Wednesday, August 31, 2011

அண்ணி!

உன்னைப் பற்றிய
நினைவுகளை
என் தங்கையிடம்
ஒரே ஒருமுறை
சொல்லியிருக்கிறேன்!
அப்போதிலிருந்து இன்றுவரை
நான் ஊருக்கு
போகும்போதெல்லாம்
உன்னைப்பற்றி என்னிடம்
தவறாமல் கேட்டுவிடுகிறாள்!
அவள் விசாரிக்கும்
ஒவ்வொருமுறையும்
கண்களில்
ஏக்கத்தை கவனித்தேன்!
தெரிந்துகொண்டேன்!

அவள் உனைதன்
அண்ணியெனவே
நினைத்திருக்கிறாள் என்று...!!

அரசியல்!

நம்மிந்திய அரசியல்
சாக்கடையல்ல...
அது ஒரு பூக்கூடை!

குரங்குகையில் கிடைத்த
பூமாலையைப் போல்
நம்முடைய நாடு
அரசியல்வாதிகளின்
கைகளில் சிக்கி
சாக்கடையாகிறது!

எனவே
நம்மிந்திய அரசியல்
சாக்கடையல்ல...
அது ஒரு பூக்கூடை!

தீக்குளிக்கட்டுமா?

உன்னை
மறக்கவேண்டுமென
நினைத்து
என்னிடமிருந்த
உன் புகைப்படத்தை
தீயிலிட்டுக் கொளுத்தினேன்!

உன் புகைப்படம்
தீக்குளித்து இறந்துபோனது!

அதன்பிறகும்
உன்நினைவுகள்
என்னைவிட்டு அகலவில்லை!

அப்போதுதான்
புரிந்துகொண்டேன்!

உன்னை
மறக்கவேண்டுமெனில்
நானே தீக்குளிக்க வேண்டுமென்று...!!

கடவுள்!

கடவுளைக்
காணவேண்டுமென்ற
ஆசை போய்விட்டது!

என்காதலி உனை
பேருந்தில் பார்த்த
அந்த நிமிடத்திலிருந்து...

வடிவேல் முருகா!

சிவனின் மகனே!
உமைபா லகனே!!
முத்தமிழ் அழகா!
வடிவேல் முருகா!!

அமிழ்தினு மினிய
தமிழ்மொழி தருவாய்!
வணிகம் செய்ய
ஆங்கிலம் தருவாய்!!

முந்தி வந்தோரின்
முன்வினைகள் தீர்ப்போனாம்
தொந்தி வயிற்றோனின்
தம்பி வேலவனே! – என்
சிந்தையை சீர்படுத்தி – எனை
சிறப்புடனே வாழவைப்பாயே!!

துள்ளிவருகுது வேல்!

துள்ளிவருகுது வேல்!
தள்ளிப்போ பகையே!
சொல்லிப்பார் தினமிதையே!
உன்னை அண்டாது பகையே!
உன்னை அண்டாது பகையே!!

Sunday, August 28, 2011

இறந்த நாள்!

என்
ஒவ்வொரு பிறந்தநாளும்
எனக்கு
ஒவ்வொரு இறந்தநாள்தான்!!

என் சிறுவயது முதலே
அன்பு கிடைக்காத காரணத்தினால்...

உன் அம்மாவுக்கு...

என்னுள்
தேக்கிவைத்திருந்த
காதல்
உன்னுள்ளும்
பாக்கியில்லாமல் வரும்!
அதுவரை
காத்திருப்பேன்!
பாக்கியத்தைக்
கேட்டதாகச் சொல்
கண்மணி!!

உன் அப்பாவுக்கு...

என் மதியையும்
மயங்கவைத்த
மகளைப் பெற்றெடுத்த
மதியழகனை
என்மதியில்
வைத்துக்கொண்டேன்
என்று சொல்லிவிடு
கண்மணி!!

அன்பிற்கு நான் அடிமை!

MCA நான்காம் பருவத்தில் அந்த மரத்தடி நிழலில் விசாலம் அக்கா, கல்பனா, இன்னும் சிலர் கலகலவென்று பேசிக்கொண்டிருப்பர். எனக்கு மிதிவண்டி எப்போதெல்லாம் தேவைப்படுகிறதோ அப்போதெல்லாம் விசாலம் அக்காவும் கல்பனாவும் முகம் சுளிக்காமல் கொடுத்து உதவுவார்கள். ஐந்தாம் பருவத்தில் அவர்களை காணவில்லை. அப்போது தோன்றிய கவிதை இது.


அன்பிற்கு நான் அடிமை! – உங்கள்
அன்பிற்கு நான் அடிமை!!

எப்போதும் சிரித்தீர்கள்! – நட்பால்
என்மனம் பறித்தீர்கள்!!

அடிக்கடி விளையாடினாலும்
நொடிக்கொருமுறை நலம் விசாரிப்பீர்கள்!!

மரத்தடி நிழலில் – உங்கள்
சிரிப்பொலி கேட்கும்! – இனி
சிரிப்பொலி கேட்குமா? – என்
உயிர் மெல்ல சாகுமா??!!