Saturday, June 1, 2019

என் பெயருக்குப் பின்னால் சேர்வை என்ற சாதிப்பெயர் எதற்கு?

நரேந்திர மோடி என்பரை நாம் மோடி என்று அவருடைய சாதிப்பெயரை வைத்துத்தான் அழைக்கிறோம்.

ராகுல் என்ற ஒருவரை அவருடைய சாதிப்பெயரான காந்தி என்பதனை சேர்த்து ராகுல் காந்தி என்றே அழைக்கிறோம்.

நம் மாநிலத்தின் பக்கத்து மாநிலமான கேரளாவிலிருந்து வரும் திரைப்பட நடிகர்கள் நடிகைகள் இயக்குனர்களின் பெயருக்குப் பின்னால் மேனன் என்றும் நாயர் என்றும் தங்களின் ஜாதிப்பெயர்களை இட்டுக்கொள்வதை நாம் பார்க்க முடிகிறது. உதாரணமாக லட்சுமி மேனன், கௌதம் வாசுதேவ மேனன், சுவேதா மேனன், கார்த்திகா நாயர்.

வெளிநாடுகளில் taylor (tailor), cook என்று முடியும் பெயர்கள் மிகப் பிரபலம். taylor என்பதற்கு தையற்காரன் என்று பொருள். cook என்பதற்கு சமையற்காரன் என்று பொருள்.

இப்படி எல்லா இடங்களிலும் சாதிப்பெயரை தங்களின் பெயருக்குப் பின்னால் இட்டு தங்களின் தேசிய இன வரலாற்றை தங்களின் அடுத்த தலைமுறையினருக்கு கடத்துகின்றனர்.

நான் தமிழன் என்பதற்கான அடையாளம் என் குலம் மற்றும் குடிப் பெயரான அகமுடையான் எனும் சேர்வை.

தமிழர் யார் தெலுங்கர் யார் கன்னடர் யார் மலையாளி யார் என்று அறிந்து கொள்வதற்கு குலம் மற்றும் குடிகளை உள்ளடக்கிய ஜாதிப்பட்டம் அவசியம்.

தமிழர்கள் தங்களின் சாதிப்பெயரை மறந்ததே தங்களின் வரலாற்றைப் பற்றி தெரிந்துகொள்ள முடியாமல் போனதற்கான காரணம்.

பறையன் என்றால் சாதிவெறி அல்ல. கோனார் என்றால், நாடார் என்றால், பள்ளர் என்றால்,  கவுண்டர் என்றால் தேவர் என்றால் கள்ளர் என்றால் மறவர் என்றால் உடையார் என்றால் வன்னியர் என்றால் சாதிவெறி அல்ல. இவையெல்லாம் நாம் தமிழர் என்பதற்கான அடையாளங்களில் ஒன்று.

வெங்காய ராமசாமியின் சாதி ஒழிப்பு என்ற சதித்திட்டம் குறித்து அடுத்தடுத்த பதிவுகளில் சொல்கிறேன்.

- முனைவென்றி நா. சுரேஷ்குமார் சேர்வை

Thursday, May 23, 2019

என் அப்பாவும் என் மாமனாரும் சீக்கிரம் செத்தால் நல்லது என்று தோன்றுகிறது

"நான் சாகும்வரை காங்கிரஸ் கட்சிக்காரன். அதிமுக கட்சிக்காரன். எனவே என்னுடைய வாக்குகள் காங்கிரசிற்கும் அதிமுக விற்கும் தான்" என்று சொல்லும் என் அப்பாவும், 23-05-2019 இரவு என் மனைவியிடம் அலைபேசியில் "என்னுடைய கட்சியான பாஜக வெற்றி பெற்று விட்டது." என்று மகிழும் என் மாமனாரும் எப்போது சாவார்கள் என்று 23-05-2019 இரவிலிருந்து என் மூளைக்குள் ஓடிக் கொண்டிருக்கிறது.

என் அப்பாவும் என் மாமனாரும் சீக்கிரம் செத்தால் நல்லது என்று தோன்றுகிறது. ஏனெனில், இன்றைய தேதியில் சென்னையில் பல இடங்களில் நிலத்தடி நீர் இல்லை. குடிக்கத் தண்ணீர் இல்லாமல் அல்லாடுகிறது ஊர். சென்னையில் மட்டுமல்ல, என்னுடைய மாமனார் ஊரான சாப்டூரில் (மதுரை திருமங்கலம் அருகில்) கிராமத்தில் கூட வறட்சி. தண்ணீர் இல்லை.

என் சாவிற்குப் பிறகு என் பிள்ளைகளுக்கு அவர்கள் கையில் பணம் இருக்கும். ஆனால், குடிக்க தண்ணீர் இல்லாமல், நா வறண்டு சாகும்.

இதெற்கெல்லாம் காரணம், பாஜக காங்கிரசின் சந்தை பொருளாதாரக் கொள்கையே.

கடந்த நான்காண்டுகளாக இணையம் வழியே இல்லுமிநாட்டிகளால் நமக்கு ஆபத்து என்று கத்திக் கதறினேன். இல்லுமிநாட்டிகள் என்பவர்கள் வேறு யாருமல்ல. நம்மை உளவியல் ரீதியாக அடிமைப் படுத்தி நம்முடைய அனுமதியுடன் நம்முடைய இயற்கை வளங்களை கொள்ளையடிப்பவர்களே இல்லுமிநாட்டிகள்.

உதாரணத்திற்கு மீத்தேன் எடுப்பது, ஹைட்ரோ கார்பன் எடுப்பது, பொள்ளாச்சியில் சிறுவாணி ஆற்று நீரை குத்தகைக்கு கொடுத்த அதிமுக திமுக அரசுகள், அதை ஏலத்திற்கு எடுத்து நம்மிடமே பணத்திற்கு விற்க வரும் சூயஸ் நிறுவனம் என பட்டியல் நீளும்.

சூயஸ் (suez) நிறுவனம் வெளிநாடுகளில் தடை செய்யப்பட்ட நிறுவனம். தற்போது பொள்ளாச்சியில் சிறுவாணி நீரை விற்க வந்திருக்கிறது. இந்த சுவிட்சர்லாந்து நாட்டை தலைமையிடமாகக் கொண்டு அமெரிக்காவால் இயக்கப்படுகிற நிறுவனம். இது போன்ற நிறுவனங்கள் தான் இல்லுமிநாட்டிகள்.

சொந்த நாட்டு மக்கள் குடிக்க தண்ணீர் இல்லாமல் அல்லாடும்போது தன்னுடைய நீர்வளத்தை வெளிநாட்டு தனியார் நிறுவனங்களுக்கு அதுவும் வெளிநாடுகளால் துரத்தியடிக்கப் பட்ட சூயஸ் (suez) நிறுவனத்திற்கு வழங்கியது என்பது அரசாங்கம் மக்களுக்கு செய்யும் மாபெரும் துரோகம்.

ஒரு பக்கம் திருமணத்திற்கு ஒரு பவுன் தங்கம் மற்றும் 50,000 பணம் என்று கொடுத்துக்கொண்டு மறுபக்கம் விலைமதிக்க முடியாத நம்முடைய நிலத்தடி நீர் வளத்தை தனியார் நிறுவனங்களுக்கு தாரை வாரத்துக் கொடுக்கும் அரசாங்கத்தின் துரோகச் செயலகளை பொதுமக்கள் புரிந்துகொள்ள முடியாமல் "நாங்கள் சாகும்வரை திமுக, அதிமுக, காங்கிரஸ், பாஜக" என்று உளவியல் அடிமைகளாக வாழ்ந்து பழகிப் போனவர்கள் நம் தமிழ்நாட்டு மக்கள்.

இதைத்தான் சீமான் மேடைகள் தோறும் கத்திக் கொண்டிருக்கிறார்.

இல்லுமிநாட்டிகளைப் பற்றி ஜான் பெர்க்கின்ஸ் (john perkins) தன்னுடைய "ஒரு பொருளாதார அடியாளின் ஒப்புதல் வாக்குமூலம் (Confessions of an Economic Hit Man)" என்ற நூலில் சொல்லுகிறார் "உங்களுடைய இயற்கை வளங்கள் உங்கள் கண்முன்னே பறிபோவதை பார்த்துக்கொண்டிருக்க சபிக்கப் பட்டவர்கள் பொதுமக்களாகிய நீங்கள்".

இல்லுமிநாட்டிகளின் நோக்கம் பணம் சம்பாதிப்பது மட்டுமல்ல. நம்முடைய இயற்கை வளங்களை சுரண்டி நம்மை பசியால், வறட்சியால் சாகடிக்க வேண்டும் என்பதே இவர்களின் நோக்கம்.

உலகின் 800 கோடி மக்கட்தொகையை 400 கோடியாக குறைக்கும் திட்டமே இது. இதற்காகக் தான் கடல் மாலை திட்டம் (சாகர்மாலா), ஆராய்ச்சி என்ற பெயரில் மலைகளை உடைத்து மலை மணல் (m-sand) என்ற பெயரில் விற்பது, ஆற்று மணல் கொள்ளை, தேனியில் குரங்காணி மலையின் காடுகளை தீ வைத்துக் கொளுத்துவது, நியூட்ரினோ திட்டம், சென்னையில் எண்ணூரில் கடலுக்குள் கப்பலில் உள்ள கழிவுகளை கடலில் கொட்டி கடலை மாசுபடுத்தி இயற்கை வளங்களை அழிப்பது இவை எல்லாமே மக்கள் தொகையை 400 கோடியாக அதாவது பாதியாக குறைக்கும் வேலையே.

மக்களின் எதிர்ப்பு அதிகம் இருந்தால் தற்காலிகமாக நிறுத்தி வைப்பார்கள். எதிர்ப்பு தொடர்ந்து இருந்தால் 5 ஆண்டுகளுக்குப் பிறகு மீண்டும் வேறு பெயரில் வருவது இதெல்லாம் இல்லுமிநாட்டிகளின் வேலை. உதாரணத்திற்கு மீத்தேன் திட்டம். தற்போது ஹைட்ரோ கார்பன் திட்டம்.

நம்முடைய தமிழ்நாடு பாலைவனமாக மாறிக்கொண்டிருக்கிறது. நம்முடைய தமிழ்நாடு தானாக பாலைவனமாக மாறவில்லை. மாற்ற தரகர் கூலி (broker commission) வாங்கிக் கொண்டு வேலை செய்வது பாஜக காங்கிரஸ் அதிமுக திமுக கட்சிகளே.

தம்முடைய பேரன் பேத்திகளுக்கு பணம் சேர்த்து வைத்தால் போதும். அவர்களுக்கு இயற்கை வளங்களான நிலத்தடி நீர், தூய காற்று இவற்றைக் கொடுக்க வேண்டுமே என்ற எண்ணமில்லாமல் அக்கறை இல்லாமல் காங்கிரஸ் பாஜக திமுக அதிமுக கட்சிகளுக்கு வாக்களித்த என் அப்பா, என் மாமனார், என் சித்தப்பா என காங்கிரஸ் பாஜக திமுக அதிமுக கட்சிகளுக்கு வாக்களித்த என் உறவினர்கள் சீக்கிரம் செத்தால் நல்லது என்றே தோன்றுகிறது.

- முனைவென்றி நா. சுரேஷ்குமார் சேர்வை

Monday, May 28, 2018

தூத்துக்குடி துப்பாக்கிச்சூட்டிற்கு மூல காரணம் (root cause) யார்?

👉 தூத்துக்குடி துப்பாக்கிச்சூட்டிற்கு மூல காரணம் (root cause) யார்?



காவல்துறையின் அராஜகம்.



👉 எப்படி?



மாவட்ட ஆட்சியர் அலுவலகத்திற்கு நூறாவது நாளில் மனு கொடுப்பதற்காக சென்ற பொதுமக்களில் பெண்களின் நெஞ்சில் கை வைத்து காவல் துறையினர் அட்டூழியம் செய்துள்ளனர். இதனால் அங்கிருந்த பொதுமக்கள் கோபம் அடைந்திக்கலாம்.



மாவட்ட ஆட்சியர் அலுவலகம் முன்பு இருந்த cctv camera வில் பதிவான காட்சிப்பதிவில் பலபேர் சேர்ந்து அரசாங்க வண்டிகளை, உடைமைகளை கல்வீசி சேதப்படுத்தியுள்ளனர்.



இதை சாக்காக வைத்து காவல்துறையினர் அப்பாவி பொதுமக்கள் போராட்ட குணத்தை உயிர் பயம் காட்டி இனிமேல் போராட்டம் செய்தால் கொல்லுவோம் என்றே துப்பாக்கிச்சூடு நடத்தியுள்ளனர்.



உண்மையில் அங்கே கல் எறிந்தவர்கள் போராட்டக்காரர்களா இல்லை sterlite னால் ஏற்பாடு செய்யப்பட்ட கூலிப்படையா என்பது தெரியவில்லை.



உண்மையை புரிந்து கொள்ளுங்கள் sterlite என்ற வணிகனின் கட்டுப்பாட்டில் தமிழ்நாடும் இந்திய அரசாங்கமும் கடந்த சில வாரங்களாக இருந்து வந்துள்ளன. இந்த வணிகர்களை தான் என் போன்றவர்கள் இல்லுமிநாட்டிகள் என்று சொல்கிறோம். 



அரசாங்கத்திற்கே வட்டிக்குப் பணம் கொடுத்து அந்த அரசாங்கத்தை தம்முடைய கட்டுப்பாட்டில் கொண்டு வருபவர்கள் இந்த இல்லுமிநாட்டிகள்.



உண்மை இப்படியிருக்க, "தமிழ்நாடு அரசு sterlite க்கு மின்சாரம், தண்ணீர் இணைப்புகளை துண்டித்து விட்டது" என்று எடப்பாடி தமிழ்நாடு அரசு, உண்மை புரியாத ஏமாளிகளான இளிச்சவாயன்களான நம்முடைய காதிலே பூ சுற்றுகிறது.



மோடி, எடப்பாடி போன்றவர்கள் இந்த sterlite போன்ற corporate களிடமிடமிருந்து கையெழுத்து போட்டு commission வாங்கி broker வேலை செய்து வளர்ச்சி என்று நாம் தலையில் மிளகாய் அரைப்பது இன்னுமா நமக்குத் தெரியவில்லை?



மின்சாரத்தை உற்பத்தி செய்யும் நிறுவனமும் வேதாந்தா குழுமத்திலிருக்க "தமிழ்நாடு அரசு sterlite ற்கான மின் இணைப்பை துண்டித்து விட்டது" என்பதெல்லாம் முழு பூசணிக்காயை சோற்றில் மறைப்பது போன்றதாகும்.



வேதாந்தா குழுமத்தின் head office இங்கிலாந்தில் இலண்டனில் உள்ளது. இதன் முக்கிய பொறுப்பில் உள்ள அகர்வால் என்பவர் ஒரு சேட். அதாவது மார்வாடி. நம்மூரில் கோனார், அகமுடையார், வேளாளர் என்பது போல அகர்வால் என்பது ஒரு ஜாதிப்பட்டம்.



இந்தியாவின் இல்லுமிநாட்டிகள் இந்த பணியா (மார்வாடி) கும்பல் தான். இந்திய அரசாங்கத்தை இயக்குபவர்கள் இந்த இல்லுமிநாட்டிகளே.



தூத்துக்குடியில் துப்பாக்கிச்சூடு நடத்த உத்தரவிட்ட உயர் அதிகாரியின் மனைவி அந்த வேதாந்தா குழுமத்தோடு தொடர்புடையவர்.



இல்லுமிநாட்டிகளின் network இப்படித்தான் மறைமுகமாக இருக்கும். இவற்றையெல்லாம் அறிவின் துணைகொண்டு நாம்தான் ஆராய்ந்து உண்மையின் வேரைத்தேடி பயணிக்க வேண்டும்.



அரசாங்க, தனியார் வேலையில் பணி செய்து மாதம் ஒரு இலட்சம், ஒன்றரை இலட்சம் வாங்குபர்கள், அரசாங்கத்திடமிருந்து ஆதாயம் பெறுபவர்கள் ருசி கண்ட பூனையாகி இந்தப் பதிவினை வாசித்து விட்டு நமுட்டுச் சிரிப்போடு இதனை கடந்து போவார்கள். ஆனால் இப்படி சொகுசு வாழ்க்கை வாழ்பவர்கள் வீட்டிலும் ஒரு உயிர் போன பிறகே, அரசாங்கத்திற்கு பின்னால் வணிகர்கள் உள்ளனர், அந்த corporate நிறுவனங்களை காப்பாற்றவே அரசாங்கம் துடியாய் துடிக்கிறது, துப்பாக்கிச்சூடு நடத்துகிறது, உயிர்களை கொல்கிறது என்ற உண்மை புரிய ஆரம்பிக்கும்.



நீ காற்றுள்ள பந்தை எவ்வளவுக்கெவ்வளவு தண்ணீரில் அமுக்குகிறாயோ அவ்வளவு வேகமாக பந்து தண்ணீரின் மேலே எழும். இதைப்போலத்தான், இன்றைய ஆங்கிலம் போல் ஒரு காலத்தில் வணிக மொழியாக இருந்த தமிழை பேசும், உயிரநேயம் போதித்த எம் தமிழினம் எவ்வளவுக்கெவ்வளவு அடக்கப்படுகிறதோ ஒடுக்கப்படுகிறதோ அவ்வளவுக்கவ்வளவு மேலெழுந்து வரும். 



இந்த போராட்டங்களெல்லாம் தமிழ்நாடு என்ற தனிநாட்டிற்கான ஆரம்பமாகக் கூட இருக்கலாம்.