Wednesday, June 16, 2010

நம்நினைவில் சுனாமி!

திரைகடல் ஓடியும் திரவியம் தேடு!
கரைமீறும் கண்ணீர்தான் ஏழையின் பாடு!
ஆழிக்குள் பூகம்பத்தின் நினைவோடு
நம்நினைவில் நம்பிக்கைகீதம்பாடு!
நினைத்துப் பார்த்தால் சோகம்! - சுனாமியை
நினைக்கமறந்தால் பாவம்!!
கண்ணீர்வழி உருகியது தேகம்!
சுனாமியால் பழியான உயிர்கள் போதும்!
கடலையால் இயற்கையின் சீற்றம்!
காலம் கொடுக்குமே புதுப்புது மாற்றம்!!
போதும்கண்ணே நம்மனதில் ஏக்கம்!
விடியும்வரை தாய்மடியில் தூக்கம்!!
இனிமாறிவிடும் தமிழனின் துக்கம்!
துணிந்தால் வெற்றியெல்லாம் நம்பக்கம்!!


இக்கவிதை வெளிவந்துள்ள ஊடகங்கள்

1. தினத்தந்தி (மதுரை பதிப்பகம்) – 26-12-2005

2. பதிவுகள் (இணைய இதழ்) - 23-12-2011

3. வார்ப்பு (இணைய இதழ்) – 26-12-2011

No comments: