Saturday, February 4, 2023

வேல்முருகன் துதி ( புத்தம் புது மெட்டும் மெட்டில் அமைந்த பாடலும் )

முருகனுக்கு அறமான் என்ற பெயரும் உண்டு. அறம் என்பதற்கு உளத்தூய்மை என்றே பொருள். முருகன் அவ்வாறே உளத்தூய்மையோடு தமிழ் மக்களுக்காகவே குமரிக்கண்டத்தில் வாழ்ந்தார். 

குறவோன் என்பது முருகனின் முன்னோடியான சித்தர் சிவனையே குறித்தாலும் சிவனின் தாசனான வானாராய்ச்சி சித்தரான இராவணனையும் சேர்த்தே குறிக்கிறது. இந்த குறவோன் என்ற வார்த்தையே ஆங்கிலத்தில் crown ( கிரௌன் - தலையில் அணியும் கிரீடம், மகுடம் ) என்றாகி கொரோனா ( corono ) என்றானது. இதை விரிவாக இன்னொரு பதிவில் விரிவாக பேசலாம். 

அனைவருக்கும் தைப்பூசத் திருநாள் நல்வாழ்த்துகள்.


பாடல் வரிகளை கேட்க, சேர்ந்து பாடி மகிழ - https://youtu.be/aVFq7alAV_0





கந்தனுக்கு அரோகரா
முருகனுக்கு அரோகரா
பால தாண்டாயுத பாணிக்கு அரோகரா
தமிழ்க்கடவுளுக்கு அரோகரா
அறிவியல் விஞ்ஞானிக்கு அரோகரா
அரோகரா அரோகரா 

அறமானே முருகனே
அறமானே முருகனே
அன்பின் வடிவோனே அழகிய தமிழ் மகனே
அன்பின் வடிவோனே அழகிய தமிழ் மகனே
முன்பாய் வாழ்ந்தோனே முதல்வனே மூத்தோனே 
அறமானே முருகனே

மறவேனே மறவனே
மறவேனே மறவனே
சித்தம் தெளிந்திட சித்தன் உனையேற்றும் 
கத்தும் குயிலென நித்தமும் ஒரு பாட்டும்
ரத்தம் உறைந்திட புத்தம் புது தோற்றம்
மறவேனே மறவனே
மறவேனே மறவனே

குறவோனே குறவனே 
மருத்துவம் செய்தோனே மகத்துவ மானோனே 
கருவளக் கடவுளாய் கதிர்காமம் நின்றவனே 
குறவோனே குறவனே
குறவோனே குறவனே

முருகனே அழகனே முத்தமிழ் அறிஞனே 
கருணையின் உருவமே இடும்பனே கடம்பனே
எந்தையே சிந்தையே முந்தைய கந்தனே 
விந்தையே எந்தன் சிந்தையில் நின்றோய் 

No comments: