விளக்கொளியை தேடிமடியும்
விட்டில்பூச்சிகளைப் போல்
மாலைப்பொழுதின் மயக்கத்தில் - விலை
மாதரைத் தேடி அலைவதும் ஏனோ?
அறிவியலைச் சொல்லி
புரிய வைத்தாலும்
எய்ட்ஸ் ஒரு உயிர்க்கொல்லி
என்பது புரிவதில்லை உனக்கு!
தூசிபடிந்த ஊசி!
கட்டிலுக்கு வரும் வேசி!
இப்படி நீ பேசி
பொழுதைக் கழிக்காமல் யோசி!!
வருமுன் காப்போம்
என்பதே நம்கடமை!
வந்தபின் பார்ப்போம்
என்பதெல்லாம் மடமை!
ஒருவனுக்கு என்றுமே ஒருத்தி
என்பதை மனதில் நிறுத்தி
நீ வாழ்நதுவந்தால்
எய்ட்ஸ் வருமா உனைத்துரத்தி?!
இக்கவிதை வெளிவந்துள்ள ஊடகங்கள்
1. தினத்தந்தி (மதுரை பதிப்பகம்) – 10-09-2007
No comments:
Post a Comment