அன்பான என்தாயீ என்னோட
தங்கச்சி
அன்பாலே எந்நாளும்
அவளிங்கு என்கட்சி
கண்ணுக்கு இமைபோல
காத்திட்ட என்மகளே
பண்பான உனைத்தானே
பாராட்டும் ஊர்மெச்சி
அறிவுடனே
பேசிடுவாய் அறிவுரைகள் கூறிடுவாய்
பரிவென்ற வார்த்தைக்குப்
பொருளாக மாறிடுவாய்
பிரிவுவந்த பிறகேதான்
பாசத்தின் பொருள்புரியும்
பிரிந்துநின்ற
போதினிலும் பரிவிற்கு வேரிடுவாய்
கடந்தகால
நினைவினிலே கவிதையிங்கு பாடுகிறேன்
படர்ந்துநின்ற
அன்பினையே பரவசமாய்த் தேடுகிறேன்
தொடர்ந்துவரும்
நிழல்போல தங்கையுன் மகனோடு
தொடர்ந்துவரத்
தானிங்கு தனிமையிலே வாடுகிறேன்
இக்கவிதை வெளிவந்துள்ள ஊடகங்கள்
1. பதிவுகள் (இணைய இதழ்) - 31-07-2012
இக்கவிதை வெளிவந்துள்ள ஊடகங்கள்
1. பதிவுகள் (இணைய இதழ்) - 31-07-2012