கள் அனைவரும்
எனை 'கிறுக்கன்'
என சொல்கின்றனர்!
அவர்களுக்கெப்படி தெரியும்
என்னுயிர் நீதானென்று...!!
என்னுடனேயே பேசிக்கொண்டே
செல்கிறேன்!
பார்ப்பவர்கள் அனைவரும்
எனை 'கிறுக்கன்'
என சொல்கின்றனர்!
அவர்களுக்கெப்படி தெரியும்
என்னுயிர் நீதானென்று...!!
காதல் சுகமானது!
உனக்கு
பத்துமாதந்தான்
பிரசவவலி!
உன்னை சுமக்கும்
எனக்கோ
ஜென்மஜென்மமாய்
இதயத்தில் வலி!!
வலிகூட சுகந்தான்!
என்னிதயம் வலிக்க
காரணமானவள்
நீ என்பதால்...
பத்துமாதந்தான்
பிரசவவலி!
உன்னை சுமக்கும்
எனக்கோ
ஜென்மஜென்மமாய்
இதயத்தில் வலி!!
வலிகூட சுகந்தான்!
என்னிதயம் வலிக்க
காரணமானவள்
நீ என்பதால்...
Saturday, October 2, 2010
தொலைந்துபோன இதயம்!
மோதிரத்தை
பகலில் தொலைத்துவிட்டு
இரவில் தேடுபவனைப் போல்
என் இதயத்தை
உன்னிடத்திலேயே தொலைத்துவிட்டு
என்னிடத்திலே தேடுகிறேன்!
என்னிதயம் விரைவில்
கிடைக்கக் கூடாதெனவும்
வேண்டுகிறேன்!
கிடைக்காத தினங்களிலாவது
என் இதயத்திடம் பரிவுகாட்டுவாய்
என்ற நம்பிக்கையோடு...!!
பகலில் தொலைத்துவிட்டு
இரவில் தேடுபவனைப் போல்
என் இதயத்தை
உன்னிடத்திலேயே தொலைத்துவிட்டு
என்னிடத்திலே தேடுகிறேன்!
என்னிதயம் விரைவில்
கிடைக்கக் கூடாதெனவும்
வேண்டுகிறேன்!
கிடைக்காத தினங்களிலாவது
என் இதயத்திடம் பரிவுகாட்டுவாய்
என்ற நம்பிக்கையோடு...!!
மனமெனும் அற்புத சாதனம்!
உடலையும் உயிரையும்
இணைக்கும் அற்புத
சாதனம் இந்த மனம்!
உயிரினில் தோன்றும்
உணர்வினை உண்மையாய்
வெளிக்காட்டுமிந்த மனம்!
இரவில் கனவை
உற்பத்தி செய்து
பிறவிப்பயனை
படமாய்க் காட்டுமிந்த மனம்!
கண்களை மூடி
தியானத்திலிருந்தால் - நம்
கண்முன் கடவுளைக்
காட்டும் கண்ணாடி
இந்த மனம்!
மிருக குணத்தை
களையெடுக்கச் செய்து
கடவுள் குணத்தை
காப்பாற்றச் செய்வது
இந்த மனம்!
நீயும் கடவுள்! - உன்
உயிர்தான் கடவுள்!
உன்னை உணரச் செய்வது
இந்த மனம்!
அன்பே கடவுள்!
அறிவே பலம்!
உனக்கு சொல்லிக்கொடுப்பது
இந்த மனம்!!
இணைக்கும் அற்புத
சாதனம் இந்த மனம்!
உயிரினில் தோன்றும்
உணர்வினை உண்மையாய்
வெளிக்காட்டுமிந்த மனம்!
இரவில் கனவை
உற்பத்தி செய்து
பிறவிப்பயனை
படமாய்க் காட்டுமிந்த மனம்!
கண்களை மூடி
தியானத்திலிருந்தால் - நம்
கண்முன் கடவுளைக்
காட்டும் கண்ணாடி
இந்த மனம்!
மிருக குணத்தை
களையெடுக்கச் செய்து
கடவுள் குணத்தை
காப்பாற்றச் செய்வது
இந்த மனம்!
நீயும் கடவுள்! - உன்
உயிர்தான் கடவுள்!
உன்னை உணரச் செய்வது
இந்த மனம்!
அன்பே கடவுள்!
அறிவே பலம்!
உனக்கு சொல்லிக்கொடுப்பது
இந்த மனம்!!
Wednesday, September 29, 2010
எய்ட்ஸ் ஒரு உயிர்க்கொல்லி!
விளக்கொளியை தேடிமடியும்
விட்டில்பூச்சிகளைப் போல்
மாலைப்பொழுதின் மயக்கத்தில் - விலை
மாதரைத் தேடி அலைவதும் ஏனோ?
அறிவியலைச் சொல்லி
புரிய வைத்தாலும்
எய்ட்ஸ் ஒரு உயிர்க்கொல்லி
என்பது புரிவதில்லை உனக்கு!
தூசிபடிந்த ஊசி!
கட்டிலுக்கு வரும் வேசி!
இப்படி நீ பேசி
பொழுதைக் கழிக்காமல் யோசி!!
வருமுன் காப்போம்
என்பதே நம்கடமை!
வந்தபின் பார்ப்போம்
என்பதெல்லாம் மடமை!
ஒருவனுக்கு என்றுமே ஒருத்தி
என்பதை மனதில் நிறுத்தி
நீ வாழ்நதுவந்தால்
எய்ட்ஸ் வருமா உனைத்துரத்தி?!
இக்கவிதை வெளிவந்துள்ள ஊடகங்கள்
1. தினத்தந்தி (மதுரை பதிப்பகம்) – 10-09-2007
விட்டில்பூச்சிகளைப் போல்
மாலைப்பொழுதின் மயக்கத்தில் - விலை
மாதரைத் தேடி அலைவதும் ஏனோ?
அறிவியலைச் சொல்லி
புரிய வைத்தாலும்
எய்ட்ஸ் ஒரு உயிர்க்கொல்லி
என்பது புரிவதில்லை உனக்கு!
தூசிபடிந்த ஊசி!
கட்டிலுக்கு வரும் வேசி!
இப்படி நீ பேசி
பொழுதைக் கழிக்காமல் யோசி!!
வருமுன் காப்போம்
என்பதே நம்கடமை!
வந்தபின் பார்ப்போம்
என்பதெல்லாம் மடமை!
ஒருவனுக்கு என்றுமே ஒருத்தி
என்பதை மனதில் நிறுத்தி
நீ வாழ்நதுவந்தால்
எய்ட்ஸ் வருமா உனைத்துரத்தி?!
இக்கவிதை வெளிவந்துள்ள ஊடகங்கள்
1. தினத்தந்தி (மதுரை பதிப்பகம்) – 10-09-2007
Subscribe to:
Posts (Atom)