Wednesday, April 28, 2010

உயிர்!

உனை
நிலவென்று சொல்லமாட்டேன்!
தேய்வதும் வளர்வதுமாய்
இருப்பதால்...!

உனை
மலரென்று சொல்லமாட்டேன்!
உதிர்வது மலர்வதுமாய்
இருப்பதால்...!

உனை
மழையென்று சொல்லமாட்டேன்!
கோடையில் பொழிய
மறுப்பதால்...!

உனை
என்னுயிரென்று சொல்வேன்!
நீ பிரிந்தால்
எனக்கு மதிப்பில்லை
என்பதால்...!!

இக்கவிதை வெளிவந்துள்ள ஊடகங்கள்

1. கோடை பண்பலை – 10-06-2006

No comments: