Sunday, July 27, 2014

இன்று நடந்தேறிய முப்பெரும் விழா

கடந்த சில நாட்களுக்கு முன்பு இன்று (27-07-2014) சென்னை மயிலாப்பூரில் நடந்த முப்பெரும் விழாவைப் பற்றி தினமணி செய்தி வெளியிட்டிருந்தது.



விழாவில் நமது நூல் "குழந்தைகளும் பொம்மைகளும் கடவுளும்" நூலுக்கு சிறந்த முறையில் வடிவமைக்கப்பட்ட சான்றிதழும் மூன்றாம் பரிசாக ரூபாய் ஆயிரமும் வழங்கப்பட்டது.






விழா மிகவும் எளிமையாகவும் சிறப்பாகவும் நடந்தேறியது. விழாவில் பரிசுகள் கொடுத்து ஊக்கப்படுத்தும் இந்த விழாவின் அனைவருக்கும் என் நெஞ்சார்ந்த நன்றி.

என்னுடன் பழகி என்னை நன்றாக புரிந்துகொண்ட ஒவ்வொருவருமே ஏதோவொரு தருணத்தில் என்னிடம் சொல்லும் வார்த்தைகள் "நீ என்ன இன்னும் சின்ன குழந்தையா?", "நீ ஒன்றும் குழந்தையில்ல..." என்று. இதனையே, இன்றைய விழாவில் விழா குறித்த துண்டு பிரசுரத்தில் "குழந்தை மனம் படைத்த கவிஞர்" என்று எழுதப்பட்டிருந்தது.



இதனையே குமுதம் இதழும் வெளியிட்டிருந்தது "பாசாங்கு இல்லாத இயல்பான மனதை ஹைக்கூவாக வடித்திருக்கிறார் சுரேஷ்குமார்" என்று.

விழாவில் பரிசுகள் வாங்கியபோது எடுத்த புகைப்படங்களை கன்னிக்கோவில் ராஜா ஐயா விரைவில் அனுப்பி வைப்பார். அனைத்தையும் உங்களோடு பகிர்ந்து கொள்ளவிருப்பதில் மகிழ்ச்சியடைகிறேன்.

No comments: