Wednesday, August 31, 2011

அண்ணி!

உன்னைப் பற்றிய
நினைவுகளை
என் தங்கையிடம்
ஒரே ஒருமுறை
சொல்லியிருக்கிறேன்!
அப்போதிலிருந்து இன்றுவரை
நான் ஊருக்கு
போகும்போதெல்லாம்
உன்னைப்பற்றி என்னிடம்
தவறாமல் கேட்டுவிடுகிறாள்!
அவள் விசாரிக்கும்
ஒவ்வொருமுறையும்
கண்களில்
ஏக்கத்தை கவனித்தேன்!
தெரிந்துகொண்டேன்!

அவள் உனைதன்
அண்ணியெனவே
நினைத்திருக்கிறாள் என்று...!!

No comments: