Wednesday, April 28, 2010

அன்பின் சின்னமாய்...!

எந்நேரமும்
உன் நினைவுகளிலேயே
உறைந்து கிடக்கிறேன்
நான்!

இன்று
ஒரு கைக்குழந்தையுடன்
எனைக் கடந்து
போகிறாய் நீ!
எனக்கு முன்னே
அதோ...
தூரத்தில்
மூதாட்டி ஒருத்தி
போய்க்கொண்டிருக்கிறாள்!

நீ என்னிடம் பேசிய
தொலைபேசி உரையாடல்கள்
இன்னும்
என் மூளைக்குள்
ஒலித்துக்கொண்டே இருக்கின்றன!

காலங்கள் வேகமாய் கடந்தன! - என்
கால்களும் வேகமாய் நடந்தன!!
நடந்த வேகத்தில்
அம்மூதாட்டியை முந்திவிட்டேன்!

ஏதோஓர் உள்ளுணர்வு
அவள்முகம் பார்க்கச் சொன்னது!

திரும்பி நின்று
அவளைப் பார்த்தேன்!

கலையான முகம்!
கறையிலா முகம்!
கண்ணாடி அணியா முகம்!!

அவளும் எனை வெகுநேரமாய்
உற்றுப்பார்த்துக் கொண்டிருந்தாள்!

அவள் கண்களில்
கண்ணீர்மழை!

தள்ளாடிவந்து
என்மார்மீது சாய்ந்தாள்!

அன்று
கைக்குழந்தையுடன் சென்ற நீ
இன்று
என் கைக்குழந்தையாய்
என் மார்மீது!!

No comments: