Friday, April 25, 2025

மச்சக்காள விஷ்ணு - புத்தம் புது மெட்டும் மெட்டில் அமைந்த பிறந்தநாள் வாழ்த்துப் பாடலும்...

பாடல் வரிகளை கேட்க, சேர்ந்து பாடி மகிழ -https://youtube.com/shorts/jqTwRC_5Scw?feature=share


மெட்டமைத்தவர்: முனைவென்றி நா. வேல்முருகன்
பாடலாசிரியர்: முனைவென்றி நா. வேல்முருகன்
பாடியவர்: முனைவென்றி நா. வேல்முருகன்
இசை: --

இன்று (26-04-2025) என் மறுமகன் விஷ்ணுவின் பிறந்தநாள்.



காலையிளம் கதிரே நீ வாடா
கதிரவனின் வெளிச்சம் நீ தான்டா
கதவு திறந்தால் கதிரின் வெளிச்சம்
கண்கள் திறந்தால் உந்தன் உருவம் 

அழகுமகன் அருகே நீ வாடா
அன்புடனே முத்தம் நீ தாடா
மனதில் நிறைந்த மகிழ்ச்சித் தீவே 
மாமன் தோளில் மலர்ந்த பூவே

சேட்டைகளின் அரசன் நீ வாடா
பாட்டிலுள்ள பொருளும் நீ தான்டா
மார்பில் தவழ்ந்த தங்கம் நீயே
மதிப்பில் உயர்ந்த வைரம் நீயே

தங்கை மகன் துள்ளும் மீன் வாடா
அங்குமிங்கும் குதிக்கும் மான் தான்டா
கனவில் தோன்றும் கவிதை நீயே
கணத்தில் தோன்றும் இசையும் நீயே

பார்வை படும் தூரம் நீ தான்டா
பூக்கள் தரும் தேனும் நீ தான்டா
மகிழ்ச்சி பொங்க நீயும் வாழ்வாய்
பிறந்தநாளில் நீடு வாழ்வாய்

Sunday, April 13, 2025

வெங்காய ராமசாமியை புகழ்ந்து எழுதுபவர்கள் கவனத்திற்கு

திருக்குறளை மலம் என்று சொல்லி தமிழர்களுக்கு பல தீமைகளை செய்து தமிழர்களிடையே சாதி ஏற்றத் தாழ்வுகளை ஏற்படுத்த சாதி ஒழிப்பு என்று போலியாக வேசம் போட்ட தமிழனல்லாத வெங்காய ராமசாமி மட்டுந்தான் பகுத்தறிவு வாதியா?

20,000 ஆண்டுகளுக்கு முன்பே தமிழை உருவாக்கி நமக்கு பேசக் கற்றுக் கொடுத்த பேச்சியப்பனாகிய நம் முப்பாட்டன் விஞ்ஞானியான சிவன் தான் முதல் பகுத்தறிவாளர். 

இனியாவது தமிழரின் உண்மையான ஆன்மீக வரலாறை, தூய தமிழ் தேசியத்தைத் தெரிந்து கொண்டு உங்கள் சிந்தனையை மாற்றுங்கள். 

நம்மை அழிக்க வந்த திராவிடமும் வெங்காய ராமசாமி நாயுடுவும் ஆரியமும் சேர்ந்துதான் நம் தமிழ் மண்ணில் நிலப்பிரபுக்களாக வாழ்ந்த பள்ளர்களை பறையர்களின் நிலங்களை பிடுங்கி அவர்களை தினக்கூலிகளாக்கி தீண்டாமையை உண்டாக்கி சாதி ஏற்றத் தாழ்வுகளை உண்டாக்கி நம் மண்ணின் மைந்தர்களான பாள்ளர்களை பறையர்களை கொடுமைப்படுத்தி அவர்களின் மூல மதமான ஆசீவகத்தை அழித்து அவர்களை கிருத்துவ இஸ்லாமிய மதத்திற்கு மதம் மாறச்செய்து தமிழர்களின் பெரும்பான்மையை குறைத்து இன்று வரை தமிழர் அல்லாதவர் தமிழ்நாட்டை ஆட்சி செய்ய வைத்திருப்பதை உணர்கிறீர்களா? அந்த ஈனப் பிறவி வெங்காய ராமசாமி செய்த சதித்திட்டங்கள் உங்களுக்கு தெரியுமா?

தெரிந்து கொண்டு எழுதுங்கள். நாம் மற்றவர்களுக்கு முன் உதாரணமாக இருக்க வேண்டும். தவறான கருத்துகளை பரப்பி விடக் கூடாது என்பதில் தெளிவாகவும் எச்சரிக்கையாகவும் இருங்கள்.