Friday, June 25, 2010

உன்னைப் பற்றி!

அவளுடைய பிறந்தநாள் 15-01-1984. 2005 ம் ஆண்டு ஜனவரி 16 திங்களன்று அவளிடம் பிறந்த நாளுக்கு மிட்டாய் கேட்டேன். 'விடுதியில் உள்ளது' என பொய் சொல்லிவிட்டு போனாள். என் குழந்தை உள்ளம் ஏங்கி ஏமார்ந்து போனதை அவள் அறியவில்லை.

கண்களிலே ஓவியமாய் நுழைந்துவிட்டாய்!
இதயத்தில் காவியமாய் நிலைத்துவிட்டாய்!!
பட்டாம்பூச்சியாம் இம்மண்ணில் பறக்கிறாய்!
பார்வைகளால் என்மனக்கண்ணை திறக்கிறாய்!!
உன்னை மறக்கவும் முடியவில்லை!
இவ்வுலகில் இறக்கவும் முடியவில்லை!!
கறுப்பாய்த்தான் பிறந்துவிட்டேன்! - தமிழ்க்
கவிதையால்நான் சிறந்துவிட்டேன்!!
சுத்தமாய் உறக்கமே இல்லை! - உன்னிடம்
நித்தமும் இரக்கமே இல்லை!!
உன் அழகான முகத்தை இரசித்துக்கொண்டே
நீ பழகுவதில் பரிவுகண்டேன்!
மெல்லத்தான் சிரிக்கிறாய்! - எனைக்
கொல்லத்தான் சிரிக்கிறாய்!!
காலையில் பூவாய் பிறந்துவிடுவாய்!
என் கண்ணைவிட்டு
மாலையில் மாயமாய் மறைந்துவிடுவாய்!!
பார்க்குமிடமெங்கும் 'நலமா?' என்பாய்!
புகைவண்டி நிலையத்திலும்
புன்னகை சிந்துவாய்!
பிறந்த நாளுக்கு
இனிப்பு வாங்கித்தருவதாய்
இனிப்பாய்க் கூறுவாய்!
'இனிப்பு எங்கே?' என்று கேட்டால்
'தங்கிய இடத்திலிருக்கிறது' என்று
தயங்காமல் பொய் கூறுவாய்!!

உன்னை நினைக்கும்போது
உள்ளம் அழுகிறது!
உதடு சிரிக்கிறது!
கண்ணீரால் என் நெஞ்சம் நனைகிறது!
நம் காதலால் என் உயிர் வாழ்கிறது!!

No comments: