Monday, June 14, 2010

காதல் இனம்!

கோபப்படும்போது
நீ வல்லினமென்று
தோன்றினாய்!
அன்பாய் பேசியபோது
நீ மெல்லினமாய் தோன்றினாய்!

நீ
வல்லினமா?
மெல்லினமா?
குழப்பம் வந்தது
எனக்கு!

ஓர்நாள்
உன் இடையைப்பார்த்த போது
தெரிந்துகொண்டேன்!
நீ
இடையினமென்று!!

No comments: