Friday, April 25, 2025

மச்சக்காள விஷ்ணு - புத்தம் புது மெட்டும் மெட்டில் அமைந்த பிறந்தநாள் வாழ்த்துப் பாடலும்...

பாடல் வரிகளை கேட்க, சேர்ந்து பாடி மகிழ -https://youtube.com/shorts/jqTwRC_5Scw?feature=share


மெட்டமைத்தவர்: முனைவென்றி நா. வேல்முருகன்
பாடலாசிரியர்: முனைவென்றி நா. வேல்முருகன்
பாடியவர்: முனைவென்றி நா. வேல்முருகன்
இசை: --

இன்று (26-04-2025) என் மறுமகன் விஷ்ணுவின் பிறந்தநாள்.



காலையிளம் கதிரே நீ வாடா
கதிரவனின் வெளிச்சம் நீ தான்டா
கதவு திறந்தால் கதிரின் வெளிச்சம்
கண்கள் திறந்தால் உந்தன் உருவம் 

அழகுமகன் அருகே நீ வாடா
அன்புடனே முத்தம் நீ தாடா
மனதில் நிறைந்த மகிழ்ச்சித் தீவே 
மாமன் தோளில் மலர்ந்த பூவே

சேட்டைகளின் அரசன் நீ வாடா
பாட்டிலுள்ள பொருளும் நீ தான்டா
மார்பில் தவழ்ந்த தங்கம் நீயே
மதிப்பில் உயர்ந்த வைரம் நீயே

தங்கை மகன் துள்ளும் மீன் வாடா
அங்குமிங்கும் குதிக்கும் மான் தான்டா
கனவில் தோன்றும் கவிதை நீயே
கணத்தில் தோன்றும் இசையும் நீயே

பார்வை படும் தூரம் நீ தான்டா
பூக்கள் தரும் தேனும் நீ தான்டா
மகிழ்ச்சி பொங்க நீயும் வாழ்வாய்
பிறந்தநாளில் நீடு வாழ்வாய்

No comments: