Friday, June 25, 2010

வறுமையின் நிறம் சிவப்பு!

தாய்க்கும் பிள்ளைக்கும்
ஜென்மஜென்ம பந்தம்!
வறுமைக்கும் குருதிக்கும்
ஏதேதோ சொந்தம்!!

பச்சிளங்குழந்தை கதறினால்
பதறுவாள் தாய்! - தன்
குருதியை பாலாய் மாற்றுவாள்! - மன
உறுதியை பால்வடிவில் ஊட்டுவாள்!!

வயிற்றுப் பிழைப்பிற்காய்
கயிற்றில் நடக்கும் வாழ்க்கையை
பயிற்றுவித்தது வறுமை!

ஒருவேளை உணவிற்காய்
குருதியை பணமாக்கவைக்கிறது வறுமை! - மன
உறுதியை விற்கவைக்கிறது வறுமை!!

தாய்க்கும் பிள்ளைக்கும்
ஜென்மஜென்ம பந்தம்! - உறுதியாய்
வறுமைக்கும் குருதிக்கும்
ஏதேதோ சொந்தம்!!

No comments: